Language Selection

மாணிக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்னுமொரு விசயமென எழுத வந்து இதுகளைப் பற்றி எத்தனையோ பல உண்மைகளை உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய இருக்கிறது. எப்போதும் போலவே இதுகளின்ரை கொட்டமடிப்புகள் வேறுவேறு ரூபங்களிலை தற்போதும் வெளிக்கிடுது. இப்ப இந்த தேன்குழல்ச் சாமியோடை சேர்ந்து கூத்தடிக்கின்ற, புத்தகப் பூச்சிகளான டாக்டரும் – வழக்குரைஞர் – கணக்காளாரெண்டு ஒரு சிலதுகள், ஜிலேபிச்சாமி அன்ட் கொம்பனி மக்களை ஏமாற்றுகின்ற திருகுதாளங்களை இதில் மேலும் காணலாம்.

 

 

இந்த காமயோக ஜிலேபிச்சாமி, கேரள மக்களின் உழவர் நாளான ஓணம் பண்டிகையை லண்டனில் எதிர் வரும் வாரத்தில் நடாத்தப்போவதாகவும், அத்துடன் இவனது அடியாட்கள் காமயோக ஜிலேபிச்சாமியை லிமௌசின் (LEMO!) காரில் பவனியாக அழைத்து வந்து, இவனுக்குப் பிறந்த நாள் கொண்டாட்டத்தை நடாத்தத் துடிக்கின்றார்கள். அந்த அளவுக்கு இவனும் இவனது பன்னாடைக் கூட்டமும், அப்பாவிச் சனங்களை முழுமையாக மொட்டையடிக்கின்றனர்.

இவன் இப்பிடி செய்யிற புதுப் பெயரிலிலான பண்டிகைகளை திட்டமிட்டு நடாத்துவதன் மூலமாக, இவனது காம லீலைகள் பற்றியும், பணப் பறிப்புப் பற்றியும் அறியாத அப்பாவிகளை, காம யோக ஜிலேபிச்சாமியின் கள்ளர் கூட்டான மேற் சொன்ன புத்தகப் பூச்சிகள் முன்னின்று பிரச்சாரம் செய்து, இந்தக் காமயோக ஜிலேபிச்சாமிக்கு எமது மக்களைக் கூட்டிக் கொடுக்கின்றனர். இவன் ஓணம் செய்யிறனெண்டு எங்கட பெண்களில் பாலியல் கோணம் வைப்பவன் என்பதன் விபரங்களை நாம் முன்னைய பதிவுகளில், எத்தனையோ பல ஆதாரங்களுடன் தந்துள்ளோம். மற்றும் இவனைப் பற்றி முழுமையாக அறிவதற்காக நாம் ஏற்பாடு செய்திருக்கும் எமது நிருபர்கள் இவனுக்கு காவலராக, தொண்டு செய்பவராக, அடியாராக இவனுடனேயே எப்போதும் உள்ளனர். அதனால் இன்னும் பல உண்மைகள் இனிவரும் காலங்களில் தொடராக வெளிவரும்.

அடுத்ததாக இந்த காமயோக ஜிலேபிச்சாமி என்ன மாதிரியெல்லாம் திருகுதாளம் பண்ணுகின்றான் எனப் பாருங்கள். அதாவது முருகனுக்கு அபிசேகம் கேள்விப்பட்டிருப்பியள், இந்த ஜிலேபிச்சாமி முருகனை விட்டிட்டு வேலுக்கு அபிசேகம் எண்டும், அடுத்து மயிலுக்கு, அதையடுத்து மயிலுக்கு கீழேயிருக்கிற பாம்புக்கு, பிறகு ஜிலேபிச்சாமியின் லண்டன் வைப்பாட்டிகளில் ஒருவரான தேவாம்மாவுக்கு என இவனது அபிசேகம் தொடர்கின்றது. அதோடை இவனது கால்களைக் கழுவி, அந்த சாக்கடை நீரை தீர்த்தமெண்டு குடிப்பதற்கு முன்யடிக்கின்ற மடையர்கள் இருக்கும்போது, அதுவும் படித்த முட்டாள்கள் டாக்டர் – வழக்குரைஞர் – கணக்காளார்..!? போகிற போக்கைப் பார்த்தால், இந்த காமயோக ஜிலேபிச்சாமி தனது குண்டி கழுவிய நீரைக் கொடுத்தாலும், அதையும் ஏந்திக் குடிப்பதற்கு இப்படியானோர் தயாராக உள்ளனர். மக்களிடமிருந்து அறுக்கின்ற பணம் பொருளில் இவர்களுக்கும் சமபங்கு கிடைக்கின்றது என்பதே அதற்குக் காரணம்.

கடந்த வருடங்களில் காமயோக ஜிலேபிச்சாமிக்கு பிறந்த நாளை இவர்கள் கொண்டாடியதில், அடியார்கள் – பக்தர்கள் என இவர்களிடம் ஏமாந்த மக்களிடம், பணம் பொருளைக் கொள்ளையடிக்கும் திருமதி.பணபாலனும் இவளது சகாக்களும், இந்த முறையும் காமயோக ஜிலேபிச்சாமிக்கு பிறந்த நாளைக் கொண்டாட உள்ளனர். யாரும் யாருக்கும் எதையும் கொண்டாடலாம். அது அவர்கள் பிரச்சினை ஆனால் இதிலிருக்கும் மறுபக்கம் என்னவென்றால்..? ராமனுக்கு ஒரு தாரம் என்பார்கள். முருகனுக்கோ இருதாரம் என்பார்கள். ஆனால் தன்னை முருகனின் அவதாரம் எனச் சொல்கின்ற காமயோக ஜிலேபிச்சாமி ஆகிய முரளி கிருஷ்ணனுக்கோ பலதாரம். இவன் பயணித்த பல நாடுகளிலும் இவனுக்கு வைப்பாட்டிகள் ஏராளம். அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து இவனுக்குக் கொண்டாடாத பிறந்தநாளை, இவனது அடிவருடிகள் கொண்டாடுகினம்.

லண்டனில் உள்ள ஒருசில பெண்கள் இவனோடு இணைந்து பாலியல் இன்பம் பெறுவது போல்.., கடந்த சில தினங்களுக்கு முன் இவனுக்கு நடந்த பூசையில், தனக்கும் அது கிடைக்காதா என, ஒரு கிளட்டுப் பெண், இவனிடம் நேரடியாகவே காதல் தூதுவிட்டுப் பாடுகின்றாள்.


சின்னச் சின்ன ஆசை, எனக்கு சாமிமேல ஆசை, அவரை கட்டிப் பிடிக்க ஆசை, அணைத்தபடி எங்கும் பறந்துபோக ஆசை.., என பாலியற் போதையில் அவள் அந்தப் பாடலை மேடையில் பாடும்போது, காமயோக ஜிலேபிச்சாமியும் அதனை ஏற்பதாக கண்ணடித்தான். அன்று அங்கே வருகை தந்த பலர் தமது மானம் காற்றில் பறக்கின்றது என பேசிக் கொண்டார்கள்.

இப்பிடித்தான் ஒரு கொஞ்சக் காலத்துக்கு முன்பு, சத்தியசாஜி பாபாவின் படங்களிலிருந்தும் இதே நீறுதான் கொட்டியது. நாமும் அதனை நேரே சென்று பார்த்து, அதற்கு பாத்திரமான மன நோயாளிகளைக் கண்டறிந்தோம். தற்போது சத்தியசாஜி பாபா இறந்த பின்பு, அவன் அமுக்கி வைத்திருந்த அத்தனை சொத்துகள் முதல் பல்வகையான சுத்துமாத்துகள் காமலீலைகள் வரை.., நாறிப் புழுத்து எரிஞ்சு சாம்பலாகிப் போனான். சொத்துச் சண்டை மட்டும் தற்போது நடக்கின்றது.


அதேபோல இந்த காமயோக ஜிலேபி பாபாவின் தொங்குகின்ற படத்திலிருந்து திருநீறு கொட்டுவதாக படக் கலவை செய்து, கதை விடுகின்றவர்கள், முடிந்தால் காமயோக ஜிலேபி பாபாவின் மூத்திர வாசலால் லீற்றர்க் கணக்காக பால் பொழிந்தது, அவனது மல வாசலால் மூடைக் கணக்கில் அரிசி – மாவு கொட்டியது, அதனை நாம் தினமும் பசியால் வாடுகின்ற ஆசிய – ஆபிரிக்க மக்களுக்கு  அனுப்புகின்றோம். அதற்காக காமயோக ஜிலேபி பாபா ஓர் மாபெரும் கப்பலை தனது சக்தியால் திருஷ்டித்துள்ளார்..!? என்ற ஆதாரத்தினைக் காண்பியுங்களேன்..!? நாமும் உந்தக் கள்ளர் குகை பற்றி எழுதாது விடலாம்.

எவரொருவர் தன்னைச் சாமியென்றும், கடவுளின் அவதாரம் தானே என்றும் சொல்கின்றாரோ, அப்போதே அவர் மாபெரும் சுத்துமாத்துக்காரர் என்பதனை நாம் புரியவேண்டும்.


பாதைகளிலும், கோயில் வீதிகளிலும் ஐந்துக்கும் பத்துக்கும் துண்டு விரிக்கும் சிறு வித்தைக்காரரின் பெருமட்டுச் சிந்தனை தான் இந்தக் கடவுளின் அவதாரம் என்ற புரளித்தனம்.


இந்த காமயோக ஜிலேபிச்சாமியால் முடிந்தால், கீழுள்ள வித்தைக்காரர்களைப் போல் ஆழமான நீர் மேலே எந்தத் துணையுமின்றி நடந்து காட்டச் சொல்லுங்கள். எந்தவித அணியங்களுமின்றி ஆகாயத்தில் பறந்து காட்டச் சொல்லுங்கள்.


நித்தியானந்தா ரஞ்சிதா மீது நடக்கின்ற வழக்குப் போன்று, காமயோக ஜிலேபிச்சாமியான இவன் மீது இந்தியாவில் சட்டப் பிரச்சினை – பிடியாணை – வழக்கு இல்லையென நிரூபிக்கச் சொல்லுங்கள்.


இந்தியாவுக்குப் போக முடியாமல், புடையன் பாம்பு போல லண்டனிலே எதற்காகக் கிடக்கின்றாய் என இவனைக் கேளுங்கள்.


இவன் எதற்காக அமெரிக்காவுக்குப் போகின்ற விசாவைப் பெறுவதற்கான
sponsor ஆதரவாளரைத் தேடுகின்றானே, அது ஏனெனக் கேளுங்கள்.


  1. http://www.youtube.com/watch?v=sBQLq2VmZcA
  2. http://www.youtube.com/watch?v=VAEw-gtDkO4&feature=related

 

- மாணிக்கம்

26/09/2011

 

முன்னைய பதிவு

1.சரவணபாபா என்னும் ஜிலேபி சாமியார் லண்டனில். உங்கள் பணம் பத்திரம்..!!

2.உங்களுக்கு இன்னொரு விசயம் தெரியுமோ..? -ஜிலேபி சாமியார் லண்டனில் (பகுதி 2)


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது