Language Selection

கலையரசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தியாக ராஜன்: கலையரசன், தமிழர்களுக்கு எதிரான போக்கு என்பது அனைத்து சிங்கள பொதுஜனமத்தியிலும் ஊடுறுவி உள்ளபோது அவர்களை தமிழர் நலனுக்காக திரட்டுவதில் பின்னடைவு ஏற்படுவது இயல்புதானே இதற்கு உங்கள் பதில் என்ன?

 

 

Kalaiy Arasan: தியாகராஜன், அதை எப்படி நீங்கள் அறுதியிட்டுக் கூற முடியும்? சிங்கள மக்கள் அனைவரும் தமிழருக்கு எதிரானவர்களா? இந்தியாவில் பெரும்பான்மை இந்துக்கள் முஸ்லிம்களை சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதைப் போலத்தான் இலங்கையில் சிங்களப் பொதுஜனத்தின் மனப்பான்மையும் உள்ளது. ஆதி காலத்தில் இருந்தே தமிழர்கள் இந்திய மேலாண்மையின் ஆதரவாளர்கள் என்ற கருத்து சிங்களவர்கள் மனதில் உண்டு. பிற்காலத்தில் அந்த அச்சத்தை பயன்படுத்திக் கொண்ட அரசியல்வாதிகள் அதனை இனவாதமாக வளர்த்தெடுத்தார்கள். இருப்பினும் அவர்களால் எல்லோரையும் இனவாதிகளாக மாற்ற முடியவில்லை.

 

எனக்குத் தெரிந்த வரையில் பெரும்பான்மை சிங்களவர்கள் தமிழர்களுடன் நல்லுறவைப் பேணி வருகின்றனர். இலங்கையின் மொத்த சனத்தொகையில் தமிழர்களின் எண்ணிக்கை 20 % இருக்கலாம். அதில் அரைவாசிப் பேராவது இன்றும் சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இனக்கலவரங்கள் நடந்த காலங்களில் தமிழர் படுகொலையை பெரும்பான்மை சிங்களவர்கள் தடுக்கவில்லை என்பது உண்மை தான். (விதிவிலக்காக சிலர் இருந்தனர்.) குஜராத்தில் முஸ்லிம்களை படுகொலை செய்யும் போது பெரும்பான்மை இந்துக்கள் தடுக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

 

சாதாரண சிங்களப் பொதுமக்கள் அன்பாகப் பழகக் கூடியவர்கள். இருப்பினும் அவர்களுடன் அரசியல் பேசப் போனீர்கள் என்றால், கருத்து முரண்பாடு எழுவதை தவிர்க்க முடியாது. இங்கே  தமிழர் பக்கத்தில் மட்டுமே நியாயம் இருப்பதாக பேசியதைப் பார்த்தீர்கள் தானே? சராசரி சிங்களவரும் அதே மாதிரித் தான் பேசுவார். அதாவது சிங்களவர் பக்கத்தில் மட்டுமே நியாயம் இருப்பதாக பேசுவார். இப்படியான சராசரி சிங்கள/தமிழ் பொதுஜனத்துடன் நீங்கள் அரசியல் பேச முடியாது. சொல்வதற்கெல்லாம் ஆம் என்று தலையாட்டி விட்டுப் போகலாம். அவர்களின் கருத்தை தவறென்று விமர்சித்தீர்கள் என்றால், உங்களை எதிரியைப் போல பார்ப்பார்கள். இது தான் யதார்த்தம்.

 

தியாக ராஜன் ஒரு ஒப்பீடு செய்கிறீர்கள் பெரும்பான்மை இந்துக்குகள் மற்றும் பெரும்பான்மை சிங்களவர் என்று இந்தியாவில் பெரும்பான்மை இந்துக்கள் இருப்பினும் இடதுசாரிகள் முக்கிய இடத்தில் வலுவான குரல் எழுப்புகிறார்கள் அது காஸ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக அதைபோன்ற குரலை அங்குள்ள புதியஜனநாயகம் போன்ற கம்யூனிஸ்டுகள் கூட எழுப்பாமல் மழுப்புவது ஏன்?

 

Kalaiy Arasan: தியாகராஜன் நீங்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையின் இனப்பிரச்சினை நீங்கள் அறிந்திருப்பதைப் போன்று அத்தனை இலகுவானதல்ல. தமிழர்கள் ஒடுக்குமுறைக்குள்ளான போதெல்லாம் இடதுசாரிக் கட்சிகள் எதிர்த்துப் போராடி வந்துள்ளன. எழுபதுகளில் வட இலங்கை அரசியல்வாதிகள் பிரச்சினையை இனவாதக் கண்ணோட்டத்துடன் அணுகும் வரையில், அவர்கள் தமிழரின் உரிமைகளுக்காக வாதாடினார்கள்.

 

உங்களுக்கு ஒரு தகவலைச் சொல்ல விரும்புகின்றேன். இலங்கை சுதந்திரமடைந்த காலகட்டத்தில் இடதுசாரிக் கட்சிகள் பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் மூன்றாவது சக்தியாக இருந்தன. மலைநாட்டு பெருந்தோட்டத் தமிழ் தொழிலாளர்கள் இடதுசாரிக் கட்சிகளுக்கு வாக்குப் போட்டனர். அதனால் அரசு இந்திய வம்சாவளித் தமிழரின் வாக்குரிமையை பறித்தது. இந்திய அரசுடன் ஒப்பந்தம் போட்டு பெருமளவு மலைநாட்டுத் தமிழர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். இன்று அவர்களும் இருந்திருந்தால் இலங்கையில் தமிழரின் எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கும். சிறிலங்கா அரசின் தமிழர்களுக்கு எதிரான முதலாவது ஒடுக்குமுறை இடம்பெற்ற காலத்தில், வட இலங்கைத் தமிழ்த் தேசிய தலைவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? மலைநாட்டுத் தமிழரின் குடியுரிமையை பறித்த சட்ட அமுலாக்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள். அவர்களை இந்தியாவுக்கு நாடுகடத்தியதையும் எதிர்க்கவில்லை. அப்போதெல்லாம் இடதுசாரிகள் மட்டுமே எதிர்த்துக் கொண்டிருந்தார்கள். தமிழ் தேசியத் தலைவர்கள் சிங்கள பேரினவாதத்துடன் கை கோர்த்துக் கொண்டு தமிழர்களை ஒடுக்கினார்கள்.

 

இன்று தமிழக இடதுசாரிகளில் எத்தனை பேர் தமிழ் தேசியவாதத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியும். அதே போன்ற சூழல் தென்னிலங்கையிலும், வட இலங்கையிலும் தோன்றியது. தென்னிலங்கையில் சிங்கள தேசியவாதமும், வட இலங்கையில் தமிழ் தேசியவாதமும் இடதுசாரிகளை பலவீனப் படுத்தினார்கள். பெரும்பான்மை சிங்களவர்கள் சிங்கள தேசியத்தின் பக்கம் நின்றதால், சிங்கள இடதுசாரிகளும் அந்த நீரோட்டத்தில் இழுபட்டுப் போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதே போன்ற நிலைமை வட இலங்கையிலும் காணப்பட்டது. தமிழ் இடதுசாரிகள் தமிழ் தேசியத்தை ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார்கள்.

 

ஆனால் அதே நேரம், தமிழர்கள் ஒடுக்கப்பட்ட நேரத்தில் சிங்கள இடதுசாரிகள் எல்லோரும் ஆதரித்தார்கள் என்று கருதுவது தவறு. இந்தியாவில் சி.பி.ஐ., சி.பி.எம்., போன்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசுடன் சேர்ந்து நிற்பது உங்களுக்கு தெரியும். அவர்கள் காஷ்மீர் பிரிந்து போவதை ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா? அதே போன்று தான் இலங்கையின் பாரம்பரிய கம்யூனிஸ்ட், சோஷலிசக் கட்சிகள் அரசுடன் சேர்ந்து நிற்கின்றன. இந்தியாவில் காஷ்மீருக்கு ஆதரவாக குரல் எழுப்புவதாக நீங்கள் குறிப்பிட்ட இடதுசாரிக் கட்சிகள்/குழுக்கள் மிகச் சிறியவை. அப்படியான கட்சிகள் இருப்பதே பெரும்பான்மை மக்களுக்கு தெரியாது. அதே போன்ற நிலைமை தான் இலங்கையிலும் உள்ளது. சில சிறிய சிங்கள இடதுசாரிக் கட்சிகள்/குழுக்கள் தமிழர்களின் உரிமைகளுக்காக வாதாடுகின்றன. உதாரணத்திற்கு, தொன்னூறுகளில் ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து, "ராவய" என்ற இடதுசாரிப் பத்திரிகை நடத்திய குழு, தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தது. அந்த காரணத்தினால் அரச அடக்குமுறைகளையும் எதிர்கொண்டது. சிறிய குழுக்களை யாரும் கணக்கெடுப்பதில்லை. அதனால் தான் உங்கள் கவனத்திற்கும் அது வரவில்லை.

 

தியாக ராஜன்: இனிமேல் நடக்கும் போராட்டம் வர்க்க போராட்டமாக ஆக ஈழத்தில் மட்டுமல்லாமம் இலங்கை தீவு முழுக்க வேலை செய்திருக்க வேணும் அம்மாதிரி ஏற்பாடு எதாவது செய்யப்பட்டுள்ளதா அல்லது செய்யப்படுகிறதா இடதுசாரிகளால்

 

Kalaiy Arasan: தியாகராஜன், இந்த இடத்தில் சிங்கள/தமிழ் தேசியவாதிகளுடன் முரண்பாடு வருவதை தவிர்க்க முடியாது. அவர்களின் ஆதிக்கம் இன்னும் முழுமையாகப் போய் விடவில்லை. இடதுசாரிகளின் பலம் குறைவு என்பதும், மக்களின் ஆதரவு குறைவு என்பதும் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விடயங்கள். பல வருடங்களாக வர்க்கம் என்ற ஒன்றே கிடையாது என்பது போல நடந்து கொள்கின்றனர். அவர்களைப் பொறுத்த வரையில் சிங்களம், தமிழ் என்ற இரண்டு வர்க்கங்கள் தான் நாட்டில் இருக்கின்றன. இந்த சிந்தனையில் இருந்து மக்களை மீட்டெடுப்பது இலகுவான காரியமல்ல. சிங்கள, தமிழ் பொது மக்கள் வர்க்க ரீதியாக ஒன்று சேர்வது இனவாதிகளுக்கு பிடிக்காத விஷயம். பல தடவை பொருளாதாரப் பிரச்சினைகள் வேண்டுமென்றே இனப்பிரச்சினையாக மாற்றப் பட்டுள்ளன. அண்மைக்கால உதாரணம்: தமிழக மீனவர்களின் பிரச்சினை.

 

தியாக ராஜன்: //அவர்களின் ஆதிக்கம் இன்னும் முழுமையாகப் போய் விடவில்லை. இடதுசாரிகளின் பலம் குறைவு என்பதும், மக்களின் ஆதரவு குறைவு என்பதும் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விடயங்கள்//

இடது சாரி குறுகிய தேசியவாதமே பின்னடைவுக்கு காரணம் என்பதை மக்களின் மண்டையில் ஏற்றுவது சிரமமான காரியம் தான் ஆனால் அதை செய்துதானே ஆகவேண்டும்? தமிழ் நாட்டில் சாதியை மீறி கட்சிகட்டுவதை போன்றது அது (சிபிஎம் போன்ற கட்சியில் கூட சாதிபார்த்து சீட் தருவது சாதாரணம் நடைமுறையாகிபோனது பின்னடைவே)

 

Kalaiy Arasan: நிச்சயமாக, இலங்கையில் தற்போது நிலைமை ஓரளவு மாறி வருகின்றது. நீண்ட காலமாகவே யுத்தம் இரண்டு பக்கத்திலும் இனவாதத்தை வளர்த்து வந்தது. எல்லாவற்றையும் விட தேசப்பாதுகாப்பு முக்கியம் என்று அரசு கூறியது. தமிழீழம் முக்கியம் என்று புலிகள் கூறி வந்தனர்.

 

தற்போது யுத்தம் ஓய்ந்து விட்ட காலத்தில் மக்கள் பொருளாதார பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். யுத்தத்தால் வட-கிழக்கு மாகாண மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். அவர்களின் பிரச்சினைகள் வர்க்கப்போராட்டத்தின் மூலமே தீர்க்கப்படும் என்ற கருத்தை இடதுசாரிகள் முன்வைக்கின்றனர். குறிப்பாக கொழும்பில் தங்கி கல்வி கற்று விட்டு ஊர் திரும்பிய தமிழ் இளைஞர்கள் இடதுசாரிக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

 

சிங்கள மக்கள் மத்தியில் விலைவாசிக்கு எதிரான, தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. அண்மையில் கல்வியை தனியார்மயப் படுத்துவதை எதிர்த்து மாணவர்கள் போராடினார்கள். இலங்கையில் பல்கலைக்கழகம் வரையில் இலவசக் கல்வி வழங்கப்பட்டு வருவதை நான் இங்கே குறிப்பிட வேண்டும். அனைத்து பிரஜைகளுக்கும் இலவசக்கல்வி மட்டுமல்ல, இலவச மருத்துவ சேவையும் ஏழை மக்களின் வாழ்க்கை மேம்பட உதவியது. இலங்கையில் இன்னும் பல அத்தியாவசிய சேவைகள் அரசு வசம் இருந்து வந்தன. அவற்றை ஏற்கனவே தனியாரிடம் கொடுத்து விட்டார்கள்.

 

சமீபத்திய இலங்கை வரலாற்றில் பல தருணங்களில் வர்க்கப்போராட்டம் நடந்துள்ளது. ஆனால் தேசியவாத ஊடகங்கள் அந்தச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. சிங்கள, தமிழ், ஆங்கில ஊடகங்கள் எல்லாமே முதலாளித்துவ நலன் சார்ந்து தான்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது