Language Selection

சமர் - 9 : 1993
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சமர் ஆசிரியர் குழுவினருக்கு!  தோழமையுடன் எழுதிக்கொள்வது. உங்கள் (திகதியிடப்படாத) கடிதமும், அத்துடன் இணைந்த தேசிய விடுதலைப் போராட்டமும் தேசிய சக்திகளும் எனும் (ஏ4 அளவுப் பேப்பரில்)18 பக்கக் கட்டுரை ஒன்றும் கிடைக்கப் பெற்றோம். மேற்படி உங்களது கட்டுரையில் விவாதத்துக்குரிய அல்லது கருத்தாடலுக்குரிய பண்புகள் மீறப்பட்டுளளமையினால் எமது பத்திரிகையில் பிரசுரிப்பதில்லை என்ற ஒருமித்த முடிவுக்கு நாம் வந்துள்ளோம்.

 

(அதேவேளை உங்களது கருத்து ஒத்த மாறனின் (விவாதப்பண்புகள் பலப்பட்டுள்ளமையைக் காணலாம்) கட்டுரை ஒன்றை மனிதம் இதழில் பிரசுரிக்க முடிவு செய்துள்ளமையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்) மேலும் கருத்தாடல் என்பது சரியான கருத்துக்களைக் கண்டறிவதற்கும், கருத்துப்பரிமாற்றங்களைச் சுரண்டுவதற்கும், கருத்துப்பரிமாறறங்களைச் செய்துகொள்வதற்கும் உதவவேண்டிய ஒன்று.

 

இதன் விளைவாய் (தூய்மையான) சுயவிமர்சனத்தை மேற்கொள்வார் மத்தியில், பிழையான கருத்துக்களில் இருந்துவிடுபட்டு சரியான கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளும் நிகழ்வுகள் இயல்பாக இடம் பெறுவதும் சாத்தியம். மாறாக மேதாவித் தனங்களை வெளிப்படுத்துவதற்கோ, மார்க்சிசத்தில் வல்லவர் யார் என்பதை நிரூபிப்பதற்கோ, விரும்பாத அல்லது எதிர்மறைக் கருத்துடையவர்களைத் திட்டித்தீர்ப்பதற்கோ கருத்தாடலைப் பயன்படுத்தக் கூடாது. இன்னும் உங்களுடைய விவாதங்களோ, அல்லது கருத்தாடலிலோ இவற்றுக்குரிய பண்புகள் பேணப்படுவதாகத் தெரியவில்லை.

 

அவ்வகையில் நாம் உங்களுடனான விவாதத்தொடரை இத்துடன் முடித்துக்கொள்கிறோம். விவாதப்பண்புகளை பேணுகின்ற முறைமையினை நீங்கள் வெளிப்படுத்தும் பட்சத்தில் உங்களுடனான விவாதத்தை தொடர்வது பற்றி மீள் பரிசீலனை செய்வோம்.

 

இவ்வண்ணம்

வி-லோகதாஸ்

(மனிதம் ஆசிரியர்-குழு சார்பாக)

 

பி-கு உங்கள் வேண்டுதலுக்கிணஙக உங்கள கட்டுரையை இத்துடன் திருப்பி அனுப்பியுள்ளேன்.

 

 

வி-லோகதாஸ்

14-06-1993 திகதியிடப்பட்ட மனிதத்தின் மேற்குறிப்பிட்ட கடிதமும், அத்தோடு எமது கட்டுரையும் பிரசுரிக்க முடியாது எனக்கூறி பதிவுத்தபால் மூலம் அனுப்பியிருந்தமை மீளப்பெற்றோம்.

 

கடந்தகாலங்களிலிருந்து மனிதத்தின் திரிபுவாதக் கருத்துக்களை நாம் அம்பலப்படுத்தி வருவதிலும், கருத்துக்களின் பிற்போக்கு, முற்போக்கு, திரிபு என்னும் மையத்திற்கப்பாற்பட்டு, எம்மீதுள்ள ஆத்திரத்தின் வெளிப்பாடாகவே போலியான காரணம் காட்டி நிராகரித்துள்ளனர் என்னும் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட கடிதத்தை விமர்சிக்க முற்படுகின்றோம்.

 

நாம் நமது கடிதத்திற்கு திகதியிடாத விடயம் தவறானது தான் என்பதை ஒத்துக்கொள்கிறோம். இது எமது கவனக்குறையால் ஏற்பட்ட ஒன்றாகும். தொடர்ந்து நிராகரிப்புக்குரிய காரணத்தை கவனிப்போம். விவாதத்துக்குரிய அல்லது கருத்தாடலுக்குரிய பண்புகள் மீறப்பட்டுள்ளமையால் பிரசுரிக்கமுடியாது என்று கூறியுள்ளனர். நாம் எச்சந்தர்ப்பத்திலும், அல்லது எந்தவொரு கட்டுரையிலும் மனிதர்களுக்குள்ள பொதுவான பண்பைப்பேணும் தார்மீகப்பொறுப்பைக் கடைப்பிடிப்பவர்களே, ஆனால் புரட்சிகர வர்கக அரசியல் (பாட்டாளிவர்க்க) பண்பு என்பது வர்க்கம் சார்ந்ததாகும்.

 

இங்கே நாம் விவாதித்த விடயம் (மனிதம்-சமர்) நேரெதிர் முரணுள்ள இரண்டு கருத்துக்களாகும். இவ்விரண்டு கருத்தும் வௌ;வேறு இரண்டு வர்க்கங்களின் நலன் சார்ந்ததே. மனிதத்தின் பார்வையில் பண்பு என்பது என்ன? எந்த அடிப்படையில் பண்பை வரையறுத்துள்ளீர்கள். மனிதம் பின்பற்றும் குட்டிப்பூர்சுவா பண்பை பாட்டாளி வர்க்கம் ஏற்றதல்ல. பூர்சுவாக்களின் பண்பான முகம் முறியாத, முதுகுக்குப் பின் கதைத்தல், தேனொழுக பேசி நடித்தல் போன்றவைகளை பாட்டாளிவர்க்கம் நிராகரிக்கின்றது. அனைத்தையும் கறாராகக் கையாள விரும்புகின்றது. எமது கருத்தையொத்த மாறனின் கட்டுரையை பிரசுரிப்பதாகவும், அதில் விவாதப்பண்பு பேணப்பட்டுள்ளதாகவும் கூறிப்பிட்டுள்ளனர். மனிதம் 22 இல் வெளியான மாறனின் கட்டுரை தொடர்பான சில விமர்சனம் எமக்குண்டு.

 

விமர்சனத்துக்குரியவை என நாம் கருதும் விடயங்களில், மனிதத்துக்கு உடன்பாடு இருந்தமையால் மாத்திரமே இதை பிரசுரித்தனர். ஆனால் மனிதத்தின் சந்தர்ப்;பவாத அரசியலை படம்பிடித்துக் காட்டும் மாறனின் சுயவிமர்சனம் இதை தொடர்ந்து பிரசுரமாகின்றது. மாறனின் கட்டுரைக்கும், எமது கட்டுரைக்குமிடையில் உள்ள, அடிப்படையில் மானிடத்தை இம்சிக்கும் எமது பண்பு பேணாமையை குறிப்பாகவும் சிறப்பாகவும் சுட்டிக்காட்டத்தவறியது ஏன்.?  மேதாவித்தனங்களை வெளிப்படுத்தற்கோ மார்க்சிசத்தில் வல்லவர் யார் என்பதை நிருபிப்பதற்கோ, அல்லது எதிர்மறைக் கருத்தை உடையவர்களை திட்டித்தீர்பதற்கோ, கருத்தாடல் பயன்படுத்தப்படக் கூடாது. எனக் குறிப்பிடும் மனிதம், எதிர்மறைக்கருத்துக்களை விவாதிப்பதை தவிர்த்து உயர்ந்த நிலையில் இருந்து பிரச்சனையை அணுகுவதை தங்களை அறியாமலேயே வெகுசிறப்பாகவே செய்துள்ளனர். எம்முடனான விவாதத்தை முடித்துக்கொள்வதாக கூறிய கூற்றை நடைமுறை யதார்த்தத்தோடு ஒப்பிடுவோமேயானால் அப்பட்டமான வர்க்கபேதங்கள் கொண்ட கருத்து வெளிப்பாட்டை நாம் காணலாம்.

 

எவ்வித அதிகாரமும் அற்று, ஜரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து பல தமிழ் அரசியல் நோக்கம் கொண்டோரால் பல சஞ்சிகைகள் வெளியிடப்படுவதும் பல அரசியல் கருத்துக்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதற்கும் ஒவ்வொர் குழுவினரிடம் ஒவ்வொரு நோக்கங்கள் கூட இருந்திருக்க முடியும். ஆனால் கருத்தை கருத்தால் வெல்ல சில சஞ்சிகைகளும் நபர்களும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டது, ஒவ்வோர் குழுவின் வர்க்கநலன் சார்ந்ததாக இருந்திருக்கமுடியும். (சமர் உட்பட) ஏனெனில் அந்த அளவுக்கு விவாதத்துக்குரிய உரையின் அவசியத்தை ஈழ அரசியல் எமக்கு தெளிவுபடுத்தி வந்ததே காரணம்.

 

ஆனால் விவாதத்திலிருந்து எம்மை ஒதுக்கிவிட்டதாகிய அறிவிப்பை நோக்குமிடத்து இவர்களிடம் அரசியல் அதிகாரம் இருப்பின், கடந்தகால புளட், நிகழ்கால புலிகள், இந்திய அமைதிப்படை காலத்து இந்திய அடிவருடிகள் ஆகியோரின் ஞாபகம் ஒரு கணம் மனத்திரைக்கு வந்து மறைகின்றது. எம்மை மேதாவிகள் எனக் கண்டுபிடித்த மேதாவிகளுக்கு நாம் இதன் ஊடாக கூறுவது யாதெனில் நாம் கருத்துகள் மீதொரு கருத்தை வைத்திருக்கின்றோம். நாம் யாரையும் ஒதுக்குவதையோ, ஓரங்கட்டுவதையோ நோக்கமாகக் கொள்ளவில்லை.

 

விவாத அரங்கிலிருந்து சமரை யாரும் ஒதுக்கிவிடமுடியாது. சமர் அனைத்துப் பிரச்சனை மீதும் அனைத்துக்கருத்தின் மீதும் தொடர்ந்து கருத்து கூறும். திரிபுவாதத்தை எதிர்க்கும். வேடதாரிகளை அம்பலப்படுத்தும். பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை உயர்த்தி தொடர்ந்து போராடும். இந்நிலையிலிருந்து ஒதுங்கமுடியாது நாம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.

 

சமர் ஆசிரியர் குழு-

 

 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது