Language Selection

கலையரசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இஸ்ரேலிய- பாலஸ்தீன யுத்தம், கலாச்சார தளத்திலும் முன்னெடுக்கப்படுகின்றது . ஒரு காலத்தில் நாசிச ஜெர்மனியிலும், நிறவெறி தென்னாப்பிரிக்காவிலும் நடைமுறையில் இருந்த இனப்பாகுபாடு இன்றையஇஸ்ரேலில் தொடர்கின்றது.

 வெளிப்பார்வைக்கு மதச்சார்பற்ற நாடாகதோன்றும் இஸ்ரேலில், யூத மத அடிப்படைவாத குழுக்கள் அரசியல்அதிகாரத்தை கைப்பற்றி வருகின்றன. இந்த மதவாத சக்திகளின் அண்மைய இலக்கு "கலப்புத் திருமணங்கள்". இஸ்ரேலில் காலங்காலமாக பின்பற்றப்படும்இனப்பாகுபாடு காரணமாக யூத-அரபு கலப்புத் திருமணங்களுக்கான வாய்ப்பு குறைவு. இஸ்ரேலிய சட்டப்படி மதச்சார்பற்ற சிவில் திருமணங்களுக்கு இடமில்லை. அனைத்து திருமணங்களும் யூத அல்லது இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ மத விதிமுறைகளுக்கு உட்பட்டே பதிவு செய்யப்பட வேண்டும். இருவேறு மதங்களை சேர்ந்தவர்கள் பதிவுத் திருமணம் செய்ய விரும்பினால், இஸ்ரேலை விட்டு வெளியேறி, அந்நிய நாடொன்றில் திருமணம் செய்துவிட்டுவர வேண்டும். அந்த திருமணம் பின்னர் இஸ்ரேலில் சட்டப்படிஅங்கீகரிக்கப்படும்.

பொதுவாகவே யூத குடியிருப்புகளும், அரபு குடியிருப்புகளும் பாதுகாப்புவேலியிடப் பட்டு பிரித்தே வைக்கப்பட்டுள்ளன. இரண்டு இனங்களும் "கலந்து" வாழும் பெரு நகரங்களில் கூட, தனித்தனியான குறிச்சிகள் உள்ளன. இருப்பினும் ஜெருசலேமை அண்டியிருக்கும் அரபு புற நகர்ப் பகுதியொன்றில் வாழும் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய வதிவிட அனுமதி கொண்டவர்கள். இவர்களுக்கு ஜெருசலேமின் பிற பகுதிகளில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கமுடியும். அதே போல பல்லின மக்கள் வாழும் டெல் அவிவ் நகரிலும் தொழில்வாய்ப்பு தேடிவரும் அரபு இளைஞர்கள் வசிக்கின்றனர்.

இஸ்ரேலில் காலங்காலமாக இறுகிய மத சமூகக் கட்டுப்பாடுகளுடன் வாழும் யூத நங்கைகள், அரபு ஆண்களுடன் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம்குறைவு. கடந்த இருபதாண்டுகளுக்குள் வந்து குடியேறிய (முன்னாள் சோவியத்யூனியனை சேர்ந்த) ரஷ்ய யூதர்கள் மத்தியில் மதக் கட்டுப்பாடுகள் குறைவு. சுதந்திர மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்த ரஷ்ய-யூத கன்னிகள், அரபுஆடவருடன் காதல் கொள்வது அதிகரித்து வருகின்றது. காதலிப்பவர்கள்பின்னர் கலியாணம் செய்து கொண்டு, அரபு கிராமங்களிற்கு சென்று தங்கிவிடுகின்றனர். யூத இளம் பெண்களின் சுதந்திரப் போக்கால் கலவரமடைந்த யூத மதஅடிப்படைவாதிகள் கலப்புத் திருமணங்களை தடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். "அரபு இளைஞர்கள் வேண்டுமென்றே யூத பெண்களை மயக்கி, காதல் வலையில் விழ வைக்கிறார்கள். இதுவும் அவர்களின் யூத இனத்தின் மீதான போர்முறைகளில் ஒன்று." என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது.

வட இஸ்ரேலிய யூத நகரம் ளுயகநன இல், யூதப் பெண்களை எச்சரிக்கும்சுவரொட்டிகள் காணப்படுகின்றன. "அரபுக்களை காதலிக்கும் அப்பாவி யூத நங்கைகள் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும், விபரச்சாரத்திற்கு நிர்ப்பந்திக்கப்படுவதாகவும்" இந்த போஸ்டர்கள் பகிரங்கமாக இனவாதம்பேசுகின்றன. நாசிச ஜெர்மனியிலும் இதே போன்ற போஸ்டர்கள் யூதர்களுக்கு எதிராக ஒட்டப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்னொரு யூதநகரமான Pளைபயவ ணுநநஎ இல், 35 இளைஞர்களைக் கொண்ட விழிப்புக் குழுவொன்றுஇயங்கிவருகின்றது. “குசைந கழச துரனயளைஅ” என்ற பெயர் கொண்ட இந்த இளைஞர்பட்டாளம் நகர தெருக்களில் ரோந்து செல்கின்றனர். தெருக்களில் எங்காவதுஅரபு ஆண்களுடன், யூதக் கன்னிகைகள் காணப்பட்டால் எச்சரித்து அனுப்பிவைக்கின்றனர். இருப்பினும் தாம் அரபு இளைஞர்களை தாக்குவதில்லை என்றுஇவர்கள் கூறினாலும், ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள்இடம்பெற்றுள்ளன.

"ஜெருசலேம் போஸ்ட்" பத்திரிகைக்கு தகவல் கொடுத்த Pளைபயவ ணுநநஎ வாசி ஒருவர், கடந்த பத்தாண்டுகளில் "தனது நகரத்தில் இருந்து அறுபது யூதப் பெண்கள் அரபுகிராமங்களுக்கு சென்று விட்டதாகவும், அதற்குப் பின்னர் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை." என்றார். தென் இஸ்ரேலிய நகரமான முசைலயவ புயவ நகர சபை, பாடசாலைகளில் "விழிப்புணர்வு வீடியோ" ஒன்றை காண்பித்துவருகின்றது. "எதிரியுடன் படுத்தல்" என்ற பெயரிட்ட அந்த வீடியோ, கலப்புத்திருமணங்கள் இஸ்ரேலிய நெறிகளுக்கு முரணானது என்று பரப்புரைசெய்கின்றது.

மேற்குறிப்பிட்ட நகரங்களில் லுயன டு’யஉhiஅ என்ற யூத மத அடிப்படைவாதஅமைப்பின் உறுப்பினர்கள், இனப்பாகுபாட்டு பிரச்சார இயக்கத்தில் முன்நிற்கின்றனர். இனத்தூய்மை குறித்து வலியுறுத்தும் இந்த அமைப்பு, யூதப்பெண்களை அபாயத்தில் இருந்து காப்பாற்ற பாடுபடுவதாக கூறி வருகின்றது. பாலஸ்தீன கிராமங்களில் ஆபத்தில் சிக்கியுள்ள யூதப் பெண்கள் தினசரி தமதுதொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்வதாகவும், பொலிஸ் உதவியுடன்இவர்களை மீட்டு வருவதாகவும், லுயன டு’யஉhiஅ அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

"ஆரிய இனத்தூய்மை" பற்றி பேசிய ஹிட்லரின் இனப்பிரிவினைக் கொள்கை, இன்று இஸ்ரேலில் நடைமுறைப்படுத்தப் படுவதை, அங்கு இடம்பெறும்சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

மேலதிக விபரங்களுக்கு:
Yad L'achim யூத மத அடிப்படைவாதிகளின் இணையத்தளம்
'Protecting' Jewish girls from Arabs (Jerusalem post)

http://kalaiy.blogspot.com/2009/09/blog-post_27.html

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது