Language Selection

ரூபன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1974 ஆம் ஆண்டு புதுவருடத்தைத் தொடர்ந்து, வடக்கே நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டுக்கான ஆரவாரங்கள் ஆரம்பமாகியிருந்தது. வடக்கே தென்னோலைத் தோரணங்களும், வாழைமரங்களும், மின் அலங்காரங்களும், சப்பறங்களும், அலங்கார வளைவுகளுமாக யாழ்நகரம் விழாக்கோலம் கொள்ளத் தொடங்கியது.

இவ் ஆரவாரங்கள் இப் புத்தாண்டையடுத்து ஆரம்பமாகி இருப்பினும், மாநாட்டுக்கான முயற்சிகள் 70 களின் தேர்தலுக்கு முன்னரே தொடங்கப்பட்டும் இருந்தது. 22-1-70-இல் யாழ் - வீரசிங்கம் மண்டபத்தில் இந்த மாநாட்டையொட்டி முன்னைநாள் மலேசியப் பல்கலைக்கழக இந்தியத் துறைப் பேராசிரியரும், அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இணைச்செயலாளரும், “தமிழாராய்ச்சி ஏடு”  (Journal of Tamil Studies ) ஆசிரியருமான அறிஞர் தனிநாயகம் அடிகள் கருத்தரங்கு ஒன்றை நடத்த இருந்தார்.

 

இக்கருத்தரங்குக்கு முதல்நாள் ''நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு - நமது பொறுப்புக்கள் யாவை?” என்ற கட்டுரை (21-1-70 இல்) 'ஈழநாடு' பத்திரிகையில் வெளிவந்திருந்தது.

 

இக்கட்டுரை அன்று தமிழாராய்ச்சி மாநாட்டின் பொறுப்பை 'நறுக்'கென்று சொல்லியிருந்தது. 'இதிகாசங்கள், புராணங்களின் அடிப்படையில் ஆய்வுகளைச் செய்வதைவிட, இன்றைய யதார்த்த நிலையிலிருந்து இவ்வாராட்சி மாநாட்டை நடத்தும்படி' இது கோரியிருந்தது. இக்கட்டுரை சிங்கள தமிழ் புத்திஜுவிகளை, கல்விமான்களை கவர்ந்துமிருந்தது. மாநாட்டுக் குழுவினர் இக்கட்டுரையின் கருத்தை ஏற்றுக்கொண்டதுடன், மூன்றாவது தமிழாராய்ச்சி குழுவுக்கும் (பிரான்ஸ்) இதை அனுப்புவது எனத் தீர்மானித்தனர். இக்கட்டுரை பின்னர் புத்தகமாக வெளிவந்துமிருந்தது.

 

தமிழ்மொழியைப் பேசுகின்ற முதலிரு மாநாடுகளையும் நடத்திய ஆசியநாடுகளில், அந்நாட்டு அரச தலைவர்களே இம்மாநாட்டைத் தொடங்கி வைத்தனர். இதனால் சிறீமாவோ பண்டாரநாயக்கா இம்மாநாட்டைத் தொடங்கி வைக்கவேண்டும் என்ற பிரச்சனை 'தேர்தலின் (70) பின்னர் தரகு அரசியல்களுக்கு இடையே பலத்த முரண்பாடாக மாறத் தொடங்கியும் இருந்தது.

 

72 இல் புதிய அரசியல் அமைப்பை அடுத்து இப்பிரச்சனை முறுகல் நிலையை எட்டியிருந்தது. ''பிரதமர் சிறிமாவை மாநாட்டுக்கு அழைப்பதன் மூலம் சர்வதேச பிரதிநிதிகள் முன்னிலையில் அவர் கவுரவிக்கப்படுவது முரண்பாடாக அமையும்'' என்று இளைய தீவிரவாத தலைமுறையினரும், தீவிரவாத இளைஞர்களுக்கான அரசியல் போக்காக இதைப் புடம்போட்டுக் காட்டும், வணிகத்தரகுகளின் கபடம் நிறைந்த 'தரகுப் போட்டியின்' பழிவாங்கும் அரசியலாக இம்மாநாடு கையாளப்பட்டது!

 

இம் முரண்பாடானது முற்போக்காளரை அனைத்துலக தமிழாராய்ச்சி மன்றத்தின் - இலங்கைக் கிளையில் இருந்து வெளியேறவும், இம்மாநாட்டை பகிஸ்கரிக்க முற்படவும் வைத்தது. அனைத்துலக தழிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் டாக்டர் எச்.டபிள்யூ. தம்பையா தனது தலைமைப்பதவியைத் துறந்திருந்தார். டாக்டர் எச். டபிள்யூ. தம்பையா, கோலாலம்பூர் மாநாட்டிற்கு இலங்கைக் குழுவுக்குத் தலைமை வகித்துச் சென்றவர். இவர் அப்பொழுது இலங்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்தார்.

 

1972 ஆம் ஆண்டிலேயே  இலங்கைக் கிளையின்  'மாநாட்டுக்கான' பொதுக்கூட்டம் பம்பலப்பிட்டி மிலாகிரிய அவெனியூவிலுள்ள 'சாந்தம்' மனையிலே கூடுவதற்கு முன்பே....

 

வணிக, தொழிற்துறைத் தரகுமுகாம்களின் நலன்சார்ந்த இரு முகாமைத்துவக் கட்சிகள், இக்கிளைக்குள்ளேயே உருவாகியிருந்தன. ஆளுங்கட்சி  தொழிற்துறை தரகுநலன் சார்பாக கொண்டுவர இருந்த புதிய யாப்பு ஆவணம் பற்றியும், அவர்கள் பதவியில் வைக்க இருந்த முகாமைக் குழுவினர் பற்றியும், அக்கட்சியினைச் சேராத  -வணிகத்தரப்பு நலன் சார்ந்த - வட்டங்களுக்குப் பொதுக்கூட்டத்தின் முன்பே தமது ஆளுமையைக் கொண்டுவர திட்டமிட்டனர்.

 

இதனால் ஆளுங்கட்சி தரப்பு எதிர்பாராத அளவுக்குத் தமிழறிஞரும் தமிழபிமானிகளும், இளைஞர் ஆதரவுகளும், பெருந்திரளாகப் பொதுக்கூட்டத்திற்கு எழுந்தருளியிருந்தார்கள். அந்தக் கூட்டத்திலே ஆளுங்கட்சியினர் கொண்டு வந்த யாப்பாவணம் பல்வேறு திருத்தங்கள் மூலம் புதிய வடிவம் பெற்றமையும் அவர்கள் முன்வைத்த முகாமைக்குழு உறுப்பினருக்குப் பலத்த போட்டி ஏற்பட்டு அவர்கள் தோல்வியுற்றனர். அன்று முதல் தொடர்ந்து பல மாதங்களாகத் தமிழர் வட்டாரங்களிலே 'இந்த வெற்றி' தீவிரவாத இளைஞர் மட்டத்திலும் அதன் மேய்ப்பர்களாலும் சிலாகித்துப் பேசப்பட்டன.

 

இந்தக் கூட்டம், இலங்கை அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றக் கிளைக்குப் புதியதொரு முகாமைச்சபையை உருவாகியது. இச்சபைக்கு கோலாலம்பூர் மாநாட்டில், தமிழாராய்ச்சி மன்றத்தின் துணைத்தலவர்களில் ஒருவராக அங்கு நியமனம் பெற்றிருந்தார்! தம்பையா கம்யூனிஸ்டுகளின் முற்போக்கு சங்கத்தினரின் கருத்தை ஆதரித்தவர். ஆயினும், அவரை -இக்கூட்டத்தில்-  இலங்கைக் கிளையின் முகாமைக்குழுவின் தலைவராகப் பிரேரித்த போது யாருமே மறுப்புத் தெரிவித்திருக்கவில்லை. ''அரசுடன் ஒத்தூதும் இடதுசாரிகளை அநுமதிக்க இடம் வைக்கக்கூடாது!''  என்று  வணிகத்தரகுப்பக்கம் 'துணிந்தவர்களும்', ஆமோதித்தனர்.

 

1973 அக்டோபர் ஆரம்பம் வரை அடுத்தடுத்து நடைபெற்ற முகாமைக்குழுக் கூட்டங்களில், எச்.டபிள்யூ.தம்பையா அவர்கள், ஒரு வருடத்துக்கு மேலாக மாநாட்டினைக் ''கொழும்பிலே வைக்கவேண்டும்'' என்று வலியுறுத்தி வந்தார். 

 

1973-10-02 ஆம் திகதி 'தமிழ் இளைஞர்களை' (ஏனைய அரசியல் போக்கைச் சார்ந்த கைதிகளை அல்ல!) விடுதலை செய்யக் கோரி வடக்குக் கிழக்கில் பூரணகர்த்தால் நிகழ்த்தப்பட்டு, கைதிகள் விடுவிக்கப்படத் தொடங்கியபோது மூன்றாவதுநாள் நடத்தப்பட்ட முகாமைக்குழுக் கூட்டத்தில் தம்பையாவைப் பார்த்து ''தலைமைப் பதவியினைத் துறக்கும்படி '' வணிகத்தரகு சார்பினர் முகத்திற்கு முன்னே கேட்டனர். அவரும் உடனே தனது பதவியை துறந்திருந்தார். இவரும் பதிலுக்கு, இந்தக் ''கவரிமான்''களிடம் தான் நன்கொடையாக வழங்கிய பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டும் கொண்டார்.

 

இதையடுத்து  1973-10-05 ம் திகதி பேராசிரியர் சு.வித்தியானந்தனை தலைவராகவும், கட்டடக்கலை வரைஞர் துரைராஜாவை செயலாளராகவும், கோ.மகாதேவாவை பொருளாளராகவும் கொண்டு புதிய இம் 'மாநாட்டுக்குழு' அமைக்கப்பட்டது. இதன்பின் பாதுகாப்பமைச்சர் லக்ஷ்மண் ஜெயக்கொடியின் அழைப்பினை ஏற்றுத் தலைவர் (பேராசிரியர் சு. வித்தியானந்தன்) தனியனாகவே அமைச்சரைச் சந்தித்தார்.  இதன்போது அமைச்சர் மூன்று அம்சக்கோரிக்கையை முன்வைத்தார்.

 

1. மாநாடு கொழும்பிலே நடத்த வேண்டும்; மாநாட்டிற்கு பண்டாரநாயக்க மண்டபத்திலே எவ்விதமான கட்டணமும் இன்றி இலவசமாகத் தரப்படும்.

2. பிரதமர் சிறிமா மாநாட்டினை ஆரம்பித்து வைக்கவேண்டும்.


3. அமைச்சர் செல்லையா குமாரசூரியர் வரவேற்புரை ஆற்றவேண்டும். மாநாட்டில் கலந்து கொள்ள இருந்தவர்களுக்கு அரசின் செலவில் தங்கும் வசதியும் உணவு வசதிகளும் முன்வைக்கப்பட்டன.

 

''தலைவர் முதல் அம்சத்தினையே மறுத்து விட்டார், அதனால் பேச்சுகே இடமில்லாமற் போய்விட்டது.'' என தீவிரவாத இளைஞர்களை உசுப்பேத்தி மகிழ்ந்தனர். (மேற்படி முரண்பாடுகளே புதிய தலைமையை உருவாக்கியது என்பது இங்கு சுவாரசியமானது. பிரான்சில் -70இல்- நடந்த மாநாட்டில் இலங்கைக் கிளை சார்பாக பேராசிரியர் சு. வித்தியானந்தன், கலாநிதி க. கைலாசபதி, ஜனாப் எஸ். எம். கமாலுதீன் எனும் மூவரும் பிரதிநிதிகளாக கலந்துகொண்டனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.)

 

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (இ.மு.எ.ச.) ஜக்கிய முன்னணி அரசு 1970இலே தோன்றியபோது மீண்டும் தழைத்தோங்கியது. அதேவேளை அமைச்சர் செல்லையா குமாரசூரியர் தமிழ் சம்பந்தமான விடயங்களுக்கான அரசின் பிரதான ஆலோசகராகவும் இருந்தார். இந்தக் கட்டத்திலே கே.சி.தங்கராசா குழுவினரை ஓரங்கட்டும் முகமாக ''அரச ஆசிகளோடு வலம் வந்து கொண்டிருந்தவர்களை முகாமைச் சபையிலே சேர்த்துத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடாத்த முடிவு கட்டுகின்றனர்.'' என இவர்கள் இளைஞர்களை இனவாதமாகத் தனிமைப்படுத்தினர். (இவ் - இ.மு.எ.ச- முக்கியஸ்தர்களே பின்னாளில் புலித்தேசியத்தின் பீரங்கிகளாக இருந்தனர் என்பது முரண்நகையாகும். இவை பற்றி அக்கால நிகழ்வுகளுடன் ஆராய்வோம்.)

 

இவை அனைத்தும் 73ஆம் ஆண்டு கால்இறுதிஆண்டில் நடந்து கொண்டிருக்கின்றன.

 

இக்காலத்தில் தெற்கிலே, 71 கிளர்ச்சியில் கைது செய்யப்பட்ட யே.வி.பி உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும்படியும், அவர்களை புனர்வாழ்வு மற்றும் இயல்பு பொதுவாழ்க்கையில் இணைக்கும்படியும், கொல்லப்பட்ட யே.வி.பி உறுப்பினர்களின் குடுப்பத்தினருக்கு நட்டஈடு வழங்கும்படியும், யுத்தக்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் உரியபடி விசாரிக்கப்பட வேண்டுமெனவும் சிங்கள மக்களின் வலியுறுத்தல்கள் அமைப்புருவாக மேலெழுந்திருந்தன.

 

இந்நெருக்குதலின் விளைவும், மாநாட்டில் வெளிநாட்டவர்களின் பங்குபற்றுதலும், நெருங்கிவரும் 'சிறிமா - இந்திரா' ஒப்பந்தத்தையும் அரசு கணக்கில் கொண்டு அரசு:- ஒரு தொகுதி கைதிகளை 73 இறுதி மாதங்களில் விடுதலை செய்தது.

 

யே.வி.பியின் முக்கிய தலைவர்கள் மற்றும் இக்கிளர்ச்சியில் முக்கிய பங்கெடுத்தவர்கள் புறநீங்கலாக, ஏனையோர் விடுதலை செய்யப்பட்டனர். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சண் உட்பட, இலங்கை திராவிடக் கழக உறுப்பினர், தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க உறுப்பினர்கள் (கே.டானியல் உட்பட), தமிழ் தீவிரவாத இளைஞர்களில் குட்டிமணி தவிர - ஏனையோர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

 

அரசு தலைநகரில் மாநாட்டை நடத்தி, அதற்கு ஒத்துழைப்பை வழங்கி - திறந்துவைத்து - 'நல்லபிள்ளைத் தரகாக' தனது முரண்பாட்டை மாற்ற அரசு காய்களை நகர்த்தியது. யாழ்.வீரசிங்கம் மண்டபம் உட்பட, யாழ்.மேயரின் நிர்வாகத்தின் கீழிருந்த முற்றவெளி அரங்கமும், அரச பாடசாலை மற்றும் பொதுமண்டபங்களும் மாநாட்டு குழுவுக்கு புத்தாண்டுக்கு முன் மறுக்கப்பட்டது.

 

இச்சதுரங்க விளையாட்டுக்கு எதிர்க் காய் நகர்த்தலாக, குடாநாட்டு திரைப்பட மாளிகையின் உரிமையாளர்கள் பேரம்பலத்தின் கடிதமூலமான வேண்டுகோளை ஏற்று ''1974 தை 3 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிவரை நான்காம் தமிழாராய்ச்சி மாநாடு கண்டிப்பாக யாழ்நகரில் இடம்பெறும் என'' இலவசமாக  விளம்பரப்படுத்தப்பட்டது. இதையடுத்து கரையோர கடல் கண்காணிப்பை வழமைக்கு அதிகமாக அரசு அதிகரித்தது. (இந்தியாவில் இருந்து மாநாட்டுக்கு பேச்சாளர்கள் கடத்தப்படுவதைத் தடுக்க)

 

இந்த நேரத்தில் குட்டிமணி வெடிமருந்து 'சக்கைகளை' ஏற்றி வள்ளத்தில், இலங்கைக்கு கடத்திவர முற்பட்டார். இவ்வள்ளம் கடற்படையினரின் கண்ணில் ஏத்துப்படவே, குட்டிமணி இந்தியாவை நோக்கி ஒடி தப்பித்த வேளை இந்தியக் கரையில் வைத்து கைதுசெய்யப்பட்டார். பின்னர் இவர் (கருணாநிதி அரசால்) இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டார்.

 

இந்த நிகழ்வுக்குப் பின்னர் தான் கைதிகளை விடுதலை செய்யக்கோரி வடக்குக் கிழக்கில் பூரணகர்த்தால் நிகழ்த்தப்பட்டது (02-10-73).

 

இந்த நிகழ்வுகளை அடுத்து.....

 

1973 ஜப்பசியில் சம்பத்தரிசியார் கல்லூரியில் நடந்த உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டியின் போது, இராணுவத்துக்கும் குருநகர் மக்களுக்கும் இடையில் நடந்த தகராறைத் தொடர்ந்து....

 

சேந்தாங்குளம் சந்தியில் சங்கானை சங்கரத்தைக்காரர் ஒருவருக்குச் சொந்தமான காரொன்றை இராணுவத்தினர் தீயிட்டுக் கொழுத்தியிருந்தனர். மேற்படி தகராறைச் சாட்டாக வைத்து, சேந்தாங்குளத்தில் இருந்து வல்வை வரையான கரையோரப் பாதையோரக் (ஏ - 40) கடைகளை கொள்ளையிட்டும், இவ்வீதியால் வருவோர் போவோரை ஆங்காங்கே தாக்கியும் அரச பொலீசார் அட்டகாசம் செய்துமிருந்தனர்.

 

1973 நவம்பரில் மலையகப் பகுதியில் யூஎன்பி மற்றும் தொண்டமான், தமிழரசுக் கட்சியின் ஒத்துழைப்புடன் ''மக்கள் வெற்றிகரமாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில்'', விடுதலை செய்யப்பட்டு வெளியே வந்திருந்த 10 தீவிரவாத இளைஞர்கள் இதில் கலந்து கொள்ள மலையகம் சென்றனர். இதில் ஒருவர் சிவகுமாரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இப்பின்னணியில் தான் 1974 ஆம் ஆண்டும் பிறந்தது.

 

(ஆண்டு 1974 முதலாம் பகுதி)

 

வருடப்பிறப்பு அன்றே அரசு, நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டை யாழில் நடாத்துவதற்கும், அதற்கான மண்டபங்களுக்கான அனுமதியையும் வழங்கியது. இதையடுத்து யாழ்ப்பாணம் விழாக்கோலம் கொள்ளவும் தொடங்கியது.

 

மாநாட்டின் ஆய்வின் அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்திலும், யாழ்.'றிம்மர் கோல்' இலும் நடந்தன. இதன் கலைநிகழ்ச்சிகள் யாழ் திறந்தவெளியரங்கிலும், சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மண்டபத்தில் மாலைவேளைகளில் தமிழர் பண்பாட்டுப் 'பொருட்காட்சி' யும் நடைபெற்று வந்தன. இப்பொருட்காட்சியின் போது, சாலை இளந்திரையனைத் தலைவராகவும், குரும்பசிட்டி இரா. கனகரத்தினத்தை (இவர் ஒரு ஆவணத் தொகுப்பாளர்) செயலாளராகவும் கொண்டு 'உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம்' என்ற ஒன்றை சாலை இளந்திரையனால் முன்மொழிந்தும் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இம்மாநாட்டுக் காலத்தில் வருகை தந்திருந்த (அரசினால் பலருக்கு அனுமதி -வெளிநாட்டவருக்கு - மறுக்கப்பட்டிருந்தது!) அறிஞர்களுக்கு ஒரு விருந்துபசாரத்தை யாழ் நகரசபை சார்பாக துரையப்பா இறுதிநாள் வழங்க அழைப்பு விடுத்திருந்தார். இவ்வழைப்பை நிராகரிக்கும் படி 'கூட்டணி'யினரும், தீவிரவாத இளைஞர்களும் 'கவரிமான்' என்ற துண்டுப்பிரசுரம் மூலமாகக் கோரியிருந்தனர்.

 

நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டில் 'அரசியல்வாதிகள்' உரையாற்றுவதை அரசு மறுத்திருந்தது. இருப்பினும் ''உலகத் தமிழர் இளைஞர் பேரவையின்'' தலைவர் டாக்டர் ஜனார்தனனை, தீவிரவாத இளைஞர்கள் கள்ளமாகக் கடத்தி (வள்ளத்தில்) நாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர். இது குட்டிமணியின் கைதுக்கு முன்னர், இரகசியமாக நடந்தது.

 

இறுதிநாளான வழியனுப்பு விழாவான 10-01-74 ஆன அன்று '' சென்னையில் இருந்து தலைவர் டாக்டர் ஜனார்தனன் கலந்துகொள்வார் '' எனக் கூட்டணி பிரச்சாரப்படுத்தியும் இருந்தது.

 

ஆனால் தை 3ஆம் நாள் தொடக்கம் 9ஆம் நாளுக்கு பின்னர் மாநாட்டுக்கான அனுமதிகள் அரசால் மறுக்கப்பட்டிருந்தது.

 

10ஆம் திகதி வழியனுப்பும் மாலை விழாவுக்கான அனுமதியை ஏ.ரி.துரையப்பாவிடம் இருந்து கடிதம் மூலமாக வேண்டவேண்டிய நிலை வணிகத் தமிழ் தரகுகளுக்கு உருவானது. 09ஆம் திகதிவரை அனுமதிக்கப்பட்ட திறந்த வெளியரங்கு, 'றொலெக்ஸ்' ஒளி-ஒலி அமைப்பினர் பாவனைக்கும், சப்பறம் மற்றும் மாநாட்டின் இறுதிநாள் நிகழ்ச்சியை அனுபவிக்கவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.

 

இறுதிநாட்களில் தனது 'விருந்துபசாரத்தை' நிராகரித்த மாநாட்டு குழுவினரின் நடைமுறையை அடுத்து, துரையப்பா குடாநாட்டுக்கு வெளியே சென்றிருந்தார்.

இந்த முரண்பாட்டுச் சிக்கலுக்கு இடையில், கூட்டணியினர் 'ஊர்தி ஊர்வலங்களை' திறந்த வெளியரங்கில் நிறைப்பதன் ஊடாக, 10ஆம் திகதியை வீரசிங்கம் மண்டபத்தின் இறுதிநாளை வெளியே - திறந்த விளையாட்டு அரங்குக்கு நகர்த்துவதும் - வில்லங்க கிரிமினல் வக்கில் மூளையை பாவிக்கத் தொடங்கியது. (ஜனார்த்தனனை முற்றவெளியில் பெரும் சனத்திரள் மத்தியில் பேசவைப்பது சாத்தியமென்ற கிரிமினல் திட்டத்தைத் தீட்டினர்)

 

மாநாட்டு குழுவினர் 'சனநெருசலைச்' சுட்டிக்காட்டி, வெளியரங்குக்கு நகர்வதற்கான அனுமதியை  பொலீசாரிடம் கோரினர். பொலீசார் மாநாட்டு மண்டபத்தின் வெளிச் சுவருக்கு வெயியே அனுமதியை மறுத்தனர். இதனால், வீரசிங்கம் மண்டபத்தின்- திறந்த வெளியை- நோக்கிய முன்வாசலுக்கு பிரச்சார மேடையை நகர்த்துவதற்கு மட்டும் பொலீசார் அனுமதித்தனர்.

 

இந்த நிலையை அடுத்து 'ஊர்திகள் திறந்தவெளியை நோக்கி நகரத் தொடங்கின.

 

நல்லூர் சங்கிலியன் சிலையில் இருந்து புறப்பட்ட பிரமாண்டமான 'ஊர்தி' ஊர்வலம் பொலீசாரால் தடுக்கப்பட்டது. இவ்வூர்தி ஊர்வலத்துக்கு சிவகுமாரன் தலைமை தாங்கினான். பொலிசாருக்கும் _சிவகுமாரனுக்குமான வாக்குவாதம் முற்றியது. '' முப்படை வரினும் ஊர்வலம் தொடரும்'' என சிவகுமாரன் முழங்கினான். இறுதியாக அமைதியாக ஊர்வலத்தை நடத்த பொலீசார் அனுமதி அளித்தனர். டாக்டர் ஜனார்தனன் இவ்வூர்வலத்துக்குள் மறைத்து அழைத்து வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவ்வூர்வலம் யாழ் - ஆஸ்பத்திரி வீதியில், 'உணர்ச்சிக் கோசத்துடன்' கடந்தபோது, தெருவிளக்கு மின்கம்ப வயருடன் ஊர்தி மோதியதால் ஏந்பட்ட 'மின் ஒழுக்கில்' ஊர்வலத்தில் இருந்த இருவர் இஸ்தலத்திலேயே மரணமாகினர்.

74 tamil_aarashi.jpg

இவ் மின்விபத்தையடுத்து யாழ் மின்சாரசபை, யாழ்நகருக்கான மின்சாரத்தைத் துண்டித்தது. இவ்விபத்தையும், இதில் பலியாகிப் போனவர்களின் குடும்ப நிவாரணம், மற்றும் தமதுபக்கக் கவலையீனம், தவறுகளை எதிர்கொள்ளத் திராணியற்ற, வணிகத்தரகுக் கும்பல் கூட்டணியும் இதன் தீவிரவாத இளைஞர் சக்திகளும் இச்சம்பவத்தை வரலாற்றில் மூடிமறைத்தனர். இதற்கு மேலாக இச்சம்பவத்தால் யாழ்நகரம் இருளில் மூழ்கியதை ''துரையப்பாவின் திட்டமிட்ட சதிச் செயல்!'' எனவும், துரையப்பாவின் மீது பழியைப் போட்டனர்.

 

இறுதிநாள் நிகழ்வின் இறுதிப் பேச்சாளரான, தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் நயினார் முகமது பேசிக் கொண்டிருந்தார். நேரம் இரவு 10:30 ஜ தாண்டியும் விட்டது. இரவு 10:30 வரைக்குமே இவர்கள் அனுமதியைப் பெற்றும் இருந்தனர். பொலீசார் நேரத்துக்குள் விழாவை முடிக்கும்படியும் அழுத்தம் கொடுத்தனர்.

 

நேரம் கடந்துகொண்டு சென்றது.

 

கூட்டத்தில் இருந்த ஒருபகுதி சனம் ''பேச்சைத் தொடரவிடு!'' என ஆவேசமாக குரல் எழுப்பியது. சில கணத்துக்குள் இரு தரப்பு தரகுகளின் கவுரவ கனவுகளுக்குள் பல பொதுமக்களின் பெறுமதிமிக்க உயிர்களின் மீதான விபரீத விளையாட்டு பணயமானது.

 

முகமதுவின் பேச்சை அடுத்து ஜனார்தனனை பேசவைப்பது, கூட்டணியினரினதும், தீவிரவாத இளைஞர்களினதும் சவாலாக இருந்தது. ஜனார்த்தன் பேசுவதைத் தடைசெய்வதும், அவரை கைதுசெய்வதும் அரச பொலீசார் தரப்பு சவாலாக இருந்தது.

 

இறுதி நேரத்தில்... இதுபற்றிய தெளிவான நேர்மையான, உண்மையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை!...

 

இந்த இருதரப்பு நலன்களுக்குள்ளும் 09 பேர் இறந்திருந்தனர். 09 பேரும் மின்சாரம் தாக்கியும் கிணற்றுக்குள் தவறிவிழுந்தும் இறந்திருந்தனர்.

 

 0309-jan1974.jpg


இவ் இறுதிநாள் நிகழ்வில் உயிர் நீர்த்தவர்களின் விபரம்:

 

01. சின்னத்தம்பி நந்தகுமார் - மாணவன் (14)
02. வேலுப்பிள்ளை கேசவராஜன் - மாணவன்(15)
03. இராசதுரை சிவானந்தம் - மாணவன் (21)
04. பரம்சோதி சரவணபவன் (26)
05. இராஜன் தேவரட்ணம் (26)
06. வைத்தியநாதன் யோகநாதன் (32)
07. ஜோன்பிடலிஸ் சிக்மறிங்கம் - ஆசிரியர் (52)
08. புலேந்திரன் அருளப்பு - தொழிலாளி (53)
09. சின்னத்துரை பொன்னுத்துரை - ஆயுள்வேத வைத்தியர் (56)

 

இதற்குமுன்னர் ஊர்வலத்தில் உயிர்நீர்த்த இருவரின் விபரங்களும் இதுவரை வெளியாகவில்லை! அல்லது எனது தேடலுக்குக் கிடைக்கப்பெறவில்லை!

 

இறுதிநேர நிகழ்வுகள் தொடர்பாக ஒரு பத்திரிகையாளர் மாநாடு நடத்தப்பட்டது. (17-01-74) இதில் துரையப்பா தனது தரப்பு நியாயத்தை முன்வைத்தார்.

 

suthanthiran1.jpg

இவ் இறுதிநேர அனர்த்தங்கள் தொடர்பான விசாரணை அரசால் நடத்த முயற்சிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக இவ் நிகழ்ச்சியை புகைப்படம் பிடித்த, பலாலிவிமான நிலையத்துக்கு அருகில் இயங்கிய செய்தித்தாள் பத்திரிகையாளரான கைலைநாதனின் புகைப்படம் அனைத்தையும் அரச பொலிசார் கைப்பற்றினர். 

 

விசாரணையின் தொடக்கத்தில்...

 

இறுதி நிமிடங்களில், பொலிசார் தீர்த்த 'மேல்வெடி' காரணமாக மின்கம்பவயர் அறுந்து மின்னொழுக்கு நிகழ்ந்ததாக, மாநாட்டு தரப்பினர் வாதிட்டனர். அரச பொலீஸ் தரப்பினர் இதை மறுத்தனர். ஏற்கனவே நிகழ்ந்த மின்னொழுக்கால் ''சம்பவம் நிகழும் வரை'' யாழ் நகருக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாக, ( ஏற்கனவே நிழந்த மின் விபத்து காரணமாக) மின்சாரசபை ஊழியர் தமக்கு வாக்குமூலம் அழித்திருப்பதாக பொலீஸ்தரப்பு அறிவித்தது.

 

இதனால் முற்றவெளியில் இயங்கிய, 'றொலெக்ஸ்' நிறுவனத்தினர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

 

விசாரணைகள் ஒத்துழைப்பின்றி சீர்கெட்டன. இருதரப்பினரும் தமது மக்கள் விரோத செயல்களை மறைப்பதற்கு, இனக்குரோதத்தை இழுத்துப் போர்க்க முற்பட்டனர்.

 

இவ் இழுபறியை அடுத்து....

 

ஒரு பாதிரியாரை முதன்மைப்படுத்தி, கூட்டணி முக்கியஸ்தர் ஒருவரின் சுண்டுக்குழி வீட்டை தலைமையகமாகக் கொண்டு 'சுயாதீன விசாரணையை' மாநாட்டு தரப்பு கோரியது. இதை அரசு கண்டும் காணாமலும் அசட்டை செய்தது.

 

இவ்வாறு இரண்டு தரப்பு மக்கள் விரோதச்செயல்களும் வரலாற்றில் புதைந்து, (புதைக்கப்பட்டுப்) போனது.

 

இறுதிநிகழ்வில் ஜனார்த்தனன் ஒரு பாதிரியாரின் உடையில் மண்டபத்தில் இருந்து தப்பியிருந்தார். ஜனார்த்தனனை கைதில் இருந்து தடுப்பதற்காகவே, இவரைச் சுற்றிய தீவிரவாத இளைஞர்கள், கற்கள் மற்றும் வெற்றுப் போத்தலால் பொலீசாரைத் தாக்கத் தொடங்கினர்.

 

(ஆனால் ஜனார்த்தனன் இலங்கையில் வந்து இறங்கியதும், அவர் இந்தியா தப்பி போகும் வரைக்கும் இவர் மீது எந்த 'கீறலும்' இலங்கை - இந்திய அரசால்'- நிகழ்த்தப்படப்படவில்லை, அல்லது நிகழ்த்தப்படப் போவதில்லை! என்பதை வாசகர் நேயர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்!)

 

ஜனார்த்தனனை அப்புறப்படுத்திய சிவகுமாரன் குறூப்பினர், முற்றவெளியில் சிதறிக்கிடந்த 'செருப்புக்கள்'  உடல்களை அகற்றிய பின்னர், விரத்தியுடன் வீடு திரும்புகின்றான். மாநாட்டு சப்பவத்தின் பின்னர்,  'கூட்டணியின் அரசியலைப் பொறுத்தவரை' சிவகுமாரன் இனி.. ஒரு பிரளயம்!.....

 

(74ஆம் ஆண்டின் பகுதி -2-  இனித் தொடரும்..)

 

- ரூபன் -
190510

 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது