Language Selection

புதிய கலாச்சாரம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 கிரிமினல் வேலைகளில் 2000 ஆண்டு பாரம்பரியம் கொண்ட சங்கரமடத்தின் பார்ப்பனக் கும்பல்  Rg=   என்ற அந்த ஏழைச் சிறுமியைச் சாம்பலாக்கிக் காற்றில் கரைத்துவிட்டது.

 

 ""என் வயிறு பற்றி எரிகிறது என்ன கொடுமையடா, ஒருவர்கூட இவர்களைத் தட்டிக் கேட்கவில்லையே'' என்று தன்னுடைய கடைசிக் கடிதத்தில் குமுறினார் சங்கரராமன். தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்லி அழுவதற்குக் கூட யாருமில்லாமல் அநாதையாய்த் துடித்து அடங்கிய Rg=   என்ற அந்த ஜீவனின் கதை இரக்கமற்ற கொலைகாரர்களையும் உருக்கவல்லது.

 

 கடைய நல்லூரில் ரயில்வே சிற்றுண்டிச் சாலையில் பணியாற்றும் ஒரு தொழிலாளியின் மகள் Rg=  வறுமையின் கொடுமை தாளாமல், படிக்க வைக்க வழியில்லாமல் தன் 8 வயதுப் பெண்ணை காஞ்சிமடம் நடத்தும் "ஏழை பிராமணப் பெண்களுக்கான விடுதி'யில் சேர்த்துவிட்டார் அவள் தந்தை.

 

 கடந்த ஜூலை 29ஆம் தேதியன்று தொடர்ச்சியான ரத்தப் போக்கு காரணமாக இறந்து போனாள் சுபஸ்ரீ. உடனே அவளது உடலை வடஆற்காடு மாவட்டம் வாலாஜா பேட்டை மயானத்திற்குக் கொண்டு சென்று எரித்துவிட்டனர் சங்கரமடத்தின் கிரிமினல்கள். போலீசில் வழக்கு கிடையாது சவப்பரிசோதனை கிடையாது இறந்த குழந்தையின் முகத்தைப் பார்க்க பெற்றோர் கூட வரவழைக்கப்படவில்லை. சாவுச் செய்தியே அவர்களுக்குத் தெரியாது. ஏன், ஏன், ஏன் என்ற கேள்விகளுக்கு விடையில்லை.

 

 ""மாதவிடாய்ப் பிரச்சினை காரணமாகத்தான் ரத்தப் போக்கு இது இயற்கை மரணம்'' என்கிறார் காமதுர்கா விடுதியின் வார்டன் வேதாம்பாள்.

 

 சோற்றுக்கு வழியில்லாத குடும்பத்தில் பிறந்த ஒரு தொடக்கப்பள்ளிச் சிறுமி 11 வயதிலேயே பருவத்துக்கு வந்துவிட்டாள் என்ற கதையை யார் நம்புவது? இதனைப் புலனாய்வு செய்த அவுட்லுக் வார ஏட்டின் நிருபர் சுபஸ்ரீ படிக்கும் எஸ்.எஸ்.கே.வி. தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியை சுந்தரி என்பவரைச் சந்தித்து இதுபற்றிக் கேட்டபோது அவர் அளித்த பதில் நமக்கு அதிர்ச்சியூட்டுகிறது.

 

 ""சென்ற ஆகஸ்டு மாதம் அந்த "விடுதித் தலைவி' பள்ளிக்கு வந்து சுபஸ்ரீக்கு டி.சி. வாங்கிச் சென்றார். அவள் பருவத்துக்கே வரவில்லை. அவள் இறந்துவிட்டாள் என்பதே இதுவரை எங்களுக்குத் தெரியாது'' என்றார். இறந்துபோன பெண்ணுக்கு யாராவது மாற்றுச் சான்றிதழ் வாங்குவார்களா? இந்தக் கேள்விக்கும் விடையில்லை?

 

 ""மாதவிடாய்க்கால ரத்தப்போக்கு காரணமாக ஒரு சிறுமி இறந்துவிட்டதாகக் கூறுவது மருத்துவரீதியில் சாத்தியமே இல்லாதது'' என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள். ஆனால் சுபஸ்ரீயின் ஏழைப் பெற்றோரை அழைத்து வந்து ""எங்கள் மகளின் மரணத்தில் எங்களுக்குச் சந்தேகமில்லை'' என்று போலீசில் சொல்ல வைத்து விட்டார்கள் சங்கரமடத்துக் கிரிமினல்கள்.

 

 யாரைச் சந்தேகிப்பது? குற்றவாளியை அடையாளம் காட்டும் வாக்குமூலத்தை அவுட்லுக் நிருபரிடம் வழங்கியிருக்கிறார் அந்த விடுதியின் காவலர். ""விஜயேந்திரரும் அவர் தம்பி ரகுவும் விடுதிப் பெண்களுக்குச் சுலோகம் சொல்லிக் கொடுக்க அன்றாடம் மாலை நேரத்தில் வருவார்கள். கடந்த 3 மாதமாகத்தான் வருவதில்லை.''

 

 அந்த விடுதி இன்னொரு தடயத்தையும் தன்னிடம் வைத்திருக்கிறது. அவை  இரண்டு ஏ.சி. அறைகள்! அந்த அநாதைச் சிறுமிகள் விடுதியில். இரவு நேரத்தை பெண்கள் விடுதியில்தான் கழிக்க வேண்டுமென்று சொல்கின்றனவா சந்நியாசிக்குரிய நியமங்கள்?

 

 இதற்கு மேல் என்ன சாட்சியம் வேண்டும் அந்த இரண்டு பன்றிகளையும் அடித்து இழுத்து வருவதற்கு? சந்தேகமில்லையென்று பெற்றோர் சொன்னால் வழக்கை முடித்துவிட முடியுமா? சுபஸ்ரீயின் பெற்றோர் ஒருவேளை விலை போயிருந்தால் அவர்கள் வெறுக்கத் தக்கவர்கள் காமகேடிகளின் பொய்யை நம்பி மோசம் போயிருந்தால் அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் போலீசிடம் எழுதிக் கொடுக்குமாறு அவர்கள் காமகேடிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால்? சுபஸ்ரீயின் பெற்றோரையும் உயிருடன் கொலை செய்தததற்காக விஜயேந்திரனும் ரகுவும் தூக்கிலிடப்பட வேண்டியவர்கள்.

 

 ஆனால் பார்ப்பன ஏடுகளோ, சுபஸ்ரீயின் பெற்றோரிடம் "எழுதி வாங்கிய' சாதனையைக் கொண்டாடுகின்றன. ""சுபஸ்ரீ வழக்கு பிசுபிசுத்துவிட்டது'' என்று கொண்டாடும் ஜூ.வி. முதலாளி பாலசுப்பிரமணியத்தின் பேத்தியையும், தினமலர் கிருஷ்ணமூர்த்தி அய்யரின் பேத்தியையும் நெருப்பு வைத்துக் கொளுத்திவிட்டு சாம்பலைக் கையில் கொடுத்தால் "ஹர ஹர சங்கர' என்று நெற்றியில் பூசிக் கொள்வார்களா? மனிதச் சங்கிலி நடத்தும் மைலாப்பூர் மாமிகள் தங்கள் பெண்களை காமதுர்க்கா விடுதியின் ஏ.சி. ரூமுக்கு "ஸ்லோகம் கற்றுக் கொள்ள' விஜயேந்திரனிடம் அனுப்புவார்களா?

 

 இது சங்கரராமன் கொலையைக் காட்டிலும் கொடிய கொலை. தனக்கு நேரவிருக்கும் அபாயத்தையும், தான் மோதிக் கொண்டிருக்கும் எதிரிகளின் இரக்கமின்மையையும் சங்கரராமன் அறிந்திருந்தார். ஆனால் சுபஸ்ரீ? பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட அந்தக் கொடிய தருணத்திலும் கூட தனக்கு என்ன நேர்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவியலாத ஒரு சிறுமி. இந்தக் கிரிமினல்களைத் தெய்வமாகக் கருதி வழிபட்டிருக்கக் கூடிய பேதை! வயிற்றுப்பசிக்குச் சோறு தேடி வந்து, இந்த மிருகங்களின் காமப்பசிக்கு இரையான ஏழை!

 

 மேற்கு வங்கத்தில் ஒரு வசதிபடைத்த குடும்பத்தைச் சேர்ந்த பள்ளிப் பெண்ணை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிக் கொன்ற மிருத்யுஞ்சய் சாட்டர்ஜி தூக்கிலிடப்பட்டான். விஜயேந்திரன், ரகு மற்றும் காமகேடி மடத்தின் கிரிமினல்கள் மீது இன்னும் வழக்கே பதிவு செய்யப்படவில்லை.

 

 விடக் கூடாது. காமதுர்கா விடுதியின் ஊமையாக்கப்பட்ட பெண்கள் பேசவேண்டும். சுபஸ்ரீயின் உயிர் துடித்து அடங்கிய ஒவ்வொரு கணமும் பேசவேண்டும். காமகேடிகளை அவர்களுடைய மடத்திலேயே ஜீவசமாதி வைக்க வேண்டும்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது