Language Selection

சபேசன் - கனடா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மாற்றுக்கருத்தாளர்களிடம் சில கேள்விகள்

 

இரண்டு வினோதமான அரசியல், கருத்தியல் போராட்டம் இன்றைக்கு புலம் பெயர் தமிழர்களிடமும், "மாற்றுக் கருத்தாளர்" களிடமும் தோன்றியுள்ளது.

 

ஓன்று - இலங்கை அரசாங்கமா விடுதலைப்புலிகளா இவர்களில் யார் முதலாவது எதிரி யார் இரண்டாவது எதிரி என்ற ஒரு அற்புதமான ஜட்ஜ்மென்ற்.

 

இரண்டாவது - இலங்கை முஸ்லிம் மக்களின் அரசியல் தீர்வுக்காக பிரதேச அலகுகளா அல்லது யூனியன் பிரதேசங்களா என்கின்ற கேள்விகட்கு திரொக்சிய சார்பில் முடிவெடுப்பதா இல்லை ஸ்ராலினிஸ கருத்தியல் அடிப்படையில் முடிவு எடுப்பதா என்பது.

 

நாங்கள் வருத்தப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் யதார்த்த நிலைகளை புரிந்து கொண்டு மக்கள் நலனை நேசிக்கும் சக்திகள் முன்னெடுக்கவேண்டிய வேலைகளை இந்த யதார்த்த நிலமைகளை மக்கள் விரோத சக்திகளிடம் விட்டுவிட்டு மேலே குறிப்பிட்ட காத்திரமற்ற விடயங்களில் கவனம் செலுத்துகின்றோம்.

 

முதல் விடயத்தை முதலில் பார்ப்போம். இருபது இருபத்தைந்து வருடங்களிற்கு முன்னரே இலங்கை அரசு இனவாத அரசுதான் என்பதை முடிவெடுத்து விட்டோம். பதினைந்து வருடங்களிற்கு முன்னரே விடுதலைப்புலிகள் பாசிட்டுக்கள் என்று முடிவெடுத்து விட்டோம். இன்று வரையில் இந்த இரண்டு பகுதிகளிடமும் முன்னேற்றமோ அல்லது முற்போக்கான அரசியல் மாற்றங்களோ அல்லது மனித உரிமை மீறல்களைப் பற்றிய எந்தவித மாறுதல்களோ ஏற்படவில்லை. ஆனால் முன்னர் இந்த இரண்டு பகுதிகளையும் நிராகரித்த "மாற்றுக்கருத்தாளர்கள்" பலர் இப்போது இந்த இரண்டு கோதாக்களில் ஏதோ ஒன்றுக்குள் பாய்ந்துவிட்டார்கள்.

 

தங்களின் தோல்விகள், தங்களின் சுயநலங்கள், தங்களின் வெற்றிடங்கள், போன்றவற்றின் தாழ்வு சிக்கல்களின் வெளிப்பாடாக தங்களையே நியாயப்படுத்த, தங்களுக்குள்ளேயே குறுகிய வட்டப்போட்டியை நிர்ணயம் செய்கின்றனர்.

 

"பிரித்தாளும் தந்திரம்" உருவாக்கிய பிரித்தானியாவை முதலாம் எதிரி என்;று சிந்தனை செய்ய எல்லோரும் மறந்துவிட்டார்கள். அத்தோடு உலக வங்கி, சர்வதேச நாணயநிதியம் என்பவற்றையும் மேற்கத்தைய வல்லரசுகளையும மறந்து விட்டார்கள். உலகமயமாதலை மறந்து விட்டார்கள்.

 

வறுமையில் வாழும் கரையோர சிங்களவர்களும், சாலையோர வியாபார முஸ்லிம்களும், லயன்களில் பரிதவிக்கும் மலையகத்தவர்களும், வெளிநாடு செல்லப் பணமற்ற தமிழர்களும் இன்று ஒருவருக்கொருவர் எதிரியாகி தேசியப் போராட்டம் செய்வதில் யார் முதலாம் யார் இரண்டாம் எதிரி என்று கணிப்பீட்டுப் போராட்டம் செய்தழிகிறார்கள்.

 

இதன் பின்னர் சதாமுடன் சேர்ந்து புஸ்சுக்கு அடிப்பமோ? அல்லது புஸ்சுடன் சேர்ந்து சதாமுக்கு அடிப்பமோ? என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். (பிரபாகரனுடன் சேர்ந்து ராஜபக்ஸவிற்கு அடிப்பமோ அல்லது ராஜபக்ஸவுடன் சேர்ந்து பிரபாகரனுக்கு இடிப்பமோ? என்பது போன்று.)

 

இன்றைக்கு இந்த "மாற்றுக்கருத்தாளர்களின்" பிரதான கடமை என்ன?

 

இலங்கையிலோ அல்லது தமிழ் பேசும் மக்களிடமோ உருவாக, அல்லது உருவாக்க வேண்டிய "மாற்று அரசியல் களம்" என்பது நிச்சயமாக இலங்கையிலிருந்துதான் தோற்றம் பெற வேண்டும்.

 

இதைவிடுத்து இனிமேல் அப்படியான ஒன்று தோன்றவே தோன்றாது, இது ஒரு கற்பனாவாதம், அதற்குரிய காலகட்டம் கடந்து விட்டது, இரண்டில் ஒன்றை தீர்மானிக்க வேண்டும் போன்ற வாதங்கள் "மாற்றம் என்பது மாறாதது" என்ற நம்பிக்கையை இழந்தவர்களாலேயே எடுக்கப்படும். இது பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடிப்பது போன்ற நிலைப்பாடு. தொடர் கொலைகளும், உடைவுகளும், உருவாக்கங்களும் அடக்குமுறைகளும் தொடர்கின்ற எமது சமூகத்திலிருந்து முற்போக்கான சக்திகளே உருவாகாது என்ற அவநம்பிக்கைகளை நாங்களே தான் உடைக்கவேண்டும். இலகுவானதல்ல, மிகவும் கடினமான காலகட்டத்தில் உள்ளோம் என்பது நிதர்சனமானதே.

 

இவற்றுக்கெல்லாம் அடிப்படை எம்மை நாமே சுயவிமர்சனம் செய்வதிலிருந்துதான் ஆரம்பிக்கவேண்டும்.

 

"மாற்றுக்கருத்து" என்பதன் வரைவிலக்கணம் எதுவாக இருக்க முடியும்?

 

புலிகளை எதிர்த்;தால் மட்டும் மாற்றுக்கருத்தா? அப்படி என்றால் அரசாங்கத்தை மட்டும் எதிர்த்தால் மாற்றுக்கருத்து என்று ஏன் கூறமுடியாது? இது முற்றிலும் குழுவாதமே ஆகும்.

 

"மாற்றுக்கருத்து" என்பது பொது நீரோட்டத்தில் சமூகத்தில் பெரும்பான்மையினரால் நியாயம் என்று ஏற்றுக்கொள்ளப்படுகின்ற அனைத்து அநீதிகளையும் மறுத்து கூறும், அல்லது மறுக்கமுயற்சிக்கும் கருத்தாக்கமே மாற்றுக்கருத்தாகும்.

 

உதாரணத்திற்கு ஒரு நண்பண் கூறிய ஒரு வார்த்தை "காலமை கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டுப் போட்டு, மத்தியானம் வாய்காட்டின மனிச்pக்கு பளாரென்று அறைஞ்சு கதைய நிப்பாட்டிப்போட்டு, பின்னேரம் பிள்ளையளுக்கு பக்கத்து வீட்டில கறுவல் முன்வீட்டில சப்பட்டை என்று விளக்கம் குடுத்துப்போட்டு இரவு பியர் குடிக்கேக்க மாத்திரம் பு. . . புலிகள் எண்டு பேசிப்போட்டு தன்னை தானே மாற்றுக்கருத்தாளன் எண்டு சொல்லுறான்" என்று சொன்னான்.

 

பொதுப் போக்கில் உள்ள பெண்ணடிமைத்துவத்தை நிராகரிக்க வேண்டும், பொது நீரோட்டத்தில் உள்ள புலிகளாலும் அரசாலும் சொல்லப்படுகின்ற "தேசியம்" என்ற இனவாதத்தை நிராகரிக்கவேண்டும். மூட மதவாதத்தை நிராகரிக்க வேண்டும். நிறவாதத்தையும் ஒருபாலின எதிர்ப்பு வாதத்தை நிராகரிக்க வேண்டும். சாதி, மொழி, பிரதேச. . .இன்ன இன்ன பிற வாதங்களையும் நிராகரிக்க வேண்டும்.

 

இதை விடுத்து "மாற்றுக்கருத்தை" ஒரு fashion ஆக எங்கள் மேல் நாங்களே முத்திரை குத்திக் கொள்ளக்கூடாது.

 

புலிகளின் அராஜகம் பலமுனைகளிலும் பலரையும் பாதித்ததும் உண்மை. அது தமிழ் சமூக வரலாற்றின் இயங்கியலை பின்தள்ளியது. இதன் காரணமாக பல தனிநபர்களையும், பல இயக்கங்களையும் அரசாங்கத்தின் பக்கம் தள்ளியதும் உண்மையே.

 

புலிகளின் அராஜகம் காரணமாக தவிர்க்கமுடியாமல் அரசாங்கத்தின் பால் போவது வேறு. சிங்கள இனவாத அரசின் அரசியலை அப்படியே உள்வாங்குவது என்பது வேறு.

 

புலிகளின் செயல்களால் கொழுத்தியும் கொல்லப்பட்டும் விரட்டியடிக்கப்பட்ட மற்றைய இயக்கங்களின் மேல் ஒரு பச்சாத்தாப உணர்வு உண்டாவது உண்மைதான். இது மனித நேயம் கொண்ட எவருக்கும் தவிர்க்கமுடியாதது.

 

இப்போது கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஆனந்தவிகடனுக்கு கூறிய கதை ஒன்று நினைவுக்கு வருகின்றது.

 

சிங்கள இராணுவத்தின் மேல் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் என்பது "பலாத்காரம் செய்யப்படுகின்ற ஒரு பெண் உடல் ரீதியாகவும் மனோரீதியாகவும் பலவீனமான நிலையில் கையில் கிடைப்பதை கொண்டு தன்னை பலாத்காரம் செய்யும் ஆணை தாக்குவது போன்றது. எனவே இதனை வன்முறை என்ற பதத்தில் சேர்க்கமுடியாது." காரணம் இவைகள் அடக்குமுறைக்கு எதிராக அடக்கப்படுகின்றவர்கள் தற்பாதுகாப்பிற்கு செய்கின்ற தாக்குதல்களே! ஆகவே இவற்றை வன்முறை என்ற பதத்தினுள் கருதக்கூடாது! என்றார்.

 

ஆகா என்ன புதிய கண்டுபிடிப்பு!

 

சரி அப்படியே ஏற்றுக்கொள்ளுவோம்

 

இந்த வாதம் கூறுவதாவது "பாதிக்கப்படுகின்ற, சிறுபான்மையான, பலம் குறைந்த, அதிகாரமற்ற சமூகப்பகுதி தான் எதிர்க்கும் அதிகாரத்துவத்தின் மீது செலுத்துகின்ற பதில்தாக்குதலை "வன்முறை" என்ற வகைக்குள் சேர்க்கமுடியாது." என்பதேயாகும்.

பாலியல் வல்லுறவில் பாதிக்கப்படும் பெண் திருப்பித் தாக்கினால் ?

 

வன்முறையில் சேர்க்கமுடியாது!

 

தலித்துக்கள் பிராமணன் மேல் திருப்பித் தாக்கினால்?

 

வன்முறையில் சேர்க்கமுடியாது!

 

கறுப்பர்கள் வெள்ளையர் மேல் திருப்பித்தாக்கினால்?

 

வன்முறையில் சேர்க்கமுடியாது!

 

சிங்கள பெரும்பான்மையினர் மீது தமிழ் சிறுபான்மையினர் திருப்பித்தாக்கினால்?

 

வன்முறையில் சேர்க்கமுடியாது!

 

பெரும்பான்மை கிறிஸ்த்தவர்கள் மேல் சிறுபான்மை முஸ்லிகள் திருப்பித்தாக்கினால் ?

 

வன்முறையில் சேர்க்கமுடியாது

 

ஆனால். . . ஆனால். . . ஆனால் . . .

 

பலத்தில் குறைந்த மட்டக்களப்பான்,


பலத்தில் குறைந்த முஸ்லிம்கள் திருப்பித்தாக்கினால் மட்டும்


"துரோகி" "தொப்பி பிரட்டி"

 

இதையும் தாண்டி அது புனிதமானது!

 

ஆயுத பலம் கொண்ட புலிகள் ஆயுத பலத்தில் நாட்டமில்லாத சிறு இயக்கங்களை அழிக்கும் போது திருப்பித்தாக்கினால் . . . ?

 

வாசகர்களின் முடிவுக்கே இதனை விட்டு விடுகின்றேன்.

 

இப்போது அவசரப்பட்டு எவரும் முடிவெடுக்கவேண்டாம. இது புலிகள் தவிர்ந்த மற்றைய இயக்கங்கள் செய்யும் கொலைகளை நியாயப்படுத்த வேண்டும் என்பதாக அர்த்தப்படாது. கொலைகள், கொலைகள் தான். ஆயுதம் தாங்கியவர்கள் ஆயுதம் தாங்கியவர்களை தாக்கியழிப்பது வேறு, ஆயுதமற்ற அப்பாவிகளை, செய்தியாளர்களை, எதிர்த்து கருத்து கூறுபவர்களை, ஜனநாயகவாதிகளை ஆயுதம் ஏந்தியவர்கள் கொலை செய்து பணியவைப்பது என்பது வேறு. இந்த இரண்டாவது வகை தான் அராஜகம் என்பது.

இன்றைய மாற்றுக்கருத்தாளர்களுக்கு மட்டுமல்ல அனைத்து ஜனநாயக சக்திகளின் முதல் கடமை அரசியல் படுகொலைகள் எந்தத்தரப்பினரால் நடத்தப்பட்டாலும் ஒன்றுபட்டு உரத்தகுரலில் தவறை தவறு என்று முகத்துக்கு முன்னால் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதே. . ! இந்த உறுதியான ஜனநாயகப் போராட்டம் என்பது "ஆயுதம் தாங்கி எவரையும் அழித்துவிடுவோம்" என்கின்ற அராஜகத்தை விடவும் பலமடங்கு வலிமை கூடியது.

 

சபேசன் (கனடா)
24.01.2007

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது