Language Selection

சபேசன் - கனடா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒரு சிறுவர்களின் கதையொன்று.

 

ஒரு அழகான பூனைக்குட்டியும் ஒரு பொம்மமேரியன் நாய்க் குட்டியும் பின்வளவில் விளையாடிக்கொண்டிருந்தன. அந்த வழியால வந்த கோழி க்குஞ்சு ஒன்றுக்கும் இவர்களோடு சேர்ந்து விளையாட விருப்பம். ஆனால் பூனைக்குட்டி சொன்னது "உன்னுடைய மூக்கு பெரிதாக இருக்குது

 எங்களுக்கு உன்னோடு சேர்ந்து விளையாட விருப்பமில்லை"

என்றது. கவலையுடன் சென்ற கோழி குஞ்சு தனியாக காத்திருந்தது. அந்த வழியாக வந்த பன்றி குட்டி ஒன்றுக்கும் இவர்களுடன் சேர்ந்து விளையாட விருப்பம். "நீ குண்டாக இருக்கிறாய் எங்களுக்கு உன்னோடு சேர்ந்து விளையாட விருப்பமில்லை" என்றது பூனைக் குட்டி. அடுத்ததாக விளையாட விரும்பி வந்தது ஆட்டுக்குட்டி. "நீ கறுப்பாக இருக்கிறாய் எங்களுக்கு உன்னோடு சேர்ந்து விளையாட விருப்பமில்லை" என்றது பூனைக்குட்டி. தொடர்சியாக மான் குட்டி, அணில் பிள்ளை, வாத்து எல்லோரும் பூனைக்குட்டியால் நிராகரிக்கப்பட்னர்.

 

நாய் குட்டியும் பூனைக் குட்டியும் சிறிது விளையாடிக் களைத்தபின்னர் தமக்குள் பேசிக்கொண்டனர்

 

"இரண்டு பேரும் மட்டும் விளையாடி ஒரே அலுப்பாக இருக்கு" என்று பேசி முடியுமுன்னர் பெரிய ஆரவாரச்சத்தம் பக்கத்து வளவில் கேட்டது. இரண்டு குட்டிகளும் எட்டிப்பார்த்தார்கள். பூனைக்குட்டியால் நிராகரிக்கப்பட்ட மற்றைய குட்டிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து மிக்கதொரு மகிழ்ச்சியான விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

 

தாங்கமுடியாமல் பூனைக்குட்டியும் நாய்க்குட்டியும் மற்றைய குட்டிகளிடம் சென்று தங்களையும் சேர்த்து விளையாடும்படி கெஞ்சிக் கேட்டினம்.

 

தங்களுக்குள் முரண்பட்டாலும் இறுதியாக எல்லோரும் சேர்ந்து ஆனந்தமாக விளையாடினார்கள்.

 

இது கனடிய சிறுவர் தொலைக்காட்சியினால்"இனப்பாகுபாட்டுக்கு எதிராக" என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட ஒரு குட்டி விவரணப்படம்.

 

தோட்டக்காட்டான் வேண்டாம். . !
தொப்பி பிரட்டி சோனி வேண்டாம் . . !
மட்டக்களப்பான் துரோகி. வேண்டாம் . . !
தமிழ்நாட்டு சனம் முட்டாளுகள் இதுகளால என்ன வரப் போகுது. . !
கீழ் சாதிகளும் கம்யூனிசம் கதைக்கும் . . .!

மலையகமும், மட்டக்களப்பும், முஸ்லிம்களும், இன்ன இன்ன பிறகூறுகளும் இணைந்து நிற்கும்போது யாழ் மையவாதம் சிறுபான்மையாகிவிடும்.

 

இது சிங்கள இனவாதத்திற்கு சாதகமான வடிவம் என்பது வருத்தத்திற்குரியதுதான் என்றாலும், இந்த வரலாற்று தேவையை வற்புறுத்தியது யாழ் மையவாதம் தான். இதே சமாந்தரமான நிகழ்வுகள் பல தேசங்களிலும், உலகவரலாற்றிலும் கண்கூடாக அறிந்தவொன்று. காரணம் எந்த மையவாத அரசியலும் சமூக ஒற்றுமையை தேடாது. இறுதியில் பிளவுகளாக வேரறுந்து தேங்கும் என்பதே நியதி.

 

தாங்களே பிரதானம் என்று பேசிய யாழ் மையவாதம் இன்று பல்லு பல்லாக உதிர்ந்து கொட்டிக்கொண்டிருக்கும் கிழட்டுப்புலியாகிக் கொண்டிருக்கிறது. இந்த விடயத்தை சற்று உன்னிப்பாக பார்க்க வேண்டும். அரசு, புலி, டக்ளஸ், ஜே.வி.பி என்ற கோதாவில் நிற்காமல் எல்லோருமே மக்கள் என்ற கோதாவில் நின்று பேசுவோம். இந்த விடயத்தை பழிவாங்கும் உணர்வுடன் பார்க்கக்கூடாது. மாறாக பரிதாபப் படவேணடிய விடயமாக அணுக வேண்டும். ஏன் . . ? குண்டு கட்டி பாஞ்சதும், வழியில்லாமல் சிங்கள இராணுவத்தில் சேர்ந்து செத்ததெல்லாம் யார். . ? திமிர் பிடித்த கண்டி மையவாதமா. . ? யாழ்மைய வாதமா. .?; ஏன் மட்டக்களப்பு மையவாதமா. . ? இல்லை. ஏழை பாழைகள்தான்.

தமிழ் தேசியத்துக்கான உரிமையான உன்னத ஆரிய வடிவத்தோடு எங்களை அமெரிக்கா உட்பட பெரிய சாம்ராச்சியங்கள் அங்கீகரித்து எங்கட வளங்களை அவையின்ர மூலதனத்தோட வளப்படுத்தினால் நாங்களும் சிங்கப்பூராகி சுகபோகங்களில் வாழமுடியாதா? என்ற கவலை ஏன் எங்கட மேட்டுக்குடிக்கு ஏன் வரப்படாது. . . ? அப்பிடி ஒன்று நிறைவேறுகிற தறுவாயில ஏன் எல்லாரும் குழப்புகிறான்கள்.. . ?

 

தங்களுக்கு தேவை எண்டால், அதாவது மேற்குறிப்பிட்ட (மையவாதத்திற்கு) "தேசியத்திற்கு" தேவையான வகையில வடிவம் கிடைக்கும். லெனின், மாக்ஸ், ஸ்ராலின், ரொக்ஸி. . . மாவோ

 

ஒரே ஒரு கேள்வி. . மனச்சாட்சிய தொட்டு சொல்லுவதானால் யாழ்ப்பாண ரோட்டில பீ அள்ளுற பறையன்ர பிரச்சனை முதன்மையானதா. . ? பல்கலைக்கழக தரப்படுத்தல் முதன்மையானதா. . ?

எல்லாம் எங்களில் திணிக்கப்பட்ட தேசியங்கள், விடுதலைகள்;, சாமான்யமற்றவைகள். கருத்தியல்கள்,

 

"என்னதான் நீங்கள் நியாயங்கள் சொன்னாலும், எவ்வளவு தத்துவங்களை எடுத்துச் சொன்னாலும் பொரும்பான்மை தமிழ் மக்கள் யாரை ஆதரிக்கிறார்கள். . ? புலிகளைத்தானே. ! இவ்வவளவு சனத்துக்கும் ஒண்டுமே விளங்காமலோ ஆதரிக்குதுகள். .? நீங்கள் ஒரு கொஞ்சப்பேர் மாத்திரம் ஏன் விதண்டாவாதம் கதைகிறீங்கள்.:"

 

கிட்லரின் ஆட்சிக்காலத்தில் ஜேர்மனியில் 75 வீதத்திற்கும் அதிகமான ஜேர்மனியர்கள் கிட்லரின் நாசிக்கட்சிக்குத்தான் ஆதரவளித்தார்கள் என்று சொல்வதிலும் பார்க்க வெறித்தனமாக ஆதரித்தார்கள். என்பதே உண்மை. அப்போதைய ஜேர்மன் மக்களின் பெரும்பான்மை வாக்குகளா? இன்றைய ஜேர்மன் மக்களின் உணர்வானது கிட்லரின் மேல் காறி உமிழ்தலா .. பெரும்பான்மையானது. ?

 

வரலாற்று இயங்கியல் வளர்ச்சி மாற்றம் அடையும் போது முந்தைய பெரும்பான்மையை இன்றைய பெரும்பான்மை காறி உமிழும் . . !

 

யாழ்ப்பாண மையவாதம் தான் பிரச்சனை என்பது உண்மைதான் தவிர்க்க முடியாது சரி. ஏன் கண்டி மையவாதம் சரியோ. ? மட்டக்களப்பு மையவாதம் தான் சரியோ. ? இல்லை முஸ்லிம் மையவாதம் சரியோ. .?

 

எல்லா மையவாதங்களும் சரி ! எதுவரைக்கும் . ! இன்னுமொரு ஆதிக்க மையவாதத்திற்கு எதிராக இருக்கும் வரையில்தான். ஒன்று இன்னுமொன்றுக்கு அடக்குமுறை செய்ய முற்படும் போது குப்பையில் போட வேண்டியதுதான். பல்லுக்கொட்டுண்டும் கிழட்டுப் புலி போல.

 

எனவே வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்வோம் . . ஒன்று பரிணாமம் மற்றது புரட்சி (Revolution or Evolution) ஒன்று மெதுவாக வளர்ச்சி மாற்றத்தை அடையும் மற்றது சடுதியான வளர்ச்சி மாற்றத்தினை அடையும்.

 

எது என்றும் எப்படியென்றும் தீர்மானிப்பவர்கள் மக்கள் தான். இலங்iயில் இப்போதைக்கு புரட்சிகர மாற்றங்கள் தோன்றுவதற்கு சாத்தியங்கள் இல்லாவிட்டாலும் முன்னோக்கிய பரிணாம மாற்றங்கள் ஏற்படுதலே கேள்விக்குரியதாகிறது.

 

இப்போது பெரிய பாவம் இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்கள்தான்.

 

வீதி வந்த
சின்னக் கரிக்குருவியொன்று
கூடு கட்டி குஞ்கள் பொரிக்கக் காத்திருந்தது
நாளை வெடிக்கத் தயாராகும்
பீரங்கிக்குழாய் வாசலில். . !

எமக்கெல்லாம் விடியலும் விடுதலையும்
வந்துவிடும் என்று காத்திருக்கும்
இலங்கை தமிழ்பேசும் மக்களைப் போன்று. . !

கனடா சபேசன்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது