Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

PJ_2007 _12.jpg அ திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைச் செல்வமும், செங்கல்பட்டு நகர அ.தி.மு.க. செயலாளர் குமார் மற்றும் 2 பேரும் கடந்த மாதம் கூலிப்படையினரால் பட்டப் பகலில் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து,""தமிழ்நாட்டு அரசியலில் கூலிப் படைகளும், ஆயுத வன்முறைக் கலாச்சாரமும் சமீப காலங்களில் பெருகிப் போய்விட்டன; அவை ஈவிரக்கமின்றி ஒடுக்கப்பட வேண்டும்'' என்று ஓட்டுக் கட்சித் தலைவர்கள் எல்லோரும் அச்சமும்,

 எச்சரிக்கையும், கோரிக்கையும் முன்வைத்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர்கள் ஒன்றும் அப்பாவிகள் அல்ல. இவர்களே கொலைக் குற்றங்கள் புரிந்துள்ளனர். கிரிமினல் குற்றக் கும்பல்களுடன் நெருங்கிய உறவு வைத்துக் கொண்டிருந்தவர்கள். மேலும் சொல்வதானால், அவற்றின் நிழல் தலைவர்களாகவும் புரவலர்களாகவும் இருந்தவர்கள். அவற்றுக்கிடையிலான பழிவாங்கும் சங்கிலித் தொடர் கொலைகளின் ஒரு பகுதியாகவே இக்கொலைகள் நடந்துள்ளன. உள்ளூராட்சி மற்றும் கட்சி நிர்வாகிகளிடையே நடந்துவந்த அரசியல் காரணங்களுக்கான கொலைவெறியாட்டங்கள் நகரமாநகர, மாவட்ட ஆட்சி மற்றும் கட்சி நிர்வாகிகள் மட்டத்துக்கு உயர்ந்துவிட்டது.

 

கள்ளச் சாராயம், போதை மருந்து விற்பனை, சங்கிலி பறிப்பு, வழிப்பறி, வீடு புகுந்து திருட்டு கொள்ளை, இந்த நோக்கங்களுக்காகக் கொலைகள் புரிவது போன்ற கிரிமினல் குற்றங்கள் பல்கிப் பெருகி வருகின்றன. ஆனால், அவையெல்லாம் கட்டுப்படுத்தவோ, ஒழிக்கவோ முடியாதவை என்றும் அவற்றோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்; அவற்றுக்குப் பலியாகாமல் பொது மக்கள்தாம் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசும் போலீசும் பிரச்சாரம் செய்கின்றன. இவை சாதாரணக் கிரிமினல் குற்றங்கள் என்றாகிவிட்ட நிலையில் கூலிக்குக் கொலைச் செய்வது, ஆட்களைக் கடத்திப் பணயக் கைதிகளாக வைத்துப் பணம் பறிப்பது, போதை மருந்து, நவீன ஆயுதங்கள் கடத்துவது, ""பாதுகாப்புக் கட்டணங்கள்'' வசூலிப்பது, அரசு மற்றும் தனியார் நிலங்களைக் கையகப்படுத்துவது போன்ற கிரிமினல் வேலைகளையே தொழிலாகக் கொண்ட கிரிமினல் குற்றக் கும்பல்களும், அவற்றுக்கிடையிலான பழிவாங்கும் சங்கிலித் தொடர் கொலைகள், போலீசின் கண்முன்னே உயர்நீதி மன்றம் உட்பட எல்லா வழக்குமன்ற வளாகங்களுக்குள்ளேயே படுகொலைகள் வன்முறை வெறியாட்டங்கள் இரவுபகல், கிராமங்கள்நகரங்கள் என்ற பாகுபாடின்றி அன்றாட நிகழ்வாகிவிட்டன.

 

இப்போது கிரிமினல் குற்றக் கும்பல்கள் கூலிப் படைகளுக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் உயர் அதிகாரிகள் வரை போலீசுக்கும் உள்ள கூட்டும் உறவும் குறித்த செய்திகள் ஒன்றும் இரகசியமானவை அல்ல. ஆனால், பெரும் வங்கிகளின் கடன் வசூல், வீடுவீட்டுமனைத் தொழில், சங்கிலித் தொடர் விற்பனைக் கடைகள், சினிமா தயாரிப்பு திரையரங்குகள், சுயநிதிக் கல்லூரிகள், போக்குவரத்து நிறுவனங்கள், பன்னாட்டு ஏகபோகத் தொழில் நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் கூலிப்படைகளை வைத்துக் கொண்டிருக்கின்றன. மேற்படி கும்பல்களைத் தமது சம்பளப் பட்டியலில் வைத்துக் கொண்டுள்ளதோடு தொழில் ஒப்பந்தக்காரர்களாகவும் கொண்டுள்ளன.

 

கூலிப்படைகளை நம்பி அரசியல் நடத்தும் ஓட்டுக் கட்சிகளும் பிழைப்புவாதத்தில் மூழ்கிப் போயுள்ள அரசியலற்ற நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே மேற்கண்ட யதார்த்த நிலையைக் கண்டு கொள்ளாமல் இருந்தன; ஆனால், கூலிப்படைகளின் கோரக் கொலைகளை நேருக்கு நேர் பார்க்கும் போதெல்லாம் அரசியலற்ற நடுத்தர வர்க்கத்தினர் அலறுகின்றனர். ""அமைதிப் பூங்கா'' சவடால்கள் மூலம் அரசியலற்ற இந்த நடுத்தர வர்க்கத்தினரின் ஓட்டுக்காக வேண்டி ஓட்டுக் கட்சித் தலைவர்கள் இப்போது கூலிப்படை வன்முறைக் கலாச்சாரம் குறித்து கூப்பாடு போடுகின்றனர். ஆனால், போலீசுக்குக் கூடுதல் அதிகாரம் கொடுப்பதைத் தவிர வேறு தீர்வு எதுவும் இவர்களுக்கு கிடையாது. கிரிமினல் கும்பல்களை ஒடுக்குவதற்கென்று மராட்டிய மாநில அரசைப் பின்பற்றித் தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என்று போலீசு அதிகாரிகள் கோரி தமிழக முதல்வரும் அதை ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால், நாட்டிலேயே மும்பைதான் கிரிமினல் குற்றக் கும்பல்களின் தலைநகரமாக இன்னமும் விளங்குகிறது. குற்றக் கும்பல்களின் கூட்டாளிகளான போலீசு, கூடுதலாகக் கிடைக்கும் அதிகாரத்தையும் அப்பாவி மக்களுக்கு எதிராகத்தான் பயன்படுத்தும்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது