Language Selection

பி.இரயாகரன் 2004-2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அண்மையில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இராசதுரை பின்னால், காணமல் போன மற்றொரு அரசியல் வரலாறு உண்டு. ஒடுக்கப்பட்ட மக்களின் இணைபிரியாத ஒரு குரலாக, ஒரு நண்பனாகவே தமிழ் மக்கள் தேசிய விடுதலை முன்னணியுடன் (என்.எல்.எப்.ரியுடன்) தன்னை

அன்று இனம் காட்டிக்கொள்ள முனைந்தவர். நாம் இவரை அன்று அடிக்கடி அச்சுவேலியில் சந்தித்த போது ஏற்பட்ட அனுபவங்கள் முதல் தன்னை மிக நெருங்கி என்.எல்.எப்;.ரி ஆதரவாளராகவே அறிமுகமானவர். உண்மையான வர்க்க விடுதலையை மையமாக வைத்து என்.எல்.எப்;.ரியை தனது கடின உழைப்பால் உருவாக்கிய விசுவானந்ததேவனின் மிக நெருங்கிய நண்பரும் கூட. விசுவானந்ததேவனுடன் அவர் கொண்டிருந்த நீண்ட கால உறவுக்கு, சண் தலைமையிலான இடதுசாரிய போராட்டம் காரணமாக இருந்தது.

ஆனால் அவர் சுயமான சுதந்திரமானதுமான ஒரு செயற்பாட்டாளராகவே நாம் அவருடன் அறிமுகமானோம். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக எம்முடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தவர். அன்று டக்ளஸ் மூலம் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆல் விடப்பட்ட அச்சுறுத்தலை அவர் துணிச்சலாக தனித்தே எதிர் கொண்டவர். தனக்கு மரணம் ஏற்பட்டால் அது ஈ.பிஆர்.எல்.எவ் டக்கிளசால் தான் என்று பதியப்பட்ட கசெட் ஒன்றைக் கூட எம்மிடம் தந்திருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மிரட்டலுக்கு அஞ்சாது துணிச்சலாக நின்ற இந்த மனிதன், அன்று தெல்லிப்பளையில் ~பள்ளர்| சமூகம் மட்டுமே படித்த ஒரு பாடசாலையின் அதிபராக இருந்தவர்.

 

அப்படித் தான் பாடசாலைகளுக்கான அதிபர்களை சாதி மேலாதிக்கம் கொண்ட யாழ் கல்வித்துறை தெரிவு செய்து அனுப்பியது. அங்கு அவர் அந்த மாணவர்களின் கல்விக்காக கடுமையாக உழைத்தார். யாழ்ப்பாணத்து ஆதிக்க சாதிகளின் இயக்கமாகவே தேசியவிடுதலை இயக்கங்கள் உருவான போது, அராஜகமும், அதிகாரத்துவமும், அடக்குமுறைகளும் அதனுடன் இயல்பாகவே ஒட்டிக் கொண்டது. இந்த இயக்கங்களின் அடாவடித்தனங்கள் பலவற்றை எதிர்கொண்டு போராடிய இந்த மனிதன், தனது நேர்மையான கடுமையான சமூக வாழ்வினால் யாழ் மத்திய கல்லூரியின் அதிபரானார். கையைப் பிடித்து, காலைப் பிடித்து, சாதியைக் காட்டி, அதிகாரத்தைக் காட்டி உயர் பதவிகளை பிடிக்கும் யாழ் ஆதிக்க பிரிவுகளின் பதவி வேட்டைக்கு அப்பால், ஒருவர் யாழ் முன்னணி பாடசாலை ஒன்றின் அதிபராக வருவது என்பது மிகச் சிரமமானது. சமூகத்துக்காக தன்னையே அர்ப்பணித்து போராடிய ஒருவர், அந்த மக்களால் நேசிக்கபடும் ஒரு நிலையில் தான் இராசதுரை அதிபரானர். அவர் யாழ் சமூகத்தால் ஒடுக்கப்பட்ட அடிநிலை சாதியைச் சோந்த (~~நளவர்|| சமூகத்தைச் சேர்ந்தவர்) இவர் சமூகத்துக்கான கடின உழைப்பால் அதிபரானார். அவர் ஒரு நேர்மையான மனிதனாக இருந்ததால், அவரின் மரணத்தின் பின்பும் பல அச்சறுத்தலையும் அவதூற்றையும் மீறி அந்த சமூகத்தால் நேசிக்கப்படும் ஒருவரானார். காக்காய் பிடிக்கும் இன்றைய பினாமிய அதிபர்கள் போல் அல்லது நேர்மையாகவே விடயங்களை அணுகமுற்பட்டவர்.

 

கல்லூரி அதிபர் என்ற ஒரே நிலையில் புலிகள் முதல் டக்ளஸ் வரை ஒரு எம்பி என்ற முறையில் தொடர்பு கொள்ள வேண்டிய சூழல், தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்தது. சமூகத்தின் இடிபாடுகளில்; இருந்து அவர் தனது பாடசாலையையும் சமூகத்தையும் மீள கட்டமைக்கும் போராட்டத்தை உயிர் உள்ளவரை அவர் நடத்த வேண்டியிருந்தது. கொள்ளை அடித்தலையே அரசியலாக கொண்ட புலிகளின் விடாப்பிடியான அணுகுமுறை, சமூகத்துக்காக தன் வாழ்வையே அர்ப்பணிக்கும் ஒருவனுக்கு சினமூட்டுவது இயல்புதான்.


சமூகம் சார்ந்த பொது அமைப்புகளையும் அழித்து வெறும் பெயர்பலகை அமைப்பாக மட்டும், தமது சொந்தத் தேவைக்கு மட்டும் பயன்படுத்த அனுமதித்துள்ள எமது யாழ் சமூக அமைப்பில், சமூகத்தை நேர்மையாக நேசித்த ஒருவன் எப்படி இந்த சமூகச் சிதைவை அனுமதித்து அங்கீகரிக்க முடியும்.

 

புலி சார்பு, புலியெதிர்ப்பு அரசியல் எல்லைக்குள் மட்டும் மனிதர்களை முத்திரைகுத்தி சிதைக்கும் எமது சமூக பொது கண்ணோட்டத்தில், உண்மையான மனிதர்களை தேடியெடுக்க வேண்டியுள்ளது. கிட்டத்தட்ட இருபது வருடத்துக்கு முன்பு உண்மையான ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவே நாம் இவருடன் அறிமுகமானவர்கள். இன்று அதை கண்டறிவது என்பது கூட மிகச் சிரமமான ஒன்றாக உள்ளது. உண்மையான நேர்மையான சமூகத்தை நேசித்த மனிதர்கள் கொல்லப்பட்டுவரும் நிலையில், அதை புலி சார்பு புலியெதிர்ப்பு அரசியலுக்குள் புதைத்துவிடுவது இன்று அடிக்கடி நிகழ்வதுண்டு.


ஒரு மனிதனின் நோமையான விடாப்பிடியான போராட்டத்தில் முன்மாதிரியாகவே இராசதுரையின் கடினமான போராட்டம் அமைந்திருந்தது. அன்று இவருடன் நெருங்கிய தொடர்பை என்.எல்.எப்;.ரி சார்பாக கொண்டிருந்த ஒருவரின் செய்தியே கீழே உள்ளது.

பி.இரயாகரன்
23.10.2005

 

குதூகலப் பிரியனுக்கு, ஒர் அழகிய பூக்கொத்து!

இராசதுரை மாஸ்ரர்)டீ.நுன.இடீ.யு.இஆ.யு.
வழமைபோல வீதிக்கொலைகளில் ஒன்றாக இந்த குதூகலப் பிரியன், இராசதுரை துடிதுடித்து வீழ்ந்து கிடக்கின்றான்... இவரது மரணத்தை இணையத்தளங்களில் பார்த்தபோது, பழக்கப்பட்ட ஒரு மரணமாகவும், டக்ளசின் நன்பராகவும், புலிகளின் எதிரியாகவும் மட்டுமே இந்த இணையத்தளங்கள் காட்டி நின்றன. ஆனால் இந்த மனிதனின் மீது எவ்வளவு வேகமாக அந்த துப்பாக்கிக் குண்டுகள் பாச்சப்பட்டதே?, அதைவிட இன்னும் இன்னும் அதி வேகமாக அவரால் நேசிக்கப்பட்ட மக்கள் கிளர்ந்தே எழுந்தனர்! மரணபயத்தின் மௌனத்தையும் கிழித்துக்கொண்டு அந்த மக்களின் ஆத்மபலம், அதிகார வர்க்கத்தின் முகத்தில் அறைந்தது. ஆயினும் இவரை ஒர் அதிபராக அடையாளம் காட்டுவதற்கு மேல் அவரை அடையாளப்படுத்தவோ, அவரைத் தேடவோ முற்படவில்லை. இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. எல்லோருக்கும் அவரவர் அரசியல் இலாபங்களுக்காகவே இம்மரணங்கள் தேவைப்படுகிறது, பேசப்படுகிறது.

 

இற்றைக்கு சரியாக இருபது வருடங்களுக்கு முன்னர், இந்த பிரியமான குதிரைக் குட்டியை, குதூகலப் பிரியனை நீங்கள் சந்தித்திருப்பீர்களானால் இந்த உள்ளதமான மனிதனின் ஆளுமை உங்களுக்குப் புரிந்திருக்கும். அவர் நேசித்த அந்த ஒடுக்கபட்ட மக்களை நீங்கள் கண்டிருப்பீர்கள்!

 

• சந்ததியார் பற்றி இவரிடம் அப்போது கேட்டிருப்பீர்களானால், சந்ததியார் பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்தபோது தம்மை கல்லாலடித்த கதையை உங்களுக்குக் கூறியிருப்பார்.

 

• இன்றைய நண்பராகக் கூறும் டக்களசைப்பற்றி அப்போது கேட்டிருப்பீர்களானால், 85 களில் அச்சுவேலி, ஆவரங்கால்-புத்தூர் மினிபஸ் பிரச்சனையின் போது, தாழ்த்தப்பட்ட மக்களின் அமைப்பெனக் கூறப்படும் ஈ.பிஆர்.எல்.எவ் க்கு எதிராக தனது சொந்தப் பெயரிலேயே தான் சார்ந்த மக்களுக்காக நியாயம் கேட்ட இந்த நியாயவாதியைக் கண்டிருப்பீர்கள். இவரது துண்டுப்பிரசுரத்தை வாபஸ் பெறக்கோரி ஈ.பிஆர்.எல்.எவ் இன் அன்றைய இராணுவத்தளபதி இதே டக்ளஸ் 31 நாள் மரண அவகாசம் கொடுத்ததைக் கதை கதையாக உங்களுக்குச் சொல்லியிருப்பார்.

 

இந்த மரண அவகாசத்தில் கூட அவர் கலங்கி நின்றதில்லை. அப்போதிருந்த எந்த விடுதலை அமைப்பிடமும் தனது உயிருக்காக அடைக்கலம் கோரவுமில்லை. தான் சார்ந்த மக்களின் அந்தக் கோட்டைக்குள், அந்த மக்களின் அதிகார ஆன்மபலத்தில் அந்த நியாயத்தை வெற்றியாக நிலைநாட்டினார். மரணத்தை விடவும் தான் நேசித்த அந்த மக்களின் நியாயத்துக்காக மலைபோல நிமிர்ந்து நின்ற அந்த வைராக்கியமான மனிதனை நீங்கள் கண்டிருப்பீர்கள்!

 

ஆம், இந்த மக்களின் குதூகலப் பிரியனுக்கு ஓர் வரலாறு உண்டு! அது மிகவும் கடினமானதும், நீளமானதும். சரித்து வீழ்த்தப்பட்ட இந்த மனிதனின் உடல்மீது அல்லாமல், அவர் நேசித்த அந்த அன்புக்குரிய மக்கள், தமது அதிகாரத்தின் மீது, அவரின் வரலாற்றை நேர்மையாக எழுதுவர். எழுதியே தீருவர்.


துப்பாக்கிக் குண்டுகளைவிடவும் வெகுஜனத்தொடர்பு வலிமையானது என்பதை உனது மரணத்தால் இவர்களின் முகத்தில் ஓங்கி அறைந்து விட்டாய் நண்பனே! குதூகலப் பிரியனே!! உனது மக்கள் உனக்காகக் காத்திருக்கின்றனர். உனது இந்த நீண்ட உறக்கத்திலும், அவர்கள் இன்னும் இன்னும் விழிப்பாகவே இருக்கின்றனர் என்ற செய்தியே நாம் உமக்குத்தரும் அழகான பூக்கொத்து.

சுதேகு
211005

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது