Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
PJ_11_2007.jpg

இறந்து போன மிருகத்தைக் கூட கைகால்களைக் கட்டி தெருவிலே இழுத்துச் செல்ல எந்தவொரு மனிதனுக்கும் மனம் ஒப்பாது. ஆனால் மிருகத்தை அல்ல, மனிதனை; நம்மைப் போல நினைவும் கனவும் கொண்ட உயிருள்ள மனிதனை இப்படி கைகால்களை மோட்டார் சைக்கிளில் கட்டி தரதரவென இழுத்துச் சென்றுள்ளது பீகார் போலீசு.

 

1980இல் பாகல்பூரில் 31 விசாரணைக் கைதிகளின் கண்களில் திராவகத்தை ஊற்றி அவர்களைக் குருடர்களாக்கிய பீகார் போலீசின் கொடுஞ்செயலை நாட்டு மக்கள் மறந்திருக்க முடியாது. அதே பாகல்பூரில், கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று 20 வயதான சலீம் இலியாஸ் என்ற இளைஞரை, ஒரு பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றதாகக் குற்றம் சாட்டி ஒரு கும்பல் மிருகத்தனமாகத் தாக்கியது. அங்கு வந்த நாத்நகர் போலீசு நிலையத்தைச் சேர்ந்த இரண்டு போலீசார், அழுக்கடைந்த ஆடைகளுடன் பலநாள் பட்டினி கிடந்த தோற்றத்தில் இருந்த அந்த இளைஞரை, கொடூரமாக பொதுமக்கள் முன்னிலையில் தாக்கியதோடு, கைகால்களைக் கட்டி தமது மோட்டார் சைக்கிளில் பிணைத்து கதறக் கதற தெருவிலே இழுத்துச் சென்றனர். சதைகள் கிழிந்து தெருவெங்கும் இரத்தம் வழிந்தோடி நினைவிழந்து கிடந்த அவரை போலீசு நிலையம்வரை இழுத்துச் சென்று, பின்னர் பொதுமக்கள் திரண்டு கண்டனம் தெரிவித்ததும் மருத்துவமனையில் சேர்த்தனர். முதுகெலும்பு பல இடங்களில் முறிந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு குற்றுயிராகக் கிடக்கும் அந்த இளைஞர், இனி உடல்நிலை தேறி நடமாடுவாரா என்றே தெரியவில்லை.


விசாரணை இல்லை; குற்றம் நிரூபிக்கப்படவில்லை. வழக்கும் வாய்தாவுமில்லை. போலீசாரே நீதிபதிகளாக மாறி தீர்ப்பளித்து தண்டனையும் விதிக்கின்றனர். இக்கொடுஞ்செயலை பொதுமக்கள் பார்ப்பதையோ, தொலைக்காட்சிகள் படம் பிடிப்பதையோ பற்றி அப்போலீசு மிருகங்களுக்குக் கவலையுமில்லை. கொட்டடிகளில் தங்களது குரூரமானவக்கிரமான சித்திரவதைகளை ஏவி வெறியாட்டம் போட்டு வரும் போலீசு மிருகங்களின் அதிகாரத் திமிர் இப்போது நட்டநடு வீதிகளிலும் வழிந்தோடத் தொடங்கி விட்டது.


இந்தக் கொடுஞ்செயலின் அதிர்ச்சியிலிருந்து நாட்டு மக்கள் மீள்வதற்குள், அதே பீகாரின் வைஷாலி மாவட்டத்திலுள்ள தேல்புர்வாரா கிராமத்தில் கடந்த செப்டம்பர் 13ஆம் நாளன்று பின்னிரவில் 10 பேர் திருடர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு அடித்தே கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ""நாட்'' எனும் தாழ்த்தப்பட்ட நாடோடிச் சாதியினர். இவர்கள் அருகிலுள்ள கிராமத்தில் நடந்த விருந்துக்குச் சென்றுவிட்டு இரவில் கூட்டமாகத் திரும்பிக் கொண்டிருந்தனர். தேல்புர்வாரா கிராமத்தில் அடிக்கடி திருட்டு நடந்து வந்ததால், சந்தேகத்தின் பேரில் இவர்களைப் பிடித்த அக்கிராம மக்கள், காட்டுமிராண்டித்தனமாக அடித்தே கொன்றுள்ளனர்; இல்லையில்லை; கிராம மக்கள் பிடித்து வைத்திருந்த இவர்களை அருகிலுள்ள ராஜ்பகார் போலீசு நிலையத்தைச் சேர்ந்த போலீசார்தான் அடித்தே கொன்றனர் என்றும் செய்திகள் மெதுவாகக் கசிந்துள்ளன.


இப்படுகொலைகளுக்குப் பின்னர், கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கவோ, பிணங்களை முறைப்படி அடக்கம் செய்யவோ கூட முன்வராமல், ஹாஜிபூர் அருகே கங்கையும் கந்தோக் ஆறும் சங்கமிக்கும் கொனாரா சதுக்கம் அருகே, போலீசு மிருகங்கள் அப்பிணங்களை ஆற்றிலே வீசியெறிந்துள்ளன. அவற்றிலே ஏழு பிணங்கள் வீங்கி வெடித்து அலங்கோலமாக ஆற்றிலே மிதந்து கரை ஒதுங்கின; அவற்றை நாய்களும் கழுகுகளும் குதறித் தின்றன.


மாடோ, நாயோ செத்தால் கூட அவற்றைக் குழிதோண்டிப் புதைக்கும்போது, இறந்துபோன மனிதர்களின் பிணங்களை நாயைவிட கேவலமாக ஆற்றிலே வீசியெறிந்துள்ளதே பீகார் போலீசு, அது நாகரீக மனித இனத்தைச் சேர்ந்ததா? அல்லது வெறிபிடித்த மிருக இனத்தைச் சேர்ந்ததா?


""அவர்கள் நாயைவிடக் கேவலமான ""நாட்'' சாதியினர்; பரம்பரைத் திருடர்கள்; அவர்களிடம் இரக்கம் காட்டினால் குற்றங்கள் பெருகிவிடும்'' என்று நியாயவாதம் பேசுகிறது பீகார் போலீசு. வெள்ளைக்காரன் ஆட்சியில் குற்றப் பரம்பரையினர் எனப் பட்டியலிடப்பட்டு வதைக்கப்பட்ட எண்ணற்ற தாழ்த்தப்பட்டபழங்குடியினரில் ஒரு பிரிவினர்தான் ""நாட்'' சாதியினர். திருடர்கள், கொள்ளைக்காரர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அதனால் சமூகத்தில் வெறுத்தொதுக்கப்பட்ட, இவர்கள், காடுகளில் தேன் சேகரித்தும் பறவைகளைப் பிடித்தும் தமது பிழைப்பை நடத்துகின்றனர். காலனியாதிக்கவாதிகளை எதிர்த்துப் போரிட்ட பழங்குடியினரைக் ""குற்றப் பரம்பரை'' என்று பட்டியலிட்ட பிரிட்டிஷ் அரசும், அதன் பின்னர் அப்பெயரை மட்டும் ""சீர்மரபினர்'' என மாற்றிய இன்றைய அரசும் இம்மக்களை இன்னமும் பரம்பரைக் குற்றவாளிகளாகவே பார்க்கிறது. செய்யாத குற்றத்துக்கும் விசாரணை ஏதுமின்றி தண்டனை கொடுக்கிறது. எங்காவது திருட்டு நடந்தால் இம்மக்களையே குற்றவாளிகளாக அறிவித்து வதைக்கிறது. அவர்களை மிருகத்தனமாக அடித்தே கொன்று விட்டு, பிணங்களை ஆற்றிலே வீசியெறிந்து இழிவுபடுத்துகிறது.


தேல்புர்வாராவில் நடந்துள்ள கொலைகள், உணர்ச்சிவசப்பட்டு ஏதோ விதிவிலக்காக நடந்துவிட்ட சம்பவம் அல்ல. அதே பீகாரின் நவடாவில், கடந்த அக்டோபரில் திருடியதாகச் சந்தேகிக்கப்பட்ட ஒருவர் கிராம மக்களால் அடித்தே கொல்லப்பட்டுள்ளார்; சைக்கிள் திருடியதாகக் குற்றம் சாட்டி மூன்று இளைஞர்களைப் பிடித்த கிராம மக்கள், அவர்களில் ஒருவரின் கண்களைத் தோண்டியெடுத்துள்ளனர். இத்தகைய கும்பல் பயங்கரவாதமும் போலீசின் வெறியாட்டங்களும் அங்கே கேள்விமுறையின்றித் தொடர்கின்றன.


ஜனநாயகம்மனித உரிமை பற்றிய வாசனையைக் கூட அறிய விடாமல் இன்னமும் பழமைவாதத்திலேயே ஒடுக்கி வைக்கப்பட்டுள்ள மக்கள், குற்றப் பரம்பரையினராக இழிவுபடுத்தப்பட்டுள்ள பழங்குடியின உழைப்பாளிகளிடம் கும்பல் பயங்கரவாதத்தை ஏவும் சாதியக் கட்டுமானப் பிடியிலுள்ள கிராமங்கள், அக்கிராமங்களை நடுநடுங்க வைக்கும் நிலப்பிரபுக்களின் சாதிவெறி குண்டர் படைகள், ஒட்டு மொத்த சமூகத்தையே அச்சுறுத்தும் அரசு பயங்கரவாத போலீசு மிருகங்கள் என பீகார் இன்னமும் காட்டுமிராண்டி நிலையிலேயே இருத்தி வைக்கப்பட்டுள்ளதால், போலீசின் பயங்ரவாதமும் கொட்டமும் இன்னமும் அங்கே கேள்விமுறையின்றித் தொடர்கிறது. நிலப்பிரபுக்கள், தரகுப் பெருமுதலாளிகள், ஓட்டுப் பொறுக்கிகள், அதிகார வர்க்கம், நீதித்துறை, போலீசு, இராணுவம் என "குற்றப் பரம்பரை'யினரின் ஆதிக்கமும் ஒடுக்குமுறையும் அங்கு நீண்ட நெடுங்காலமாகத் தொடர்கிறது. இந்த அநீதியும் பயங்கரமும் தொடர வேண்டுமென்பதற்காகவே, அப்பாவிகள் மீது தனது காட்டுமிராண்டித்தனத்தை ஏவி, இதர பிரிவு உழைக்கும் மக்களை அஞ்சி நடுங்க வைக்கிறது பீகார் போலீசு.
செய்யாத குற்றத்திற்காக விசாரணை ஏதுமின்றி அடித்தே கொல்லப்பட்டு, செத்த பிறகும் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர் அந்த 10 ""நாட்''கள். ஆனால் தாம் செய்த ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டும், தண்டனை அனுபவிக்காமலேயே மேல்முறையீடு செய்து தப்பித்து, பின்னர் செத்துப் போனதும் அரசு மரியாதையுடன் எரிந்து சாம்பலானார், "குற்றப் பரம்பரையை'ச் சேர்ந்த ஒருவர். அவர், முன்னாள் பிரதமர்; அவரது பெயர் நரசிம்மராவ்!

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது