Language Selection

புதிய கலாச்சாரம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 அதனையொட்டித் தமிழகமெங்கும் நாங்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்திற்கும் போலீசு அளித்துள்ள எதிர்வினை இது. இந்த அறிவிப்பைக் கண்டஞ்சி எமது தோழர்கள் பிரச்சாரத்தை நிறுத்தவுமில்லை; மக்கள் யாரையும் போலீசிடம் பிடித்துக் கொடுக்கவுமில்லை. இருப்பினும் இந்த அறிவிப்பு மிகுந்த பொருட்செறிவுள்ளது.

 

விக்ரம், விஜய் போன்றோரடங்கிய தனது விளம்பரக் கூலிப்பட்டாளத்துடன் உயர் போலீசு அதிகாரிகளையும் கொக்கோ கோலா நிறுவனம் சம்பளத்திற்கு அமர்த்தியிருக்கிறது என்பது இந்த அறிவிப்பின் மறைபொருள். ""கருத்துரிமை ஜனநாயக உரிமை'' போன்ற மாய்மாலங்களெல்லாம் அ.தி.மு.க. தி.மு.க. லாவணிக் கச்சேரிக்காரர்களுக்குத்தானே ஒழிய அமெரிக்காவை எதிர்க்கும் புரட்சிக்காரர்களுக்கல்ல என்பது இதன் நேர்ப்பொருள். மறுகாலனியாக்கம் என்பது வெறும் பொருளாதாரச் சுரண்டல் அல்ல, அது பன்னாட்டு முதலாளிகளால் திணிக்கப்படும் பாசிசம் என்பது இந்த அறிவிப்பின் உள்ளே உறைந்திருக்கும் அரசியல் கருப்பொருள். தண்ணீர் தனியார்மயத்திற்கு எதிராகவும் கோக்கிற்கு எதிராகவும் தமிழகம் தழுவிய அளவில் விரிவாகவும் வீச்சாகவும் நாங்கள் மேற்கொண்டு வரும் இயக் கம், எதிரிகளிடம் தோற்றுவித்திருக்கும் அச்சத்திற்கு இது ஒரு விளைபொருள்.

 

கோக்கின் ஆக்கிரமிப்பையும், தண்ணீர் தனியார்மயம் என்ற சதியின் உண்மை முகத்தையும், மறுகாலனியாக்க அபாயத்தையும் அம்பலப்படுத்தி தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் முழங்கும் எமது ஆயிரக்கணக்கான சுவர் விளம்பரங்கள், லட்சக்கணக்கான துண்டறிக்கைகள், 60,000 வெளியீடுகள், நூற்றுக்கணக்கான தெருமுனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், வீதி நாடகங்கள், கலைநிகழ்ச்சிகள், ஓவியக் காட்சிகள், அனைத்துக்கும் மேலாக தமிழகத்தின் பேருந்துகள் கடைவீதிகள் குடியிருப்புப் பகுதிகள் எங்கும் கடந்த 3 மாதங்களாக ஓயாமல் ஒலித்துக் கொண்டேயிருக்கும் எமது தோழர்களின் குரல் எமது பிரச்சாரம் மக்களிடம் பெற்றுவரும் வரவேற்பு இவையனைத்தும் நிதரிசனமான உண்மைகள். ""விளம்பரம் 99 சரக்கு 1'' என்ற சதவீதக் கணக்கில் வியாபாரம் நடத்திவரும் இந்தப் பன்னாட்டு நிறுவனம் எமது பிரச்சாரம் கண்டு அஞ்சக் காரணம் இதன் அரசியல் உள்ளடக்கம். நட்சத்திரங்களைத் தனது விரல் சொடுக்கில் ஆடவிடும் கோக், நட்சத்திரக் கவர்ச்சிகள் ஏதுமற்ற எமது சாதாரணத் தோழர்களை பார்த்து அஞ்சக் காரணம் நட்சத்திரங்கள் வெறும் கூலிகள் இவர்கள் போராளிகள் என்பதுதான்.

 

""நக்சல்பாரி சகோதரர்களே, நாடாளுமன்றத்துக்கு வாருங்கள்! தேர்தலில் நின்று பெரும்பான்மை பெற்று தாராளமாக நீங்கள் விரும்பும் கொள்கைகளை அமல்படுத்துங்கள்!'' என்று அங்கே ஆந்திர மாவோயிஸ்டுகளுக்கு அறைகூவல் விடுகிறார் பிரதமர் மன்மோகன் சிங். தேர்தலில் நின்று "வைகுந்தம் போவது' இருக்கட்டும்; தெருவில் நின்று பிரச்சாரம் செய்யவே தடை விதிக்கிறது போலீசு. நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்டங்களில் பொதுக் கூட்டம், தெருமுனைக் கூட்டம், வாகனப் பிரச்சாரம் ஆகிய அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆள், அம்பு, சேனை அனைத்தும் தன் பக்கம் இருந்தும் "கோக்'கிற்கு அச்சம் விடவில்லை போலும்! ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் ஒளிந்த கதையாக, ""நக்சலைட்டுகளைப் பிடித்துக் கொடுங்கள்'' என்று போலீசை வைத்து மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

 

ஆனால் கோக்கிற்கு எதிராகத் திரண்டு வரும் பொதுக்கருத்தை, அந்தக் கருத்திற்குச் செயல் வடிவம் தரவிருக்கும் மக்களை யாரிடம் பிடித்துக் கொடுக்க முடியும்? குடிநீருக்காகவும் பாசன நீருக்காகவும் அன்றாடம் அல்லல்படும் மக்கள், எண்ணிறந்த போராட்டங்களை நடத்தி வரும் மக்கள் தங்களது பிரச்சினையின் ஊற்று மூலத்தை மெல்ல மெல்லப் புரிந்து வருகிறார்கள். ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் நடத்தும் போராட்டங்களில் ""ஆறு எங்கள் சொத்து'' என்ற முழக்கம் கிளம்பும். களவு போகும் நிலத்தடி நீருக்கு எதிராக ஆங்காங்கு நடக்கும் போராட்டங்கள், ""நிலத்தடி நீர் எங்கள் சொந்தம்'' என்று முழங்கும். எத்தனைக் குடங்கள் தண்ணீர் ஊற்றினாலும் அடங்காத அத்தகையதொரு தாகத்தை "கோக் எதிர்ப்புப் போராட்டம்' மக்களிடம் தோற்றுவிக்கும். கோக் பெப்சியின் மொழியில் சொல்வதானால், ""இந்தத் தாகம் ரொம்பப் பெரிசு''. இது விடுதலைத் தாகம்!

 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது