பேரினவாதியாக முளைத்தெழுந்த திடீர் புத்தர், கட்டவிழ்த்துவிட்டுள்ள அராஜகம்
சி ங்களப் பேரினவாதம் மீண்டும் மீண்டும் தனது இனவாதக் கூத்துகளை நடத்தி, அதில் குளிர்காய்கின்றது. இதைத்தான் திடீர் புத்தர் விவகாரம் மறுபடியும் எடுத்துக்காட்டுகின்றது. மனித இனத்தை மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால் பந்தாடும் அரசியல் கூத்துகள் மூலமே, தமது சொந்த அதிகாரங்களை நிறுவி மனித இனத்தைச் சூறையாடுவதையே கறைபடியாத ஜனநாயகமாக்குகின்றனர். இந்த முயற்சியில் தான் திருகோணமலையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை விவகாரம். பொதுஇடங்களிலும், ஒரு பிரதேசத்தின் முக்கியமான மையங்களிலும் நிறுவப்படும் புத்தர் சிலை மூலம், எதைத்தான் இந்த மனிதச் சமூகத்துக்குச் சொல்ல முனைகின்றனர்?