Language Selection

பி.இரயாகரன் 2001-2003

இந்தியாவில் ஆண்டுக்கு 5,000 முதல் 9,000 வரையிலான வரதட்சணைக் கொலைகள் நடக்கின்றன (15.4.1995)6 இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் 1989-ஆம் ஆண்டு பதிவான வரதட்சணைப் படுகொலை 4,821 ஆகும். இரு மணி நேரத்துக்கு ஒன்றாக நாள் ஒன்றுக்கு 13 வரதட்சணைக் கொலைகள் நடக்கின்றன. இது 1983-இல,; நாள் ஒன்றுக்கு மூன்று மட்டுமே. 1986-இல், ஆறாக இருந்தது. அதாவது 1983-இக்கும் 1989-இக்கும் இடையில் 400 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. (1.10.1990)6


டெல்லியில் 1985-இல், பதிவான வரதட்சணை படுகொலை 43-இல் இருந்து 1988-இல், 71ஆக அதிகரித்துள்ளது. இது 1989 ஜனவரி முதல் 1990 மார்ச் வரை 132 பேர் கொல்லப்பட்டுள்ளனர். (16.5.1990)6

இந்தியாவில், வீட்டில் பெண்கள் மீதான துன்புறுத்தல் 13.2 சதவீதத்தால் அதிகரிக்கின்றது. இந்தியாவில் குடும்பப் பெண்கள் ஒவ்வொரு நாளும் 53 பேர் தற்கொலை செய்கின்றனர் என என்.சி.ஆர்.பி. அறிக்கை தெரிவிக்கின்றது. நீதிமன்றத்தில் பெண்கள் மீதான துன்புறுத்தல் வழக்கு இழுத்து அடித்தே (தாமதப்படுத்துதல்) தாக்கல் ஆகின்றது. இப்படி தாக்குதலுக்கு உள்ளாகும் போது 40 சதவீதமான பெண்கள் இறந்து விடுகின்றனர். (9.12.1998)34

கற்பழிப்பு என்பது வரலாற்று வழியாகக் காலாகாலமாக ஆணாதிக்கச் சமுதாயத்தின் விளைவாக உள்ளது. ஆண் சமுதாயத்தின் சுதந்திரமான ஆணாதிக்கப் பிறவியாக இருந்தபடி, அதன் அதிகாரப்படி நிலையில் பெண் மீதான வன்முறையைக் கையாளுகின்றனர். இதன் போது சமுதாயம் எதிர்த்து நிற்கின்றது. இது வரலாற்றின் படி நிலையில் எங்குமே நீடித்துக் கிடக்கின்றது. இந்த வன்முறையின் போது எதிர்த்துப் போராடியவர்கள் கடவுளாக்கப்பட்டு வழிபாட்டுக்கு உரியவரானார்கள். இந்த வகையில் பணங்குடியில் வசித்த இஸ்லாமிய தையற்காரன் போராடி மடிந்த சம்பவத்தைப் பார்ப்போம்.


அந்த ஊரில் அழகான தயிர்க்காரி தினசரி காலையில் தயிரை ஊரிலிருந்து எடுத்துச் செல்வது வழக்கம். இந்தத் தயிர்க்காரியைக் கற்பழிக்க ஒருவன் முயன்ற போது, அவள் அந்தத் தையற்காரன் கடையில் அடைக்கலம் புகுகின்றாள். அந்த நிலையில் தையற்காரன் அப்பெண்ணைப் பாதுகாக்க முயல அவனைக் கொன்று விடுகின்றான் கற்பழிக்க வந்தவன். இதைத் தொடர்ந்து அந்தத் தையற்காரன் அந்த மக்களின் "வழிபாட்டுக்குரிய மாடனாக (இறைவனாக)''51 இன்றும் இருக்கின்றான். இந்தச் சம்பவம் ஆணாதிக்கத்துக்கு எதிரான மக்களின் பொதுத்தன்மையைக் காட்டுகின்றது. ஆனால் இந்தக் கொடுமை முன்பைவிட அதிகரித்துச் செல்வது மட்டும் உண்மையாகும். அதை நாம் ஆராய்வோம்.

இன்று உலகின் தனிச் சொத்துரிமையை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகம் மீதான நம்பிக்கைகள் இந்த அமைப்பின் அச்சாணியாக உள்ளது. இந்த ஜனநாயகம் மிக்க சிலருக்கு, பலர் உழைக்கும் சுரண்டலில் தன்னை நியாயப்படுத்துகின்றது. பெண்கள் இந்த அமைப்பில் போட்டி போடுவதன் மூலம், சலுகை பெறுவதன் மூலம், போராடி வெல்வதன் மூலம், ஆணுக்கு நிகராக விடுதலை பெற முடியும் என்ற கோட்பாடுகள் மீது உலகமயமாதல் முகத்தைப் பொத்தி அடிப்பதைப் பார்ப்போம். 1990-இல், 120 கோடி வறிய மக்கள் 130 கோடி டொலரை மட்டுமே வருவாயாகக் கொண்டுள்ளனர். 1998-இல், 120 கோடி டொலராக குறைந்து வறுமை சமூகமயமாகி அதிகரித்துள்ளது. இந்த வறுமையில் சிக்கியுள்ளோரில் பெரும் பகுதி பெண்கள் ஆவர். இவர்கள் நாள் ஒன்றுக்கு 70 டொலரை உற்பத்தி செய்வதுடன், உலக உற்பத்தியில் 78 சதவீதத்தைப் ப+ர்த்தி செய்கின்றனர். ஆனால் உலக வருமானத்தில் 6 சதவீதத்தையே பெறுகின்றனர். இதிலும் நேரடியாகப் பெறுவது 3 சதவீதத்தையே. அதாவது ஒரு டொலரைவிட குறைவாகும். (4.2000)42

சரிநிகர்

 


நாட்டுப்புறப் பாடல்கள் ஒருபுறத்தில் பெண்ணின் அவலத்தைப் பிரதிபலிக்கும் போது, மறுதளத்தில் ஆணாதிக்க வக்கிரம் வெளிப்படுவது ஆணாதிக்கச் சமூக எதார்த்தமாக இருக்கின்றது. கிழக்கிலங்கையில் நடைமுறையில் இருக்கும் பல்வேறு நாட்டுப்புறப் பாடல் வகைகளில், கிராமியக் கவிகள் பெண் பற்றிய பலவிதமான தகவல்களைத் தருகின்றது. அதில் இருந்து பெண்ணை ஆராய்வோம்.

book _6.jpg'வரலாற்று ரீதியான ஆணாதிக்கத்தையும், அதற்கு எதிரான போராட்டத்தையும், அத்துமீறிய வாழ்க்கையையும் மிக சுயேட்சையாக நாம் கண்டறிய வேண்டுமாயின், கிராமியப் பண்பாடுகள், நடத்தைகள், வழக்குகள் என அனைத்திலும் தேட வேண்டும். இங்குதான் அவை எந்தவிதமான போலித்தனமும் இன்றி எதார்த்தத்தைப் பிரதிபலித்த வண்ணம் சமுதாய இயக்கம் நேர்மையாக இயங்குகின்றது. இந்தவகையில் பெண்ணியத்தை ஆராய்வது என்பது அவசியமானதாகவும், நிபந்தனையானதாகவும் உள்ளது. ''தமிழக நாட்டுப் புறவியலில் பெண்கள்"36 என்ற தலைப்பில் எழுதியுள்ள நூல் அந்த மக்களைப் போல் இயற்கையாக உள்ளது.

book _6.jpgபெண்ணுரிமை, பாலியல் என இலக்கியங்கள் திடீரென புலம்பத் தொடங்கியுள்ளது. தங்கள் சொந்த வக்கிரங்களையும், அரிப்புகளையும் படைப்பாக்கத் தொடங்கியவர்கள் இன்று உலகமயமாதலில் பெண்ணுரிமை, பாலியல் எதுவோ அதையே எடுத்துப் பாதுகாக்கவும், முன்வைக்கவும் தொடங்கியுள்ளனர். ஏகாதிபத்தியக் கலாச்சாரம், பண்பாடு என எதுவும் இல்லை என மார்தட்டுமளவுக்கு இவர்களின் படைப்புகள் புற்றீசல் போல் வெளிக் கிளம்பத் தொடங்கியுள்ளது.

book _6.jpgஆணாதிக்கம் மனித இனத்தைச் சிதைத்த போது பாலியல் பல வக்கிரங்களைக் கண்டது. இயற்கையின் பரிணாமத்தையும், இயற்கையின் அழிவையும் ஏற்படுத்தியே மூலதனத்தின் சுதந்திரம் பூத்துக் குலுங்கியது குலுங்குகின்றது. இந்தச் சிதைவுகளில் இருந்து அலங்கோலமான பாலியல் வடிவங்கள் வெடிக்கின்றன. இந்த எதார்த்தத்தில் இருந்து அங்கீகரிக்கக் கோரும் போராட்டமும், இதை ஜனநாயகத்தின் சுதந்திரமாக, தனிமனித உடல் சார்ந்த கூறாகவும் என பலவித விளக்கத்துடன் இன்று கோட்பாட்டு விளக்கங்கள் வருகின்றன. இதில் ஓரினச் சேர்க்கையும் ஒன்று. அதை ஆராய்வோம்.

book _6.jpgபொழுது போக்கு ஊடாகப் பண்பாட்டுக் கலாச்சாரத் தாக்குதல் சமுதாயத்தின் அனைத்துத் தளத்திலும் இன்று வேகமான தாக்குதலை நடத்துகின்றது. இது உலகளாவிய ஒரு பொழுது போக்கு பண்பாடு, கலாச்சாரம் என்ற எல்லையை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் எகிறிக் குதித்தோடும் போது, கண்மண் தெரியாத சீரழிவைச் சமுதாயம் முன் எப்போதையும் விட சந்திப்பது எதார்த்தமாகியுள்ளது. இதில் பெண்ணின் நிலை என்பது நுகர்வுப் பண்பாட்டில் கீழ்நிலைக்குத் தரம் தாழ்த்தப்பட்டுச் சீரழிக்கப்படுகின்றாள்.

book _6.jpgஆசியா கண்டத்தில் நடந்த பல்வேறு வர்க்கப் போராட்டங்களில் பெண்களின் பங்களிப்பு பல வீரம் செறிந்த வரலாறுகள் பலவற்றை எமக்கு விட்டுச் சென்றுள்ளது. ஆனால் பலர் விடுதலைப்புலிகளில் உள்ள பெண்களின் பங்களிப்பே ஆசியாவிலேயே முதல் ஆயுதப் போராட்டம் என்று காட்டுவதும், இதை இதன் அடிப்படையில் இருந்து விமர்சிப்பதும் என அண்மைக் காலத்தில் பலர் குறிப்பாகப் பெண்ணியல்வாதிகள் களம் இறங்கியுள்ளனர்.

book _6.jpgகடந்த 30 வருடங்களாக இலங்கைப் பெண்களை உலுக்கிய உலுக்கு, இலங்கை வரலாற்றுக்குப் புதியதாகும். நிலைமைகள் திடீர்திடீரென அதிர்வலைகளை ஏற்படுத்தும் வண்ணம் மாறியது, மாறிய வண்ணம் இருக்கின்றது. இவை பல முரண்பட்ட வௌ;வேறு சூழ்நிலைகளில், வேறுபட்ட பிரதேசம் சார்ந்து தன்னை வெளிப்படுத்திய வண்ணம் இருக்கின்றது.


இந்த வகையில் பெண்களின் நிலைமையை ஆராய உலகளாவிய மாற்றங்கள் பற்றிய பார்வை மிக முக்கியமானதாகும்;. கி.பி.1970-களில் சர்வதேச ரீதியாக ஏகாதிபத்தியங்கள் தமது சுரண்டலைத் தீவிரப்படுத்த, அரைக்காலனிகளை நவகாலனியாக்கி நேரடிக் காலனியாக்கத்தை நடைமுறைப்படுத்தும்; கட்டமைப்புகளைத் தீவிரமாக்கினர். இலங்கை இந்தக் கட்டத்தின் ஊடாகத் தன்னை மாற்றியமைப்பதுக்கு உள்ள+ர் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு இசைவாக்கமடைந்தது. சில நாடுகளில் இடைக்கட்டமின்றி நகர்வதும் சாத்தியமாகக் கூடியதாக இருக்கின்றது. அதாவது காலனிகள் முன்பைவிட தெளிவாகப் பண்பு ரீதியாக, அரசியல் பொருளாதாரக் காரணங்களால் வேறுபட்டே இருக்கும் என்பதை உலகமயமாதல் தெளிவாக்குகின்றது.

book _6.jpg'கற்பு" என்ற சொல்லைக் கைவிடாமல் பாவிப்பவர்கள் என ''கேள்வி" கடந்து கோட்பாடு அற்று விவாதிக்கின்றனர். இங்கு ''கேள்வி"யல்ல முடிவாகக் கூறும் போதுதான் இதன் அரசியல் வெட்ட வெளிச்சமாகப் புரிகின்றது. ''கற்பு" என்பதைக் கருத்துமுதல்வாதமாகப் புரிகின்ற போது கருத்தால் மறுப்பது நிகழ்கின்றது. நேரடியாகப் பொருள் அல்லாத விளைவுகளில் கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் தொடர்பான விவாதத்தை இது கோருகின்றது. தேசியம், வர்க்கப்போராட்டம் போன்றன பொருள்முதல்வாதம் சார்ந்ததா? அல்லது கருத்துமுதல்வாதம் சார்ந்ததா? என்ற கேள்வி எழுகின்றது. சமுதாயத்தில் உடன்பாடற்றவைகளைக் கருத்துமுதல்வாதமாகக் காட்டி விளக்குவது பொருள்முதல்வாதத்தை மறுப்பதாகும்.

book _6.jpgஇயற்கையில் மனிதன் தனது வாழ்வுக்கான போராட்டத்தை எதிர் கொண்ட போது அவனுக்கு இயற்கையே புதிராக இருந்தது. இயற்கையின் எழுச்சிகள், அழிவுகள் எல்லாம் மனிதனுக்கு அழிவையும், ஆக்கத்தையும் கொடுத்த போது, அதன் மீதான கட்டுப்பாட்டைச் செலுத்தமுடியாத நிலைக்குள் தள்ளப்பட்டான். இது போல், தனது உடல் சார்ந்த மாற்றங்கள் எப்படி? எதனால? ஏற்படுகின்றன என்பதை அறிய முடியாத மனிதனாகப் புதிர்களின் முன் வெறுமையாக நின்றான்.


எல்லா உயிரினங்களையும் போல் மனிதனும் இயற்கையைச் சார்ந்து இருந்த நிலையில் இருந்து மாறி, உழைப்பை இயற்கையின் மீது பயன்படுத்தத் தொடங்கியவுடன், அது சார்ந்து சிந்தனையும் அதன் மேல் உருவாகத் தொடங்கியது. உழைப்பு மூலம் இயற்கையை மனிதன் தனது தேவைக்கு ஏற்ப மாற்றத் தொடங்கியபோது, இயற்கை மற்றும் மனித உடலியல் புதிர்களைப் பற்றிய தேடுதலும் ஆரம்பமாகியது. இந்தக் கேள்விகளை ஒட்டி இயற்கைச் சீற்றங்களின் போதும், அழிவுகளின் போதும் மனித உழைப்பால் எதையும் செய்ய முடியாத போக்கில், இந்த இயற்கை நெருக்கடி மனித அழிவுகளை ஏற்படுத்தியது. இதை மனிதனால் புரிந்து கொள்ள முடியாத நிலையில், அதை மாற்ற முடியாத நிலையில், அதை அன்னியமான சக்தி ஒன்றின் செயலாக எண்ணத் தொடங்கினான். இதனால் இயற்கை சார்ந்து அழிவுகளை ஏற்படுத்தும் ஊடகங்களை நோக்கி அஞ்சத் தொடங்கினான். இது போல் போராடி வெல்ல முடியாத மிருகங்களையும் கண்டு அஞ்சுவதன் மூலமும், மனித ஆற்றலால் முடியாத விசயங்களை நோக்கி கெஞ்சுவதன் மூலமும் அதைத் தடுக்க முயன்றான். இந்தக் கெஞ்சுவதும், அஞ்சுவதும் மனிதன் இயற்கையில் இருந்து வெளிவந்து, செயற்கையில் இயற்கையை மாற்றத் தொடங்கிய மனித வரலாற்றில் நடந்தது. மனித உழைப்புக்கு அன்னியப்பட்டுக் கட்டுப்பட மறுத்த இயற்கையின் மீதும், அது சார்ந்த விசயங்கள் மீதும் இவை நிகழ்ந்தன. பின்னால் அதைத் தொடர்ந்து விளக்குவதும் மனிதப் போக்காகியது.

book _6.jpgஏகாதிபத்தியப் பொருளாதார அமைப்பு சார்ந்து இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட பசுமைப் புரட்சியானது இங்கு வாழ்ந்து வந்த பெண்ணின் வீட்டு வேலையையும், வறுமையையும், கூலி உழைப்பையும் கடுமையாக்கி உள்ளது. நிலத்தில் ஏகாதிபத்தியத் தேவைக்கான உணவு தயாரிப்பு, மிருகத்தில் ஏகாதிபத்திய நுகர்வு, காட்டில் ஏகாதிபத்தியத் தேவைக்கான காடழிப்பு ஆகியவை பெண்களின் சுமையைப் பல மடங்காக்கியது. ஆனால் இது மறைமுகமான ஏகாதிபத்தியத் தாக்குதல் என்பதால் வெறும் ஆண்களாக அல்லது உள்ள+ர் ஆட்சியாளராகக் காட்டுவது இன்றைய பல பெண்ணியல்வாதிகள் போல் அல்லது பின்நவீனத்துவவாதிகள் போல் காட்டுவதும், திசை திருப்புவதும் நிகழ்கின்றது. இது எல்லா மூன்றாம் உலக நாடுகளின் பொதுப் பண்பாகவும் உள்ளது.

book _6.jpgஇயற்கையை மறுப்பதிலேயே ஆணாதிக்கம் கருக்கொள்கின்றது. இன்று உலக மயமாதல் தனது சந்தைப்படுத்தலைத் தீவிரமாக்க இயற்கை அழிப்பைப் பிரதானப்படுத்துகின்றது. பெண்களை இயற்கைக்கு மாறாக அடிமைப்படுத்திய நிலையில், ஆண்கள் இயற்கையில் இருந்;து அன்னியமயமாதல் அதிகரித்தது. பெண் இயற்கையைச் சார்ந்திருத்தல் நெருக்கமானது. மனிதத் தேவையை மீறி இயற்கையை ஆண், அடிமைப்படுத்தியும், கட்டுப்படுத்தியும், அழித்தும், சூறையாடியும், சொத்துரிமையை, அதிக உபரியை இயற்கைக்கு விரோதமாகச் செயற்கையாகக் கட்டுப்படுத்தினான்.


இந்த நிலையில் பெண் இயற்கை மீது சார்ந்து வாழ்தல் இயல்பானதாக இருந்தது. பெண்ணின் தனிச் சொத்துரிமை மறுக்கப்பட்டு, வீட்டுவேலைகளுடன் கட்டுப்படுத்தி இயற்கையின் மறு உற்பத்தியுடன் அடிமையாக்கிய நிலையில் பெண் இயற்கை மீது வாழ்தல், சார்ந்திருத்தல்தான் அவளின் ஒரே ஆதாரமான வாழ்வாகியது.

book _6.jpgமுதலாளித்துவப் புரட்சி நடைபெறாத இந்நாடுகளில் பெயரளவிலான ஜனநாயகம் கூட கிடையாது. இதன் வெளிப்பாடாகப் பெண்களின் நிலை என்பது ஐயத்துக்கு இடமின்றி நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கத்துக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளாள். இருந்த போதும் இப்பெண்கள் இயற்கையையொட்டியும், ஒருதாரமணத்துக்குள் காதலிக்கவும், அன்பு செலுத்தவும் முடிவதால் மேற்கைவிட தன்னளவில் நிம்மதியாகக் கூட்டு வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்கின்றாள்.


நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கம் பெண்ணின் சுயச்சிந்தனையை விலங்கிடுவதால் பெண்ணின் தெரிவுகள் முதல் அனைத்தும் வளர்ப்பு மிருகத்தின் நிலைக்குத் தாழ்ந்துள்ளது. வளர்ப்புப் பண்ணைகளில் மிருகத்தின் பாலியல் பூர்த்தியை எப்படி வளர்ப்பவன் தீர்மானிக்கின்றானோ, அதேபோல் பெண்ணின் பாலியலை ஆணாதிக்கச் சிந்தனை கட்டுப்படுத்தித் தீர்மானிக்கின்றது.

book _6.jpgநவீனத்துவத்தின் வேகமான வளர்ச்சி பெண்ணின் மீதான நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தை விடுவித்தது. நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கம் பெண்ணைப் பொருளாதார ரீதியில் ஆணை எதிர்பார்த்து உருவாக்கிய பண்பாட்டுக் கலாச்சார அடிமைத்தனத்தை முதலாளித்துவ அமைப்பின் வளர்ச்சியில் தகர்ப்பது அவசியமாக்கியது. முதலாளித்துவ வளர்ச்சி நிலப்பிரபுத்துவச் சிதைவுகள் மீது கட்டப்பட்டது. பெண் வீட்டுக்கு வெளியில் சென்று பொருளாதார ரீதியில் கூலி பெறும் உழைப்பாளியாக மாறிய வரலாற்று வளர்ச்சி என்பது, ஆணின் பொருளாதாரத்தை ஒட்டிப் பெண் சிந்திக்கும் போக்குக்கு முடிவு கட்டியது.

book _6.jpgஇன்றைய உலகில் பெண்கள் எப்படி உள்ளனர்? என்ற விவாதம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மனிதனின் ஒவ்வொரு மாற்றமும் இயற்கையைச் சார்ந்து இருந்த போக்கில், மனிதனின் உழைப்பை ஒட்டி இயற்கையும் பாரிய மாற்றத்தைக் கண்டது. இம் மாற்றம் என்பது மாறிவந்த ஒவ்வொரு பொருளாதார மாற்றத்துடனும் தீவிரப்பட்டது. உடலியல் கூறுகளின் செயற்பாடுகள் ஒருபுறம் நிகழ்ந்தன. இயற்கையும், இயற்கை மீது மனித உழைப்பைத் தொடங்கிய போதும் மாற்றம் மேலும் தீவிரமடைந்தது.

1. சட்டத்தை மதிக்காமல் இவான் அர்ட்சிப÷சாவ்

2. கண்காணிப்பின் அரசியல் இரவிக்குமார்

3. குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் பி. ஏங்கெல்ஸ்
4. ஈழ முரசு பிரான்சில் வெளிவரும் புலி ஆதரவு பத்திரிக்கை
5. மகளிர் விடுதலை இயக்கங்கள் கிளாரா ஜெட்கின்
6. சர்வதேசத் தொழிலாளர் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பற்றி லெனின்
7. இளைஞர்களைப் பற்றி லெனின்
8. பெண்ணுரிமை சில பார்வைகள் மைதிலி சிவராமன்
9. உயிரினங்களின் வரலாறு கண்ட டார்வின் ப. செங்குட்டுவன்

10. வேதங்கள் ஓர் ஆய்வு சணல் இடமருகு
11. பிராமண மதம் ஜோசப் இடமருகு
12. பெண் (மே டிசம்பர் 1996) இந்தியப் பெண்கள் சஞ்சிகை
13. பார்ப்பனியத்தின் வெற்றி பி.ஆர். அம்பேத்கர்
14. பரிசுத்த வேதாகமம் (பைபிள்)
15. ஜீவ தண்ணீர் தென்னிந்தியத் திருச்சபை பிரெஞ்சு பிரிவு வெளியீடு
16. விடுதலைக்கு வழிநிடத்தும் தெய்வீகச் சத்தியப் பாதை
17. சரிநகர் இலங்கையில் தன்னார்வ நதி ஆதாரத்தில் தமிழில் வெளிவரும் குறிப்பிடத்தக்க ஒரேயொரு மாற்றுப் பத்திரிக்கை
18. மண்ணும் மனித உறவுகளும் முனைவர். கோ. கேசவன்.
19. திருக்குர்ஆன் பாகம் 1,2
20. சுமைகள் நோர்வே முற்போக்குத் தமிழ்ப் பத்திரிகை
21. சரிநகர் இலங்கையில் தன்னார்வ நதி ஆதாரத்தில் தமிழில்
வெளிவரும் குறிப்பிடத்தக்க ஒரேயொரு மாற்றுப் பத்திரிக்கை
22. பௌத்தம் போற்றிய பெண் தெய்வங்கள் டாக்டர். அரங்க. இராமலிங்கம்.
23. கீதையின் மறுபக்கம் கி. வீரமணி
24. புத்தரது ஆதிவேதம் க. அயோத்திதாசப் பண்டிதர்
25. டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதி: 7
26. மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள் வல்லிக் கண்ணன்
27. சாத்திரப் பேய்களும் சாதிக் கதைகளும் எம்.வி.சுந்தரம்
28. பண்பாட்டு வேர்களைத் தேடி தொகுப்பு: ஞா. ஸ்டீபன்
29. தலித் அரங்கியல் கே.ஏ. குணசேகரன்
30. புதிய கலாச்சாரம் இந்தியப் புரட்சிகர மார்க்சிய ஆதரவு கலாச்சாரப் பத்திரிக்கை
31 தமிழ்ச்சமூகமும் தெய்வங்களும் ஆ. இரவழ கார்த்திகேயன். பி.காம்
32. பெரியார் களஞ்சியம் தொகுதி: 6
33. இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர் பி.ஆர். அம்பேத்கர்
34. பெரியார் களஞ்சியம் தொகுதி: 2
35. பகவத் கீதை ஓர் ஆய்வு ஜோசப் இடமருகு
36. மூவர் தேவாரம். தலைமுறை (அடங்கல்முறை)
37. அர்த்தமற்ற இந்துமதம் (பாகம் 1) மஞ்சை வசந்தன் எம்.ஏ. பி.எச்டி.
38. அர்த்தமற்ற இந்துமதம் (பாகம் 2) மஞ்சை வசந்தன் எம்.ஏ. பி.எச்டி.
39. இலக்கணமும் சமூக உறவுகளும் டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி
40. திருக்குறள் எஸ்.என் ஸ்ரீராமதேசிகன்
41. சுயமரியாதை திருமணம் ஏன்? பெரியார்
42. சங்க இலக்கியத்தில் சமூக அமைப்புகள் கு.வெ. பாலசுப்பிரமணியன்
43. தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண் நிலை நோக்கு செல்வி திருச்சந்திரன்
44. பத்தினி தெய்வங்களும் பரத்தையர் வீதிகளும் பிரேமா அருணாசலம்
45. பத்தினி தெய்வங்களும் பரத்தையர் வீதிகளும் பிரேமா அருணாசலம்
46. அர்த்தமுள்ள இந்துமதம் (பாகம் 2) கண்ணதாசன்
47. திருமந்திரம் ஜி. வரதராஜன்
48. சித்தர் பாடல்கள்
49. புராணச் சார்பு கதைப் பாடல்களில் ஆண் பெண் உறவு முமுனைவர். கோ. கேசவன்
50. பேய் ஓட்டும் உடுக்கடிப் பாடல்கள் சி. ருக்மணி
51. அராஜகவாதமும் அராஜகவாத சிண்டிக்கலிசமும் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் லெனின்
52. CLARA ZETKIN - பிரான்சில் வெளிவரும் பூர்சுவா பெண்கள் பத்திரிக்கை

 

book _5.jpgஜனநாயகம் மறுக்கப்பட்ட மண்ணில் இருந்து வந்தோரும், வராதோரும் இணைந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் பிரச்சனையில் இருந்து நழுவிய, அதேநேரம் அதற்கு எதிரான புலம் பெயர் இலக்கியத்தைப் படைப்பாக்கினர், படைப்பாக்குகின்றனர். இதேபோல் நாட்டிலும் எந்தவிதத்திலும் முரண்படாத போக்குகளைக் கொண்டு சமமாகவே வளர்ச்சி பெற்றன. இதன் போக்கில் பல இலக்கியங்களை, சில எழுத்தாளர்கள் பாலியல் பிரச்சனை மீது அதிகளவு எழுதத் தொடங்கினர். இன்று அதுவே இலக்கியம் என்றளவுக்கு விடயம் மாறிச் செல்கின்றது. பாலியல் பிரச்சனைகளை இவர்கள் எப்படி புரிந்து கொள்கின்றனர் என்பது முதல், பாலியல் சிக்கல்களை ஆராய்வதும் முக்கியமானதாகின்றது.

book _5.jpgபுற உலகின் வெளிப்பாடான இயக்கத்துக்கு வெளியில் மனிதச் சிந்தனை தனக்குள், தன்னளவில் வெளிப்படுவதில்லை. புற உலகில் நடக்கும் மாற்றத்தையொட்டி மனிதச் சிந்தனை அனைத்துத் துறைகளிலும், புற உலகு மீதான வெளிப்பாடுகளைப் புரிந்து கொண்ட விதத்தில் மனிதன் வெளிப்படுத்துகின்றான், சிந்திக்கின்றான்;. இதைத் தாண்டிய சிந்தனைத் தளம் கிடையவே கிடையாது.


இந்த வகையில் பாலியல் பற்றிய அறிவும், அதன் வெளிப்படுத்துதலும் புற உலகின் வெளிப்பாடாகவே மனிதனுக்குள் வெளிப்படுகின்றது. இது மாறுபட்ட சமுதாயத்தின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப மனிதச் சிந்தனையில் வெளிப்படுகின்றது. இந்த வெளிப்பாடுகளின் விளைவுகள், குறித்த பாலியல் நடத்தை மீது மட்டும் தொழிற்படுவதில்லை. மனிதனின் புறச் சூழல் பாதிப்பின் விளைவாக வெளிப்படும் பாலியல் நடத்தைகள் எல்லாம் மாறிக் கொண்டிருப்பதுபோல் மாறிய வண்ணம் நீடிக்கின்றது.

book _5.jpgபெண்ணை அடிமைப்படுத்திய தனிச்சொத்துரிமை ஆணாதிக்கப் போக்கில் பழமொழிகள் உருவாகின்றன. இவை சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகின்றன. இந்தப் பழமொழிகள் ஆணாதிக்க அமைப்பின் ஒழுக்கமாகின்றது. இதை ஆராய்வோம்.


''விதவை எதிரே வருவது அபச குணம்."37


இந்த ஆணாதிக்க அமைப்பில் பெண்ணின் திருமணமே அவளின் உயிர் வாழும் தகுதியை அங்கீகரிக்கின்றது. சாதிய ரீதியாக, தாழ்ந்த சாதி மக்கள், உயர் சாதி தெருவில் நடப்பது எப்படி குற்றமோ, அதுபோல் விதவைக்கும் நிகழ்கின்றது. ஆண் அற்ற பெண், விதவை நிலையில் வீட்டில் அடைந்து வாழ வேண்டும் என்ற, ஆணாதிக்கச் சமூக ஒழுக்கத்தில் இருந்து இந்தப் பழமொழி சமூக நடைமுறை விளக்கமாகின்றது.

book _5.jpgஆணாதிக்கம் சமூகப் பொருளாதார ரீதியாகப் பலம்பெறும்போது, மொழியிலும் அதன் செல்வாக்கு ஆழமாக ஊடுருவுகின்றது. இனவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு, பால்வேறுபாடு வேறு பிரிந்த ரீதியில் இனம் கண்டு விளக்குவதற்கு அப்பால், ஆணாதிக்க அடிமைத்தனத்தில் இருந்து விளக்குவதாக மொழியுள்ளது. மொழி பாலியல் ரீதியாக வரையறைக்கு உட்பட்டும், வரையறைகளை மீறியும் பால்தன்மையை வெளிப்படுத்துகின்றது. மொழியின் பயன்பாடு, அதன் உள்ளடக்கம், வெளிப்பாடு தொடர்பாக ஸ்டாலின் கூறுவதைப் பார்ப்போம்.

book _5.jpgஇந்து மதம் சார்ந்து உருவான ஆண் - பெண் உறவுகள் வக்கரித்தே கிடக்கின்றன. அவற்றில் சில அக்காலத்துக்கே உரிய எதார்த்தச் சமுதாயத்தைப் பிரதிபலித்து இருக்கும். அதேநேரம், கால்நடைகளை மேய்த்தபடி புலம்பெயர்ந்து, இந்தியா வந்த பார்ப்பனர்கள், தமது மிருக இனவிருத்தியில் பாலியல் உறுப்புகளை நலமடித்த வழியில், மனிதப் படைப்புகளை உருவாக்கினர். அப்போது இங்கு இருந்த சிறுவழிபாடுகள் மீது பார்ப்பனியமும், பின்னால் இந்து மதமும் ஊடுருவி அழித்தபோது, சிறுவழிபாட்டுக் கடவுள்களை உறவுமுறைக்குள் இந்து மதம் கொண்டுவந்தது. இந்த உறவுகள், பிறப்புகள் எல்லாம் வக்கரித்த ஆணாதிக்க எல்லைக்குள், பாலியலை விகாரப்படுத்தி, உருவாக்கப்பட்ட கடவுள்கள் எல்லாம், ஆணாதிக்க காமவிகாரத்தை வெளிப்படுத்துகின்றது. இந்தப் பிறப்புகளின் பொய்மைகள் அறிவியல் முன்பு அருகதையற்ற நாற்றத்தைக் கொண்டவை. ஆனால் எதார்த்தம் ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை சார்ந்த விகாரத்தை எல்லாம் மனிதனின் வழிபாடாக்கும் நிலையில், இதைத் தொகுத்து அம்பலப்படுத்துவதும், ஈவிரக்கமற்ற வகையில் நிர்வாணமாக்கவேண்டியதும் அவசியமாகிவிடுகின்றது.

book _5.jpgசாதி ஒடுக்குமுறை பற்றி இன்று பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் கட்டமைக்கப்படுகின்றன. ஆனால், பாட்டாளிவர்க்கம் மட்டுமே இதைச் சரியாக இனம் காண்கின்றது. இதுபற்றி நாம் பிறிதொரு நூலில் ஆராய்வோம். ஆனால் சாதியை உருவாக்குவதில் குடும்பத்தின் பங்கு என்ன என்பது இப்புத்தகத்தின் குறிப்பான விடயமாகும். உயர்சாதி ஆண்களின் ஆணாதிக்கத்தை இந்துமதம் பாதுகாத்தபடிதான், சாதியமைப்பில் பாலியல் விளக்கத்தையும் கொடுத்தது.

book _5.jpgநாம் பெண்ணின் உரிமை, கடமை, மற்றும் ஆணாதிக்கம் தொடர்பாக ஆராய வௌ;வேறு வரலாற்று, இருகட்டங்களின் ஆதாரங்களில் இருந்து பார்ப்போம்.


மனுதர்மத்தைப் பெண்கள் மீது ஆணாதிக்கப் பார்ப்பனியம் திணிக்கும்முன் சமுதாயம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பது எம்முன் கேள்வியாக உள்ளது அல்லவா? ~அதர்வண வேதம்| பெண்கள் உபநயனம் செய்யவும், சிரௌத்த சூத்திரங்களைக் கூறவும், வேத மந்திரங்களைப் பயின்றதையும் உறுதி செய்கின்றது. பாணினியின் ~அஷ்டாத்யாயில்| பெண் குருகுலத்தில் பயின்றதை உறுதி செய்கின்றது. பதஞ்சலியின் ~மகாபாஷ்யத்தில்| பெண்கள் பயிற்றுவிக்கும் குருவாக இருந்ததை உறுதி செய்கின்றது. பெண்கள் தத்துவவியல், சமயம் போன்றவற்றில் ஆண்களுடன் விவாதம் செய்ததை வரலாறு நிறுவுகின்றது.

book _5.jpg2500 வருடம் பழமை வாய்ந்த புத்தமதம் பற்றிய மதம் சார்ந்த தமிழ் மூல நூல்கள் இன்மையால், கிடைத்த தரவுகளில் இருந்தே கூட புத்தமதம் ஓர் ஆணாதிக்க மதமாக இருப்பதைக் காணமுடியும். புத்தமதத்தை ஆணாதிக்கமற்ற மதமாகக் காட்ட முனையும் எல்லாப் போக்குகளின் பின்பும், பிழைப்புத்தனமே எஞ்சிக் கிடக்கின்றது.

book _5.jpgஆணாதிக்கத்தின் இன்னுமொரு வடிவமே முஸ்லிம் மதமாகும். வரலாற்று ஓட்டத்தில் கிறிஸ்தவத்துக்குப்பின் முஸ்லிம் மதம் உருவான போது, அக்காலத்துக்கே உரிய கிறிஸ்தவத்தை விட முற்போக்கான பாத்திரத்தை முஸ்லிம் மதம் ஆற்றியது. இது இருந்த சமூகத்தின் சில மூடப்பழக்க வழக்கங்கள் மீதான மாற்றத்துடன் சமுதாயத்தில் சில முன்னேறிய சீர்திருத்தத்தை முன்தள்ளியது. இது அக்காலத்துக்கே உரிய பல தீர்வுகளைச் சீர்திருத்தத்தினூடாக முன்வைத்தது. இந்த வகையில் பெண்கள் மீது மதத்தை நிலைநிறுத்தும் வடிவில் சில சீர்திருத்தத்தையும் முன்வைத்தது. கிறிஸ்தவம் தோன்றிய போது உந்தப்பட்ட சமூக ஆற்றலைப் பின்னால் அவை இறுகிய இயங்கியல் அற்ற இறுக்கமான ஒழுக்கமாக மாறிய போது, வளர்ச்சி இறுகி ஜடமானது.

book _5.jpgசமுதாயம் உற்பத்தி என்ற அடிக்கட்டுமானம் சார்ந்து ஆணாதிக்கமாக மாறிய போதே, பெண்ணின் அனைத்து அடிப்படைக் கூறுகளும் அதையொட்டி மாறின, மாறிச் செல்கின்றன. இதில் சிறுவழிபாடு முதல் பெரு வழிபாடு வரை ஏற்றத்தாழ்வான ஆணாதிக்க வடிவத்தைக் கொண்டு கடவுள்கள் புனர் உற்பத்தி செய்யப்பட்டன. பெண் தெய்வங்கள் மனிதச் சமுதாயம் போல், ஆண் தெய்வங்களின் மனைவிமாராக மாற்றப்பட்டனர் அல்லது உறவுமுறை ஏற்படுத்தப்பட்டு ஆண் - பெண் உறவு வழியில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டனர்.

book _5.jpgஎதார்த்தத்தில் இன்று நிலவிவரும் நிலப்பிரபுத்துவக் குடும்பம் மற்றும் ஏகாதிபத்தியக் குடும்பம் மற்றும் அவற்றின் சிதைவுகளையே வரலாற்றின் தொடர்ச்சியாகப் பார்த்தல், விளக்குதல் தொடர்கின்றது. சாதாரண மக்களிடம் இப்படிப்பட்ட விளக்கம் இருந்தால் அதைப் போராட்டத்தினூடாக மாற்ற முடியும். ஆனால் சமூக அக்கறையை வெளியிடுபவர்களும் இதன் பாதிப்பில் நீடிக்கின்றனர். புரட்சிக்காக இயங்கும் புரட்சிகரக் கட்சிகளில் கூட பின்தங்கிய மக்கள் கூட்டங்களுக்குள் வேலை செய்ய செல்கின்றபோது, அங்கு இன்னும் நிலவிவரும் குழுமணங்கள் போன்ற அல்லது அதன் எச்சச் சொச்சத்தை அநாகரிகமாகப் பார்ப்பதும், அதன் நல்ல பண்புகளை ஆணாதிக்கச் சமூகக் கண்ணோட்டத்தில் திருத்த முற்படுவது காணமுடிகின்றது.

book _5.jpgபெண்கள் ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தைப் பெண் ஒடுக்குமுறையில் இருந்தே தொடங்கினர். முதல் வேலைப்பிரிவினை ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்பட்டபோது பெண் அடிமைத்தனமும், முதல் வர்க்கச் சுரண்டலும் பெண்ணுக்கு எதிராக ஏற்பட்டது. அந்த நாள்முதலே பெண்ணின் போராட்டம் ஆணாதிக்கத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்டது.


ஆரம்பத்தில் பெண் - ஆண் சார்ந்த சமுதாயப் போராட்டம் என்பது இயற்கைக்கும், மற்றைய உயிரினத்துடனும் உயிர் வாழ்வதற்கானதாகப் பெண்ணின் தலைமையிலான போராட்டமாக இருந்தது. இதன் பின்னால் குழந்தையின் உயிர் வாழ்தலின் பாதுகாப்பு கருதி, பெண்கள் தமது குழந்தைகளுடன் பாதுகாப்பு இடத்தில் தங்கி தற்காப்பில் நிற்க, பெண் மற்றும் குழந்தைகள் அற்ற ஆண்கள் வேட்டையாடவும் உணவு சேகரிக்கச் சென்ற வரலாற்றில், உணவின் உரிமையையும், உபரியையும் தனதாகக் கண்ட ஆண், அதைப் பெண்ணுக்கு நிபந்தனைக்கு உள்ளாக்கி கொடுக்கத் தொடங்கினான். அத்துடன் வேட்டைக்குச் சென்ற ஆண் தனது பொருளாதார ஆதிக்கத்தாலும், பொருளாதார, பண்பாட்டுக் கலாச்சாரத்தாலும், பெண்ணின் பணிகளை ஆண் வரையறுக்கத் தொடங்கினான்.

book _5.jpgமனித முரண்பாடுகள் இயற்கை தோற்றுவித்தவையல்ல. இயற்கையில் நீ சிறியவன் - நான் பெரியவன் என்றோ, ஏழை, பணக்காரன் என்றோ, ஆண் - பெண் என்றோ... பிளவுகள் அற்ற பரிணாமத்தின் தேர்வில்; மனிதன் இயற்கையைத் தனது உழைப்பைக் கொண்டு மாற்றத் தொடங்கியவுடன், உற்பத்தியின் வேறுபட்ட தன்மையுடன் கூடிய வேலைப் பிரிவினையும், பிளவும், மனித வளர்ச்சியை ஒட்டிய இயற்கைப் பிளவுகளும் வளர்ச்சி பெற்றது. இந்த இயற்கையின் மீதான உழைப்பினால் ஏற்பட்ட, உற்பத்தியின் வளர்ச்சியினால் ஏற்பட்ட பிளவுகள், இயற்கையையும் மனிதனையும் அடிமைப்படுத்த, சமுதாயத்தின் இயற்கைப் பிளவுகள் மனிதப் பிளவுகளாகி அடிமைத்தனத்துக்கும், சுரண்டலுக்கும் வித்தி;ட்டன.

book _5.jpgபெண் மீதான ஆணின் அடக்குமுறையே முதல் வர்க்க ஒடுக்குமுறை என்பதை முதலில் கூறியது ஏங்கெல்ஸ்சே! எல்லா மனித அடக்குமுறையின் முதல் மூலம் இந்த வர்க்க அடக்குமுறையில் தோற்றம் பெற்றது. இதை முதன் முதலில் கூறியதும், இதற்கு எதிராக முதலில் போராடியதும், மார்க்சியம் மட்டும்தான். தொடர்ந்து இதற்கு எதிராகப் போராடும் ஓர் அரசியல் பொருளாதார, பண்பாட்டு வடிவமாக உள்ளதும் மார்க்சியம் மட்டும்தான். பெண்ணின் உழைப்பு, வேலைப் பிரிவினையூடாக ஆண்களால் சூறையாடப்பட்ட நிலையில், அந்த வர்க்கப் பகையை உள்ளடக்கிய ஒரு வர்க்கப் போராட்டத்தை, ஆண் சார்ந்து சமூகமயமாகியுள்ள ஆணாதிக்கத்துக்கு எதிராக நடத்தப்படாமல் பெண் விடுதலையடைய முடியாது. ஆணாதிக்கத்துக்கு எதிரான வர்க்கப் போராட்டம் பெண்ணின் விடுதலைக்கான முன் நிபந்தனையாகும்.

book _5.jpgஆணாதிக்கத்துக்கு எதிராக மார்க்சியம் போராடவில்லை அல்லது கவனமெடுக்கவில்லை என்று கூறும் மார்க்சியம் அல்லாத பெண்ணியவாதிகளின் பெண்ணியத்தையும், மார்க்சியத்தின் போராட்ட வரலாற்றையும் இந்த நூல் ஆய்வு செய்கின்றது. மார்க்சியம் பெண்களின் பிரச்சனையை ஒட்டி கவனம் எடுக்கவில்லை, ஆய்வு செய்யவில்லை என்பதைத் தகர்ப்பதிலும், பெண்ணியத்தின் பின், அரங்கேறும் ஆணாதிக்கச் சலுகைகளையும் இந்த நூல் அம்பலப்படுத்துகின்றது. இதேபோல் தேசியம், மதம், நிறம், காலனித்துவம் போன்றவற்றிலும் அதாவது நேரடி வர்க்கப் போராட்டம் தவிர்ந்தவற்றில் மார்க்சியம் கவனம் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எப்படி வெறும் அபத்தங்களோ, அதேபோலத்தான் பெண்ணியமும். வர்க்கப் போராட்டம் என்பது சமூக இயக்கத்தின் அனைத்துத் துறையிலும் உள்ளடங்கியது என்பதை மார்க்சியம் உட்கிரகித்தமையால்தான் அது வெல்ல முடியாத மக்களின் போராட்டத் தத்துவமாகவுள்ளது.

book _5.jpgபழந்தமிழ் இலக்கியங்கள் பெண் வழிபாட்டின் பல்வேறு தகவல்களை விட்டுச் சென்றுள்ளது. பெண்ணே உலகத்தைப் படைத்தவள் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. ''மோடு" என்பது வயிறு என்று பொருள். எல்லோரையும் பெற்ற வயிறு என்ற பொருளில் தாய்த் தெய்வம் மோடி என்றழைக்கப்பட்டாள்31 (பெரும்பாணாற்றுப்படை நச்சினார்க்கினியர் உரை - 458), மேடடேந்தரிவை (இராவண காண்டம் - 106), பெருமோட்டுக்கிழதன் (தனிப்பாடல்), பெரு மோட்டாள் (தகடூர் யாத்திரை)22 என்ற பெண் தெய்வங்கள் ஆண் உறவின்றி கன்னியாகவே உலகத்தைப் படைத்தாள் என்ற கருத்து, பெண்தெய்வ வழிபாட்டின் மூலம், பெண்; தலைமையின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்றது. இதையே தாயுமானவர்,