Language Selection

புதிய ஜனநாயகம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

10_2005.jpg'இது நாலுவழிச்சாலை மட்டுமல்ல. பொருளாதார முன்னேற்றத்துக்கான நல்வழிச்சாலை" என்று கடந்த செப்டம்பர் 18ஆம் தேதியன்று நாங்குநேரி கிருஷ்ணன் புதூரில் நடந்த நான்கு வழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார், தி.மு.க. தலைவர் கருணாநிதி. காசியையும் கன்னியாகுமரியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் (எண்:7) கோவில்பட்டியிலிருந்து நெல்லை வழியாக பணகுடி வரையிலான 123 கி.மீ. நீள இருவழிச் சாலையானது ரூ. 630 கோடியே 42 லட்சம் செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கான விழாவில் கலந்து கொண்டு அடிக்கல்லைத் திறந்து வைத்த கருணாநிதி, இது நல்வழிச்சாலைக்கான கால்கோள் விழா என்றும் குறிப்பிட்டார்.

 

இந்த நான்கு வழிச்சாலை விரிவாக்கத்தால் வேலை வாய்ப்பு பெருகும்; பயண நேரம் குறையும்; வணிகர்களும் விவசாயிகளும் பயனடைவர்; ஏற்றுமதிப் பொருட்கள் பெரிய துறைமுகங்களை விரைவில் சென்றடையும்; சுற்றுலாத்துறை வளரும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. 'இத்தகைய அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்கள்தான் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம்" என்கிறார் நிதியமைச்சர் ப.சிதம்பரம். 'ஆனால், இந்தியாவில் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களில் முதலீட்டுப் பற்றாக்குறை பூதாகரமாக உள்ளது" என்று வேதனைப்படும் அவர், 'இத்தகைய திட்டங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வரவேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களில் 1500 கோடி டாலர் (ஏறத்தாழ ரூ. 67 லட்சம் கோடி) அளவுக்கு முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன என்று அறிவித்துள்ள அவர், பாரத ஸ்டேட் வங்கியும், மெரில் லிஞ்ச் என்ற நிதி நிறுவனமும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த செப்டம்பரில் நடத்திய அன்னிய முதலீட்டாளர் கூட்டத்திலும் பங்கேற்று, இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

 

பொருளாதார வளர்ச்சிக்கு நீர்ப்பாசனம், அணைக்கட்டுகள், போக்குவரத்து, மின்சாரம், தொலைத்தொடர்பு முதலான அடிப்படைக் கட்டமைப்புத் துறையில் முதலீடுகள் அவசியமானதுதான். இருப்பினும் என்ன வகையான அடிப்படைக் கட்டமைப்புத் துறை நாட்டுக்கும் மக்களுக்கும் தேவை? என்ன வகையான பொருளாதார வளர்ச்சி தேவை என்பதுதான் மையமான கேள்வி. தாராளமய பொருளாதாரத்தின் தாசர்களும் முதலாளித்துவப் பத்திரிகைகளும் அமைச்சர் பெருமக்களும் அடிப்படைக் கட்டமைப்புத் துறையின் வளர்ச்சி என்று எதைக் குறிப்பிடுகிறார்கள்?

 

இதற்கு, எடுப்பானதொரு உதாரணத்தைப் பார்ப்போம்.

 

'கர்நாடக மாநிலம், மழைகுறைவாகப் பெய்யும் மாநிலம். பெரும்பாலான பகுதிகள் மானாவாரி நிலங்கள். வறுமையும் வேலையின்மையும் அதிக அளவில் உள்ள மாநிலம். இத்தகைய இடர்ப்பாடுகள் இருந்தபோதிலும், இம்மாநிலம் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைவதற்கு தகவல் தொழில்நுட்ப மையங்களை உருவாக்குவது மிக அவசியம். அடிப்படைக் கட்டமைப்புத் துறையின் வளர்ச்சி இல்லாமல் இதைச் சாதிக்க முடியாது". (இந்தியன் எக்ஸ்பிரஸ், 16.5.05)

 

முதலில் உள்ள மூன்று வரிகளுக்குப் பின்னால் உள்ள வரிகளுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? முதலில் உள்ள மூன்று வரிகள் கர்நாடக மாநிலம் மழையும் பாசன வசதியுமின்றி விவசாயிகள் வறுமையில் உழலும் அவலத்தைக் குறிக்கிறது. எனவே, நீர்ப்பாசனத் திட்டங்கள், சிறிய அணைகள் கட்டுதல் முதலான அடிப்படைக் கட்டமைப்புத் துறையில் அரசு முதலீடு செய்து, விவசாய உற்பத்தி நடவடிக்கைகளுக்கு உதவவேண்டும் என்றுதான் ஒருவர் கருதுவார். ஆனால், ஆட்சியாளர்களும் முதலாளித்துவப் பத்திரிகைகளும் கிராமப்புற வறுமையைக் களைவதாக அடிப்படைக் கட்டமைப்புத் துறையின் வளர்ச்சியும் முதலீடுகளும் அமைய வேண்டியதில்லை என்கின்றனர். உற்பத்தியின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் அடிப்படைக் கட்டமைப்புத் துறைகள் அமைய வேண்டிய அவசியமில்லை என்கின்றனர். அதாவது, ஏற்றுமதிக்கான பொருட்கள் பெரிய துறைமுகங்களை, விமான நிலையங்களைச் சென்றடைவதற்காக போக்குவரத்துதொலைத்தொடர்பு முதலான அடிப்படைக் கட்டமைப்புத் துறைக்கு முக்கியத்துவம் அளிப்பதும், அதில் பெருமளவு முதலீடு செய்வதும் அவசியம் என்கின்றனர். ஏகாதிபத்திய நாடுகளுக்கு கணினி மென்பொருள் ஏற்றுமதி செய்யும் தொழிலுக்கு வாய்ப்புகள் இருப்பதால், கணினி மென்பொருள் தொழில் நுட்பப் பூங்காக்கள் தொலைதொடர்பு வசதி முதலான அடிப்படைக் கட்டமைப்புத் துறையில் அதிக முதலீடுகள் செய்ய வேண்டும் என்கின்றனர். இத்தகைய திட்டங்களில் முதலீட்டுப் பற்றாக்குறை நிலவுவதால், அன்னிய ஏகாதிபத்திய நிறுவனங்களை முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்கின்றனர்.

 

வெள்ளைக்காரனின் காலனிய ஆட்சிக் காலத்திலும் இப்படித்தான் நடந்தது. அன்றைய காலனிய ஆட்சி விவசாயத்தையும் கைத்தொழிலையும் நாசமாக்கியது. பாசன மராமத்துப் பணிகளை அறவே புறக்கணித்தது. அதேசமயம், நாடெங்கும் இருப்புப் பாதைகளும் சாலைகளும் துறைமுகங்களும் நிறுவப்பட்டன. காலனியாதிக்கவாதிகளுக்குத் தேவையான உற்பத்திப் பொருட்கள் துறைமுகங்களுக்கு விரைவாகக் கொண்டு செல்லப்படுவதற்காக இவை அமைக்கப்பட்டன. காலனிய ஆட்சிக் காலத்தைப் போலவே இப்போது நான்கு வழி நெடுஞ்சாலைகளும், தொழில்நுட்பப் பூங்காக்களும், அதிவிரைவு ரயில் பாதைகளும், புதிய துறைமுகங்களும் நிறுவப்படுகின்றன. இது மறுகாலனியாதிக்கம்.

 

கடந்த ஐந்தாண்டுகளில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு (நான்கு பெரு நகரங்களுக்கிடையிலான தங்க நாற்கரண சாலைத் திட்டத்திற்கு) ரூ.24,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், சாலை வசதியற்ற 1,70,000 கிராமங்களுக்கு பிரதமரின் கிராம வளர்ச்சிக்கான 'பாரத் நிர்மாண்" திட்டத்தின் கீழ் ரூ.11,500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் செயலூக்கத்துக்கும் தொலைபேசியும் இணையதள இணைப்பும் அவசியமானது என்று கண்டுபிடித்துள்ள ஆட்சியாளர்கள், நடப்பு பட்ஜெட்டில் ரூ.1,200 கோடியை ஒதுக்கியுள்ளனர். ஏற்கெனவே பல தனியார் நிறுவனங்கள், கிராமப்புற தொலைத்தொடர்பு திட்டத்தில் முதலீடு செய்வதாகக் கூறி கோடிகோடியாய் மோசடி செய்து கொழுத்துள்ளன. இதுவும் போதாதென்று இன்னும் பல கோடிகளை இத்திட்டத்திற்கென மைய அரசு வாரியிறைத்து தொலைபேசி வசதியில்லாத 67,000 கிராமங்களுக்கு அச்சேவையை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.

 

ஆனால், 1,25,000 கிராமங்களில் இன்னும் மின்சார வசதியே இல்லை. தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி, 46சதவீதிதம் கிராமப்புற குடும்பங்கள் இன்னமும் லாந்தர் விளக்குகளையே சார்ந்துள்ளன. மாநில மின்வாரியங்கள் தனியார்மயமாக்கப்படுவதாலும் மின் கட்டண உயர்வினாலும் இந்த எண்ணிக்கை வருமாண்டுகளில் மேலும் அதிகரிக்கவே செய்யும். மேலும் கடந்த பத்தாண்டுகளாக கிராமப்புற வேலை வாய்ப்பின் வளர்ச்சி ஆண்டுக்கு வெறும் ஒரு சதவிகிதம் என்ற அளவுக்குச் சுருங்கி, இப்போது பூஜ்ஜியத்தை எட்டிவிட்டாதக அரசாங்கப் புள்ளிவிவரங்களே கூறுகின்றன. கும்பி கூழுக்கு அழுகையில் கொண்டைக்குப் பூ வைத்த கதையாக தொலைபேசி இணைப்புக்கு கோடிகோடியாய் வாரியிறைத்து, இதுதான் பொருளாதார வளர்ச்சி என்று ஆட்சியாளர்கள் காதில் பூ சுற்றுகின்றனர்.

 

கிராமப்புற வறுமையைக் களைவதாகவோ உற்பத்தியின் நடவடிக்கைகளுக்கு உதவுவதாகவோ அமையாத இத்தகைய அடிப்படைக் கட்டுமானத் துறைகள், தாராளமயத்தின் கீழ் தனியார்அந்நிய நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கான துறைகளாக வளர்ந்துள்ளன. இதற்காகவே சேது சமுத்திர திட்டம், மகாநதி இணைப்புத் திட்டம், பெருநகரங்களில் சுரங்க ரயில் திட்டம், நகரங்களில் போக்குவரத்துக்கான மேம்பாலங்கள், மின்சார சுரங்கத் திட்டங்கள் என்று பலப்பலத் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இவற்றில் அன்னிய முதலீடுகளும் குவிகின்றன. அல்லது முதலீட்டு பற்றாக்குறையைக் காரணம் காட்டி அன்னிய நிதி நிறுவனங்களிடம் பல்லாயிரம் கோடிக்கு கடன்கள் வாங்கப்படுகின்றன.

 

முன்பு வெள்ளைக்காரன் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட இந்திய ரயில்வே துறை, இப்படித்தான் அன்னிய தனியார் முதலாளிகளின் இலாபவேட்டைக்கான துறையாக இயங்கியது. இந்திய ரயில்வே துறையில் முதலீடு செய்யும் பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு இலாப உத்தரவாதத்துடன் அசலைத் திருப்பித் தருவதாக அன்றைய காலனிய அரசு உறுதியளித்தது. காலனிய இந்திய நாட்டைச் சூறையாடுவதற்கான முதன்மையான அடிப்படைக் கட்டமைப்புத் துறையாக அன்றைய ரயில்வே துறை அமைந்தது.

 

அதேபோலத்தான் தாராளமயத்தின்கீழ் மின்சார உற்பத்தி, சுரங்கத் தொழில், எண்ணெய் எரிவாயு துரப்பன வேலைகள், நான்குவழி அதிவிரைவுச் சாலைகள், தொலைத்தொடர்பு என பல்வேறு அடிப்படைக் கட்டமைப்புத் துறைகளிலும் இலாப உத்தரவாதத்துடன் அன்னிய தனியார் முதலீடுகள் தாராளமாக அனுமதிக்கப்படுகின்றன. இப்படி இலாப உத்தரவாதத்துடன் அமெரிக்க என்ரான் மின் உற்பத்தி நிறுவனம் அனுமதிக்கப்பட்டு, அது மகாராஷ்டிர மாநில மின்சார வாரியத்தை திவாலாக்கிய கதையை நாடே நன்கறியும்.

 

இரயில்வே மேம்பாலங்கள், நான்கு வழிச்சாலைகள், கணினி தொழில்நுட்பப் பூங்காக்கள், விரைந்து செல்லும் வாகனங்கள் இவற்றையெல்லாம் பார்த்து நாடு ரொம்பவும் முன்னேறிவிட்டதாக நாமும் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அடிப்படைக் கட்டமைப்புத் துறையின் வளர்ச்சிமுன்னேற்றம் என்ற மாய்மாலங்களுக்குப் பின்னே மறைந்திருப்பது மறுகாலனியாதிக்கக் கொள்ளை. இது நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கான நல்வழிச்சாலை அல்ல. நாட்டையும் மக்களையும் சூறையாடும் மறுகாலனியாதிக்கத்தின் சுடுகாட்டுச் சாலை!


மு மனோகரன்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது