Language Selection

புதிய ஜனநாயகம் 2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

01_2006.jpgசாதிய ஆதிக்கத்தைத் தகர்ப்பதே தமது லட்சியம் என்று புறப்பட்ட திருமா, இன்று ஆதிக்கசாதி பிழைப்புவாத அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துக் கொண்டு வலம் வருவது தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான துரோகமும் அரசியல் பித்தலாட்டமும் பிழைப்புவாதமுமாகும்.

ச. மதியழகன், ஊற்றங்கரை.

 

நக்சல்பாரிகளின் சிறைதகர்ப்பு நிகழ்ச்சியானது, வெறும் சாகசவாத நடவடிக்கை அல்ல என்பதையும் இருண்ட பீகாரில் நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சிய எழுச்சி என்பதையும் பு.ஜ. கட்டுரை எடுப்பாக உணர்த்தியுள்ளது.

அஜிதா, திருப்பூர்.

திரைப்படங்களில் ஒரே நடிகர் கதாநாயகனாகவும், வில்லனாகவும் இரட்டை வேடங்களில் நடிப்பதைப் போல, சி.பி.எம். கட்சியும் ஒருபுறம் மே.வங்கத்தில் அமெரிக்கப் போர்விமானப் பயிற்சிக்கு அனுமதித்து விட்டு, மறுபுறம் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டமும் நடத்தி இரட்டை வேடமிட்டு நடிக்கிறது. இரட்டை வேடம் போடும் இவர்கள் ஒருகாலும் கம்யூனிஸ்டுகளாக இருக்க முடியாது.

செம்மலர் மா.நடராசன், அறந்தாங்கி.

பு.ஜ. கட்டுரைகளில் பெரும்பாலும் தமிழ்ச் சொற்களைக் கையாண்டு மொழியுணர்ச்சியை வெளிப்படுத்தி வருவது சிறப்பு. எழுத்துப் பிழைகள் நேர்வது இயற்கை எனினும், அவை நேராதிருக்க உரிய கவனம் செலுத்துங்கள். ராமன்குட்டி மணியப்பன் கொலை விவகாரம் குறித்த பிரச்சினையில், இந்திய அரசு அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணை போவதன் விளைவுதான் இப்படுகொலை என்று விளக்கியதானது, பு.ஜ.வின் அரசியல் நேர்மையையும் துணிச்சலையும் காட்டுகிறது. என்னைப் போன்ற தலித் இளைஞர்களுக்கு திருமா, வெறுமாதான்! நக்சல்பாரிகளுக்குச் சோறு போட்டது, தலித்துகள்தான் என்று கூறிவரும் ரவிக்குமார் திருமாக்களே, உங்களது பிழைப்புவாத அரசியல் பித்தலாட்டங்களை தலித் மக்கள் புரிந்து கொள்ளும்போது, உங்களுக்குச் சோறு போடும் தலித் மக்களே உங்களை விரட்டுவது உறுதி!

மணிகோ. பன்னீர்செல்வம், நாகம்பட்டி.

ஆண்டாண்டு காலமாக வஞ்சிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆறாத ரணத்தை ஏற்படுத்திய ஆதிக்க சாதி வெறியர்களோடு கூட்டணி கட்டிக் கொள்ளும் திருமாக்களின் பிழைப்புவாதப் பித்தலாட்டங்களை, இனியும் தாழ்த்தப்பட்ட மக்கள் சகித்துக் கொள்ளமாட்டார்கள். இத்துரோகத் தலைமைக்கு அடங்க மறுப்பார்கள்; அத்துமீறுவார்கள்.

ப. தர்மராசு, திருச்சி.

நிலப்பிரபுக்களாலும் ரன்வீர்சேனா குண்டர்படையாலும் காலங்காலமாக நசுக்கப்பட்டு வந்த உழைக்கும் மக்கள், நக்சல்பாரிகளின் தலைமையில் திரண்டு பீகாரில் சிறையைத் தகர்த்த செயலானது, இந்தியப் புரட்சிகர வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமையும். பத்திரிகைகள் பயங்கரவாதமெனப் பீதியூட்டிய நிலையில், உண்மைநிலைமைகளை வெளிக்கொணர்ந்த பு.ஜ. கட்டுரை புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.

வில்லவன், தாதகாப்பட்டி.

தலித் மக்களை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்க வந்த இரட்சகனாகவும் புரட்சியாளனாகவும் விளம்பரப்படுத்திக் கொண்ட ""தொல். திருமா'', இப்போது ஆதிக்க சாதிவெறியர்களுடன் கூட்டணி கட்டிக் கொண்டு தேர்தல் சாக்கடையில் மூழ்கி ""தொலைந்து போன திருமா''வாகி விட்ட உண்மைக் கதையை படம் பிடித்துக் காட்டியது சிறப்பு.

இனியவன், மூணாங்கரடு

தென்னமெரிக்கக் கண்டத்தில் புஷ் எதிர்ப்புப் போராட்டம் பற்றிய செய்தியில், உலக சமூக மன்ற (ஙிகுஊ) த்தின் துரோகத்தனத்தையும் அம்பலப்படுத்தியிருக்க வேண்டும். போராட்டம் நியாயமானது எனினும் உலக சமூக மன்றத்தின் சதிகாரத் தலைமையைத் தோலுரித்துக் காட்ட வேண்டியது நமது கடமையாகும்.

தமிழரசன், தஞ்சை.

பீகார் சிறை தகர்ப்பு பற்றி பு.ஜ. மட்டுமே பீகாரில் தாழ்த்தப்பட்டோர் அனுபவித்துவரும் கொடுமைகளையும், சாதிவெறியர்களின் கொலை வெறியாட்டங்களையும், புரட்சிகர சக்திகள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளையும் எடுப்பாக விளக்கியுள்ளது. அடக்குமுறையாளர்களைக் குலைநடுங்கச் செய்யும் நக்சல்பாரி புரட்சிகர இயக்கம் மென்மேலும் வளர்ந்தோங்க விழைகிறேன்.

ஜீவா, சென்னை.

தாராளமயக் கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு, அத்தியாவசியத் தேவைகளுக்காக மாதம் ரூ. 225 கூடச் செலவிட முடியாத வறுமையில், விவசாயிகள் கொத்துக்கொத்தாகத் தற்கொலை செய்து கொள்ளுவதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் தாராளமயமாக்கலை எதிர்த்துப் போராடத் தொடங்கிவிட்டால், இக்கேடு கெட்ட கொள்கை அவர்களது ஏர்கலப்பையால் கிழித்தெறியப்பட்டு மண்ணில் புதைக்கப்படுவது நிச்சயம்!

நிர்மலா, திருச்சி.

இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் மரணக் குழியில் தள்ளிவரும் தாராளமயக் கொள்கையை எதிர்த்துப் போராட, விவசாயிகள் முதலில் ஓட்டுப் பொறுக்கிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்ற உண்மையை பு.ஜ. கட்டுரை எடுப்பாக விளக்கியுள்ளது. செங்கொடி ஏந்த அருகதையற்ற புரட்டல்வாதிகளான சி.பி.எம். கட்சியினரை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவது சிறப்பு.

செங்கொடியவன், சேலம்.

மேட்டுக்குடிக்கும், ஊசலாடும் உயர் நடுத்தர வர்க்கத்துக்கும் பூலோக சொர்க்கமாகத் தெரியும் தனியார்மய தாராளமயக் கொள்கையின் கொலைகார முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது அட்டைப்படக் கட்டுரை. புரட்சியாளர்கள் இன்னும் துரிதமாகப் பணியாற்ற வேண்டிய அவசியத்தை பு.ஜ. உணர்த்தி வருகிறது.

பனிமலர், சென்னை.

ஜனநாயகம் பற்றி வாய்கிழியப் பேசும் ஏகாதிபத்தியவாதிகள், தமது சொந்த நாட்டில் நிறவெறி பாசிஸ்டுகளாக இருப்பதை அம்பலப்படுத்திக் காட்டுவதாக பாரீஸ் கலகம் பற்றிய கட்டுரை அமைந்துள்ளது. ராமன்குட்டி மணியப்பன் கொலையில், குற்றவாளி இந்திய அரசுதான் என்பதை வரலாற்றிலிருந்து எடுத்துக் காட்டி தொகுத்துக் கூறியது சிறப்பு.

புரட்சித்தூயன், தருமபுரி.

கடைசிப் பக்க அட்டைப்படச் செய்தி, ஈராக் மக்களின் துயரத்தை கண்ணீரில் எழுதப்பட்டதாக, அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் மீது ஆத்திரம் கொள்ளத்தக்கதாக அமைந்திருந்தது. விவசாயிகளைக் காவு கொள்ளும் தாராளமயக் கொள்கை பற்றிய கட்டுரை எளிய நடையில் சிறப்பாக உள்ளது. தமிழக விவசாயிகளின் அவலம் பற்றியும் ஒப்பந்த விசாயம் பற்றியும் இதில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

வாசகர் வட்டம், வேலூர்.

தலையங்கக் கட்டுரையானது, வெள்ளத் துக்குக் காரணமான ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தி, மறுவாழ்வுக்காகப் போராட அறைகூவுவதாக உரிய தருணத்தில் வெளி வந்துள்ளது. தனியார்மய தாராளமயக் கொள்கையால் விவசாயமும் விவசாயிக ளும் நாசமாக்கப்பட்டு வருவதை அட்டைப் படக் கட்டுரை எடுப்பாக உணர்த்தியது.

வாசகர் வட்டம், திருச்சி.

கொள்கை லட்சியங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு தனிநபர் துதி, பிழைப்புவாத புதைசேற்றில் புரளும் திருமாவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியிருப்பது சிறப்பு.

சுரேஷ்குமார், சென்னை.

 

பு.ஜ. இல்லையேல், சி.பி.எம். கட்சியின் சந்தர்ப்பவாதத்தையும் அமெரிக்க எதிர்ப்பு பித்தலாட்டத்தையும் தமிழக மக்கள் அறிய முடியாமல் போயிருக்கும். துரோகிகளைத் தோலுரிக்கும் உங்கள் பணி தொடரட்டும்.

கதிரவன், சென்னை.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது