Language Selection

கலையரசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இனியொரு இணையத்தளத்தில் என்னைப் பற்றி வந்த பின்னூட்டம் ஒன்று பல வாதப் பிரதிவாதங்களை கிளப்பிவிட்டுள்ளது. இதையிட்டு என் மேல் கரிசனை கொண்ட பல நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, விளக்கங்களை கொடுக்க வேண்டியுள்ளது.

 

 INSD என்ற ஜெர்மனியை தளமாக கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனம், இனியொரு கட்டுரையின் மையப்பொருளாக இருந்துள்ளது. இந்த நிறுவனம் அண்மையில் (ஆகஸ்ட் 2009 ) இந்தியாவில் ஒழுங்கு செய்த கருத்தரங்கில் பங்குபற்றிய "குற்றத்திற்காக" எஸ்.வி. ராஜதுரை போன்ற பலர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தது. "NGO எனப்படும் அரசுசாரா நிறுவனங்கள் ஏகாதிபத்திய நிதியில் இயங்குகின்றன. அங்கே ராஜதுரை போன்ற மாரக்சியர்களுக்கு என்ன வேலை" என்பது கட்டுரையின் சாராம்சம். கட்டுரையை எழுதியவர் இனியொரு ஆசிரியர் குழுவில் ஒருவரான அசோக். தன்னை ஒரு தூய்மைவாத மார்க்சியராக காட்டிக் கொள்ளும் அசோக், முற்றுமுழுதாக தன்னார்வ நிறுவன தொடர்பேதும் இல்லாதவரா? அசோக் என்ற தனி நபரை விட, அவரது கருத்துகளே எமக்கு முக்கியமானவை. முன்பொரு தடவை டிராஸ்கியை படித்து விட்டு, ஸ்டாலினை பற்றி அவதூறான கட்டுரைகள் எழுதினார். மார்க்ஸை படித்து விட்டு, கார்ல் மார்க்ஸ் தனது மனைவி ஜென்னியை பட்டினி போட்டதாக எழுதினார். பெரியாரை படித்து விட்டு பெரியார் ஒரு தலித் விரோதி என்று தொடர் கட்டுரைகள் வரைந்தார்.


இனியொருவில் அசோக் எழுதிய எஸ்.வி.ராஜதுரை – பொய்கள், மறுபடி மறுபடி பொய்கள்!: கட்டுரைக்கு வந்த பின்னூட்டமொன்றில் ராஜேஸ்வரன் என்பவர் நான் ஐ.என்.எஸ்.டி.யின் முக்கிய உறுப்பினர் எனக் குறிப்பிட்டுள்ளார். அந்தக் அநாமதேயம் சுமத்திய குற்றச்சாட்டை இனியொரு அக்கறையுடன் பரிசீலித்துள்ளது. இனியொருவில் மட்டுமல்ல, வினவு தளத்திலும் ஓடிப்போய் பின்னூட்டமிட்ட ராஜேஸ்வரனுக்கு கலையகம் இருப்பது கண்ணுக்கு தெரியவில்லை.

ராஜேஸ்வரன் பின்னூட்டமும், அதற்கு இனியொரு அளித்த பதிலும் பின்வருமாறு:

...........................................................................................................................................................

#

Rajaswaran

Posted on 11/14/2009 at 11:18 am


இனியொரு ஆசிரியர் குழுவிற்கு மற்றவர்கள் மீது குறை குற்றம் சுமத்த முன் உங்களை நீங்கள் சுயவிமர்சனம் செய்துகொள்ளுங்கள். ஐஎன்எஸ்டி என்ற ஏகாதிபத்திய நிதி நிறுவனத்தைப்பற்றி வாய்கிழிய எழுதுகிறீர்கள்.ஆனால் இந்த அமைப்பின் முக்கிய உறுப்பினரான உங்கள் நண்பர் கலையரசனைப்பற்றி வாய் திறக்கவே மாட்டீர்கள் அவரின் “புரட்சி” கட்டுரைகளை பிரசுரிப்பீர்கள். இது என்ன நியாயம். உங்களைப்போல் புரட்சி போராட்டம் என்று எழுதுகிற வினவு இணையத்தளம் இந்த ஏகாதிபத்திய தாசருக்கு இவரின் இணையத்தளத்திற்கு இணைப்பு கொடுத்துள்ளது. வினவு இனியொரு இணையத்தளங்கள் பேசுவதெல்லாம் ஊருக்கு உபதேசம்தான? எம் பெளசர் இதில் கலந்துகொள்கின்ற ஒருவரே தவிர ஐஎன்எஸ்டியில் அங்கத்தவர் அல்ல. அவரைப்பற்றி எழுதும் அசோக் யோகன் ஐஎன்எஸ்டியில் முக்கிய உறுப்பினர்களான நோர்வே- சரவணன் கொலன்ட் – கலையரசன் சுட்காட் -சிவராஐன் இவர்களைப்பற்றியெல்லாம் வாய்திறக்கமாட்டார். இதுதான் இவர்களின் மாற்று அரசியல்.முதலில் உங்களை திருத்திக்கொள்ளுங்கள் பிறகு ஊருக்கு உபதேசம் செய்யுங்கள். இனியொரு கலையரசனின் பத்துக் கடுரைகள் வரை பிரசுரித்திருக்கிறது. இதற்கு ஒருபடி மேலே போய் வினவு கலையரசனுக்கு ஒரு சிறப்புப் பகுதியையே ஒதுக்கி அவரைப் பெருமைப்படுத்தியிருக்கிறது. இனிமேல் சுசீந்திரன் பற்றிப் பேசுவதை யும் அமார்க்ஸ் ராஜதுரை போன்றோரை விமர்சிப்பதையும் நிறுத்துங்கள்.

Reply

#

இனியொரு

Posted on 11/14/2009 at 2:39 pm


ராஜேஸ்வரன், இனியொரு மீதான உங்கள் விமர்சனத்தை கவனம் கொள்கின்றோம். நீங்கள் குறிப்பிடும் கொலன்டைச் சேர்ந்த கலையரசன் அவர்கள், ஐஎன்எஸ்டி என்ற நிதி நிறுவனத்தோடு மிக நெருக்கம் கொண்ட அதன் அங்கத்தவர் என்பது எமக்கு தெரிந்த பின்னர் அவரின் கட்டுரைகளை பதிவிடுவதை நாம் தவிர்த்துள்ளோம். இறுதியாக அவரின் கட்டுரை 31 ஜனவரி 2009 திகதிக்கு பிற்பாடு பதிவிடப்படவில்லை என்பதை தயவு செய்து கவனம் கொள்ளவும். .

...............................................................................................................................................


இந்த ராஜேஸ்வரன் யார், அவரது அரசியல் பின்னணி என்ன, என்று எவருக்கும் தெரியாது. அப்படி ஒரு பின்னூட்டம் கிடைக்கபெற்ற இனியொரு என்னை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டிருக்க வேண்டும். (இனியொரு எனது கட்டுரைகளை பிரசுரித்ததன் மூலம் என்னோடு சிறந்த நட்புறவைப் பேணியது பின்னூட்டத்தில் இருந்து தெளிவாகின்றது.) ஆனால் அவர்கள் அப்படி செய்யாமல் யாரோ ஒரு அநாமதேயம் சொன்னதை ஆமோதித்து பதில் கூறியுள்ளனர். இனியொருவின் கூற்றுப்படி, நான் ஐ.என்.எஸ்.டி.யுடன் நெருக்கமானவன் என்பதை ஜனவரி 2009 ல் தான் அறிந்து கொண்டார்களாம். நன்று.


ஐ.என்.எஸ்.டி. என்ற புலம்பெயர்ந்த (சிங்கள/தமிழ்) இலங்கையரின் அமைப்பு இயங்கி வருவதை, முதன் முதலாக அசோக் வீட்டில் தான் தெரிந்து கொண்டேன். ஆமாம், "ஐ.என்.எஸ்.டி. பற்றியும், அதிலே கலந்து கொள்பவர்களையும் நார் நாராக கிழித்து தொங்கப் போட்ட" அதே அசோக் மூலாமாக தான் ஐ.என்.எஸ்.டி. பற்றி தெரிந்து கொண்டேன். 2006 ம் ஆண்டு, அன்று பாரிசில் உள்ள அசோக் வீட்டிற்கு ஐ.என்.எஸ்.டி. உறுப்பினரான அவரது நண்பர் வந்திருந்தார். அவர் கொண்டுவந்த ஐ.என்.எஸ்.டி. ஒன்றுகூடல் புகைப்படங்களில் இருந்த நபர்களில் பாதிப் பேராவது அசோக்கிற்கு தெரிந்தவர்களாக இருந்தனர். (அசோக் முன்னிலையில்) அவரது நண்பர், அடுத்த ஐ.என்.எஸ்.டி. கருத்தரங்கிற்கு எனக்கு அழைப்பு விடுவதாக அறிவித்தார்.


அதற்குப் பிறகு, ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரில் ஐ.என்.எஸ்.டி. வருடம் தோறும் நடத்தும் seminar குறித்து மின்னஞ்சல்கள் வந்த போதிலும் நான் கலந்து கொள்ளவில்லை. இதற்கிடையே ஐ.என்,எஸ்.டி. செயற்பாடுகள் குறித்து பல தடவை அசோக்குடன் தொலைபேசியில் கதைத்துள்ளேன். அப்போதெல்லாம் அவரிடம் எதிர்மறையான கருத்துகள் இருக்கவில்லை. நான் முதன் முதலாக ஐ.என்.எஸ்.டி. கூட்டத்தில் கலந்து கொண்டது 2008 ம் ஆண்டு, பெப்ரவரி 1-3 திகதிகளில். அது கூட புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இலங்கையரின் ஒன்றுகூடலாக மட்டுமே இருந்தது. அங்கே நடந்த கருத்தரங்கில் இலங்கையில் சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதில் உள்ள சிரமங்களை குறித்து ஆராயப்பட்டது. அப்போது போர் ஆரம்பமாகி இருந்ததால், இலங்கையில் சமாதானம் பேசுபவர்கள் தேசத்துரோகிகளாக கருதப்பட்டனர். கருத்தரங்கில் பல தரப்பட்ட அரசியல் பின்னணி கொண்டவர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கு செலவுகளுக்காக, அன்று அங்கு புதிதாக வந்தவர்களையும் அங்கத்தவர்களாக இணைத்ததன் மூலம் ஒரு தொகை பணம் சேகரித்தார்கள்.


ஸ்டுட்கார்ட் கருத்தரங்கில் முதன்முதலாக நோர்வேயில் இருந்து வந்து கலந்து கொண்ட சரவணனும், சித்தி விநாயகரும், அதே போன்ற கருத்தரங்கை நோர்வேயிலும் நடத்த விரும்பினர். மே மாதம் 2008, ஒஸ்லோ நகரில் இடம்பெற்ற கருத்தரங்கு மட்டுமே நான் கடைசியாக கலந்து கொண்டது. அந்தக் கருத்தரங்கில், ஐ.என்.எஸ்.டி. ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாக இயங்குவதையிட்டு எனது அதிருப்தியை தெரிவித்தேன். இலங்கையில் சமாதானத்திற்கான இயக்கம் ஒன்றிற்கு, ஐரோப்பிய யூனியன் நிதியுதவி வழங்குவதன் சூட்சுமங்களையும், அதனால் விளையும் ஆபத்தையும் எடுத்தியம்பினேன். எனது விமர்சனங்கள் அங்கே கலந்து கொண்ட, சுதந்திரமான தனி நபர்களுக்கு ஏற்புடையதாக இருந்தது. ஆனால் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் ஐ.என்.எஸ்.டி.யின் முக்கிய உறுப்பினர்களுக்கு ஜீரணிக்க முடியவில்லை. ஒரு என்.ஜி.ஒ. தனக்குரிய எல்லைகளுக்குள் மட்டுமே இயங்க முடியும். அது தான் ஐ.என்.எஸ்.டி.யின் நிலைப்பாடுமாக இருந்தது. ஒஸ்லோ கருத்தரங்கில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளுக்கு பிற்பாடு, நான் இதுவரை எந்தவொரு ஐ.என்.எஸ்.டி. கருத்தரங்கிலும் கலந்து கொள்ளவில்லை. ஒஸ்லோ கருத்தரங்கில், NGO கொள்கையை விமர்சித்து கூறிய கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இனியொரு ஆசிரியர் குழு இதயசுத்தியோடு என்னை அணுகியிருந்தால், மேற்படி விளக்கத்தை அப்போதே அளித்திருப்பேன்.


ஜனவரி 2009 க்குப் பின்னர் எனது கட்டுரைகளை பிரசுரிக்காமல் தவிர்த்ததாக இனியொரு தெரிவிக்கின்றது. அதாவது நான் "ஐ.என்.எஸ்.டி. என்ற ஏகாதிபத்திய தன்னார்வு நிறுவனத்தின் முக்கிய உறுப்பினர்" என்று தெரிந்து கொண்ட பின்னர், அந்த முடிவை எடுத்தார்களாம். நான் ஐ.என்.எஸ்.டி. கருத்தரங்குகளில் கலந்து கொண்டது இரு தடவைகள் மட்டுமே. 2008 ம் ஆண்டு, பெப்ரவரி, மே ஆகிய மாதங்களில் அந்த கருத்தரங்குகள் இடம்பெற்றன. இனியொரு இணையத்தளத்தில் முதன்முதலாக ஆகஸ்ட் 2008 ல் தான் எனது கட்டுரைகள் வெளிவரத் தொடங்கின. அதே மாதம், இனியொரு ஆசிரியர் குழுவில் என்னையும் இணைந்து பணியாற்ற வருமாறு அசோக், மற்றும் சபா நாவலன் கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து பல தடவைகள், என்னிடம் கட்டுரைகளை கேட்டு வாங்கினார்கள். அப்போதெல்லாம் என்னுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். ஒரு தடவையேனும், ஐ.என்.எஸ்.டி.யுடனான தொடர்பு குறித்து என்னிடம் விளக்கம் கேட்கவில்லை. இனியொரு பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும்.

 

http://kalaiy.blogspot.com/2009/11/blog-post_18.html

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது