Language Selection

பு.மா.இ.மு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

3ந்தேதி விடியற்காலை
நேரம். சென்னையை
முகாமிட்டிருந்த பேரிருள்
தன் இருப்பை அகற்றி
கொண்டு விரைவாய்
மறைந்தோடியது.

 

காலை கதிரவன் சிவந்து
உச்சியேறிய நேரம்.
கடற்பரப்பு “பேரலைகளால்
சலசலத்து கொண்டிருந்தன.

எதைப்பற்றியும் கவலை
படாத மக்கள் கூட்டம்
அவசர வேலைகளில்
தங்கள் அறிவை பறிகொடுத்து
கொண்டிருந்தன.

நாங்கள் ஓர் லட்சம்
உறுப்பினர். நாங்கள் 5
இலட்சம் உறுப்பினர்
நாக்ன்கள் 10 இலட்சம்
உறுப்பினர்.
நாங்கள் தான் நம்பர் ஒன்
இல்லை இல்லை நாங்கள்
தான் நம்பர் ஒன் என்று
குமுதம், குங்குமம், விகடன்
கதையாக,

ஆள் ஆளுக்கு அடித்து
கொள்ளும் ஓட்டு பொறுக்கிகளின்
மாணவர் அமைப்புகள்
வளர்ப்பு பிராணிகளாய்
போடும் எலும்பு துண்டுகளை
கவ்விக்கொண்டு வாய்மூடி
கிடக்க

ஈழத்தமிழன் கண்ணீரை
இதயத்தில் ஜீரணிக்காமல்
களத்தில் இறங்கி போராடி
கொண்டுருக்கும் பு.மா.இ.மு
மாணவர் அமைப்பு
சொரனையற்று கிடந்த
சென்னை மாநிலக் கல்லூரி
யின் நுழைவாயிலில்
5 தோழர்களை களத்தில்
இறக்கியது. அவ்விடம்
சுயமரியாதை காற்றால்
சூழந்து நின்றது.

எதையோ கற்க மாணவர்
கள் கல்லூரிக்குள் நுழைந்தது
கொண்டிருக்க.

ஈழத்தின் அழுகை ஓலத்தை
வழக்கறிஞர்களின் போர்
குணத்தை எமது தோழர்கள்
கருத்து குவியலாய் மாற்றி
அம்மாணவர்களின் கேளாத
செவிட்டு காதுகளில்
சத்தமாக துளைத்து
கொண்டிருந்தனர்.

மாணவர் பேரெழுச்சி
எழுந்துவிடுமோ, வங்க
கடல் வாய்பிளந்துவிடுமோ
அதில் தம் ஆட்சி மூழ்கி
விடுமோ என்றச்சி கிடக்கும்
பேடி கருணாநிதியின்
காவல்துறை கல் குடித்த
காளிகளாய் எமது
தோழர்களை சுற்றி
வளைத்தது.

சிவப்பு சூரியன்களை
பனித்துளிக்ள் படையெடுத்தைபோல.

உங்க அம்மாவிற்கு ஈழத்தானா
கணவன்? உங்கள் அக்கா
தங்கைகளை ஈழத்திற்கா
வருந்தாக்கினீர்? நீங்க ஈழத்தானுக்கா
பிறந்தீங்க? என்ற

ஆபாச வார்த்தைகள்
அம்புகளாய் பாய்ந்தன எமது
தோழர்கள் மீது

அது காவல்துறையின்
தன்னிச்சையான கருத்தல்ல.
ஈழத்தமிழன் நிலைகண்டு
கலங்காத கருணாநிதியின்
கழுத்தறுப்பு நிலைப்பாடு.

இன்ஸ்பெக்டர் கண்ணனின்
குரல்வளையாய் ஒலித்தது
காவல்துறையல்ல,
கருணாநிதி.

புரிந்து கொண்டு ஒவ்வொன்றாக
பிடிங்கி எறிந்தனர்
பு.மா.இ.மு வீரர்கள்.

வாங்கி கொண்டு திரும்பும்
பழக்கமல்ல எமக்கு
பதிலடியாய் ஒரே ஒர்
வார்த்தை.

அது அம்பு அல்ல, அவை
களை வாய்மூட வைத்த
அணுகுண்டு.

இதோ கீழே அவ்வார்த்தை.

எல்லாம் இருக்கட்டும்

ஈழத்தமிழன் கண்ணீரை
துடைக்க நீளும் கைகளை
உடைக்கும் நீங்கள் என்ன
சிங்களவனின் வித்துக்களா?

இவ்வார்த்தைகளை கேட்ட
அண்ணா சாலையோர
சிலைகள் ஓர் கனம்
அசைந்து எமது தோழர்களை
பார்த்தன.
காக்கி சட்டைக்குள் மறைந்து
கிடந்த ரவுடிகளின் வாய்
உடைக்கப்பட்டன.

மறுவார்த்தை பேச வழியின்றி
மவுனத்தை வாந்தி எடுத்தன.

பின் நாங்கள் குரைக்கும்
சாதியல்ல, கடிக்கும்
சாதி என்று முழங்கின.

அவைகள் கைகளால்
பேசன. கால்களால் ஏசின.
லத்தியகளால் அடித்தன.

நக்சல்பாரிகளை
மார்க்சிய எரிமலைகளை
காக்கி ஆடுகள்
முட்டிபார்த்தன.
துவண்டு போனதுதான்
மிச்சம். அவைகளின்
முயற்சி கொம்புகள்
உடைக்கப்பட்டன.

இதற்கிடையே
செய்தி பரவிய வேகத்தில்
செம்படை கூட்டம்
ஸ்டேஷன்களை நோக்கி
படையெடுக்க,
சமாதானம் பேசின
சதிகார மிருகங்கள்.

சமாதானத்துக்கு இடமில்லை
சந்திப்போம் நீதிமன்றத்திலே
என்று கூறி மீண்டும் ஒர்
முறை அவைகள் வாய்
உடைக்கப்பட்டன.

நெருப்புகள் பொட்டலம்
கட்டப்பட்டன. மின்னல்கள்
சிறைக்கு கொண்டு
செல்லப்பட்டன.

சூழ்நிலை கைதிகளின்
சுற்றாத பூமியாய்
கிடக்கும் புழல் சிறை
எமது அரசியல்
அணுகுமுறையால்
சிவந்தது.

வெளியில் எதை செய்ய
முயன்றார்களோ
அதனை எந்த எதிர்ப்பும்
இன்றி சிறையில் செய்தார்கள்
எமது தோழர்கள்.

அதற்காக வாய்ப்பை
ஏற்படுத்தி கொடுத்த காவல்
துறை நாய்களுக்கு
நன்றிகள் ஆயிரம்
சொல்வோம்.

வெளியிலும் எமது
அரசியல் சூறைக்காற்றாய்
வீசியது. அவ்வீச்சியில்
போலி ஜனநாயகம்
அம்பலப்பட்டு நிர்வாணமாய்
நின்றது.

ஆளும் அரசை சுவரொட்டிகள்
கண்ட இடங்களில் காறிதுப்பின.
தெருமுனை கூட்டங்கள்
சூடுகொலுத்தின.

தஞ்சை, திருச்சி எனறு
கானும் இடமெல்லாம்
காட்டாறுகள் கதிகலங்க
வைத்தன.

இனி அணைபோட
முடியாது என்பதை
அரசு உணர
மறுபுறம் வழக்கறிஞர்
ஆதரவு பெருக

ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்
செவ்வணக்கதுக்குக்குரிய பு.மா.இ.மு
வீரர்கள்.

தமிழகத்திற்கு தன்மானம்
ஊட்டிய பகத்சிங்கின்
பேரன்கள்

கருணாநிதியின் காட்டு
தர்பாரை கண்டு
கலங்காத எமது தியாகிகள்.

மாநில கல்லூரியில்
போர்முரசு கொட்டிய
எங்களின் பாதிகள்

சென்னை மாவட்ட
மாணவர் வரலாறு
எமது தோழர்கள்
பெயரின்றி எழுதிட இயலாது.

இது காலம் ஏற்றுக்
கொள்ளவேண்டிய சூழல்
போர்குணமிக்க எமது
தோழர்கள் பகத்சிங்கின் சாயல்.

தியாகத்திற்கு பஞ்சம் இல்லை
தமிழ்மண்ணில்
அதனை நேரிடையாக
கண்டோம் எமது கண்ணில்

நெஞ்சுரம் கொண்ட
கணேசனாக
சீற்றம் கொண்ட
சேகராக
ஆர்ப்பறித்த அருள்
மொழியாக
வீரம் செறிந்த
வினோத்குமாராக,
அச்சம் உடைந்த
முத்துக்குமாராக

நீண்டு நிற்கும் இந்த
நீள்வரிசை இதோடு
நிற்காது.

அது நீளும்…
ஈழத்தமிழன் கண்ணீர்
நிற்கும் வரை

இந்திய புரட்சி நடக்கும்
வரை
ஆளும் வர்க்கங்களை
அடக்கம் செய்யும்
வரை

சுரண்டலற்ற சமூகம்
படைக்கும் வரை

அதுவரை நிற்காது
நக்சல்பாரிகளின்
இயக்கம்

தமிழகமே விழித்தெழு
இன்னும் என்ன
தயக்கம்

மீண்டும் ஒர்முறை
ஈழத்தமிழன் கண்ணீர்
துடைக்க, தமிழக
தமிழனுக்கு
சொரனை கொடுக்க
சிறைசென்று வந்த
எமது தோழர்களுக்கு
சுயமரியாதை ஊட்டிய
தியாகிகளுக்கு
செவ்வணக்கம்
செவ்வணக்கம்.

-நக்சல்பாரியன்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது