Language Selection

புதிய கலாச்சாரம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

 ""சும்மா எறங்கி முங்குங்க, மாடு மடியக் கூட தண்ணி உரசுல, நீங்க என்னடான்னா? படியில நின்னுக்கிட்டே முங்குறீங்க. நடு ஆத்துக்குப் போங்க, கொஞ்சம் தண்ணி தெளிவு காட்டும்''  உரிமையோடு கூறியவரிடம் ""மணலா இருக்குமா?'' என்று கேட்க, கடகடவெனச் சிரித்தார். ""நீங்க வேற, அஞ்சாறு வருசமா ஆத்துல தண்ணியே வரல, கொஞ்ச நஞ்சம் அடி மண்ணையும் ஆளுக்காளு கௌப்பிட்டான். ஒப்புக்குக் கல்யாணம் பண்ணிகிட்டு ஊருக்கு எளச்சவ கதயா மண்ணியாறு கெடந்து மளுமாறுது. எங்க பொண்டுக மண்ணியாத்துல மஞ்சக் குளிச்சு எவ்ளோ நாளாகுது தெரியுங்களா?''  பழுப்பு நிற வேட்டியில் பல வருசத்துக் கதையை முடிந்து வைத்திருந்தவர் போல உதறிக் காட்டினார்.

 

 எதிர்த்த கரையில் மரத்தடியில் வெள்ளை வெளேர் வேட்டியுடன் கூட்டமாக ஆட்களும், தடித்த பூணூலுடன் மூன்று பார்ப்பனர்களும் கூடிக் கிடந்தனர். நான் உற்று நோக்குவதைக் கவனித்தவர், ""தெவசம் கொடுக்குறாங்க தம்பி, கோபால் ராவுன்னு சுத்துப்பட்டு கோவிலு நிலமா கையில வச்சிருந்தான் மனுசன். தூத்துறப்ப காத்துல செதர்ற மணியக் கூட காலால தள்ளி மூட்டக் கட்டுவான். செத்தப்ப ஒரு புள்ள கூடப் பக்கத்துல இல்ல. எல்லாம் பட்டாளத்துல இருக்கானுவ. பெரியவன் வந்துருக்காம்போல'' என்றார். ""பெரியவனா, அவன் அப்பனுக்கு மேல, இந்த வாழச் சருவெல்லாம் புடிச்சிப் பீறாய்ஞ்சு எச்செலை மாறி அத மெட்ராசுக்குக் கடத்திக்கிட்டுப் போறான் பாரு, யாராவது ரெண்டு கேட்டா, இது மெட்ராசுல என்ன வெல தெரியுமாங்குறான்'' — இன்னொருத்தரும் சேர்ந்து கொண்டார்.

 

 எதிர்க்கரை மரத்தடியில் கூடியிருந்த கூட்டம் திடீரென ஆ,ஊ என கலைந்து ஓடினர். திவசம் கொடுக்க குந்தியிருந்தவனும், பார்ப்பனரும் ""அய்யோ... அய்யோ'' என ஒரே அலறலும் ஓட்டமும் பார்க்க கலவரமாய்த் தெரிந்தது, ""ஓடு, ஓடிடு ஏய் ஓடித்தொலடா!'' அலறியபடியே ஓடிய பார்ப்பனர் வேட்டியையும், அவிழ்த்து தலையில் போட்டுக் கொண்டு ஓடி ஆத்துக்குள் பொத், பொத்தென்று விழ, பார்க்கவே பதட்டமானது. எதிர்க்கரை மரத்துக் கிளிகளும் பீதி ஒலி எழுப்பிச் சிதற சூழ்நிலை மோசமாகத் தெரிந்தது. ஆத்துக்குள் விழுந்தவர்களோ வெட்டுப்பட்டது போல விழுந்து புரண்டனர்.

 

 குளித்துக் கொண்டிருந்த அனைவரும் பீதியாகி எதிர்க்கரைக்கு ஓடினோம். ""என்னாங்க? என்னாங்க?'' ரொம்பதூரம் தள்ளி நின்று ஒருத்தர் புலம்பிக் கொண்டிருந்தார்: ""நம்ம கோபால்ராவ் திவசம்னு தெரியும் தம்பி. கொஞ்ச நேரம் முன்னாலதான் அய்யிருங்க தொபீர், தொபீர்னு ஒரே சத்தம், அப்புறம் என்னடான்னா அவனவன் வேட்டிய தலையில போட்டுக்கிட்டு ஓடி ஆத்துல வுழுவுறான், பதில் சொல்லமாட்டேங்குறான், அவனவன் ஓடுறான், ஒரு எளவும் புரியல...''

 

 ""நீ வேறய்யா வௌரம் புரியாம. இவுனுக எளவு பண்ண வந்துதானே இவ்வளவும். மொதல்ல தள்ளிப் போயா, தேனீ புடுங்கிரப் போவுது. மரத்தும் மேலே எத்தோ சோடு தேன் கூடு தொங்குது? மெட்ராஸ்காரனுக்குத்தான் அறிவில்லே. மேல்லோகம், கீழ்லோகங்குறான், மிச்ச வௌரமெல்லாம் உனக்குத் தெரியாதுங்குறான், இந்த உள்ளூர் அய்யருங்களாவது மேல உள்ள தேன்கூட்ட பாக்க வேணாம்? இவனுக பாட்டுக்கும் கீழ சுள்ளியப் போட்டுக் கொளுத்த, தேன்கூடு கலைஞ்சு எல்லாம் கௌம்பிடுச்சுய்யா, போட்டுப் புடுங்குன புடுங்கல்ல அவனவன் அவுத்துப் போத்திக்கிட்டு ஓடுனாம்பாரு, நாங்கூட மொதல்லே அப்பனோட குத்தக பாக்கியே மனசுல வச்சிக்கிட்டு எவனோ பூந்து வெட்றான்னுதான் நெனச்சேன்... ஆத்தாள, கட்ட அய்யிரு கோவணத்தோட, தலயில வேட்டியப் போட்டுக்கிட்டு ஓடுனாம் பாரு, நாயி வேறு தெரத்த ஆரம்பிச்சிருச்சி... பாவம் பெரியவன்தான் சீரியஸாகி கும்மோணம் கொண்டு போயிருக்காங்க... மேல தேன் கூட்ட வச்சிகிட்டு எவனாது செத்தயக் கொளுத்துவானா?.. இவங்களால எல்லாப் பயலும் ஓட வேண்டியதாயிடுச்சு, எளவெடுக்க!''

 

 — விசயத்தைக் கேள்விப்பட்டவுடன் எல்லோரும் ""நல்ல பயலுக'' என்று பரிதாபத்திற்குப் பதில் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தனர். செய்தி அலைஅலையாய்ப் பரவி பார்ப்பனரின் "ஞானத்தை' அறிந்து ஊரே சிரித்தது. முதல்முறையாக எல்லோருக்கும் புரியும் "அம்மா அய்யோ' என்று மந்திரம்போலப் புலம்பிக் கொண்டே அய்யர்கள் கரையேற, என்னாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. உழைப்பதற்குப் பேர்போன தேனீக்கள் உழைக்காத கும்பலை விரட்டியவிதம் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை.

 

· சுடர்விழி 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது