Language Selection

சமர் - 9 : 1993
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மனிதம் இதழில் வெளிவந்த எனது கட்டுரை தொடர்பாக சில கேள்விகள் எழுப்பியிருந்தீர்கள். நான் உங்களுக்கு எழுதிய முதல் கடிதத்தில் இது பற்றி சிறு விளக்கம் அளித்திருந்தேன். அது போதுமானதாக அமையவில்லையென இம்மடல் மூலம் உணர்கின்றேன்.

 

(1) மனிதம் இதழ் மீது திரிபுவாதிகள் என முத்திரை குத்தியது பற்றி விளக்கமளித்திருக்கிறேன்.

 

(2) சமர் சஞ்சிகைக்குழு மனிதம் குழுவினரை திரிபுவாதிகள் என முத்திரை குத்தியமை என்ற வகையில் எனது கட்டுரையில் கருத்துக்கள் வெளிப்பட்டு இருந்தன. புலம் பெயர்ந்த நாடுகளில் வருகின்ற சஞ்சிகைகளில் அனேகமானவை ஒரு கட்சியினது வெளியீடு போல தெளிவான ஒரு தத்துவார்த்த அடிப்படையை மையம் கொண்டு வெளிவருவதில்லை. வேறுபட்ட கண்ணோட்டம் கொண்ட கடடுரைகள் ஒரே சஞ்சிகையில் வெளிவருகின்றன. விவாதத்தை தூண்டுவதற்காக சில சஞ்சிகைகள் கட்டுரைகளை பிரசுரிக்கின்றன. உதாரணமாக பனிமலர், 82 இல் படிகள் சஞ்சிகை வெளியிட்ட 6 கட்டுரைகளை பிரசுரித்து வருகிறது. தேடல் இதழில் பாதுகாப்புப் பேரவையின் ஜக்கிய இலங்கையை வலியுறுத்துகின்ற கட்டுரையொன்று விவாதத்துக்காக வெளியாகியது.

 

பனிமலர் ஆசிரியர் குழு எவ்வாறு எதிரும் புதிருமான ஒன்றுக்கொன்று பதிலளிக்கின்ற அக்கட்டுரைக்கு பொறுப்பாக கருத இயலாதோ,(அதேபோல தேடலில் அடுத்த தமிழீழத்தை வலியுறுத்துகின்ற பதில் வந்தது) தேடல் ஆசிரியர் குழுவினையும் இக்கட்டுரைக்கு பொறுப்பாகவோ அக்கருத்தை இவ் ஆசிரியர் குழுக்கள் பிரதிபலிப்பவையாக கூறமுடியாதோ(ஏனெனில் எதிரும் புதிருமான கருத்துக்களை பிரசுரித்து வருகின்றார்கள்) அவ்வகையிலேயே விவாதத்துக்காக என வெளியிடப்படும் கட்டுரைகளுக்கு அக் கட்டுரையாளர்களே பொறுப்பாளர்கள் என்பதே எனது கணிப்பாகும்.

 

அக் கணிப்பீட்டின் அடிப்படையிலேயே மனிதம் 21 எனது பார்வைக்கு கிடைப்பதற்கு முன்பாக (மாசி வரையில்) நான் அக்கட்டுரையை எழுதியிருந்தேன். எனது கட்டுரையானது மனிதம் மீதான சமர் விமர்சனத்தை மையம் கொண்டதல்ல. நான் கொண்டிருந்த கணிப்பீட்டின் அடிப்படையில் அம்பு இடம் மாறியிருப்பதாக அதாவது கட்டுரையாளர்கள் கரிகாலனோ, மூ.சிவகுமாரனோ தான் திரிபுவாதிகளாக விமர்சிக்கப்பட வேண்டுமெனவே நான் கருதியிருந்தேன். ஏன் எனில் மனிதம் 21 இல் வெளியாகிய சம(ர்)ருக்கு மறுப்பு என்னும் கட்டுரையில் மனிதம் ஆசிரியர் குழு வெளிப்படுத்திய கருத்துக்கள் கரிகாலன், மூ.சிவகுமாரன் போன்றோரது மார்க்சிச விரோதக் கருத்துக்களுடன் திரிபுவாதக் கண்ணோட்டத்துடன் அவர்களுக்கு இருக்கின்ற உடன்பாட்டைக் காட்டுகின்றது. முதலில் மனிதம் இதழ் கரிகாலனினது கட்டுரையில் விவாதப்பகுதி எனப் போடாததே தமது தவறு என்பதை ஏற்றே எனது கணிப்பீடு இருந்தது.

 

மனிதம் 21 இல் அக்கட்டுரைக்கு அதன் உள்ளக்கங்களுக்கு பொறுப்பேற்று விமர்சனம் அளித்த பின் மனிதம் குழுவினரை சமர் திரிபுவாதிகள் என முத்திரை குத்தியது என நான் முன்னர் குறிப்பிட்டது தவறனதாகிவிட்டது என ஏற்றுக் கொண்டு சுயவிமர்சனம் ஏற்கின்றேன். எனினும் மனிதம் 21 இல், திரிபுவாதம் முதலாளித்துவ மீட்சி மாவோவினது வரையறுப்புகள் பற்றிய அவர்களது தரப்பு கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்ட பின்பே அவர்களது அடிப்படையை கணிப்பிடுவது சாத்தியமாகின்றது என்பதும், ஒரு சஞ்சிகை விவாதப்பகுதிக்கு என்று வெளியிடுவதை வைத்து தீர்மானிக்க இயலாதென்பதுவுமே எனது அபிப்பிராயமாகும்.

 

நான் உங்களுக்கு எழுதிய முதல் கடிதத்தில் எனது கட்டுரை வெளியாகும் பட்சத்தில் மனிதத்துக்கு சமரினது அணுகுமுறை பற்றி நான் குறிப்பிட்டதில் இருந்த தவறு பற்றி எழுதுவதாக குறிப்பிட்டிருந்தேன் அவ்வகையில் மனிதம் இதழுக்கு தங்களது விமர்சனம் பற்றி நான் கட்டுரையில் குறிப்பிட்டவற்றிக்கான எனது நிலைப்பாட்டை விரைவில அனுப்பி வைப்பேன். எனவே மனிதம் இதழைப் பொறுத்தவரை திரிபுவாதிகள் என சொன்னதில் முத்திரை குத்தியது என நான் கணிப்பிட்டது தவறானதாகும் என சுய விமர்சனம் ஏற்கின்றேன். நான் உங்களுக்கு எழுதியதில் நான் திரிபுவாதத்துக்கு எதிரான உங்கள் உறுதியான போக்குடன் உடன்பட்டிருந்தேன். அதற்கும், முன்பு மனிதம் கட்டுரையில் குறிப்பிட்டதிற்கும் மாறுபாடு எதுவும் இல்லை. மனிதம் மீதான இடம் மாறிய தவறான தாக்குதல் என்பதே எனது அப்போதைய கருத்தாக இருந்தது. அதனாலே மனிதம் குழுவை திரிபுவாதிகள் என முத்திரை குத்தியதில் இருந்த தவறு என குறிப்பிட்டேன். திரிபுவாதப்போக்குகளுக்கு எதிரான உங்கள் விமர்சன அணுகுமுறையில் நான் முழு உடன்பாடு கொண்டுள்ளேன். மாற்றுக் கருத்துகளுக்கு கருத்துகளால் முகம் கொடுக்கும் பண்பை வலியுறுத்துகின்ற சந்தடி சாக்கில் என்ற வரியை நான் பாவித்ததில் நான் சமரினது விமர்சனம் பற்றி அதில் நான் கணக்கில் கொள்ளவில்லை.

 

மூ.சிவகுமாரன் அக்கருத்தை கூறிக்கொண்டு திரிபுவாதத்தை புனிதமாக்குவதையே குறிப்பிட்டு நின்றேனே ஒழிய சமரினது விமர்சனம் பற்றி அதில் நான் குறிப்பிடவில்லை. அக்கட்டுரையானது எழுதியதின் பின்னாகவே சமர் இதழ்கள் எனக்கு கிடைக்கப் பெற்றது. எனினும் அக்கட்டுரையில் அவ்வரிகள் சமரினது விமர்சனம் மீதானதாக தோற்றம் கொள்வதாக இருப்பின் அதற்காக சுயவிமர்சனத்தைக் கோருகிறேன். எனது அப்போதைய அபிப்பிராயப்படியும், மனிதம் குழுவை திரிவுவாதிகள் எனக் குறிப்பிட்டதில் இருந்த தவறேயென்று எழுதியிருக்கவேண்டும். முத்திரை குத்தியது என்ற பதம் முழுமையாக தவறானதாகும். மூ.சிவகுமாரனின் அது கட்டுரைக்கு மறுப்பெழுதுவதை முதன்மைப்படுத்தி மனிதம் மீதான சமரினது விமர்சனத்தை ஆழ்ந்த கவனத்தில் கொள்ளாது வரிகளை கையாண்டமைக்கு சமர் குழுவிடம் சுயவிமர்சனத்தை கோருகின்றேன்.

 

விமர்சனங்கள் தேவையையொட்டி கடுமையானதாக அமையலாம் என்பதையும் தேவைக்கேற்ப அம்பலப்படுத்தல் செய்வதற்கு எவ்வரையறைகள் மூலமும் இனம்காட்டுவது தவறல்ல என்பதே எனது கருத்து. அவ்வகையில் முத்திரை குத்தல் என்ற பதம் என்னால் ஆழ்ந்த கவனமின்றி பயன்படுத்தப்பட்டதையிட்டு சுயவிமர்சனம் செய்கிறேன்.

 

மாறன்


மாசேதுங் தொடர்பாக ஜெயபாலன் கூற்றுக்குப் பதிலளிக்கும் போது மாவோ மீது பெண்கள் தொடர்பாக நடந்ததாக அறிவதாகவும் கூறியிருந்தீர்கள். எங்கே? எப்போது? என கேள்வியெழுப்புவதை இங்கு நான் முறையாக கருதவில்லை. மாசேதுங் ஆசிரியர் பயிற்சி காலகட்டத்தில் ஒரு பெண்ணை காதலித்தாரெனவும், பின்பு அவர்கள் இருவருக்கும் கருத்து முரண்பாடுகளால் சேர்ந்து வாழமுடியாமல் போனது எனவும் பின்னர் சாங்கே சேக்கின் படையினால் அவரது மனைவியும் தங்கையும் கொல்லப்பட்டதாகவும் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் படித்திருந்தேன். இறுதிகாலத்தில் நால்வர் குழுவில் ஒருவரான சீயாங்சிங் என்பவர் மாவோவின் மனைவியாக இருந்தார் எனவும் அறிகின்றோம். இதிலிருந்து ஒருவர் உயிருடன் இருக்கும் போது இன்னும் ஒரு பெண்ணிடம் உறவுவைத்திருந்ததாக பொருள்படாது என்று கருதுகின்றேன். எனவே அவரது வாழ்க்;கையில் சீரழிந்த கலாச்சார பாதிப்புக்களை பின்பற்றியிருப்பின் சீனச் சமூக குறைபாடுகளை தனது அனுபவமாக தொகுத்திருக்கமுடியாது. அவர் கட்சியில் ஆரம்பத்திலிருந்து நீண்டபடை நடப்பை முன்னெடுக்கும் வரையும் கட்சிக்குள் சிறுபான்மையாக இருந்தார்.

 

இத்தகைய குறைபாடுகள் இருப்பின் அவரைத் தலைமைக்கு கொண்டுவந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இவற்றை டெங்கும்பல் நால்வர் குழுவில் ஒருவரான சீயாங் சிங் என்பவரின் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் மாசேதுங்குடன் சம்மந்தப்படுவதால் அவர் மீது விமர்சனம் நடந்ததாக பொருளாகாது. இத்தகைய இன்னும் ஒரு உதாரணத்தை லெனினின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்தபோது அவருக்கு ஒரு காதலி இருந்தார், என்ற மாதிரி சித்தரிக்கப்பட்டிருந்ததும் கவனிக்கதக்கது.

 

மாவோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லை. டெங்கும்பல் மாவோ மரணத்தின் பின்பு சீயாங்சிங் எனபவரின் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களை மாசேதுங் உயிருடன் இருந்தபோது முன்வைக்காதது டெங்கும்பலின் அரசியல் நேர்மையின்மையை காட்டுகின்றது. இங்கு ஜரோப்பிய பிரமுகர்களை அம்பலப்படுத்துவதும், பாதிவழி கூட்டாளிகள் என்பதை இனம் காட்டுவதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். இவர்கள் புதிய சக்திகளை பிழையான வழிக்கு தள்ளிவிடுவர் என்பதிலும் எனக்கு சந்தேகம் இல்லை.

 

சாந்தன் டென்மார்க்.

 

14.03.1993

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது