Language Selection

பி.இரயாகரன் -2024
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கலை இலக்கியம் என்றும் அரசியல் என்னும் பெயரிலும் பொறுக்கிகள், தம்மைத்தாம் முற்போக்காளராக முன்னிறுத்திக் கொள்கின்றனர். பெண்களை பாலியல்ரீதியாக நுகர்கின்ற ஆண்களின் ஆணாதிக்க வேட்டைக்கு, கலையும் இலக்கியமும் அரசியலும் பயன்படுத்தப்படுகின்றது.

2009 புலிக்கு பின்பாக ஆணாதிக்க பாலியல் வக்கிரமானது - புலத்தில் மட்டுமல்ல இலங்கையிலும் அரங்கேறி வருகின்றது. இதை நியாயப்படுத்தும் இலக்கிய கூட்டுக் களவாணிகள், தங்கள் தர்க்கவியலுடன் களமாடுகின்றனர். அவர்களின் ஆணாதிக்க தர்க்கத்தையும் - இதன் சிந்தனைமுறையையும் இந்தக் கட்டுரை ஆராயவில்லை. 

சமூகத்தின் பெயரில், தேசத்தின் பெயரில்.. சினிமா தொடங்கி அதிகாரங்கள் வரை, பெண்கள் பாலியல்ரீதியாக பல்வேறு வேசங்களில் வேட்டையாடப்படுகின்றனர். இவை இணங்கியும், இணங்காமலும்… நடந்தேறுகின்ற, பாலியல் வேட்டையாக இருக்கின்றது. இந்தப் பாலியல் வேட்டை கலை இலக்கியம் மற்றும் அரசியலுக்கு விதிவிலக்கா என்ன!? 


கலை இலக்கியம் மற்றும் அரசியலில் பெண்ணை பாலியலுக்கு இணங்கவைக்கும் போலி அறிவியல் கோட்பாடுகளுடன், ஆணாதிக்கம் வேட்டையாடுகின்றது. அறிவால் இணங்க வைக்கும் பாலியல் வேட்டையும், அதை நியாயப்படுத்தும் கேடுகெட்ட பொறுக்கித்தனத்தில் இறங்கிவிடுவது நடந்தேறுகின்றது. 

மக்களைச் சார்ந்திருக்காத, சமூக அறமற்ற கலை, அரசியல் இலக்கிய கோட்பாடுகள், முதலாளித்துவ சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது. இங்கு பாலியல் என்பது, மூலதனத்தின் கண்ணோட்டத்தில் நுகர்வாக்கவும் - அதற்கு அவளை இணங்கவைப்பதும் தான்.      

தனியுடமையை எதிர்க்காத கலை, அரசியல் இலக்கியத்தின் நோக்கமென்ன? அதாவது முதலாளித்துவ கலை, அரசியல் இலக்கியக் கண்ணோட்டமானது, தனிமனித இலக்கை அடைவதற்கான ஒரு கருவி. அவ்வளவு தான். தனிமனித புகழ்;, பணம், நுகர்வு தொடங்கி பெண்ணை விதவிதமாக நுகர்வது தான். அதாவது எல்லாவற்றையும் அடைவதற்கும் - அதை நியாயப்படுத்துவதற்காகவே, கலை, அரசியல் இலக்கியம் முதல் முதலாளித்துவ சமூக இயக்கங்கள் வரை முன்னிறுத்தப்படுகின்றது. இதுதான் தனியுடமைவாதத்தை எதிர்க்காத கலை, அரசியல், இலக்கியத்தின் பொதுக் கண்ணோட்டமும் - தனிமனித இலக்குமாகும்.   

புலம்பெயர் இலக்கியம் முதல் இலங்கையின் தமிழ் இலக்கியம் வரை, தனியுடமையை ஆதரிக்கின்றதும், தமிழ் சமூகத்துக்கேயுரிய வெள்ளாளிய தனியுடமைவாதத்தைத் தளுவியே தன்னை முன்னிறுத்துகின்றது. இந்தத் தமிழ் வெள்ளாளிய கலை, இலக்கியம், சமூக இயக்கங்கள் … தங்கள் முதலாளித்துவ தனியுடமைவாத உள்ளடக்கத்தை மூடிமறைக்கவே, இடதுசாரிய - முற்போக்கு வேசம் போடுவது நடந்தேறுகின்றது. அதேநேரம் வர்க்கப் போராட்ட நடைமுறைக்கு வெளியில் திண்ணைப் பேச்சு இடதுசாரிகளுடன் கூடிக்குலவுகின்றதன் மூலம், தங்கள் தனியுடமைவாத வேசத்தை முற்போக்காக பூசிமெழுகுகின்றனர்;. வலதுசாரிய தனியுடமைவாதத்தைக் கண்டுகொள்ளாத திண்ணைப் பேச்சு இடதுசாரிகள், கூட்டாக வெள்ளாளிய தனியுடமைவாத சமூக அமைப்பை பாதுகாப்பவராக இருக்கின்றனர். கலை, அரசியல் இலக்கியத்தை முன்வைக்கும் முதலாளித்துவ ஆணாதிக்க வேட்டை நாய்கள் இவர்களுடன் கூடிக்கொண்டு பம்மிக்கொண்டு திரிவதுடன், பெண் வேட்டையில் இறங்குகின்றனர். இடதுசாரியத்தின் பெயரிலும் வேட்டையில் ஈடுபடுகின்றனர். 

தனியுடமையை எதிர்க்காத ஒருவனின் பெண்ணியமானது, முதலாளித்துவ ஆணாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆணாதிக்கம் என்பது தனியுடமையுடன் உருவான சமூக ஒடுக்குமுறை என்பதே, சமூக விஞ்ஞான உண்மை. தனியுடமையை ஆதரிக்கின்ற பெண்ணியம் என்பது, முதலாளித்துவத்தின் போலி ஜனநாயகத்தால் அலங்கரிக்கப்பட்ட செப்படிவித்தை.

தனியுடமையுடன் உருவான சமூக ஒடுக்குமுறையிலான ஆணாதிக்க உண்மைக்கு முரணாக முன்வைக்கும் முதலாளித்துவப் பெண்ணியம், ஆணாதிக்கம் குறித்து பேசுவது ஆணாதிக்கத்தை பாதுகாக்கின்ற அரசியலை அடிப்படையாகக் கொண்டது. இந்த முதலாளித்துவப் பெண்ணியம், அமெரிக்க ஜனநாயகம் போன்றது. 

இலக்கியச் சந்திப்பில் கார்ல் மார்க்ஸ் குறித்து நிர்மலாவின் வக்கிரம், தனியுடமைவாத ஆணாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட அவதூறு. கோட்பாட்டு ரீதியாக தனியுடமையை ஆதரிக்கின்ற, வர்க்க ஒடுக்குமுறையை முன்னிறுத்தும் முதலாளித்துவப் பெண்ணிய சிந்தனைமுறை. இது அவதூறுகள் மூலம் கட்டமைக்கப்படும் ஒடுக்கும் வர்க்க வெள்ளாளியக் கண்ணோட்டம். அமெரிக்க கிறிஸ்துவ தமிழ் வெள்ளாளியமாகும். புலிப் பாணியில் வர்க்க அரசியலை அணுகும் வக்கிரமாகும்.  

தனியுடமைவாதத்தை ஆதரிக்கின்ற சிந்தனைமுறையில், கலை - இலக்கியமானது, சமூக அறம் சார்ந்து இருப்பதில்லை. தனியுடமைவாதத்தைக் கொண்ட ஆண் சிந்தனைமுறையில், பெண் நுகர்வுக்குரிய பண்டம் தான். இதை எப்படி அடைவதில் என்பதிலேயே முரண்பாடுகள். அதாவது வன்முறையிலா அல்லது இணங்க வைத்தா என்பதில் இருந்து தான், முதலாளித்துவ பெண்ணியல்  தர்க்கவியலை முன்நகர்த்துவர். தனியுடமை அமைப்பின் சிந்தனைமுறை இதுதான். அனைத்தும் சுரண்டுவதற்கான நுகர்வுகளே மற்றும் மனித உறவுகள் தனியுடமைவாதத்துக்குட்பட்டது என்பதே.   

மனிதன் சமூக உயிரி என்பதையும், பெண்ணே அதன் நெம்புகோலாக இருக்கின்றாள் என்பதை, தனியுடமை - ஆணாதிக்கத் தர்க்கவியல் மறுதளிக்கின்றது. 

27.04.2004

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது