Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
PJ_2007 _12.jpg

விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளரான பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் படுகொலை உலகெங்குமுள்ள ஈழத் தமிழர்களையும் தமிழீழ விடுதலை ஆதரவாளர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த நவம்பர் 2ஆம் நாளன்று அதிகாலையில் கிளிநொச்சி பகுதியில் சிங்கள இனவெறி இராணுவ விமானங்களின் குண்டுவீச்சுத் தாக்குதலில் தமிழ்ச்செல்வன் மற்றும் 5 புலிகள் இயக்கப் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

 

2002ஆம் ஆண்டில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு நடத்தப்பட்ட அனைத்து அமைதிப் பேச்சுவார்த்தைகளிலும் கலந்து கொண்டு, தமிழீழத்திலிருந்து பேச்சுவார்த்தைக் குழுவுக்குத் தலைமையேற்றவர்தான் தமிழ்ச்செல்வன். புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகராக இருந்த ஆண்டன் பாலசிங்கம் உடல்நலமில்லாத காலத்திலிருந்தே இலங்கை அரசுடனும் அனைத்துலக அமைப்புகளுடனும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்த அவர், பாலசிங்கத்தின் மறைவுக்குப் பிறகு புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராகி, அதிகாரப் படிநிலையில் இரண்டாமிடத்துக்கு வந்தார்.

 

நார்வே நாட்டுப் பிரதிநிதிகளை நடுவராகக் கொண்டு இலங்கை அரசுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி வந்தவரையே இலங்கை இராணுவம் குண்டு வீசிக் கொன்றிருப்பதன் மூலம் சமாதானத்திற்கான அனைத்து சாத்தியக் கூறுகளையும் இலங்கை அரசு குழிதோண்டிப் புதைத்து விட்டது. ""அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்து அமைதிப் புறாவாக இருந்த தமிழ்ச் செல்வனை கோரமாகக் கொன்றதிலிருந்து இலங்கை அரசு போரைத்தான் விரும்புகிறது. அதற்கு நாங்கள் சரியான பதிலடி கொடுப்போம்'' என்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அறிவித்திருக்கிறார்.

 

ஈழத் தமிழர்களை மட்டுமின்றி, உலகின் பல நாட்டு அரசியல் தலைவர்களையும் தமிழ்ச்செல்வன் மரணம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான தலைவர் ராபர்ட், தமிழ்ச்செல்வன் படுகொலையை வன்மையாகக் கண்டித்துள்ளார். நார்வே, கனடா நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் நடத்திய வீரவணக்கக் கூட்டங்களில் அந்நாடுகளின் அரசியல் தலைவர்கள் பலர் கலந்து அஞ்சலி செலுத்தியதோடு, சிங்கள இனவெறி பாசிச அரசையும் கடுமையாகச் சாடியுள்ளனர்.

 

தமிழகத்தில் பெரியார் தி.க. உள்ளிட்டு தமிழீழ ஆதராவாளர்களும் விடுதலைச் சிறுத்தைகளும் தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கக் கூட்டங்களை நடத்தியதோடு, சிங்கள பேரினவாத அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதியும் ""செல்வா நீ எங்கு சென்றாய்'' என்ற தலைப்பில் இரங்கல் கவிதை எழுதி அரசு செய்திக் குறிப்பாக வெளியிட்டார்.

 

உடனே பாசிச ஜெயா, ""இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த பிரமுகரின் மரணத்துக்கு ஒரு மாநில முதல்வர் கவிதாஞ்சலி எழுதியிருப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு கருணாநிதி அரசைக் கலைக்க வேண்டும்'' என்று அறிக்கை விட்டார். அதைத் தொடர்ந்து துக்ளக் சோவும் பார்ப்பன பா.ஜ.க. கும்பலும் இதற்கு ஒத்தூதின.

""ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களின் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இறங்கற்பா பாடுவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது. தமிழ்ச்செல்வன் அமைதித் தூதுவராக இருந்தவர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது'' என்று சீறினார் தமிழக காங்கிரசுத் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். காங்கிரசு தலைவர் கிருஷ்ணசாமியும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ""தேசத்துரோகி கருணாநிதி முதல்வராக நீடிப்பதை மத்திய அரசு கண்டு கொள்ளா விட்டால் உச்சநீதி மன்றம் செல்வோம்'' என்று சாமியாடினார் பாசிச ஜெயா. ""இலங்கையில் கொல்லப்பட்டது ஒரு தமிழன். என் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம். அதனால் தான் இரங்கல் தெரிவித்தேன்'' என்று பதிலளித்தார் கருணாநிதி. ஒண்ட வந்த பிடாரி ஜெயாவோ, ""நானும் தமிழச்சிதான்'' என்று லாவணி பாடினார்.


இது வெறும் லாவணி அல்ல; இந்த விவகாரத்தை வைத்து தி.மு.க. ஆட்சியைக் காவு கேட்பதற்கான வாய்ப்பாக கருதியே பாசிச ஜெயா கும்பல் பெருங்கூச்சல் போடுகிறது. ஈழ விடுதலையை ஆதரிப்பதும் சிங்கள இனவெறி பாசிச அரசை எதிர்ப்பதும் கூட தேச விரோதச் செயலாகச் சித்தரித்து, பிரிவினைவாதபயங்கரவாத பீதியூட்டி 90களில் நடந்தது போன்ற ஒரு பாசிச ஆட்சியை மீண்டும் நிறுவுவதே பார்ப்பன ஜெயா கும்பலின் நோக்கமாக உள்ளது. இதற்கு பார்ப்பன பத்திரிக்கைகள் தூபம் போட, காங்கிரசு கயவாளிகள் பேயாட்டம் போடத் தொடங்கிவிட்டனர்.

 

""இன்று தமிழ்ச்செல்வன்; நாளை பிரபாகரன்'' என்று முழக்க தட்டியை வைத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரசுத் தலைவரான கதிர்வேல், தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு வக்கிரமாக இனிப்புகள் வழங்கிக் கொண்டாடியுள்ளார். இன்னும் பல இடங்களில் காங்கிரசு கழிசடைகள் தமக்குள் இனிப்புகள் வழங்கி குதூகலித்துள்ளன. கடந்த நவம்பர் 24 அன்று கோபியில் நடந்த காங்கிரசு ஊழியர் கூட்டத்தில் பேசிய இளங்கோவன், தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கம் செலுத்திய அமைப்புகளையும் இரங்கற்பா எழுதிய கருணாநிதியையும் கடுமையையாக சாடி ஊழியர்களை உசுப்பேற்றியுள்ளார்.

 

பின்னர், காரில் ஏறிச்சென்ற காங்கிரசு குண்டர்படை, முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வான வெங்கிடுவின் டீக்கடையில் தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கம் செலுத்தி ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியைக் கிழித்தெறிந்தது. தி.மு.க.வினரும் பெரியார் தி.க.வினரும் இதை எதிர்க்க, அவர்களைத்தாக்கி விட்டு இக்கும்பல் தப்பியோடியுள்ளது. கீழ்த்தரமான இச்செயலைக் கண்டு ஆத்திரமடைந்த தன்மானமுள்ள இளைஞர்கள் கோபியில் இளங்கோவனின் கொடும்பாவியை முச்சந்தியில் தொங்க விட்டனர். இதை எதிர்த்து கோபியிலும் சென்னையிலும் காங்கிரசு கழிசடைகள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன.

 

ஈழ ஆதரவாளர்களின் செயல்பாடுகள், பாசிச ஜெயாகாங்கிரசு கும்பல் விரித்துள்ள சதித்திட்டத்திற்கு வலுவூட்டும் வகையில் செல்வதைக் கண்டு கருணாநிதி பீதியடைந்தார். தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள, ""விடுதலைப் புலிகள் உட்பட தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக ஊர்வலம், பொதுக்கூட்டம், உள்ளிருப்பு கூட்டம், இரங்கல் கூட்டங்கள் நடத்துபவர்கள்; பிரசுரம், சுவர் விளம்பரம் செய்பவர்கள்; ஆர்ப்பாட்டம், உருவப் பொம்மை எரித்தல், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபடும் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று போலீசு தலைமை இயக்குனர் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ராமன் பாலம் விவகாரத்தில் சந்தர்ப்பவாதமாக நடந்து கொண்டு பின்வாங்கியதைப்போலவே இப்போதும் பார்ப்பன பாசிச கும்பலுக்கு அஞ்சி பம்மிப் பதுங்குகிறார்.

 

காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஈழ மக்களை கொன்றொழித்து வரும் இலங்கை அரசுக்கு ரேடார் சாதனங்களையும் ஆயுதங்களையும் வழங்கியுள்ளது. போரினால் வாழ்விழந்த ஈழத்தமிழர்களுக்கு உணவும் மருந்துப் பொருட்களையும் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அனுப்பும் முயற்சிகளையும் தடுத்து வருகிறது. பதவிக்காக இக்கூட்டணி அரசில் பங்கேற்கும் கருணாநிதி, இந்திய அரசின் இக்கேடு கெட்ட கொள்கைகளுக்கு எதிராக வாயே திறப்பதில்லை. தமிழன், தமிழினம், தன்மானம் என்றெல்லாம் சவடால் அடிக்கும் கருணாநிதி, வீரமணி, இராமதாசு முதலானோர் தம்மையும் தமது ஆட்சியையும் சொத்துக்களையும் பாதிக்காத வகையில் மிகவும் பொதுவான சவடால் அறிக்கைகளோடு பதுங்கி விடுவார்கள்; மீறினால் ஒடுக்கவும் செய்வார்கள் என்பதற்கு அரசு வெளியிட்டுள்ள எச்சரிக்கையே சான்று கூறப் போதுமானது.

 

ஈழ ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் இன்னமும் இந்திய அரசின் தயவில் ஈழ விடுதலையைச் சாதிக்க முடியும் என்று நம்புகின்றனர். ஆனால் இந்திய அரசோ சிங்கள பேரினவாத பாசிச அரசுக்கு மறைமுகமாக உதவி செய்து வருவதோடு, ஈழ விடுதலைக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் தமிழர்களின் நியாயவுரிமையைக் கூட பயங்கரவாதப் பீதியூட்டி ஒடுக்கி வருகிறது. அதற்கு தி.மு.க. அரசும் துணை நிற்கிறது.

 

காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு நினைவு தினமும், ஹிட்லருக்கு வீரவணக்கமும் செலுத்துகிறான் ஆர்.எஸ்.எஸ்.காரன். அதை அனுமதிக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தக்கூடாதாம். இதுதான் தேசியம்!


· தனபால்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது