Language Selection

'ம.க.இ.க. வினவின் இனவாத பொய்கள்!" என்ற தலைப்பில் 'ஈழம்: உலக மக்களே இந்தியாவைக் கண்டியுங்கள்!" என்ற வினவின் கட்டுரையை தன் போலி கம்ய+னிச நிலைப்பாட்டில் இருந்து விமர்சிக்க முனைகின்றது.

இந்தக் கழுதை இதை விமர்சிக்க எடுத்துக்கொண்ட அடிப்படையோ, புலிகளின் பாசிசம் தான். இதைத்தான் இலங்கை முதல் ஏகாதிபத்தியம் வரை, தம் சொந்த மேலாதிக்க கனவுக்கு பயன்படுத்துகின்றது.

 

புலிப்; பாசிசத்ததை எதிர்கொள்வது எப்படி? இதை மார்க்சியம் எப்படி அணுகக் கோருகின்றது? அது எம் சொந்த மக்களின் பிரச்சனை. மக்களாகிய நாங்கள் தான், அந்தப் பாசிசத்தை எதிர்கொண்டு போராடி அதை அழிக்க வேண்டும். இதை முதலில் மார்க்சியவாதி அங்கீகரிக்க வேண்டும். இந்த பாசிசம் எங்களுடைய பிரச்சனை. இதைச் சொல்லி இந்தியாவோ, ஏகாதிபத்தியமோ தலையிட முடியாது.

 

தெளிவாக இதில் இந்தியா தலையிடமுடியாது. அப்படி தலையிட எந்த அதிகாரமும் அதற்கு கிடையாது. அதுவே அத்துமீறல், ஆக்கிரமிப்பு. இப்படி தலையீட்டால், ஆக்கிரமித்தால்,   அதற்கு எதிராக போராடுவது மார்க்சியர்களின் சர்வதேசியக் கடமை. இதையா நீங்கள் செய்கின்றீர்கள்?

 

தேசிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுப்பது மார்க்சியமல்ல. அதை புலிப் பாசிசத்தின் பெயரால் யாரும் மறுக்க முடியாது. அது அந்த மக்களின் பிரச்சனை.

 

இலங்கைப் பேரினவாத அரசு இதில் தலையிடவோ அல்லது அதை அழிக்கவோ எந்த உரிமையும் கிடையாது. இதை எதிர்ப்பது சர்வதேசியவாதிகளின் கடமை.

 

மொத்ததில் ம.க.இ.க. இதில் சரியாக உள்ளனர். புலியை பாசிட்டுகளாக வரையறுக்கின்றனர். இந்தியா ஆக்கிரமிப்பை சரியாக மதிப்பிடுகின்றனர். அதற்கு எதிராக போராடுகின்றனர். இலங்கை அரசின் பேரினவாதத்தை சரியாக அம்பலப்படுத்துகின்றனர்.

 

ம.க.இ.க.வை புலிக்கூடாக பார்ப்பதாக, திரித்து புரட்டுவதன் ஊடாக, கதையையே மாற்றிவிட முனைவது போலிக் கம்யூனிசத்தின் சித்தாந்த அரசியல் அடிப்படையாக உள்ளது. ம.க.இ.க புலிப்பாசித்தை பற்றி வைத்த விமர்சனமளவுக்கு, இந்தியாவில் யாரும் அரசியல் ரீதியாக புலியை விமர்சனம் செய்தது கிடையாது.  

  

அடுத்து புலியை பாசிட்டுகளாக கூறும் நீங்கள், இலங்கை அரசை பாசிட்டாக வரையறுப்பதில்லையே, என்? புலியை மட்டும் எதிர்க்கும் நீங்கள், பேரினவாத அரசை மென்மையாக பார்ப்பது ஏன்? இந்தியா அரசு இலங்கையில் தலையிடுவதை ஏன் எதிர்ப்பதில்லை?

 

புலி முதல் அனைத்து தமிழ் குழுக்களையும் இந்தியா தன் ஆக்கிரமிப்பு நோக்கத்துக்காக  பாலூட்டி வளர்த்து. அவர்களை வெறும் கூலிக் குழுக்களாக, பாசிட்டுகளாக மாற்றியது. புலிகள் பாசிட்டுகள் என்பது, இந்தியா உருவாக்கிய ஒன்று தான். இப்படியிருக்க புலியை மட்டும் பாசிட்டாக கூறுவது ஏன் குற்றவாளியே இந்தியா தான்.

 

இலங்கையில் இனவாதம் கிடையாது என்பது, வடிகட்டிய முட்டாள் தனத்தின் மூலம் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் பேரினவாத கூச்சலாகும். இலங்கையில் இனவாத ஒடுக்கமுறையும், அதன் வேறுபட்ட பண்புகளும் கடந்த 100 வருடங்களாக நிலவுகின்றது. இதை இலங்கையில் ஆளும் இனவாத பேரினவாத கட்சிகள் கூட ஓப்புக்கொண்டது தான். இதை மறுப்பதோ அபத்தம். 'தமிழர்களும் பாதுகாப்பாகத்தான் உள்ளனர்" என்பது நிபந்தனைக்கு உட்பட்டது. அனைத்தும்  அடிமைத்தனத்தின் எல்லைக்குட்டது. சுதந்திரத்தை கோரினால், பாதுகாப்பு கிடையாது.   

 

'அங்குள்ள யாழ்ப்;பாணத் தமிழர்கள் எல்லாம் புலிகளிடம் இருந்து தமிழர்களை காப்பாற்றுங்கள்" என்றதாக யார் சொன்னது.? அது பேரினவாத கூலிக் குழுக்கள் கட்டாயப்படுத்தி திரட்டும் கூட்டத்தில் வைக்கும் கூலிக் கோசங்கள். புலிகள் திரட்டுவது போல், அதுவும் போலியானது. உங்களைப் போல்.

 

'பெரும்பான்மை சிங்கள மக்கள் சோரம் போயிருந்தால்" சோரம் போகாமலா பேரினவாதப் பாசிசம் தலைவிரித்தாடுகின்றது. அங்கு என்ன அரசுக்கு எதிராக வர்க்க போராட்டமா நடக்கின்றது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவா சிங்கள மக்கள்  போராடுகின்றனர்?! எப்படி புலிக்கு பின்னால் மக்கள் உள்ளனரோ, அப்படித்தான் சிங்கள மக்கள் அரசின் பின் உள்ளனர்.

 

மக்கள் சுயமாக தமக்காக போராடும் நிலையில் இல்லை. எந்த கருத்தியல் ஆதிக்கம் பெற்றுள்ளதோ, அதன் பின் மக்கள் மந்தைகளாக உள்ளனர்.

 

பி.இரயாகரன்
05.02.2009
     


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ