Language Selection

பு.மா.இ.மு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அமெரிக்க யேல் பல்கலைக் கழகத்தில், இந்திய எம்.பி.,க்களுக்கு சிறப்பு வகுப்புகள் துவங்கியுள்ளன. இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய – அமெரிக்க எம்.பி.,க்கள் அமைப்பு சார்பில், எம்.பி.,க்களுக்கு விசேஷ பயிற்சி அளிக்கும் திட்டம் 2007-ல் ஆரம்பித்தது.

 இந்த முறை சில எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நேற்று முன்தினம் வகுப்பு துவங்கியது. நிபுணர்கள், பொருளாதார வல்லுனர்கள் உரை யாற்றுவர். இந்த விசேஷ வகுப்புகளை முடித்துக் கொண்டு, வாஷிங்டன் நகருக்கு எம்.பி.,க்கள் செல்கின்றனர். அங்கு, அமெரிக்க செனட் எம்.பி.,க்களுடன் உரையாற்றுவர். வெளியுறவு விஷயங்கள் குறித்து தகவல்களை பரிமாறிக்கொள்வர்கள். (தினமலர், 22/06/2009)

உலகிலேயே சிறந்த தலைமைப் பண்புடன் கூடிய முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்களை உருவாக்குவது இந்தியாவின் ஐஐஎம்(IIM). இங்கு படித்து முடிப்பவர்களை மாதம் 10-20 லட்சங்கள் கொடுத்து, பன்னாட்டு கம்பெனிகள் கொத்தி செல்கின்றன. நிலைமை இப்படி இருக்கும் போது இந்திய எம்.பி.,க்களுக்கு பயிற்சி கொடுக்க முடியாதா? அல்லது இந்த திறமைகள் இல்லாதவர்கள் ஏன் எம்.பி. தேர்தலுக்கு நிற்க வேண்டும்?

இந்த பயிற்சியின் நோக்கம் என்ன?

எப்படி அமெரிக்கனின் மூளை மன்மோகன் சிங் என்ற உருவம் மூலம் இந்தியாவை அமெரிக்காவின் காலடியில் அடிமையாக மாற்றி உள்ளதோ, அதே போல் இங்கு உள்ள எம். பி. களின் மூளையும் முற்றிலும் அமெரிக்காவின் அருவடியாக மாற்றுவது தான் ஒரே நோக்கமாகவும் இருக்க முடியும். இப்படி பயிற்சி பெறும் எம். பி. கள் சுயமாக சிந்திப்பார்களா? இந்திய நாட்டிக்கு சேவை செய்யத்தான் அமெரிக்க பயிற்சி கொடுக்கிறதா? கந்து வட்டிக்காரன் அடுத்தவன் நலனுக்காக வட்டிக்கு விடுவான்?

என்னனென்ன பயிற்சி அளிக்கப்படுகிறது?

இந்தியாவை பன்னாட்டு கம்பெனிகளுக்கு பட்டா போட்டு விற்பதற்கு, மக்களை எப்படி பொய்யான தகவலை சொல்லி ஏமாத்தலாம் என்பதற்கு தலைமை பண்பு, மேலாண்மை திறன், பொருளாதார பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவை, அமெரிக்காவின் மிகச்சிறந்த அடிமை சேவகனாக பணிபுரிய வெளியுறவு விவகார பயிற்சி & அமெரிக்க எம். பி களுடன் உரையாற்றும் திருவிழா நடத்தப்படும். இப்போது சொல்லுங்கள், இந்தியாவின் இறையாண்மை எங்கே?

நவீன கால பொருளாதார அடியாட்கள்:

இதுவரை, அமெரிக்கர்கள் தான் இந்த பொருளாதார அடியாள் வேலையை செய்து வந்தனர். (ஆதாரம்: ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், ஜான் பெர்கின்ஸ்). இந்தியா வல்லரசு ஆகப் போகிறது என்ற கட்டு கதையை விட்டு, மீளமுடியாத கடன் வலையில் சிக்கவைத்தனர். அதன்பின், அவன் சொன்னபடி சட்டங்களை மாற்றி, இந்தியாவை அமெரிக்காவின் வேட்டைக் காடாக்கி விட்டான். ஆனால், இப்பொது இந்தியாவின் தர்மகாத்தாக்கள் என்று சொல்லிகொள்கிற ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளுக்கு அமெரிக்காவின் அடியாட்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இனிமேல், ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளே அமெரிக்கவின் அருவருடி வேலையையும், அடியாள் வேலையையும் செய்வார்கள்.

இந்திய தரகுமுதலாளிகளின் லாபம் என்ன?

இப்பயிற்சி, இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பு & இந்திய – அமெரிக்க எம். பி. க்கள் அமைப்பு சார்பில் தான் அளிக்கப்படுகிறது. இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பு டாடா, பிர்லா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் நலனை அடிப்படையாக கொண்டது. ஆகையால், இந்த பயிற்சி எப்படி இந்தியாவை அமெரிக்கவுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடிப்பது என்பதற்காவே இருக்க முடியும். இதை தவிர வேறு ஏதாவது காரணம் இருக்க முடியுமா?

இது எங்கே போய்முடியும்?

இனிவரும் எதிர்காலத்தில் மன்மோகன் சிங் & மற்ற ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் பின்வருமாறு கூட சொல்லலாம். “இந்தியர்களுக்கு நாட்டை ஆளத் தெரியவில்லை. ஆகையால், அமெரிக்கவின் பிரதிநிதி ஒருத்தன் டெல்லியில் வந்து உட்கார்ந்து கொண்டு நாட்டை ஆளுவது எப்படி என்று சொல்லிக்கொடுப்பான். அவனின் அசைவின்றி எதுவும் நடக்காது”. இப்படி நடக்காது என்று நினைக்கிர்களா? எப்படி இந்திய எம். பி. களுக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்கிறதோ, அப்படியே போகப்போக அமெரிக்கன் இந்தியாவை ஆளுவதற்கு ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் நாட்டை விற்க துணிய மாட்டார்களா?

நம்முன் உள்ள கேள்விகள்:

1) அமெரிக்க எம். பி. க்களுக்கு இந்தியா பயிற்சி அளிக்க முடியுமா? அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? (ஏற்கனவே, அமெரிக்காவின் அழுகி நாறும் முதலாளிதுவ பொருளாதாரத்தால்,  அமெரிக்க மக்கள் நடுவீதிக்கு வந்துவிட்டனர்கள்.)


2) அமெரிக்க அளிக்கும் பயிற்சி இந்தியாவை முன்னேற்றவா?


3) இப்படி பயிற்சி பெறும் எம். பி க்கள் இந்திய நாட்டிக்கு சேவை செய்வார்களா?


4) இப்படி அமெரிக்காவிற்கு அருவருடி வேலை செய்யத் தான் நாம் எம். பி. க்களை ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கிறோமா?


5) இந்த பயிற்சிக்கும் ஆங்கிலேயன் இந்தியாவை ஆண்ட போது, அவன் இந்தியர்களுக்கு கொடுத்த பயிற்சிக்கும் என்ன வித்தியாசம் இருக்கமுடியும்?

 

http://rsyf.wordpress.com/2009/06/30/இந்திய-எம்-பி-க்களுக்கு-அ-2/

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது