Language Selection

கலையரசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஐரோப்பாவில் பயங்கரவாதத்திற்கெதிரான போர்... உலகில் ஐரோப்பாவின் பொருளாதார, இராணுவப் பாத்திரம், முன்றாம் உலகத்துடனான நீண்ட காலத்தொடர்பு, அதைவிடப் புவியியல் அமைவிடம் என்பன ஐரோப்பாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.

இஸ்லாமியத் தேசியத் தீவிரவாதிகள் அமெரிக்காமீது பாய்வதற்கு ஐரோப்பாவைத் தளமாகப் பயன்படுத்துவதாக அமெரிக்க அரசின் குற்றச்சாட்டு. 2004 ல் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன் உள்ளூர் இடதுசாரித் தீவிரவாதிகளை அடக்குமாறு கிரேக்கம் மீதான அமெரிக்காவின் உத்தரவு. ஐரோப்பா ஒன்று சேரும் வேளையில், பிரிவினைவாதிகளை ஒன்று சேர்ந்து அடக்குவோம் என்ற பொது ஐரோப்பியப் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கை என்பன மூன்றாம் உலகப் போருக்குள் ஐரோப்பாவையும் இழுத்துக் கொண்டு வந்துவிட்டன.

மூன்றாம் உலக (போர்) தத்துவம் ஒன்று 1968 ல் மேற்கு ஐரோப்பாவெங்கும் இடம்பெற்ற மாணவர் எழுச்சியின் போது சிலரால் முன்வைக்கப்பட்டது. ஏகாதிபத்திய வல்லரசுகளின் அடக்குமுறையை எதிர்த்து நிற்கும் மூன்றாம் உலக மக்களுக்கு ஆதரவாக, "ஏகாதிபத்திய பூதத்தின் அடிவயிறான" ஐரோப்பாவில் தாக்க வேண்டும் என்ற அரசியற் கோட்பாட்டை சிலர் நடைமுறைக்குக் கொண்டுவர விரும்பினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் "செம்படைப்பிரிவு" என தமது இயக்கத்திற்குப் பெயரிட்டுக் கொண்ட ஆயுதந்தரித்த புரட்சிக்குழு. இவர்கள் மேற்கு ஜேர்மனியின் நகரங்களில் நகர்ப்புற கெரில்லா நடவடிக்கைகளான பொருளாதார இலக்குகளுக்குக் குண்டுவைத்தல், தொழிலதிபர்களைக் கடத்திச்சென்று கொல்லுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதில் வேடிக்கை என்னவெனில் இந்தத் தீவிர வாத இயக்கத்தில் இருந்த இளைஞர்களில் சிலர் கொலை செய்யப்பட்ட தொழிலதிபர்களின் நெருங்கிய நண்பர்களின் பிள்ளைகளாயிருந்தமையே. இவர்கள் தமது மூன்றாம் உலகப் போரின் அங்கமாக பாலஸ்தீன விடுதலை இயக்கங்களுடன் கூட்டுச்சேர்ந்து விமானக்கடத்தல்களிலும் ஈடுபட்டனர்.

வெற்றிகரமாக முடிந்த விமானக் கடத்தல் நாடகமொன்று கிறீஸ் (கிரேக்கம்) தலைநகரான ஏதெனில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அன்றிலிருந்து அமெரிக்க உளவு நிறுவனம் கிரேக்கத்தை "நம்பமுடியாத" நாடுகளின் பட்டியலில் சேர்த்துவிட்டது. அது ஓரளவு உண்மையுந்தான். இரண்டாம் உலகப்போரின் பின்னர் தோல்வியடைந்த கம்யூனிஸ்டுகளின் ஆயுதப் போராட்டத்தை கிறீஸ் சந்தித்துள்ளது. தோல்வியடைந்ததின் காரணமே பிரிட்டஷ்-அமெரிக்கத் தலையீடுதான். ஆயுதங்களைக் கீழே போட்ட கம்யூனிஸ்ட்டுகள் அரச ஸ்தாபனங்களின் பல பகுதிகளிலும் ஊடுருவி விட்டிருந்தார்கள். இதனால் ஐரோப்பாவில் ஒரு "வித்தியாசமான நாடாக" கிறீஸ் இன்று வரை தெரிகின்றது. பாலஸ்தீன , குர்திஸ் விடுதலைப்போராட்டங்களுக்கு இங்கே பெருமளவு மக்கள் ஆதரவு உண்டு. இருப்பினும் கிரேக்க அரசாங்கம் அமெரிக்க, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துப்போகின்றது.

எழுபதுகளில் ஆண்ட கிரேக்க சமூக ஜனநாயகக் கட்சி பாராளுமன்றத்தின் ஊடாக சோஸலிசத்தைக் கொண்டுவந்துவிடும் என அஞ்சியதாலோ என்னவோ அமெரிக்க சி.ஐ.ஏ யின் ஆதரவுடன் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. தொடர்ந்த இராணுவச் சர்வாதிகாரத்தை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அவ்வாறு, 17 நவம்பர் 1975 ல் எதன்ஸ் தொழில் நுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற மாணவரின் மறியல் போராட்டத்தை பாதுகாப்புப் படைகள் மூர்க்கமாக அடக்கியதில் பலர் கொல்லப்பட்டனர். அந்தத்தினத்தை நினைவு கூறும்முகமாக சில தீவிரவாத இளைஞர்களால் "நவம்பர் 17" என்ற பெயரில் ஆயுதந் தரித்த தலைமறைவு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.


இராணுவ சர்வாதிகாரம் மறைந்து, பாரளுமன்ற ஜனநாயகம் வந்த பின்னரும் "நவம்பர் 17" ன் போராட்டம் தொடர்ந்தது. இராணுவ ஆட்சிக்கு உடந்தையாகவிருந்த உயர் அதிகாரிகள் மட்டுமல்லாது அமெரிக்க உளவு நிறுவன அதிகாரிகள், பிரிட்டிஷ் இராணுவத் தலைமையதிகாரிகள் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலரும் ஆச்சரியப்படுமளவிற்கு சுட்ட சூத்திரதாரிகள் யாரும் நீண்டகாலமாகப் பிடிபடவில்லை. இது "நவம்பர் 17" ற்கு அரச மட்டத்தில் இருந்த ஆதரவைக்காட்டியது. இப்படியான சம்பவங்கள் முதலாம் உலகமான ஐரோப்பாவில் நடப்பது அமெரிக்க-பிரிட்டிஷ் அரசுகளுக்கு கண்ணைக் குத்தும் முள்ளாகத் தெரிந்தன. இதே நேரம் 2004 ஒலிம்பிக்ஸ் நடத்துவதற்கு கிறீஸ் தெரிவானது. ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடக்கும் வேளையில் "நவம்பர் 17" என்ற இயக்கம் இருக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டது.

2001 செப்டம்டர் 11, அமெரிக்காவை மட்டுமன்றி ஐரோப்பாவையும் மாற்றிவிட்டது. அமெரிக்கா அறிவித்த "பயங்கர வாதத்திற்கெதிரான போர்" பின் லாடனுக்கு எதிரானது மட்டுமேயென சிலர் நினைத்துக் கொண்டிருக்கையில், அதன் அர்தத்ம் பரந்துபட்டது என்பது விரைவிலேயே தெரிந்தது. அமெரிக்க அரசு தயாரித்த "சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின்" பட்டியலில் "நவம்பர் 17" ன் பெயரும் உள்ளது. "நவம்பர் 17" ன் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால் கிறீஸின் மீது தடைகள் கொண்டுவரப்படும் என அமெரிக்கா மிரட்டியது. இந்த மிரட்டல் பலனுமளித்தது. குண்டு வைக்கப்போய் காயமடைந்த ஒரு நபர் பிடிபட்டதை தொடர்ந்து, "மக்களின் மனதைக் கவர்ந்த மர்ம வீரர்கள்" பிடிபட்டார்கள். இவர்களில் பலரும் மக்கள் மத்தியில் சாதாரண மனிதர்களாக வாழ்ந்து வந்தமை பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்தக் கைதுகளுக்குப்பின் முகமில்லாமல் இருந்த இயக்கத்திற்கு முகம் கிடைத்தது. குறைந்தது ஒருமாதமாகிலும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், யாவிலும் நவம்பர் 17 பற்றிய செய்திகள், விவாதங்கள் மட்டுமே இடம்பெற்று அந்த இயக்கத்திற்கு என்றுமில்லாத பிரபல்யத்தை தேடிக்கொடுத்தது.

"நவம்பர் 17" ன் கதை முடிந்ததென கிரேக்க அரசு நிம்மதிப் பெருமூச்சு விடுகையில் இடியென இறங்கியது இன்னொரு செய்தி: தொலைதூரத் தீவொன்றிலிருக்கும் இராணுவ முகாமின் ஆயுதக்கிடங்கில் இருந்து பெருமளவு ஆயுதங்கள் களவாடப்பட்டுவிட்டன. வழமைபோல் யாரும் பிடிபடவில்லை. கிறீஸ் பல திடுக்கிடும் செய்திகளுக்காகக் காத்திருக்கிறது.

இதிலிருந்து மிகவும் வேறுபட்ட கதை ஐரோப்பிய நாடுகளில் ஒளிந்திருக்கும் அல்-கைதா உறுப்பினர்களைத் தேடும் வேட்டை. செப்டம்பர் 11 விமானக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் ஜேர்மனியில் வசித்து வந்தார்கள் என்ற தகவல் வெளியான அன்றிலிருந்தே ஜேர்மனி, இத்தாலி , ஸ்பெயின், போன்ற நாடுகளில் பின்லாடனின் அல்கைதா இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் அல்லது அவ்வாறு சந்தேகப்படும் பலர் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளிலிருந்து கிடைத்த பொதுவான முடிவானது இவர்கள் தமது எதிரியான அமெரிக்காவைத் தாக்க ஐரோப்பாவைத் தளமாகப் பாவிக்கின்றனர் எனத் தெரிவிக்கின்றது.

இதனால் "அப்பாடா, நாம் தப்பினோம்" என்று ஐரோப்பியர் ஆறுதலடையலாம். ஆனால் அமெரிக்கா விடுவதாகவில்லை. பயங்கரவாதத்திற்கெதிரான போரில் ஐரோப்பாவையும் துணையாக வருமாறு அறைகூவல் விடுக்கின்றது. இப்போதைக்கு ஒத்துப் போனாலும் அமெரிக்க-ஐரோப்பிய முரண்பாடுகள் அவ்வப்போது தலைகாட்டாமல் இல்லை. இவற்றைவிட ஐரோப்பிய ஒன்றிணைவின் பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு புதிய பரிமாணம் பெற்றிருக்கின்றது. முன்பு ஒரு நாட்டின் தீவிரவாதிக்கு இனனொரு நாட்டில் அடைக்கலம் அளிக்கப்பட்டது.

இத்தாலியின் செம்படைப்பிரிவுத் தீவிரவாதிகளுக்குப் பிரான்ஸில் அடைக்கலம் கிடைத்தது. ஸ்பெயினின் பாஸ்க் மாநில பிரிவினைவாதிகளுக்கு பெல்ஜியத்தில் அரசியல் தஞ்சமும், பிரான்ஸில் தளமமைக்கும் வசதியும் கிடைத்தன. ஆனால் இவையெல்லாம் இப்போது பழைய கதை. பாஸ்க் பிரிவினைவாதிகள் பிரான்ஸிலிருந்து நாடுகடத்தப்படுகின்றனர். ஐரோப்பிய நாடுகளின் (இடதுசாரி) தீவிரவாத மற்றும் பிரிவினை கோரும் குழுக்களை கண்காணிக்க "யூரோப்போல்"(Europol) என்றழைக்கப்படும் ஐரோப்பியப் பொலிஸ் அமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச காவல்துறை "இன்டர்போல்" லை முன்னுதாரணமாகக் கொண்டு, யூரோப்போல் உருவாக்கப்பட்டது. இருப்பினும் யூரோப்போல் அதிகாரம், ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் மட்டுமே செல்லுபடியாகும். யூரோப்போலின் கண்காணிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் மேற்குறிப்பிட்ட வகை இயக்கங்கள் தவிர, தீவிர சூழலியவாதிகள், வெளிநாட்டு விடுதலையியக்கங்கள், அவர்களின் ஆதரவாளர்கள், ஆகியனவும் அடங்கும்.

 

 http://kalaiy.blogspot.com/2009/08/blog-post_21.html

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது