Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
PJ_2007 _12.jpg

உலகத் தமிழர் பேரமைப்பு எனும் "தமிழர்' அமைப்பு, கடந்த அக்டோபர் 28ஆம் தேதியன்று தமிழர் தொழில் வணிகச் சிறப்பு மாநாட்டை திருப்பூரில் நடத்தியது. இந்தப் பேரமைப்பின் தலைவரான ""மாவீரன்'' பழ.நெடுமாறன் இம்மாநாட்டைத் தலைமையேற்று நடத்தினார்.

 

இந்த மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். அரைடவுசர் அண்ணாச்சி பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு ""உலகப் பெருந்தமிழர்'' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆர்.எஸ்.எஸ்.இன் பார்ப்பனிய நச்சுக் கருத்துக்களைக் கொண்ட ஒரு பிரசுரம், மகாலிங்கம் வழங்கிய ஏற்புரை என்ற பெயரில் இலவசமாக வழங்கப்பட்டது.

 

அந்தப் பிரசுரத்தில், "தமிழ் ஆய்வு என்ற கட்டை வண்டியில் ஏறிக் கொண்டு போனால், 800 பி.சி. (கி.மு.) வரைதான் போகமுடியும். சமஸ்கிருத ஆய்வு என்ற காரில் ஏறிக் கொண்டு போனால் 8000 பி.சி. (கி.மு.) வரை போக முடியும்'' என்றும், ""தமிழர்களில் ஒரு பிரிவினர் வடக்கிலிருந்து தெற்கே வந்தார்கள்'' என்றும் ""நாம் வாழும் காலம் திரேதாயுகம்'' என்றும் அதற்கு பார்ப்பன சப்தரிஷி பஞ்சாங்கத்திலிருந்து கணக்குப் போட்டுக் காட்டியும், பார்ப்பன புரோகிதர்கள் சங்கல்பம் செய்யும்போது சொல்கிற மந்திரத்தை ஆதாரம் காட்டியும் எழுதப்பட்டுள்ளது. தமிழா நீ வந்தேறி; உன் மொழி, வேசி மொழி; சமஸ்கிருதமே உயர்ந்த மொழி இதுதான் அந்தப் பிரசுரத்தின் சாரம். இதையே பொள்ளாச்சி மகாலிங்கம் தனது ஏற்புரையாகப் பேசியுள்ளார்.

 

கோவையில் இந்து மதவெறி எனும் நச்சுமரம் வளர உரமிட்டவர்தான் இந்த ""அருட்செல்வர்'' மகாலிங்கம். ""ஓம் சக்தி'' எனும் இந்து பக்திஆன்மீகப் பத்திரிகையின் நிறுவனரும் புரவலருமாக இருந்து ஆர்.எஸ்.எஸ்.க்கு சேவை செய்து வருபவர். ""நமது வேத மந்திரங்கள், உபநிடதங்கள் சமஸ்கிருதத்தில் தான் உள்ளன. ஆகவே சமஸ்கிருதம் ஒரு மொழி மட்டுமல்ல; அது நமது கலாச்சாரத்தின் சின்னம்'' என்று அப்பத்திரிகையில் தொடர்ந்து எழுதியவர். பார்ப்பனியத்தின் மீதும் வருணாசிரமத்தின் மீதும் மாறாத நம்பிக்கை கொண்டவர். பொள்ளாச்சியில் அவருடைய கட்டுப்பாட்டிலுள்ள மாரியம்மன் கோயிலில் வழக்கமாக இருந்து வந்த "சூத்திர' பூசாரிகளை மாற்றிவிட்டு பார்ப்பன பூசாரிகளை அமர்த்தியவர். பொள்ளாச்சி வட்டாரத்தில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்புகளுக்கு காக்கி அரைடவுசருடன் சென்று நிதியுதவியும் செய்து வருபவர். எல்லாவற்றுக்கும் மேலாக, கோக்பெப்சி ஆகிய அமெரிக்க மூத்திரங்களுக்கு கோவை, ஈரோடு மாவட்ட ஏஜெண்டாகச் செயல்படுபவர். கவுண்டர் சாதிக்காரன் கரும்பு விவசாயியாக இருந்தாலும், கரும்புக்கு அடிமாட்டு விலைபேசி பட்டை நாமம் போடும் சர்க்கரை ஆலை முதலாளிதான், இந்த ""சாதிப்பற்றில்லாத அருட்செல்வர்'' மகாலிங்கம்.

 

பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்.இன் பாதுகாவலரும் சமஸ்கிருதமே நமது கலாச்சார சின்னம் என்று முழங்கிக் கொண்டு தமிழை இழிவுபடுத்தியவருமான இந்த பெருமுதலாளிக்கு உலகப் பெருந்தமிழர் விருது! இந்த வெட்கக்கேட்டிற்கு ஒரு மாநாடு! அதற்கு ஒரு வரவேற்புக் குழு. அந்த வரவேற்புக் குழுவின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டு, அதில் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று, சுவரொட்டி சுவரெழுத்து விளம்பர வேலைகளைச் செய்து "புரட்சிப் பணி'யாற்றியுள்ளனர். இம்மாநாட்டில் தமிழால் வயிறு வளர்க்கும் பல அறிஞர்களும், அறிஞர் இயக்கத்தினரும் உலகப் பெருந்தமிழர் விருது பெற்ற பொள்ளாச்சி மகாலிங்கத்தை கல்வித் தந்தை, வள்ளல், தமிழ் ஆய்வாளர், தொழிற்துறை முன்னோடி என்றெல்லாம் துதிபாடினரே தவிர, அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்றோ, தமிழை இழிவுபடுத்தி சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடிப்பவர் என்றோ குறிப்பிடவில்லை.

 

இப்படி எல்லோரும் மகாலிங்கத்துக்கு முதுகு சொறிந்து கொண்டிருந்த நிலையில், ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த நீலவேந்தன், ""சேரித் தமிழன் இன்னமும் அவலத்தில் உழலும்போது, எந்தத் தமிழனின் தொழில்வணிகச் சிறப்பைப் பற்றிப் பேச முடியும்'' என்று கேட்டு, சாதி ஒழிப்பின் அவசியத்தை வலியுறுத்திய அவர், ""இந்த மேடையிலேயே தமிழை இழிவுபடுத்தி சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடித்தவருக்கு உலகப் பெருந்தமிழர் விருது வழங்குவது தகுதியுடையதல்ல'' என்றும் ""பொள்ளாச்சியில் அரசுக் கல்லூரி வந்தால் தனது கல்வி வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் அதைத் தடுத்து, சேரி இளைஞர்களோடு சேர்த்து தன் சாதி ஏழை இளைஞர்களுக்கும் துரோகமிழைத்துக் கொண்டிருப்பவருக்கு உலகப் பெருந்தமிழர் விருது தருவதை அங்கீகரிக்க முடியாது'' என்றும் குறிப்பிட்டு, மகாலிங்கத்தின் வேட்டியை விலக்கி அவரது காக்கி அரைடவுசரை அடையாளம் காட்டினார். பெரியார் தி.க.வின் கோவை இராமகிருஷ்ணனும், மற்றவர்கள் பேசத் துணியாத நீலவேந்தனின் கருத்தை ஆதரித்துப் பேசியுள்ளார்.

 

உடனே "மாவீரன்' நெடுமாறனுக்கு "தமிழ் வீரம்' பொங்கியெழுந்துவிட்டது. ""இது தனிப்பட்ட அரசியல் மேடை அல்ல; உலகத் தமிழர்களுக்கான பொது மேடை. இங்கு அனைவரும் பங்கேற்பார்கள். கருத்து வேறுபாடு உள்ளவர்கள் வராமலேயே இருந்திருக்கலாம். அந்தத் தம்பி (நீலவேந்தன்) பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பண்பாட்டோடு நடந்து கொள்ளுங்கள். நான் ஆதித் தமிழர் பேரவையைச் சேர்ந்த நண்பர் அதியமானைத்தான் பேச அழைத்திருந்தேன். அவர் அனுப்பியதாகக் கூறிக் கொண்டு யாரோ வந்து என்னென்னவோ பேசியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கருத்துக்களோடு இனி யாரும் இங்கே வரவேண்டியதில்லை'' என்று எச்சரித்து, காக்கி அரைடவுசர் வெளியே தெரியாமல் மகாலிங்கத்துக்கு வேட்டியைச் சரி செய்து கட்டிவிட்டார். நெடுமாறன் இப்படிப் பேசி முடித்தவுடன், ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்தோரும், கோவை இராமகிருஷ்ணனோடு வந்த பெரியார் தி.க.வினரும் அரங்கை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் பின்னாலேயே வந்த கவுண்டர் சாதிவெறியர்கள் சிலர் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, ""வள்ளல் மகாலிங்கத்தைப் பற்றி எப்படித் தவறாகப் பேசலாம்?'' என்று கேட்டு வாக்குவாதம் செய்ததோடு, கைகலப்பிலும் இறங்கியுள்ளனர்.

 

தமிழை இழிவுபடுத்தி சமஸ்கிருதம் உயர்வானது என்று பகிரங்கமாக மேடையிலேயே மகாலிங்கம் அறிவித்துள்ளாரே, அதுதான் நெடுமாறனைத் தலைவராகக் கொண்டுள்ள உலகத் தமிழர் பேரமைப்பின் நிலைப்பாடா? அவரவர் கருத்துக்களை அவரவர் மேடையில் வைத்துக் கொள்ளுங்கள் என்றால், மேடைக்கேற்ப சந்தர்ப்பவாதமாக நடந்து கொள்வதுதான் நெடுமாறன் கற்றுத் தரும் புது அரசியலா? ஆர்.எஸ்.எஸ். ""ஷாகா''வுக்கு காக்கி அரைடவுசருடன் செல்லும் இந்துவெறியர்களின் புரவலருக்கு, உலகப் பெருந்தமிழர் விருது வழங்குவதை விமர்சிக்கக் கூடாதா?

 

""இப்படி உள்விவகாரங்களையெல்லாம் நோண்டக் கூடாது. தமிழனா என்று பார்! அப்படியானால் இது நம்ம ஆளு!'' இதுதான் நெடுமாறனின் புதிய சித்தாந்தம். நெடுமாறன் மட்டுமல்ல; பல வண்ணத் தமிழினவாதிகளும் சந்தர்ப்பவாத அரசியலையும் பிழைப்புவாத வாழ்வியலையும் இணைத்து ஒரு வீரிய ஒட்டுரக சித்தாந்தத்தை உருவாக்கி வளர்த்து வருகிறார்கள். வர்க்கக் கண்ணோட்ட÷மா, சாதிஎதிர்ப்பு ஏகாதிபத்திய எதிர்ப்புக் கண்ணோட்டமோ இன்றி, ""தமிழன் சூத்திரன்'' என்ற பெயரால் எல்லாவகையான அயோக்கியர்களையும் துரோகிகளையும் ஆதரித்து நிற்பதும், ""தமிழன்தமிழினம்'' என்ற கூப்பாடு போட்டு இவற்றை மூடிமறைத்து நியாயம் கற்பிப்பதும் இப்பிழைப்புவாதிகளின் கைவந்த கலையாகி விட்டது. அதன் அடுத்த பரிணாமம்தான் ஆர்.எஸ்.எஸ்.காரனுக்கு விருது!


— பு.ஜ. செய்தியாளர்கள், திருப்பூர்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது