Language Selection

பி.இரயாகரன் -2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தேசியம் முதலாளித்துவ கோரிக்கையல்ல என்று காட்ட, பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தையே திரித்துக் காட்டுகின்றனர். பாட்டாளி வர்க்கம் தனது வர்க்கப் போராட்டத்தில் முரணற்ற தேசியத்தை முன்னிறுத்தி நடத்திய போராட்டங்களைக் காட்டி, தேசியத்தை வர்க்கமற்றதாக காட்டமுனைகின்றனர். தேசியத்தை முதலாளித்துவ கூறு அல்ல என்று காட்டும் அக்கறை, முதலாளித்துவ நலன் சார்ந்தது. அதாவது பாட்டாளி வர்க்கத்தை முதலாளித்துவ நலனுக்கு பயன்படுத்த முனைகின்ற அரசியலாகும். அதைப் பாட்டாளி வர்க்கத்தின் பெயரில் செய்வது தான், இங்கு அரசியல் சதியாகும்.

2ம் உலக யுத்தம் நடந்த காலத்தில், சோவியத் விடுவிக்கப்பட்ட பிரதேசமாக, தன்னை தொடர்ந்து தக்கவைக்க வேண்டியிருந்தது. உலகநாடுகளும் அவைகளின் எல்லைகளும், சர்வதேச விதிமுறைகளும் மறுக்கப்பட்ட காலம் அது. ஆக்கிரமிப்பு ஊடான மறுபங்கீடு நடந்த காலம் அது. பொதுவான ஏற்றுக்கொள்ளப்பட்ட, பரஸ்பரம் மதிக்கப்பட்ட சர்வதேச எல்லைகள் என்பதைக் கடந்த ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்த நிலையில், சோவியத்யூனியன் தன்னை தற்காக்க வேணடியிருந்தது.

உலகமே முதலாளித்துவ சமூமாக இருந்த நிலையில், சோவியத்தில் மட்டும் முதலாளித்துவமல்லாத அதற்கு எதிரான சமூகக் கட்டமைப்பு இருந்தது. பாட்டாளி வர்க்கம் தன் தற்காப்பு சார்ந்த யுத்தத்தில் தேசியக் கூறை அடிப்படையில் கொண்டிருந்தது. இவை இரண்டு தளத்தில்

1. சோவியத் பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சியின் கீழ், வர்க்கங்களைக் கொண்ட ஒரு நாடாக இருந்தது. பாட்டாளி வர்க்கமல்லாத வர்க்கப் பிரிவினரைக் கொண்ட, அவர்களின் முதலாளித்துவ தேசிய உணர்வை ஆக்கிரமிப்புக்கு எதிராக அணிதிரட்ட வேண்டியிருந்தது.

2. முதலாளித்துவ உலகத்தில் அதன் ஆக்கிரமிப்புக்கு எதிராக, ஒரு நாடு சார்ந்த உலக முதலாளித்துவ வரைமுறையை உள்ளடக்கிய, ஆக்கிரமிப்புக்கு எதிராக தேசிய உணர்வை ஒன்றிணைக்க வேண்டிருந்தது.

இதை பாட்டாளி வர்க்கம் தன் கையில் எடுக்கத்தவறினால், முதலாளித்துவ வர்க்கம் அதை தன் கையில் எடுத்து பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான போராட்டமாக மாற்றிவிடும். மறுபக்கத்தில் உலக ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்க முடியாது. புதிய முரண்பாடுகள், புதிய வர்க்க சேர்க்கையைக் கோரியது. இது தேசியத்தை முதலாளித்துவம் அல்லாததாக மாற்றிவிடுவதில்லை.

இதை மேலும் புரிந்துகொள்ள, இலங்கையில் பேரினவாதத்துக்கு எதிரான தமிழ்தேசியத்தை எடுப்போம்;. இந்த தமிழ் தேசிய ஜனநாயகப்; புரட்சியை எந்த வர்க்கம் தலைமை தாங்குவது என்ற போராட்டம், ஆரம்பம் முதலே நடந்தது. பாட்டாளிவர்க்கம் தன் வர்க்க நலனை அடைய, ஜனநாயகப் புரட்சி உள்ளடங்கிய தனது நலன் உள்ளடங்கிய போராட்டத்தைக் கோரியது. முதலாளித்துவ வர்க்கம் பாட்டாளி வர்க்க நலனை மறுத்து, தன் தலைமையில் பாட்டாளி வர்க்கத்தை ஓடுக்கும் தேசியத்தைக் கோரியது. பாட்டாளி வர்க்கத்தின் நலனை மறுக்கும் அதன் தேசியக் கூறு, இயல்பில் உலக ஒழுங்குக்குள் தன்னை ஒழுங்குபடுத்தி அதற்குள் சீரழிந்தது. அது மக்களையே ஒடுக்கும் கும்பலாக மாறி அழிந்தது. இது வெறும் புலிகள் மட்டுமல்ல, பாட்டாளி வர்க்க நலனை முன்னிறுத்தாத அனைவரும் இப்படித்தான் இயங்கினர். தங்கள் வெற்றுக் கோசங்கள் மூலம், மக்களுக்கு எதிராக இருப்பதையும் செயல்படுவதையும் அவர்களால் மூடிமறைக்க முடியவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் போன்ற குழுக்கள் கூட, மக்கள் விரோத அன்னிய கைக்கூலிகளாக இருந்தபடி, கோசங்களையும் இடதுசாரிய லும்பன்தனத்தையும் திணித்தனர்.

1970களில் சிறிமா அரசாங்கத்தில் இடதுசாரிகள் பாட்டாளி வர்க்க பொருளாதாரம் என்ற ஒன்றை, லும்பன்தனத்துடன் நடைமுறைப்படுத்தியது போன்று தான் ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ்சின் இடதுசாரியமும்.

பாட்டாளிவர்க்க தலைமையில் அவை என்றும் இருக்கவில்லை. பாட்டாளிவர்க்க தலைமையிலான போராட்டத்தை என்.எல்.எவ்.ரி., பேரவை முதல் இயக்கத்துக்கு எதிரான உள்ளியக்க அமைப்புக்கள் பல கட்ட போராட்டத்திலும் நடத்;தின. இப்படி அவர்கள் தான் முதலில் அழிக்கப்பட்டார்கள். இதை புலிகள் மட்டும் செய்யவில்லை. முதலில் பெருமெடுப்பில் புளட்டும், இறுதியில் புலியும் செய்தது.

பாட்டாளி வர்க்கம் அன்று கோரியது, தன் வர்க்கப் போராட்டத்தை அல்ல. பல ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஐக்கிய முன்னணியை அடிப்படையாக கொண்ட தேசிய போராட்டத்தைக் கோரியது. இனமுரண்பாட்டை பிரதான முரண்பாடாக இனம் கண்டதன் மூலம், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஜனநாயக் கோரிக்கையை தனதாக்கியது. ஆம் முதலாளித்துவ தேசிய கோரிக்கை என்பது ஒரு ஜனநாயகக் கோரிக்கையாக இருப்பதால், அதை தனது கோரிக்கையாக்கியது. பாட்டாளி வர்க்கம் அதை தனது முரணற்ற கோரிக்கையின் எல்லையில் முன்னிறுத்துகின்றது. தேசியம் என்பது சாராம்சத்தில் தன் மக்களை சுரண்டாத கற்பனை பொருளல்ல. சுரண்டும் வர்க்கத்தின் நலனை அடிப்படையாகக் கொண்டதுதான்.

இதுவல்லாத தேசியம் என்பது கற்பனையானது. பாட்டாளி வர்க்கம் என்ன செய்கின்றது, தன் தலைமையில் இதை அங்கீகரித்து, பாட்டாளி வர்க்க நலனுக்கு இசைவான வகையில் படிப்படியாக அதை இல்லாதாக்குகின்றது.

சீனப்புரட்சி பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் நடந்த போது, அங்கு முதலாளித்துவ வர்க்கத்தை உள்ளடக்கியிருந்தது. பல வர்க்கத்தின் ஐக்கிய முன்னணி மூலம்தான் புரட்சி வெற்றிபெற்றது. ஆகவே தான் அது புதிய ஜனநாயக புரட்சியாக இருந்தது. அது சோவியத் போல், சோசலிச புரட்சியல்ல. சோசலிச புரட்சிக்கு முந்தைய ஒரு கட்டம். சோவியத்தில் தேசிய முதலாளித்துவத்துக்கும் எதிரான வர்க்கப் போராட்டமாக இருந்தது. சீனாவில் தேசிய முதலாளித்துவ வர்க்கத்துடன் சேர்ந்து, தரகு முதலாளித்துவ மற்றும் நிலப்புரத்துவம்துக்கு எதிரான போராட்டமாக இருந்தது.

இந்த எல்லையில்தான், பாட்டாளி வர்க்கம் தேசியத்தை தன் வர்க்க நலனுக்கு ஏற்ப முன்னிறுத்தியது. தேசியத்தில் உள்ளார்ந்து காணப்படும் முரணற்ற ஜனநாயகக் கூறுகளை உயர்த்துவதன் மூலம்தான், முரணான முதலாளித்துவத்தை பாட்டாளி வர்க்கம் தனிமைப்படுத்தி தனது வர்க்க நலனை அடைய முனைகின்றது. முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரணற்ற கூறுக்கும், முரண்பாடான கூறுக்கும் உள்ள முரண்பாட்டையே, பாட்டாளி வர்க்கம் தன் கையில் எடுக்கின்றது. உதாரணத்துக்கு மற்றவன் உழைப்பை சுரண்டுவது ஜனநாயகமா!? முரணற்ற ஜனநாயகம் இதை ஜனநாயகமாக கருதுவதில்லை. முரணான ஜனநாயகம் இதை ஜனநாயகமாக கருதுகின்றது. தேசியத்தின் முழுச் சாரமும் இப்படித்தான் உள்ளது.

தொடரும்

பி.இரயாகரன்

17.01.2011

1. தேசியம் என்பது எப்போதும் முதலாளித்துவ நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது புனைவா!? - 01

2. தேசியம் என்பது எப்போதும் முதலாளித்துவ நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது புனைவா!? – பகுதி 02

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது