Language Selection

புதிய கலாச்சாரம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

""என் நினைவுச் சின்னம்

நான் விடை பெற்றுக் கொண்டுவிட்ட செய்தி

உன்னை வந்து எட்டியதும்

நண்ப

பதறாதே''

 

(சும்மா பதறி என்ன பயன்? காலச்சுவடு கூட்டம் போடுவதற்கு முன்பாகவே ஆளாளுக்குக் கூட்டம் போடுவார்கள், சு.ராவுக்கே இரங்கற்கூட்டம் பிடிக்காது என்று சொல்லி என்னைப் பற்றிப் புத்தகம் போட்டு வியாபாரம் செய்து விடுவார்கள்!)

 

""ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல்

எதுவும் அதில் இல்லை.''

 

(என்று ஏறக்கட்டி விடுவார்கள். கவிதை என்பது பூட்டு. கவித்துவ மனமே அதன் சாவி. இன்னுமா புரியவில்லை? மரம்தான் விதை. விதைதான் மரம். இலை பிரபஞ்சத்தின் குறியீடு. இருப்பினும் நண்ப.)

 

""இரங்கற்கூட்டம் போட

ஆள்பிடிக்க அலையாதே.''

 

(ஆள், தானே வருவான். காலச்சுவடு என்பது கடலோரக் கால் தடமல்ல. புத்தகம் போடவும் பிரபலமாகவும் காலச்சுவடிடம்தான் கையேந்தி வரணும். கவலைப்படாதே. அசோகமித்திரனோ, ஜெயகாந்தனோ மண்டையைப் போட்டால் கூட நண்ப, குறித்துக் கொள் என்னளவுக்குக் கூட்டம் வராது. ஆயினும் நண்ப)

 

""நம் கலாச்சாரத் தூண்களின்

தடித்தனங்களை எண்ணி

மனச்சோர்வில் ஆழ்ந்து கலங்காதே.''

 

(வந்தவனுக்கும் போனவனுக்கும் சாகித்ய அகாடமி. பாக்கட் நாவல் எழுத்தாளனுக்கு ஞானபீடம். எனக்கோ சாகித்ய அகாடமி தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பில் கூட இடமில்லை என்று அசோகமித்திரன் மறுத்து விட்டான். ஒருவேளை இனி எனக்கு ஒரு விருது கிடைத்தால் கூட சுந்தரராமசாமிக்கு ஒரே ஒரு விருது கிடைத்ததாகத்தான் வரலாற்றில் பதிவு செய்யப்படும். எனவே நண்ப, என் பெயரிலேயே ஒரு விருது ஆரம்பித்து விடு. பிலிம்ஃபேர் விருது போல சு.ரா. விருது வளரட்டும். என் விருது வாங்க எல்லா நாய்களும் ஓடி வரும். அப்போது கவனித்துக் கொள்ளுங்கள். அதே சமயம் எனக்கு ஒரு சாகித்திய அகாடமியோ, ஞானபீடமோ கொடுத்தால் கோபப்பட்டு மறுத்து விடவேண்டாம் என்று கண்ணனிடம் சொல்லி வை. தாமதம் பற்றிய விமர்சனத்தை கூட்டம் போட்டுப் பதிவு செய்து விடலாம்.)

 

""நண்ப

சிறிது யோசித்துப்பார்

உலகெங்கும் கணந்தோறும்

இழப்பின் துக்கங்களில்

ஒரு கோடிக்கண்கள் கலங்குகின்றன

ஒரு கோடி நெஞ்சங்கள்

குமுறி வெடிக்கின்றன.''

 

(டைப்ரைட்டரில் என் நினைவுச்சின்னத்தை நான் எழுப்பிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் டெல்லி, போபால், ஈழம் எங்கும் மந்தை மந்தையாய்ப் பிணங்கள் சரிந்து கொண்டுதான் இருக்கின்றன. நாளை மழை, வெள்ளத்தில் மரம் மட்டைகளும், மக்களும் மிதக்கலாம். அந்த ஒப்பாரிச் சத்தத்தில் "ஊனைக்கரைத்து உயிரைப் பிழிந்து எழுத்தாக்கிய, என் மறைவுக்கு தேசிய சோகமா அறிவிப்பார்கள்? எனது இறுதி ஊர்வலத்தில் லக்ஷ்மி மணிவண்ணன் போன்ற ஒன்றிரண்டு சிஷ்ய பிள்ளைகள் தண்ணியைப் போட்டு விட்டு ஒரே ஒரு பஸ்சை மறிக்கலாம். இதற்கும் அதிகமாக வேறென்ன கௌரவத்தை இந்த தேசம் ஒரு எழுத்தாளனுக்கு வழங்கிவிடப் போகிறது?)

 

""நண்ப

நீ அறிவாயா

உன் அடிச்சுவடு ஒவ்வொன்றிலும்

அழிகின்றன ஒரு கோடி உயிர்கள்.''

 

(அதில் நான் எம்மாத்திரம்? எனினும் நான் அற்பனல்ல. படைப்பு எனும் நெடிய லாந்தர் கம்பங்களில் ஏறி சூனியத்தைத் தரிசித்து மீண்டும் கம்பம் கம்பமாய் சளைக்காமல் அலைந்து களைத்து காலைத்தூக்கிய தருணங்களை டைரியில் குறித்து வைத்துக் கொண்டு.... ""பாத்டப்பில் குளித்தார், வாழைப்பழத்தை பேரம் பேசினார், பூசிய உடல் வாகுடன் வரும் மலையாளப் பெண்களை ரசித்தார், சிங்கப்பூர் சென்ட் பூசினார், சாக்கடையை ஆராய்ந்தார், செண்பகமே, செண்பகமே பாடினார். அமெரிக்காவின் கிரீன் கார்டு வாங்கினார்'' என்று என் படைப்பு அவஸ்தையை சிலர் சிறுமைப்படுத்தக் கூடும்.

 

எனவே, நண்ப, இனிமேலாவது ஜெயமோகனுடன் பழகும் எழுத்தாளர்களை சற்று எச்சரிக்கையாக இருக்கச் சொல். பயல் தனது அதீத மனத்தாவலால் படுக்கையறையில் கூட நுழைந்து விடுவான். இனியாவது படைப்பின் அந்தரங்கம் பகிரங்கமாகக் கூடாது என்பதே என் ஆதங்கம்.)

 

""இருப்பினும்

நண்ப

ஒன்று மட்டும் செய்

என்னை அறியாத உன் நண்பனிடம்

ஓடோடிச் சென்று.''

(புதுவை இளவேனில் எடுத்த,

ஈசிசேரில் நான் சாய்ந்திருக்கும்

படத்தை உடனே காட்டு.)

""கவிதையை எழுப்ப முயன்று

கொண்டிருந்தவன்

மறைந்து விட்டான் என்று மட்டும் சொல்.''

(இவரே தூங்கிகிட்டு இருக்காரு,

இவர் எதை எழுப்ப முடியும்

என்று அவன் கேட்கக் கூடும்.)

""இவ்வார்த்தைகளை

அவன் கூறும்போது

உன் கண்ணீர்

ஒரு சொட்டு

இந்த மண்ணில் உதிரும் என்றால்

போதும் எனக்கு.''

(போதுமா உனக்கு?)

 

கார்மேகம்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது