மணிவண்ணனும் அருண் சித்தார்த்தும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே
ஒடுக்கப்படும் இனங்களுக்கும், ஒடுக்கப்படும் சாதிகளுக்கும் சம்மந்தமில்லாத இன்றைய யாழ்ப்பாணத்து அரசியல் நிகழ்ச்சிநிரலானது, ஒடுக்கும் தரப்புக்காக ஒடுக்கப்பட்ட மக்களை பலியிடுகின்றது.
அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிராக ஒடுக்கப்பட்ட சிங்கள - தமிழ் மக்களின் விடுதலைக்குப் பதில், பிளவுவாதமும் பிரிவினைவாதமும் தொடர்ந்து விதைக்கப்படுகின்றது. சாதியவாதங்கள், பிரதேசவாதங்கள், இனவாதங்கள், மதவாதங்கள்.. அனைத்தும், மக்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கான ஆயுதங்களே.