Language Selection

பி.இரயாகரன் -2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புலி அரசியலோ சமூகத்தை வெட்டியாக்கி விதைத்த விதைகள், புலியல்லாத தரப்பை அரசியலற்ற மக்கள் விரோத நக்கியுண்ணும் கும்பலாக்கியது. இப்படி மக்கள் விரோத அரசியலைக் காவித் திரிந்தவர்களின் ஒருபகுதி, இன்று இனியொரு இணையத்தில் கும்மியடிக்கின்றனர்.

இந்தக் கும்பல் தம்மை தூய்மையானவராக காட்ட, கலையரசன் மேலான ஒரு தாக்குதலை நடத்தியது. கடந்த காலத்தில் புலியல்லாத மாற்றுத்தரப்பின் பெயரில் நடத்திய இலக்கியச் சந்திப்புகள் முதல் புலம்பெயர் அரசியல் கூத்துகள் மக்கள் அரசியலை துறந்து நின்றதுடன், அதை கேவலப்படுத்தியது. குறிப்பாக மார்க்சியத்தை மறுத்தனர், திரித்தனர். இதன் மூலம் அனைத்து எதிர்ப்புரட்சிக் கூத்தையும் நடத்தினர். முன்னாள் இயக்க கொலைகாரர்கள், வலதுசாரிகள், தன்னார்வ கைக்கூலிகள், அரச எடுபிடிகள் என அனைவரும் ஒன்றாக சேர்ந்தே, புலியல்லாத ஒரு மாற்றை முன்னிறுத்தினர். இதைத்தான் புலிக்கு மாற்று என்றனர். மக்கள் விடுதலைக்கான அரசியல் பாதை என்றனர்.

 

இப்படி கூடிக் கும்மி அடித்து எதிர்ப்புரட்சி அரசியல் எல்லைக்குள் இயங்குவது தான் சரியானது என்று, முன்னின்று வழிகாட்டியவர்களில் இனியொரு ஆசிரியரான அசோக் முதன்மையானவர். மார்க்சியத்தை மறுத்து, மார்க்சியத்தை குழி தோண்டிப் புதைத்த புலியல்லாத கும்பலுடன் கூடி, மக்கள் அரசியலை நிராகரித்தவர் தான் இந்த இனியொரு அசோக். இப்படி இவர்கள் நடத்திய இழி அரசியல் கூத்தின் கீழ் தான், கலையரசன் முதல் பல இளம் தலைமுறையினர் தவறாக வழிகாட்டப்பட்டனர்.

 

மக்கள் விரோதிகள் நண்பர்களாக, தோழர்களாக அறிமுகப்படுத்தப்பட்டனர். இவர்களின் மக்கள் விரோத அரசியல் தேவைக்கும் நோக்குக்கும் ஏற்ப, மக்கள் விரோத அரசியல் தளத்தில் பலர் பயன்படுத்தப்பட்டனர். இந்த வகையில் அரசியல் ரீதியாக பெண்ணியத்தை இனம் கண்டு கொள்ளாது புதிதாக அரசியலுக்கு வந்த இளம் பெண்களை, இதுதான் பெண்ணியம் என்று சொல்லி அவர்களை பாலியல் ரீதியாக அணுகினர். அரசியல் முரண்பாடுகளின் போது, அப்பெண்களை "விபச்சாரி" என்று புலியல்லாத மாற்று அரசியல் தூற்றியது வரை புலம்பெயர்  இலக்கிய கூத்துகள் பலவிதமாக அரங்கேறியது. எல்லாவற்றையும் ஏற்று, கூடிக் குலாவியவர்கள், இன்று தமக்கு அதில் பங்கில்லை என்பது சுத்த அரசியல் மோசடித்தனமாகும். இலங்கை அரச கூலிப் பிரதிநிதிகளுடன் கூடி கும்மியடிப்பது வரை, இவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டவர்கள் பலர்.  

 

உதாரணமாக இனியொரு ஆசிரியர் அசோக் யாரை சந்திக்க எங்கே செல்கின்றோம் என்று சொல்லாமல், பிரான்ஸ் இலங்கை தூதரகத்துக்கு கூட இளம் தலைமுறையை அழைத்துச் சென்றவர் தான். தமிழ் மக்களுக்கு மாற்றைத் தேடிய இளம் தலைமுறை இளைஞனை, இலங்கை தூதரகத்தில் தங்கியிருந்த டக்கிளஸ் முன் கொண்டு சென்று நிறுத்தியவர் தான் இந்த இனியொரு அசோக். இப்படி எத்தனை சம்பவங்கள் கடந்தகாலத்தில் நடந்தேறின. இந்தியா றோவின் கூலிக் கும்பலாக இன்று வளர்க்கப்படும் ஈ.என்.டி.எல்.எவ் ராஜன் வரை தொடர்பு கொண்டு, அவர்களின் ஐரோப்பிய ஏஜண்டுகள் கூடி ஒரு சதி அரசியல் வலைப் பின்னணியில் அரசியல் செய்தவர், செய்பவர் இந்த இனியொரு அசோக். 

 

இவர் தான் இன்று கலையரசன் மேல் குற்றம்சாட்டுகின்றார். கலையரசன் தன் மீதான அவதூறுக்கு பதிலளிக்க எழுதிய கட்டுரையில்,  http://kalaiy.blogspot.com/2009/11/blog-post_18.html தன்னார்வ பிரதிநிதியை அசோக் வீட்டில் வைத்து அறிமுகமாகியதாக கூறுகின்றார். படுபிற்போக்கான அரசியல் சதி அரசியல் பின்னணி கொண்டவர்களை உள்ளடக்கிய ஒரு அரசியல் போக்கின் ஏக பிரதிநிதிகளில், மிக முக்கியமான ஒருவர் தான் இன்றைய இனியொரு ஆசிரியர். புளாட் உட்படுகொலையை ஆரம்பத்தில் தொடக்கி வைத்த கொலைகாரனும், புளாட்டில் இருந்த பெண்களை அரசியலுக்கு ஊடாக பாலியல் ரீதியாக அணுகியவரும், பின் புலிகளுக்கு ஊதுகுழலாக மாறியவருமான சிவராம் அசோக்கின் உற்ற தோழன். பாரிஸ் வரும்போது இனியொரு அசோக்கோடு அவர் வீட்டில் தங்கி, அவருடன் சேர்ந்துதான் எல்லா எதிர்ப்புரட்சி அரசியலையும் செய்தவன். அரச பயங்கரவாத பாசிசத்துக்கு அஞ்சி தலைமறைவாக தங்க அபாயம் கோரிய பெண்ணின் உடலைக் கோரிய ஒரு அற்ப நாய் தான் இந்த சிவராம். இப்படித் தான் தேசியத்தை போற்றி, அதை தங்கள் சுயநலத்துக்கு பயன்படுத்தியவர்கள் பலர். இப்படிப்பட்ட நாய்கள் முதல் தன்னார்வ ஏஜண்டுகள் வரை அசோக்கின் நண்பர்கள் தோழர்கள். இந்த பொறுக்கியை ஊடகவியலாளனாக, நண்பனாக, தோழனாக காணும் தங்கள் அரசியல் போக்கிரித்தனத்தை மூடிமறைத்துக்கொண்டு, யாரும் தம்மை தூய்மைப்படுத்தமுடியாது.  

 

இப்படிப்பட்ட பொறுக்கிகள் முதல் அரச எடுபிடியாக பாசிசக் கொலைகளை முன்னின்று செய்த டக்கிளஸ் வரை, இவரின் நண்பர்கள், தோழர்கள். எல்லா அரசியல் பொறுக்கிகளும், நண்பர்கள் தோழர்கள். தம்முடன் தம் தளத்துக்கு கலையரசன் உடன்பட மறுத்ததால், அவர் மீது குற்றச்சாட்டு. ஏன் சுசீந்திரனை தன்னார்வ பிரதிநிதியாக காட்டும் அசோக்கும் இனியொருவும், ஏதோ இப்போது தான் இது நடந்தது என்று புதுக்தையையே புனைகின்றனர். சுசீந்திரன் அன்று (இலக்கிய சந்திப்பு காலம் முதல்) முதல், தன்னார்வ நிதி பெற்று வருபவர் தான். அவருடன் சேர்ந்து 10, 15 வருடமாக அரசியல் கூத்தாடிய அசோக், இன்று கலையரசன் மீது சேறடிக்கின்றார். அரசியல் வேடிக்கையல்லவா!  

         

கலையரசன் போன்றவர்களை புலி எதிர்ப்பு அணிக்குள், எல்லா போக்கிலிகளுடனும் சேர்ந்து அரசியல் செய்ய வழிகாட்டியவர்கள் நீங்கள். அதை மறுத்த அரசியலை செய்தவர்கள் அல்ல நீங்கள். அன்று மக்கள் அரசியலை கைவிட்டு தம்மை பின்பற்ற, மற்றவர்களைக் கோரியவர்கள் நீங்கள். அன்று அதை செய்த நீங்கள், அதை செய்யச் சொன்ன நீங்கள், இன்று வெள்ளை வேட்டி கட்டிக் கொண்டு கலையரசன் மேல் அவதூறை அள்ளித் தெளிக்கின்றீர்கள். உங்கள் கடந்தகால எல்லா எதிர்ப்புரட்சிகர நடத்தைகளையும், வாழ்வியல் செயல்களையும், தவறான வாழ்க்கை முறைகளையும், வெள்ளையாக்கி காட்ட முனைகின்றீர்கள்.

 

இதற்கு ம.க.இ.க தோழர் மருதையனை திடீரென முன்னிறுத்தித் காட்டுவதன் ஊடாக, தமக்குத்தாமே வெள்ளையடிக்க முனைகின்றனர். ம.க.இ.கவும், தோழர் மருதையனும் உங்கள் அரசியல் வரலாறு நீடித்த காலம் முழுக்க, அவர்களின் புரட்சிகர அரசியலில் நீடித்து இருந்தது என்பது எதார்த்தம். அப்போது நீங்கள் எங்கு யாருடன் சேர்ந்து என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்!? மார்க்சிய அரசியலா செய்தீர்கள். இல்லை, அதை கருவறுக்கும்  தூக்குமேடையில், அலுக்கோசுகளுக்கு நீதிபதிகளாக இருந்தீர்கள். அவை பற்றி விமர்சனம், சுயவிமர்சனம் என எதுவுமின்றி, இன்று திடீர் மார்க்சியம் பேசுவது சந்தர்ப்பவாதமும் பிழைப்புவாதமுமாகும். இந்த திடீர் மார்க்சியம் பேசும் சந்தர்ப்பவாதம் பிழைப்புவாதம் பற்றி  ம.க.இ.க தோழர்கள் என்ன நினைக்கின்றனர் என்பது எமக்குத் தெரியாது. ஆனால் நாம் இந்த நேர்மையற்ற அரசியல் போக்கை, எதார்த்தத்தில் எதிர் கொண்டேயாக வேண்டியுள்ளது என்பது உண்மை. தொடர்ச்சியான ஒரு இயங்கியல் போக்கற்ற திடீர் மார்க்சியம், சந்தர்ப்பவாதத்தையும் பிழைப்புவாதத்தையும் ஆதாரமாகக் கொண்டது.     

 

கடந்த காலத்தில் புலியின் அரசியல் செயல்களை ஆதரித்தவர்கள், விமர்சனம் சுயவிமர்சனமின்றி ஒருநாளும் மக்களுக்காக உண்மையாக இருக்கமுடியாது. அதுபோல் கடந்த காலத்தில் புலிகள் அல்லாத தரப்பில் நீடித்த மக்கள் விரோத அரசியல் போக்கை  சுயவிமர்சனத்தையும் விமர்சனத்தையும் செய்யாமல் நேர்மையாக எதையும் மக்களுக்காக செய்ய முடியாது.

 

புலிகளின் பாசிசத் தலைமையின் கீழ் இதுதான் விடுதலை என்று நம்பி சென்றவர்கள், தியாகம் செய்தவர்கள் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் அப்பாவிகள். இதுபோல் உங்களை நம்பி வந்தவர்கள், அங்குமிங்கும் போயிருந்தால் அவர்கள் குற்றவாளிகள் அல்ல, நீங்கள் தான் குற்றவாளிகள். நீங்கள் சரியாக வழிநடத்த முனைந்தீர்களா!? அவர்களை இனம் காட்டினீர்களா? இல்லை, மாறாக அதை வழிகாட்டிவிட்டு, மற்றவனை குற்றம்சாட்டுவது இழிவான மலிவான அரசியலாகும்.

 

கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதும், இவர்கள் என்ன செய்தனர் என்பதும் வரலாற்றின் உண்மையாக இருக்கின்றது. அதை யாராலும் மூடிமறைக்க முடியாது. திடீர் மார்க்சியம் பேசி, புரட்சி வித்தை காட்டலாம். இன்று நேரத்துக்கும் நிலைமைக்கும் ஏற்ப, திடீரென திடீர் மார்க்சியம் பேசுவது என்பது, பச்சையான சந்தர்ப்பவாதமாகும்;. அரசியல் ரீதியாக நீட்சியற்ற, திடீர் மார்க்சியம் என்பது அரசியல் வே~மாகும். கடந்தகாலத்தில் தங்கள் வரலாற்றை மூடிமறைத்து, மக்களை ஏமாற்றுவதாகும். வரலாற்றின் எதிர்ப்புரட்சிகரப் போக்கை புலிகள் மட்டும் பிரதிபலிக்கவில்லை, புலியல்லாத தரப்பிலும் கூட அது இணைந்தே காணப்பட்டது.

 

மக்களைச் சார்ந்த அரசியலை முன்னிறுத்தாத கடந்தகால அரசியல் நடத்தைகளும், தனிமனித வாழ்வியல் சீரழிவுகளும், திடீர் மார்க்சியம் பேசுவதால் விமர்சனம் சுயவிமர்சனமாகிவிடாது. மாறாக அது மக்களை ஏமாற்றும் புது முகமூடி.

 

பி.இரயாகரன்
22.11.2009         

 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது