Language Selection

புதிய கலாச்சாரம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 ஏற்கெனவே வாயைத் திறந்ததற்கே வாய்தா மேல் வாய்தா என்பதால் "பெரிசு' மவுன விரதம் சாதிக்கிறது. "அட்சர சுத்தமாய்' புளூ ஃபிலிமை பூக்கூடைக்குள் போட்டு வாங்கத் தெரிந்த "சிறுசோ' ஆயிரம் விளக்கு போலீசு நிலையத்தில் இடது கைப் பெருவிரலைக் கை நாட்டி வாரா வாரம் சட்டத்தின் முகத்தில் பீச்சாங்கையை வைத்து நக்கலாகச் சிரிக்கிறது. விளக்குக் கம்பத்தில் கட்டித் தோலை உரிக்க வேண்டிய இந்த இரண்டு சமூக விரோதிகளுக்காகவும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பார்ப்பன ரவுடிகள் முதலாக, ஆர்.வி., சேஷன், சோ, தினமலர் கிருஷ்ணமூர்த்தி போன்ற கேடிகள் வரை ""எப்படி எங்களவா மேல வழக்கை வைக்கலாம்?'' என்று வரிந்து கட்டிக் கொண்டு வந்து விட்டனர். பின்னே, கதாநாயகர்களைக் கைது செய்தால் பாங்கர்களுக்குப் பதறாதா?

 

 குறுந்தொகைப் பாடல் கூறுவதைப் போல 

""பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின் சொல்லுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ! மயிலோ இதுவே!''

 

 பிரிந்தோர் கூடுவதற்கான வேலைகளைச் செய்ய, ஊருக்குத் தெரியாமல் கூட்டிக் கொடுக்க பார்ப்பன மகனாம் பாங்கனை அழைப்பதே பழைய மரபு. இப்போது, ""ஆமாம், நான்தான் சங்கர்ராமனைப் போட்டேன்! அனுராதா ரமணனை லுக்கு விட்டேன்! சொர்ணமால்யாவுக்குச் சொடக்குப் போட்டேன்! இப்ப என்னாங்குறே? ஆதாரம் இருக்கா?'' என்று வக்கீலை வைத்து விவாதிப்பதோடு, துக்ளக், தினமலரை வைத்து ""போலீசை நம்பமுடியாது'' என்று புராணமும் பாட ஆரம்பித்து விட்டது பார்ப்பனக் கும்பல்.

 

 தமிழகத்தில் பிற உழைக்கும் மக்களும், அரசு ஊழியர்களும், அரசியல் கட்சிகளும், புரட்சிகர இயக்கங்களும் போலீசு அராஜகத்தை எதிர்த்துப் போராடும் போதெல்லாம் போராடுபவர்களை நக்கலடித்தும், உள்நோக்கம் கற்பித்தும், "அக்கார்டிங் டு லா (சட்டப்படி)' என்று வக்கணை பேசிய பார்ப்பனக் கும்பல், கேவலம் பொம்பளைப் பொறுக்கி காஞ்சி மடாதிபதிகளுக்காகக் கச்சம் கட்டிக் கொண்டு போலீசை எதிர்த்து கார்ட்டூன் போடுவதென்ன?

 

 ""பேச நா இரண்டு உடையாய் போற்றி!'' என ஆரியமாயையில் அண்ணாதுரை சொன்னதுபோல, அவாளின் சாதிவெறி நாக்கை இழுத்து வைத்து அறுக்க வேண்டாமா?
ஆழ்வார்ப்பேட்டை ஆளுடா!


அண்ணா சாலை நூலுடா!

 

 இன்று சங்கராச்சாரியை, பெரிசையும் சின்னதையும் போலீசு காவலில் நடத்திய விதம் "டூ மச்!' என்றும், மேலிடத்து உத்திரவு என்றும் புலம்பும் சோ பார்ப்பனக் கும்பல், சாதாரண மக்கள் போலீசாரால் சித்திரவதைக்குள்ளாகும்போதும், ஒரு குடம் தண்ணீருக்காகத் தடியடி நடத்தும் போதும் நியாய அநியாயங்களைப் பேசாமல், ""எது தர்மம்'' (துக்ளக், 16.1.2002) என்று ""நதர்மா அதர்மௌ சரதி ஆவம் ஸ்வ இதி'' என்று லத்திக்கம்பால் வேத வியாக்கியானம் காட்டியதோடு, ""போலீசுக்காரர் என்ன ஸ்கவுட்டா? கூட்டத்தினரைப் பார்த்து, எல்லோரும் தயவு செய்து விலகிவிடுங்கள்; மகாத்மா காந்தி அமைதியாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்; ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி சொல்லியிருக்கிறார், எல்லோரும் அமைதியாக விலகவேண்டும் என்று கூறிவிட்டு மூலையில் போய் உட்கார்ந்து கொள்ள முடியுமா? அதுதான் போலீசாரின் கடமையா? நாலு பேரையாவது பிடித்து அடி அடி என்று அடித்தால்தான் கூட்டமே சிதறி ஓடும். அது அவர்களுடைய தர்மம். போலீசு ஸ்டேஷனில் ஒருவனை சித்திரவதை செய்தார்கள் என்று செய்திவரும், உடனே எல்லோரும் பெரிய அட்டூழியம், போலீசு அராஜகம் என்று சொல்வோம். பிடித்தவனை நாலு அடி கொடுக்கட்டும், அப்படியாவது திருட்டுப் போன சாமான் கிடைக்கட்டும் என்பதுதானே நமது எண்ணமாக இருக்கும்?'' என்று போலீசுக்கு வக்காலத்து வாங்கிய சோ இப்போது உள்ளே இருப்பது மகா அயோக்கியனாக இருந்தாலும் அவாளாக இருப்பதால் ""அவருடைய பெயரைக் கெடுக்கக் கூடிய வதந்திகளைச் சேகரிப்பதுதான் போலீசின் வேலையாகி வருகிறது... அதுமட்டுமல்ல போலீசுத் துறையின் ஒலிபெருக்கியாகி போலீசுதரப்புப் பிரச்சாரம், புலனாய்வு என்ற அந்தஸ்தைப் பெற்று பத்திரிக்கைகளை பிட் நோட்டீஸ் பிரசுரங்களாக மாற்றிவிட்டது'' (22.12.2004, துக்ளக்) என்று போலீசு சொல்வதை அப்படியே ஏற்க முடியாது என்று தனக்கொரு நியாயம் பேசுகிறது ஆரியக் கைத்தடி.

 

 போலீசு அத்துமீறலை உழைக்கும் மக்கள் கேள்வியின்றி ஏற்க வேண்டும் என்பதற்குப் புராணத்தையும், வேதத்தையும் பிட்நோட்டீசாக்கி நம்மிடம் விநியோகிக்கும் இந்த "நடுநிலைவாதி'க்கு, கொலைகாரப் பாவிக்கு லாடம் கட்டாமல், குற்றச் செயல்களை வெளியிடுவதே அத்துமீறலாகப் படவேண்டிய அவசியமென்ன? திருமூலரைப் போல, இந்த சாலத்தனத்தைப் பார்த்து ""நாதம் ஏது? வேதம் ஏது? நற்குலங்கள் ஏதடா; வேதம் ஓதும் வேதியா விளைந்தவாறு பேசடா!'' என்று நாம் தான் ஏடு கிளப்பியாக வேண்டும்.

 

 கருணாநிதி, புராணங்களை எடுத்துப் பேசினாலே, "இந்துக்களை இழிவுபடுத்துகிறார்' என்று நூல்விடும் தினமலரோ, தான் ஏற்றிப் போற்றும் விண்ணகக் கடவுளே பூமிக்கு வந்தாலும் ஜெயலலிதா போலீசு பொய்வழக்கு போட்டுவிடும் என்று பயந்து ஒளிவதாகக் கேலிச் சித்திரம் வரைகிறது. (பார்க்க: தினமலர் கேலிச் சித்திரம்) ஏழு லோகத்தையும் ஆட்டிப் படைப்பதால் ஏற்றி விடும் கடவுளை கேவலம் போலீசின் லத்திக் கம்புக்குப் பயந்தவனாய்க் காட்டுவது மட்டும் இந்துக்களுக்கு இழிவில்லையா? ஏற்கெனவே, பிட்டுக்குப் பிரம்படி வாங்கிய பெருமான் உங்கள் சங்கரமட "பிட்டுக்கு' மட்டும் முதுகைக் காட்டமாட்டானா என்ன? ""தனக்கு ஆதாயம் இல்லை என்றால் பார்ப்பான் கடவுளைத் தூக்கிப் போட்டு விடுவான்'' என்று பெரியார் சொன்னது "பெரியவா' விசயத்தில் விளங்குகிறது.

 

 கடவுளைக் கடாசுவது கூட ஒரு பக்கம் இருக்கட்டும். தெருவில் அல்லல்பட்டுக் காய் விற்கும் ஒரு கூடைக் காரியிடம் கூட எதற்கெடுத்தாலும் சட்டவாதம் பேசும் பார்ப்பனக் கும்பல் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்த போது இரட்டை நாக்குப் பேர்வழி சோ, ""சட்டத்தில் அவ்வாறு இடமுண்டு'' என்று பேசியதோடு, ""மத்திய அமைச்சர் மாறனும், டி.ஆர். பாலுவும் கடமையைச் செய்த போலீசாரைத் தடுக்க முனைந்தனர்... இதையெல்லாம் சாதாரணக் குடிமகன் செய்தால் சட்டப்படி குற்றம்? ஆனால் மத்திய அமைச்சர்கள் செய்தால்? அப்படி ஓர் உரிமை அவர்களுக்கு எந்தச் சட்டத்தில் தரப்பட்டிருக்கிறது?'' (11.7.2001, துக்ளக்) என்று சட்டவாதம் பேசும் சட்டாம் பிள்ளைகள், காமக் கொடூரன் ஜெயேந்திரனை ஜாமத்தில் பிடித்த போது டி.வி.யில் குமுறும் அம்பிகள் வரை, ""இட் இஸ் ஹியூமன் ரைட்ஸ் வயலேஷன்... தாட்... பூட்..'' என்று தாண்டிக் குதிப்பது ஏன்? சட்டப்படி சங்கராச்சாரி முன்வராமல், ஆறுமணி நேரம் அண்டர்கிரவுண்ட் வேலை பார்த்தது ஏன்? சோவின் முட்டைக் கண்ணுக்கு இந்த முறைகேடு தெரியாத மர்மம் என்ன?

 20.3.2002, துக்ளக், அட்டைப்படத்திலேயே (பார்க்க: படம்)  ""என்ன இது? பந்தோபஸ்து அமர்க்களப்படுதே! ஜனாதிபதி, கவர்னர், பிரதமர் யாராவது வராங்களா?'' ""அதெல்லாம் ஒண்ணுமில்லே! ஒரு தீவிரவாதியை கோர்ட்டுக்கு அழைச்சிகிட்டுப் போறாங்க'' என்று அரசியல்வாதிகளை "சட்டப்படி' நடத்துவதையே நக்கலடிக்கும் சோ அம்பிக்கு ஒவ்வொரு வாய்தாவுக்கும் கோர்ட் வளாகத்தில் பார்ப்பனத் தடியர்களும், பாரதிய ஜனதாக் கொடியர்களும் ஜெயேந்திரனுக்குப் புடைசூழ வருவதும், டி.எஸ்.பி. போலீஸ் படை என்று வாகனங்கள் புடைசூழ வருவதும், காஞ்சிபுரத்து வழக்கறிஞர்களே ""இது என்ன கோர்ட்டா? மடமா?'' என்று விரட்டுமளவுக்கு இந்தக் காவி உடைப் பாவிகளுக்குக் களேபர பந்தோபஸ்து நடப்பது மட்டும் கேவலமாகப் படவில்லையே, ஏன்?

 

 ""கோவைச் சிறையில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு செல்போன்?'' என கட்டம் கட்டி எழுதியது தினமலர்; வேலூர் ஜெயிலில் ஜெயேந்திரன் விளக்கு, பூ, பழம், பூசை வரை போட்டதையும், "சின்னவன்' சென்னைச் சிறைக்கு நெய்யில் வறுத்த பாதாம்பருப்பு வாளியை நகர்த்திக் கொண்டு போனதையும் எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? ஏன் அண்ணாசாலைப் பூணூலுக்கு இந்தச் செய்தி அகப்படவில்லை? இதுமட்டுமல்ல, ஈழ அகதிகளுக்கும் சிறையிலிருக்கும் போராளிகளுக்கும் ஒரு பால் டின் தந்தால் கூட "போலீசில் சில "மால்' ஆட்கள்! அபாயம்!' என்று அலறும் தினமலருக்கு, ஜெயேந்திரனுக்கு போலீசு காவலில் தொடங்கி வேலூர் சிறை வரைக்கும் செய்து கொடுக்கப்பட்ட சிறை வசதிகள் பற்றி கட்டம் கட்ட ஏன் கை வரவில்லை?

 

 சிறையில் அடைக்கப்பட்ட புலிகளை மொட்டைத் தலை முருகன் என்றெல்லாம் கேவலப்படுத்திய அவாள், "மொட்டைத் தலை' விஜயேந்திரனையும், "ஊத்தைவாய்' ஜெயேந்திரனையும் பற்றி மற்ற பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுவதைப் பற்றி மட்டும், ""சங்கராச்சாரியாரின் பெயரையும், மடத்தின் மதிப்பையும் நாசம் செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில்  தங்கள் செயல்பாடுகள் பெண்கள் பலரை அவமானப்படுத்துவதில் முடிகிறது என்பதைப் பற்றிக் கூட போலீசாரும், பத்திரிக்கை உலகமும் கவலைப்படவில்லை'' (22.12.2004, துக்ளக்) என்று அங்கலாய்க்கிறார்கள். ""வேலைக்குப் போகும் பெண்களிடம் "சுத்தம்' கியைடாது'' என்று ஜெயேந்திரன் உழைக்கும் பெண்களை இழிவுபடுத்தியபோது நியாயம் பேசாத சோவும், தினமலரும் அனாதைப் பார்ப்பனச் சிறுமிகளையும் விட்டு வைக்காத அயோக்கிய மடாதிபதிகளுக்கு ஆஜராவது ஏன்?

 

சூத்திரர் என்றால் தோலை உரி
பார்ப்பான் கொன்றால் மனித உரிமை!

 

 ""நள்ளிரவில் சென்று கைது செய்திருக்கக் கூடாது என்ற அபிப்ராயமும் பேசப்படுகிறது'' (24.11.2004, துக்ளக்) என்று பேசும் சோ, சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் போலீசு தடியடி நடத்தியதைப் பற்றிய கேள்விக்கு  ""அந்தச் சூழ்நிலையில் அது தேவைப்படவில்லை என்று எப்படி நிச்சயமாக கூறுவது? அந்தத் தடியடி நடக்கவில்லை என்றால் பெரும் கலவரமே கூட வெடித்திருக்கலாம்..'' என்று மாணவர்கள் மீது தடியடி நடத்தியதைச் சரி என்கிறார். அப்படியென்றால் சம்மனை வைத்துக் கொண்டு அரெஸ்ட் செய்யப் போன போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சங்கராச்சாரியையும், சுற்றியுள்ள பார்ப்பனத் தடியர்களையும் சட்டப்படியே வெளுத்திருக்க வேண்டாமா? சோவின் "எச்சரிக்கை' மூளை இந்த விசயத்தில் இயங்காதது ஏனோ?

 

 இது மட்டுமல்ல. வீரப்பனுக்கு உதவியதாக சந்தேகத்துக்கு உள்ளான மலைவாழ் மக்களை சிறை, சித்திரவதை, பாலியல் கொடுமைகளை இழைத்து மைசூர் சிறையில் வாட்டியபோதும், குறிப்பாக, பல மலைவாழ் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் தேவாரத்தைப் பாராட்டி, ""வீரப்பனைப் பிடிப்பதிலும் ஒரு புதிய தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. தேவாரத்தின் நியமனம் முன்பு பணியாற்றிய விஜயகுமார் என்ற போலீசு அதிகாரிகளின் நியமனம் ஆகியவை முனைப்புக்கு அத்தாட்சிகளாகத் தெரிகின்றன.'' (20.6.2001, துக்ளக்), என்று போலீசு நடவடிக்கைக்குத் தோரணம் கட்டிய பார்ப்பன சோவும், பிஜேபி கும்பலும், காஞ்சி மாவட்ட எஸ்.பி.யாக பிரேம்குமார் நியமிக்கப்பட்டவுடன் சங்கராச்சாரியை அவர் விசாரித்ததால், அவர் ஏற்öகனவே மனித உரிமை மீறியவர் என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறது.

 

 போலீசுக்கும் மனித உரிமைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது ஏழை மக்களுக்குத் தெரியும். ஆனால் மனித உரிமை பற்றி வாய்கிழியும் வக்கிரக் கண்ணன் சோவோ, வீரப்பன் வேட்டையில் நடந்த அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்களுக்காக என்ன சொல்கிறார்?: ""அநியாயம் நடந்துவிட்டது என்று குற்றம் சாட்டுகிற மனித உரிமைக்காரர்களிலிருந்து பலரும்.... மற்றபடி இதற்கு எந்தவிதமான அங்கீகாரமும் கிøடயாது. சுயவிளம்பர விசாரணைக் குழுக்கள் அளிக்கும் முடிவுகள் யாரையும் கட்டுப்படுத்தவும் செய்யாது. பத்திரிக்கைகள் அளிக்கிற முக்கியத்துவம், ஒரு பிரச்சார உத்தியை, நியாயத் தீர்ப்பாக மாற்றி விடாது'' என்ன ஒரு வக்கிரம்? நடந்தவைகளைப் பற்றிச் சொல்வது உத்தியாம், பிரச்சாரமாம்!

 

 ""தர்மபுரியில் நக்சலைட் சிவா சுட்டுக் கொல்லப்பட்டதில் மனித உரிமை மீறல் உள்ளது என்று மனித உரிமை அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளது பற்றி?'' என்ற கேள்விக்கு (18.12.2002, துக்ளக்) ""தீவிரவாதிகளையும், குற்றவாளிகளையும், சமூக விரோதிகளையும் மட்டுமே மனித உரிமைக்காரர்கள் மனிதர்களாகக் கருதுகிறார்கள். அவர்களால் பாதிக்கப்படுகிற அப்பாவிகளை மனிதர்களாகக் கருதுவதே இல்லை. அதனால்தான் இந்த மாதிரி வக்கிரமான புகார்கள் வருகின்றன'' — இது சோவின் பதில்.

 

 சுட்டுக் கொல்லப்பட்டதற்கு விளக்கம் இல்லை. பொத்தாம் பொதுவாக இறந்தவர் மேலேயே தீர்ப்பை வக்கிரமாக எழுதும் இந்த "அப்பாவி'தான் சுந்தரேச அய்யர், ரகு அய்யர் மீதெல்லாம் குண்டர் சட்டத்தில் வழக்கு போட்டது சரியா என ஆராய்ச்சி செய்கிறது.

 

மேலும், ""சங்கராச்சாரியார் வாக்குமூலத்தை போலீசு காவலில் பதிவு செய்தபோது அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி வீடியோவில் பதிவு செய்ய போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றார்களா? போலீசு தன்னிச்சையாக வீடியோ எடுக்கும்போது அதை அவர்கள் சௌகரியத்திற்கு ஏற்ப எதுவும் செய்யலாம்.'' (15.12.2004, துக்ளக்) என்று துருவி ஆராய்கிறது.

 

 இப்படி, அவாளுக்கென்றால் சட்டத்தையும், போலீசையும் நம்ப முடியாது; சாதாரண ஆளாய் இருந்தால் தகவல் தர மறுத்தாலே நீயும் ஒரு தீவிரவாதி என்று முத்திரை குத்தும் பொடா என்ற சட்டத்திற்கும், போலீசுக்கும் இதே சோ காவடி தூக்குகிறார்: ""தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், பொதுவாக என்ன நடக்கிறது? கைது நடக்கிறபோது ஓரிரு விதிமுறைகள் மீறப்பட்டன என்பதைக் காட்டி கைதே சட்டவிரோதமானது என்று வாதிடப்படும்... பயங்கரவாத தடுப்புச் சட்டமே கூடாது என்றால் நாட்டில் எந்த விதிமுறையும் இருக்க முடியாது.'' (7.11.2001, துக்ளக்). இப்படி எவனாயிருந்தாலும் தகவல் தராவிட்டால் தப்புதான் என்று தாவிக் குதிக்கும்

 

பார்ப்பனக் கும்பல் சுதேசி ஜாக்ரண் மஞ்ச் குருமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டவுடனே "ஏன் அடிக்கடி போலீசு விசாரணை?' என்று ஒரு சின்ன விசாரணைக்கே அண்ட சராசரத்திலும் அண்டர் கிரவுண்ட் வேலை ஆரம்பித்துவிட்டது. குஜராத் பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஜஹீரா ஷேக் பின்வாங்கியதை வைத்துக் கொண்டு ""யார் சொல்வது உண்மை? ஜஹீரா ஷேக் மீண்டும் தனது சாட்சியத்தை மாற்றமாட்டார் என்பது என்ன நிச்சயம்? ....ஒருவேளை பொய் சொல்கிற உரிமையும் மனித உரிமைகளில் ஒன்றோ, என்னவோ!....'' (17.11.2004, துக்ளக்) என்று வக்கணை பேசுகிறது. ஆனால் ""கதிரவனும், சின்னாவும் மீண்டும் பல்டியடிக்க மாட்டார்களென்பது என்ன நிச்சயம்?'' என்று துக்ளக் எழுதுமா?

 

 தெருவில் ஒரு கிரிக்கெட் பந்து தொலைந்தாலே ""கூப்பிடுறா போலீசை'' என்பதுதான் பார்ப்பனர்களின் பொதுப்புத்தி. இன்று நேற்றல்ல, வரலாறு நெடுக. அரசனின் காவல் படையை வைத்துக் கொண்டே பிற சாதி மக்களை, குறிப்பாக, உழைக்கும் மக்களை ஒடுக்கிய கும்பல் பார்ப்பனக் கும்பல். தனது அதிகாரம் செல்லாதபோது புஷ்யமித்திரனைப் போல தானே "பிரம்ம சத்திரியனாகி' போர்த் தொழில் புரிந்ததும், பிற மக்களிடமிருந்த வளங்களைப் பிடுங்கித் தின்றதுமே வரலாறு.

 

 கபிஸ்தலம் அருகே உத்தமதானபுரம் என்ற ஊருக்கு சரபோஜி வம்ச மன்னர் வந்தபோது வெற்றிலை பாக்கு போட்டானாம். ஏகாதசியில் தாம்பூலம் போட்டது மன்னனுக்கு நல்லதல்ல என்றும், இதற்குக் கழுவாயாக, ""அங்கே ஓர் அக்கிரகாரத்தை அமைத்து 48 வீடுகளைக் கட்டி, இரண்டு வீடுகளுக்கு ஒரு கிணறு வைத்து, 48 பிராமணர்களை வருவித்து ஒவ்வொருவருக்கும் 12 "மா' நன்செய்யும், புன்செய்யும் தானம் தந்தால் பாபம் நீங்கும்'' என பார்ப்பனக் கும்பல் கதை கட்ட, படைகொண்ட மன்னன் நடுநடுங்கி அவ்வண்ணமே இந்த ""பிராம்மண உத்தமர்களுக்கு''த் தானம் செய்ததால் உத்தமதானபுரம் என்ற ஊரையே கொள்ளை அடித்தது பழைய வரலாறு.

 

 பாவத்தின் கழுவாயாக இப்போது இந்த அம்மா தரப்போவது எத்தனை "மா' நிலமோ? திரும்பத் திரும்ப, மற்றவர்கள் வெற்றிலை போட்டாலும், வெறும் வாயை அசைத்தாலும் கூட பாவம்! தானமாகவும், தாக்குதலாகவும் பிறரைக் கழுவிலேற்றியும், தனக்கென்றால் கழுவாய் தேடியும் ஆதாயம் தேடுவதும் அடுத்தவனை ஒடுக்குவதும் பார்ப்பன வரலாறு.

 

 பஸ் ஊழியர் போராட்டத்தின்போது கூட, சோ, ""போனஸ் பிரச்சினைக்காக முழு அடைப்பு தேவையா?'' என்ற கேள்விக்கு, ""இந்த ஸ்டிரைக்கிற்குத் தேவை  முழு அடைப்பு அல்ல  முழு உடைப்பு'' (5.12.2001, துக்ளக்) என்று போலீசு தாக்குதலை ஏவிவிட்டும், இன்னொரு சந்தர்ப்பத்தில், ""அரசுப் பணியில் கண்மூடித்தனமாகப் பலர் சேர்க்கப்படுவது என்று பல வருடங்களாக நடந்து வருகிறது. இந்த நிலையைச் சீர்செய்ய நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்கதே'' (19.12.2001, துக்ளக்) என்று அரசுப் பணி ஆட்குறைப்புக்கு அரசு நடவடிக்கையை வரவேற்றும் வால் பிடிக்கிறார்.

 

 தவிர, அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் குற்றவாளிகளாக அரசுத் தரப்பு வக்கீல் பேசியபோது, ஆகா ஓகோ என்று ரசித்த சோவின் பார்ப்பனக் காதுகளுக்கு ஜெயேந்திரன் விசயத்தில் மட்டும் ""ஜெயேந்திரர் மிக மோசமான கிரிமினல்'' என்று அரசு வழக்கறிஞர் கூறிய உடனே நாராசமாய் இருக்கிறது. பிராசிக்யூசன் வக்கீல், குற்றம் சாட்டப்பட்டவரின் நடத்தை பற்றி இறங்கலாமா என்று கேட்டு, ""பப்ளிக் பிராசிக்யூட்டரின் கடமை  ஒரு விளக்கம் (15.12.2004, துக்ளக்)'' என்று கட்டுரையே வரைந்துவிட்டார்.

 

 இப்படி, பஸ் ஊழியர் தொடங்கி, சாலைப் பணியாளர், சத்துணவுப் பணியாளர், ரேசன் கடைப் போராட்டம் என்று பல பிரிவு மக்கள் போராடும் போதெல்லாம் ""போட்டு மிதி'' என அரசை ஏவிவிடுவதே இந்தப் பார்ப்பனக் கும்பலின் வாடிக்கை.

 

 வரலாறு நெடுக, மனித உரிமைக்கு முதல் எதிரி பார்ப்பனியமே:
  சுரங்கத்திற்குள் போன பழனி போகர் திரும்ப வரவேயில்லை;
  அறைக்குள் சென்ற வள்ளலார் "ஜோதி' மயமானார்;
  சிவனைப் பார்க்கப் போன நந்தனாரின் சவம் கூடத் திரும்பவில்லை;

 

 அனைவரையுமே ஆண்டவன் ஆட்கொண்டதாகப் பார்ப்பனர்கள் கூறுகிறார்கள். திரும்பத் திரும்ப நம்முன்னே நமக்கெதிராகப் பிரசன்னமாகிக்கொண்டிருக்கும் ஜெயேந்திரன் உள்ளிட்ட பார்ப்பனக் குற்றக் கும்பலை "ஆட்கொள்ளும்' திறமை அந்த ஆண்டவனுக்கு வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்; உழைக்கும் வர்க்கத்திற்குக் கட்டாயம் உண்டு.

 

· துரை. சண்முகம்

 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது