Language Selection

பு.மா.இ.மு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

“ரெய்டுக்கு பயந்து பிரபல சாராய வியாபாரியும், சாக்னாகடை மற்றும் சாராய வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவருமான ஜே.பங்கஜராஜ் (எ) ஜேப்பியார் தன்மூத்த மருமகனுடன் தப்பியோட்டம்.”

இது வேடிக்கைக்காக அல்ல. இங்கே ‘சாராய’ எனும் வார்த்தையை மட்டும் நீக்கிவிட்டு, ‘தனியார் சுயநிதிக் கல்லூரி’ என்ற வார்த்தையை போட்டு படித்துப்பாருங்கள். முன்னது கடந்த காலத்தையும், பின்னது நிகழ்காலத்தையும் நினைவுபடுத்தும். ‘சரக்கு’தான் வெவ்வேறு, செய்யும் ‘தொழில்’ ஒன்றுதான் என்பதையும் இது உணர்த்தும்.

மாதாமாதம் மாமூல். மாசத்துக்கு ஒரு கேஸ். தொழில் எதிரியிடம் மட்டும் ரெய்டு, பறிமுதல், பத்திரிக்கைக்கு போட்டோ. அது போலவே, மாதாமாதம் மாமூல். கல்வித்துறை அதிகாரி தொடங்கி அமைச்சர் வரைக்கும் சிபாரிசு கடிதம் கொடுத்து சம்பாத்யம். சம்பாதிச்ச காச வச்சி பினாமி பேரில், சொந்த பிசினஸ். எழவெடுத்தவனுங்க தொல்லையை சமாளிக்க அவ்வபோது சவடால்.

சாராய வியாபாரிக்கும் போலீசுக்கும் இடையே எத்தகைய உறவு இருக்குமோ, அத்தகைய ‘கள்ள உறவை’த்தான் இந்த தனியார் சுயநிதிக் கல்லூரி வியாபாரிகளிடம் அரசு கொண்டிருக்கிறது. இந்த வெட்கங்கெட்ட கூத்தை மறைக்கத்தான், ஆய்வுக்குழுவின்அதிரடி, சட்டசபையில் சரவெடி என பேசி முடிப்பதற்குள், “யாரு எதசெஞ்சாலும் அத நொட்டஞ்சொல்லுறதுதான் உங்க வேலை” என நொந்து கொண்டார் நண்பர் ஒருவர். கூடவே, “இந்த ஆய்வுக்குழுவின் தலைவரா இருக்கிறாரே, உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவர் ராமசாமி. ரொம்ப ஸ்ட்ரைட் பார்வர்டு. யாருக்கும் எதுக்கும் பயப்பட மாட்டாரு, துணிச்சலா பேசுவாரு, செய்வாரு” என இந்த ஆய்வுக் குழுவுக்கு ஐ.எஸ்.ஓ. சான்றிதழையும் வழங்கினார் அந்த நண்பர்.

நன்பரே, அதனால்தான் கேட்கிறோம். “அவ்ளோ நல்ல மனுசன் ஏன் போயிம் போயும் சும்மா பொம்மையை வச்சு பிலிம் காட்டுற வேலையில சேர்ந்தாருனு”. “இவுரு போயி என்னத்த கிழிச்சிட்டாருன்னு” நாங்க கேட்டா நீங்க கோபித்துக்கொள்வீர்கள். ஆனா, ரெய்டுக்க போன இடத்தில், “இவரால ஒன்னும் கிழிக்க முடியாதுனு” வெளிச்சம் போட்டு கான்பிச்சிட்டாங்கல்ல. இதற்கு உங்கள் பதில் என்ன?

வந்திருக்கிறது யாருன்னு நல்லா தெரிஞ்சிருந்தும், “நீங்கல்லாம் யாரு? ஐடென்டி கார்டு இருக்கா? இது தனியார் இடம் போலீசுக்கு போன் போடுவேன்?” என சீறியிருக்கிறார், சிறீ வெங்கடேசுவரா பொறியியல் கல்லூரியின் செயலர் பாலச்சந்திரன்.

ஜேப்பியாரின் பனிமலர் கல்லூரியிலோ அந்தோ பரிதாபம்! இதுவரை அரசு, ‘ஆணை’ யென்று வழங்கி வந்த கடுதாசியெல்லாம் கக்கூசுல ‘கசக்கி’ப்போட்டு வந்த இந்த கணவான்கள்; ஆய்வுன்னதும் “சரி நடத்திக்கோ”ன்னு, கக்கூசு கதவ மட்டும் திறந்து வச்சுட்டு ஓடினாங்களே? இவர்களால், என்ன செய்யமுடிந்தது?

” எங்கள் குழுவின் சார்பாக அவர்களை தொலைபேசியிலும், செல்போனிலும் தொடர்புகொள்ள முயன்றும் பிடிக்க முடியவில்லை. இரண்டரை மணிநேரம் அங்கேயே காத்து கிடந்தோம். பிறகு குழுவினரோடு கலந்து பேசி, ஆவணங்களைத் தராமல் மறைத்ததில் இருந்தே தவறு நடந்திருப்பதாகக் கருதி அந்தக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என விளக்க அறிவிக்கையை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அனுப்பியிருக்கிறோம். என்று குமுதம் ரிப்போர்ட்டர் (25.06.09) பேட்டியில் புலம்பத்தானே முடிந்தது.

அரசுக்கு அறிக்கை அனுப்புவதைத் தவிர வேறு எந்த அதிகாரமும் இவர்களுக்கு இல்லை என்பதை மட்டுமல்ல, சோளக்கொல்லை பொம்மையிடம் காகத்திற்கு இருக்கும் அளவு பயம்கூட, அரசின் மீது தனியார் முதலாளிகளுக்கு இம்மியளவும் இல்லை என்பதையும் உலகறியச்செய்து விட்டது, அரசு அனுப்பிய ஆய்வுக்குழு!

அது சரி, அரசுக்கு அறிக்கை வராதது ஒன்றுதான் குறையா? அறிக்கை வந்தால், உடனே அந்தக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்தாகி விடுமா, என்ன?

அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது என்கிறார், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர். “ஒரு கல்லூரி தொடங்குவதற்கு மூன்று விதமான அனுமதிகள் தேவை. கல்விப் பிரிவுகளை நடத்துவதற்கு டெல்லியில் உள்ள ஏ.ஐ.சி.டி.இ. அனுமதியும், கல்லூரி இணைப்புக்கு பல்கலைக் கழகத்தின் அங்கீகாரமும், கல்லூரியை நடத்துவதற்கு தடையின்மைச் சான்றிதழையும் தமிழக அரசிடம் வாங்க வேண்டும். இதில் பல்கலைக் கழகத்தைப் பொறுத்தவரை உள் கட்டமைப்பு, ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால் பல்கலைக்கழக இணைப்பை ரத்து செய்ய எங்களுக்கு அதிகாரம் உண்டு. பாடப்பிரிவுகளை நடத்துவதில் குளறுபடி இருந்தால் ஏ.ஐ.சி.டி.இ. நடவடிக்கை எடுக்கும். கல்லூரி ஒழுங்கீனமாகச் செயல்பட்டால் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடவடிக்கை எடுக்கும். அதற்கு போதிய ஆதாரம் கட்டாயம் இருக்க வேண்டும். பிறகு சம்பந்தபட்ட கல்லூரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர்கள் அளிக்கும் பதிலைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும். ஐவர் குழு அளிக்கும் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுப்போம்” (குமுதம் ரிப்போர்ட்டர். 25.06.09)

சாலை விபத்தில் இறந்து போன பிணத்தை தானும் எடுக்காமல், இறந்தவனின் உறவினரையும் எடுக்க விடாமல், இரு போலீஸ் நிலையங்களுக்கிடையே நடக்கும் லிமிட் தகராறைப் போல, தனியார் சுயநிதிக் கல்லூரிகள் மீதான எந்தப்புகாராயினும் இவர்களால் பந்தாடப்படும். என்பதைத்தான், இப்படி சுற்றிவளைத்து சொல்லியிருக்கிறார், துணைவேந்தர் மன்னர் ஜவஹர்.

இத்தகைய கண்காணிப்பு அமைப்புகளில் அங்கத்தினராய் இருப்பவர்களெல்லாம், புகாருக்கு ஆளாகியிருக்கும் கல்லூரியின் அங்கத்தினராகவும் இருக்கிறார்கள் எனபது தனிக்கதை!

ஆய்வுக்குழுவுக்கு அதிகாரமில்லை, அறிக்கை அனுப்பினால் நடவடிக்கை எடுக்க எவரும் தயாரில்லை. அப்ப என்னதான் தீர்வு? அதையும் சொல்லி விட்டார், பேரா. ராமசாமி, “இந்தக் கல்வி முதலாளிகள் இனியாவது திருந்த வேண்டும். இல்லாவிட்டால் திருத்தப்படுவார்கள். மாணவர்களும் பெற்றோர்களும் இவர்களை உதைக்கும் காலம் விரைவில் வரும். அந்தப் புரட்சியும் விரைவில் நடக்கத்தான் போகிறது.” என்று.

அடடே என்னப் பொருத்தமான முடிவு! பொதுமக்கள் சேர்ந்து உதைத்தால்தான் திருந்துவான் சாராய வியாபாரி என்பது கல்வி வியாபாரிக்கும் பொருந்திப் போவதைப் பாருங்கள்!
-தமிழினி

 

http://rsyf.wordpress.com/2009/07/07/ரெய்டுக்கு-பயந்து-பிரபல/

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது