Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
PJ_2007 _12.jpg

அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களால் ஈராக்கில் இறக்கிவிடப்பட்டுள்ள தனியார் கூலிப்படைகள், ஈராக்கிய மக்களைக் கொலை செய்வதைப் பொழுதுபோக்காகக் கருதுகின்றன.

 

விர்ரென்று ஒலிப்பானை ஒலித்தவாறு ஒரு வாகனம் மக்கள் நெருக்கம் மிகுந்த அந்த வீதியினுள் நுழைகிறது. அது, ஈராக்கினை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்கப் படையினருக்கும்,

 அங்கு நிறுவப்பட்டிருக்கும் பொம்மை ஆட்சியாளருக்கும் பாதுகாப்பளிக்க வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள "பிளாக் வாட்டர்ஸ்' என்ற அமெரிக்கக் கூலிப்படை நிறுவனத்தின் வாகனம்.

 

பாக்தாத்தை ஒட்டிய, நெரிசல் மிக்க மன்சூரில் உள்ள நிசௌர் சதுக்கத்தில், பொதுமக்கள் மட்டும் புழங்கக் கூடிய அவ்வீதியில், அந்த வாகனம் நுழைந்ததும் மக்கள் நடமாட்டத்தை நிறுத்தி வைக்க உள்ளூர் போலீசு அவசர அறிவிப்பு செய்கிறது. போலீசின் அறிவிப்பை அடுத்து ஏற்பட்ட களேபரத்தினூடே ஈராக்கியர்களை ஏற்றி வந்த ஒரு பேருந்து தடையைக் கவனிக்காமல் வழக்கமாக நகரத் தொடங்குகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவ்வாகனம் மீது துப்பாக்கிக் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. 40 ரவுண்டுகளுக்கும் மேல் சுடப்பட்டன. கையெறி குண்டுகள் வீசப்பட்டன. 17 பேர் கொல்லப்பட்டனர். அந்த வாகனத்தில் வந்தவர்கள் யாரும் அல்கொய்தா தீவிரவாதிகள் அல்லர். ஈராக்கின் சாமானிய மக்கள். அவர்களில் பச்சிளம் குழந்தையும் இளம்பெண்களும் அடங்குவர்.

 

"பிளாக் வாட்டர்ஸ்' எனும் கூலிப்படை துப்பாக்கிச் சூட்டை ஆரம்பித்ததும் வாகனத்தின் கதவைத் திறந்து கொண்டு தரையில் ஊர்ந்தபடி உயிர்பிழைக்க முயன்ற குழந்தைகளும் பெண்களும் குறி வைத்துச் சுடப்பட்டனர். கடந்த செப்டம்பர் 16இல் நிசார் சதுக்கத்தை இரத்தச் சகதியில் மூழ்கடித்த "பிளாக் வாட்டர்ஸ்', இந்த ஆண்டில் மட்டும் 52 துப்பாக்கிச் சூடுகளை நடத்தியுள்ளது. கடந்த இரண்டாண்டுகளில் 195 முறை இது போன்ற மனிதப் படுகொலைகளை ஈராக்கில் நடத்தியுள்ளது.

 

நிசார் சதுக்கக் கொலைவெறியாட்டத்தில் ஈடுபட்ட பிளாக் வாட்டர்ஸ் ஒப்பந்த நிறுவனம் தனது எல்லைக்குள் முடங்கிக் கொள்ள வேண்டுமென்றும், இப்படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஈராக் அரசு அறிவித்தது. அடுத்த நாலே நாட்களில் அந்நிறுவனம் பழையபடி செயல்படத் தொடங்கி விட்டது. அமெரிக்க நிர்ப்பந்தத்தாலும், அமெரிக்கப் படையினருக்கும் நிகரான சட்டப்பாதுகாப்பு இக்கூலிப்படையினருக்கு இருப்பதாலும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை ஏதும் இல்லை.

 

பாக்தாத்தின் இரத்த ஞாயிறு என வர்ணிக்கப்படும் இக்கோரப் படுகொலை நடந்ததையடுத்து நாடெங்கும் கொத்தளிப்பு மிகுந்தவுடன், நடப்பது அமெரிக்காவின் பொம்மை ஆட்சியாகவே இருப்பினும், கொல்லப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் தலா 32 கோடி ரூபாயை இழப்பீடாகத் தரவேண்டும் என்றும் ஆறு மாதங்களுக்குள் பிளாக் வாட்டர்ஸ் நிறுவனம் ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும் என்றும் ஈராக் பிரதமர் நூரி அல் மால்கி நிபந்தனைகளை விதித்துள்ளார். அவரால் இதற்கு மேல் எதனையும் செய்ய முடியாது.

 

அமெரிக்கக் கூட்டுப் படையினருடன் அழைத்து வரப்படும் இதுபோன்ற கூலிப்படை ஒப்பந்த நிறுவனத்தினர் மீது கொலை வழக்கோ, கைதோ செய்ய முடியாதபடிக்கு "ஆணை எண் 17' என அழைக்கப்படும் சட்டம் ஈராக்கில் நடைமுறையில் உள்ளது. 2004இல் பொம்மை அரசை நிறுவ சில நாட்கள் இருந்த நிலையில், அமெரிக்கக் கூலிப்படையினருக்குச் சட்டப்பாதுகாப்பை வழங்குவதற்கென்றே முறைகேடான இந்த ஆணையை அமெரிக்கப் பிரதிநிதி பவுல் பிரீமெர் பிறப்பித்திருந்தார்.

 

சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை (யு.எஸ்.எய்டு) எனும் தன்னார்வ நிறுவனத்திற்காக வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒப்பந்த நிறுவனம் ஒன்று, இப்படுகொலை நடந்த ஒரு மாதத்திற்குள் பொதுமக்கள் பயணம் செய்த கார் ஒன்றினைச் சுட்டு இரண்டு ஈராக்கியப் பெண்களைக் கொன்றுள்ளது.

 

அமெரிக்க பன்னாட்டுப் படையினர் செய்யத் தயங்கும் அபாயகரமான வேலைகளையும், மறுசீரமைப்புப் பணிகளையும் செய்வதற்காக வாடகைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் செக்யூரிட்டி நிறுவனங்களில் ஒன்றுதான் "பிளாக் வாட்டர்ஸ்'. அமெரிக்க அதிபர் புஷ்சின் குடியரசுக் கட்சிக்குத் தேர்தல் நிதியை அள்ளித் தந்ததற்குக் கைமாறாக, ஈராக்கில் பாதுகாப்பளிக்கும் சேவைக்கான ஒப்பந்தம், தீவிர எவாஞ்சலிகல் கிறிஸ்துவ வலதுசாரியான எரிக் பிரின்ஸ் என்பவருக்குச் சொந்தமான இந்நிறுவனத்திற்குக் கிடைத்தது. ஒசாமா பின்லேடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரி கோபர் பிளாக் இந்நிறுவனத்தின் மேலதிகாரியாக இருப்பதிலிருந்தே இந்நிறுவனத்திற்கு அமெரிக்க அதிகார வர்க்கத்துடனுள்ள நெருக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

 

சென்ற ஆண்டு இதே பிளாக்வாட்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு சிப்பாய், ஈராக்கின் துணை அதிபரின் பாதுகாவலரை கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது சுட்டுக் கொன்றான். இக்கொலையாளி மீது கைதோ வழக்கோ வராமல் இருக்க கண்ணும் கண்ணும் வைத்தாற்போல அவனை அமெரிக்காவுக்கு பத்திரமாய் அனுப்பி வைத்தனர். கொலையாளி மீது எடுத்த நடவடிக்கை என்னவென்று கேட்டால் "அந்நபரை வேலையை விட்டு நீக்கிவிட்டோமே' என்று திமிராகக் கூறுகிறது, பிளாக் வாட்டர்ஸ். அந்நபர் மீது ஈராக்கிலோ அமெரிக்காவிலோ இன்றுவரை குற்றப் பதிவுகூடச் செய்யப்படவில்லை.

 

மற்றுமொரு சம்பவத்தில் தங்களது வாகனத்துக்கு அருகில் பயணித்த "மாபெரும்' குற்றத்திற்காக ஈராக்கிய கார் ஒட்டுநர் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளனர். இவர்களின் கொலைப்பட்டியலோ நீண்ட நெடியது. கடந்த பிப்ரவரி 4ல் ஹனா அல் அமீதி எனும் ஈராக் செய்தியாளர், பிப்ரவரி 7இல் ஈராக் அரசு தொலைக்காட்சியாளர்கள் எனப் பல ஈராக்கியப் பொதுமக்கள் காரணம் ஏதுமின்றிக் கொல்லப்பட்டுள்ளனர்.

 

ஈராக் முழுக்க அமெரிக்கஇங்கிலாந்து ஆக்கிரமிப்புப் படையினருடன், சுமார் 180 ஒப்பந்த நிறுவனங்களின் கூலிப்படையாட்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

பொதுமக்கள் மீது நடத்தி வரும் இப்படுகொலைகளை, "ஒப்பந்த நிறுவனங்கள் தங்கள் கடமையைத்தான் செய்கின்றன' என்றும் "ஈராக்கில் இருக்கும் அசாதாரண சூழலில் ஆட்சியாளரையும், படையினரையும் காக்கும் பொறுப்பு இந்த நிறுவனங்களுக்கு உள்ளது' என்றும் அமெரிக்கா நியாயப்படுத்துகிறது.

 

கூலிப்படையினருக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கும் "ஆணை எண் 17'ஐ திரும்பப் பெறவேண்டும் என்று பொம்மை ஆட்சியாளர்கள் முதலில் நிபந்தனை விதித்தாலும், அமெரிக்க அரசின் நிர்ப்பந்தத்தால் தற்போது "அதே ஆணையில் உள்ள உட்பிரிவின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது அமெரிக்கா விரும்பினால் ஆணையை தளர்த்த முடியும். அதனை அமெரிக்கா செய்ய வேண்டும்' என இறைஞ்சும் நிலைக்கு வந்து விட்டது.

 

ஏற்கெனவே நாடு முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள, 1,35,000 அமெரிக்க சிப்பாய்களை எதிர்த்துப் போரிடும் ஈராக் போராளிகளுக்கு, 1,80,000 பேரைக் கொண்ட கூலிப்படையையும் எதிர்த்து சுதந்திரப் போரை நடத்த வேண்டிய காலக் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 

முதலாளித்துவப் பத்திரிக்கைகள் கூட "போரில் கூடத் தனியார்மயத்தை எல்லை மீறி அமெரிக்கா செயல்படுத்துவதாகக்' கண்டிக்கின்றன.

 

இதுவரை ஈராக் விடுதலைப் போரில் அமெரிக்கத் தரப்பில் 3,900 சிப்பாய்கள் கொல்லப்பட்டு, அமெரிக்கா இன்னொரு வியட்நாமை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில், ஒப்பந்த அடிப்படையில் போர்முனைக்குச் சென்றுள்ள கூலிப்படையினர்களிலும் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 12,000 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

 

எத்தனை கூலிப்படைகளை இறக்கினாலும் ஈராக்கில் இருந்து அமெரிக்கா அடித்துத் துரத்தப்படுவது உறுதி. அமெரிக்காவின் நவீன இராணுவத்தை விடவும் கூலிப்படையினரை விடவும், தாய்நாட்டுக்காகப் போராடுபவர்களின் துணிவும் வீரமுமே வலிமையும் ஆற்றலுமிக்கது என்பதே உலகெங்கும் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை.


· கவி

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது