Language Selection

புதிய கலாச்சாரம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

 அப்புக்களும் ரகசிய செல்பேசிகளும் தேவைப்படாத அமைப்பாக இயங்குவதற்கான சாத்தியங்களைப் பற்றி அவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இதற்கு, ஜெயேந்திரரையும் அவரது அரசியல் நடவடிக்கைகளையும் தாண்டிச் செல்லும் மனவலிமையை மடமும் அதன் பக்தர்களும் பெறவேண்டும். மடத்தின் நடவடிக்கைகளை வெளிப்படையானதாக ஆக்குவதன் மூலம் பொதுமக்களின் கண்காணிப்பு என்ற பாதுகாப்புக் கவசத்தைப் பெற முடியும்.


 எல்லாவற்றுக்கும் மேலாக, சாதி அமைப்பு மற்றும் பெண்கள் குறித்த பார்வை ஆகியவற்றை மறுபரீசிலனை செய்து காலத்திற்கேற்ப தன்னைப் புதுப்பித்துக் கொள்ளவும் தயாராக வேண்டும். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சாதி சம்பிரதாய வட்டத்தைத் தாண்டிப் பரவலான அளவில் சமூகத்தின் நன்மதிப்பையும் ஆதரவையும் பெற முடியும். இவற்றையெல்லாம் செய்யத் தவறினால் இது போன்ற மடங்கள் விரைவில் அருங்காட்சியகத்தின் ஓர் அங்கமாக மாறுவதைத் தவிர்க்க இயலாது''


 — என்று "பொறுப்புணர்வுடன்' எழுதியிருந்தது.


 காலச்சுவடை பார்ப்பனியத்தின் இலக்கியப் பத்திரிக்கை என்று நாங்கள் அழைப்பதை குறுகிய  தட்டையான  விசமத்தனமான  அவதூறான பார்வை என்று காலச்சுவடு உண்மையாகவே கருதக்கூடும். அது உண்மையானால், உண்மைகள், பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று மழுப்பாமல், பசப்பாமல், நழுவாமல் கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.


 1. மடம் சந்தி சிரிப்பதைக் கண்டு பலரும் மகிழும்போது, காலச்சுவடு மடத்துப் பக்தர்களின் துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டு ஆறுதலும், ஆலோசனையும் சொல்வது ஏன்?


 2. உழைக்கும் மக்களுக்கெதிரான சங்கர மடத்தை இழுத்து மூட வேண்டுமென ஒரு சாரார் பெரும்பான்மை மக்களிடத்தில் பிரச்சாரம் செய்யும்போது, சங்கரமடத்தைப் புனரமைக்குமாறு பார்ப்பனர்களிடம் காலச்சுவடு கோரிக்கை வைப்பது ஏன்?


 3. மடத்தை உண்மையான சமய  ஆன்மீக அமைப்பாக மாற்ற வேண்டும் என்பதன் விளக்கம், இலக்கணம், வழிமுறை, திட்டம் என்ன? இன்று அத்தகைய உண்மை ஆன்மீகம் ஏதேனும் ஒன்று எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது என்று எடுத்துக் காட்ட முடியுமா? "2500 ஆண்டு வரலாறு' கொண்ட சங்கர மடம் எப்போது முதல் பொய்மையான ஆன்மீக அமைப்பாக மாறியது என்பதை விளக்க முடியுமா?


 4. பார்ப்பன இந்து மதம்  மடங்களின் உண்மையே அவற்றின் மக்கள் விரோதமும், பொய்மையும்தான் என அம்பேத்கர், பெரியார் முதல் பொதுவுடைமையர் வரை பிரச்சாரம் செய்தனர்; செய்கின்றனர். இது குறித்து காலச்சுவடின் கருத்தென்ன?


 5. அப்பு, ரகசிய செல்பேசி கிடக்கட்டும். அம்பானி, பிர்லா, அப்துல்கலாம், சேஷன் போன்றோர் வருவதும், கோடிகோடியாய் நன்கொடை கொடுப்பதும் பற்றி உங்கள் கருத்தென்ன? நன்கொடை, அரசியல்  தொழில் தரகு பேரங்களின்றி சங்கரமடம் எப்படி இயங்க முடியும்?


 6. அப்புவின் அதே தொழில் நேர்த்தி விரிந்தும், பரந்தும், தேசிய அளவிலும், மனவெளி அளவிலும், ஆரவாரமாகவும், அமைதியாகவும், தட்டையாகவும், நுட்பமாகவும் முதலாளிகள், அதிகாரிகள், ஆளும் வர்க்க அரசியல்வாதிகள்... ஏன் சிறு பத்திரிக்கைச் செயல்பாடுகளிலும் கூட இல்லை என்று சொல்ல முடியுமா?


 7. அப்பு என்ற "லோ கிளாஸ் தாதா' சங்கராச்சாரியின் பக்தராக விரும்பும் உரிமையை மறுப்பதும், கேவலப்படுத்துவதும் உங்கள் கண்ணோட்டத்தின்படி பாசிசமில்லையா?


 8. 120 டிரஸ்டுகள், நாடு முழுவதும் கிளை மடங்கள், பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள், பலகோடி மதிப்புள்ள ரியல் எஸ்டேட் நிலங்கள், நட்சத்திர மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மொத்தத்தில் 6000 கோடி முதலாளியான காஞ்சி மடம் வெளிப்படையாக இயங்குவதும், பொதுமக்களின் கண்காணிப்புக்கு உட்படுவதும் எப்படி என்ற அந்தச் சாணக்கிய தந்திரத்தை விளக்க முடியுமா?


 9. ஜெயேந்திரரின் கைதை எதிர்த்து வெறிகொண்டு எழுதும் தினமலருக்கும், காஞ்சி மட நடவடிக்கைகளுக்கு பல்வேறு விதங்களில் ஸ்பான்சர் செய்யும் ஸ்ரீராம் சிட் பண்ட் நிறுவனத்திற்கும் காலச்சுவடுடன் உள்ள விளம்பரம் அல்லது புரவலர் தொடர்பை வெளிப்டுத்த முடியுமா? குறைந்த பட்சம் காலச்சுவடின் வாசகர் கண்காணிப்புக்கு உட்படுத்த முடியுமா?


 10. ""சாதி அமைப்பு, பெண்கள் குறித்து மறுபரிசீலனை செய்து காலத்திற்கேற்றவாறு காஞ்சி மடம் புதுப்பித்துக் கொள்வது'' என்பதை ஒரு தலித் சங்கராச்சாரியாக்கப்பட வேண்டும், ஒரு பெண் ஸ்ரீ காரியத்திற்கும், ஒரு சூத்திரர் மடமேலாளர் பதவிக்கும் நியமிக்கப்பட வேண்டும் என்பதாக நாங்கள் அர்த்தப்படுத்தலாமா?


 11. இவை நடைமுறை சாத்தியமற்ற மிகக் கடுமையான கோரிக்கைகள், ஏதோ கொஞ்சம் தலித்துக்கள், விளிம்பு நிலை மக்கள் பெண்களோடு மடம் நெருக்கமாக்கிக் கொள்ள வேண்டுமெனில், ஜெயேந்திரர் இப்போதே அதைச் செய்யவில்லையா? என்ன, தற்போது பெண்கள் தொடர்பில் பார்ப்பனப் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள், இதில் ஏனைய சாதிப் பெண்களையும் சேர்க்கச் சொல்லி கேட்க வேண்டுமா?


 12. வேத காலந்தொட்டு இன்றைய சங்க  பரிவார காலம் வரை பார்ப்பனியம் தனது அடிப்படைக் கொள்கைகளைக் கைவிடாமலே பார்ப்பன எதிர் மரபுகளை உள்வாங்கியும், அழித்தும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டுதானே வருகிறது? சங்கரமடத்தின் பன்முக நடவடிக்கைகளும் இந்தப் பரிணாமத்தில் வளர்ந்தவைதானே?


 13. பார்ப்பனியத்தின் வருண  சாதி எனும் மக்கள் விரோத தர்மத்தைக் கைவிடாமலேயே, சங்கர மடம் தனது நிழல்உலக, அரசியல் தொடர்புகளைக் கைவிட்டு எளிய உண்மையான சமய அமைப்பாக மாறவேண்டும் என்று கூறும் கல்கி  குருமூர்த்தி  காலச்சுவடு ஆகிய மூவருக்கும் உள்ள தொப்புள் கொடி உறவென்ன?


 14. ஜெயேந்திரர் கைது மூலம் பிராமண  பிராமணரல்லாத இந்துக்களைப் பிளவுபடுத்த சதி நடக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ். கூறுவதற்கும், சங்கர மடம் குறிப்பிட்ட சாதி சம்பிரதாய வட்டத்தைத் தாண்டி பரவலான அளவில் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற முடியும் என்று காலச்சுவடு கூறுவதற்கும், ஆறு வேண்டாம், ஒரே ஒரு வித்தியாசத்தையாவது காட்ட முடியுமா?


 15. வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் தற்போது ஓரளவும் எதிர்காலத்தில் முழுவதுமாகவும் வீசப்பட இருக்கின்ற சங்கரமடத்தை அருங்காட்சியகத்தில் வைத்து (அதுவும் தொன்மையற்ற 160 ஆண்டு புரோக்கர் தொழில் செய்து வந்த மடம்) அழகு பார்க்க நினைப்பதை காலச்சுவடின் அழகியல் கோட்பாடு என்று கொள்ளலாமா?


பின்குறிப்பு:


 இவ்விடத்து நோட்டீஸ் கண்ட 60 தினங்களுக்குள் கலையுலக பிரம்ம ஸ்ரீ காலச்சுவடு கம்பெனியார் உரிய ஆன்சரை அனுப்பாத பக்ஷத்தில் ""பிராமணியத்தின் லேட்டஸ்ட் சாஹித்ய பத்ரிகா'' என்ற எமது விருதினை எவ்வித ஆ÷க்ஷபணையோ எதிர்வாதமோ இன்றி அவாளே ஸ்வீகரித்துக் கொண்டதாக ப்ரகடனம் செய்யப்படுகிறது.


ஆ இளநம்பி

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது