Language Selection

கலையரசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உங்களது பெயர் "பயங்கரவாதிகள் பட்டியலில்" இடம்பெற்றுள்ளதா? [பகுதி - 4]

2004 ம் ஆண்டு மார்ச் 11, மாட்ரிட் ரயில்வண்டியில் குண்டு வெடித்து 190 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அன்றைய ஸ்பெயின் பிரதமர் அஸ்னார், எடுத்த எடுப்பில் பாஸ்க் பிரிவினை கோரும் ETA மீது பழி சுமத்தினார். ETA மறுத்திருந்தது.

 ஆனால் அன்றைக்கு யாரும் மறுப்பை பெரிதாக எடுக்கவில்லை. குண்டுகள் வெடித்து மூன்று நாட்களுக்குள் பொதுத் தேர்தல் வர ஏற்பாடாகி இருந்தது. தேசிய அனுதாப அலை காரணமாக, அஸ்னார் தனது வெற்றி உறுதி என்று எண்ணி இருக்கலாம்.



குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து சில மாதங்களுக்குள்ளேயே, ஸ்பானிய ஊடகங்கள் தீவிரமாக துப்புத் துலக்கியத்தில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின. குண்டு வைக்க சதி செய்த பயங்கரவாதிகள் என்று சொல்லி, சில அரபு இளைஞர்களை ஸ்பானிய பொலிஸ் அடுத்தடுத்து கைது செய்து கொண்டிருந்த காலம் அது. ஆனால் ஊடகங்களுக்கு கிடைத்த தகவல்கள் படி, சந்தேகநபர்களில் சிலர் காவல்துறை நியமித்த உளவாளிகள், அல்லது ஆட்காட்டிகள். உதாரணத்திற்கு தீவிரவாதிகளுக்கு டைனமைட் வெடிபொருளை விற்ற சுரங்க தொழிலாளி, காவல்துறையினால் பணியில் அமர்த்தப்பட்டவர். வாங்கிய வெடிபொருட்களை எங்கே, எப்படி கடத்திச் செல்கின்றனர் என்ற விபரங்கள் கூட காவல்துறைக்கு தெரிந்தே இருந்தன. யாரும் தலையிடவில்லை. மேலும் ரயிலில் குண்டை பொருத்த திட்டமிருந்ததாக துல்லியமான தகவல் கூட கிடைத்தது. அப்போதும் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

அது சரி, இவ்வளவு தகவல்கள் கிடைத்தும், காவல்துறை எதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை? ஒரு வேளை, தாக்குதலின் வீரியத்தை குறைத்து மதிப்பிட்டிருக்கலாம். அதைவிட முக்கியமாக அந்த குண்டுகள் ETA க்கு எடுத்துச் செல்லப்படுகின்றன என காவல்துறை நம்பி இருக்கலாம். கடந்த காலங்களில் அது போன்ற சம்பவங்களில், பல ETA தலைமை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆமாம், சாதாரண மக்களின் சிந்தனையோட்டத்திற்கு மாறாக தான், புலனாய்வுத்துறை சிந்திக்கின்றது. தீவிரவாத இயக்கங்களை வெளிப்படையாக இயங்கவிட்டு, அதன் கீழ்மட்டத்தில் செயல்படுபவர்களைக் கண்காணித்து, பெரிய புள்ளிகளை கைது செய்ய நாள் பார்த்துக் காத்திருப்பர். இதற்காக புலனாய்வுத்துறை தனது ஆட்களையே அனுப்பி வைக்கும்.

கொஞ்சக் காலம் அமைதிப்பூங்காவான நெதர்லாந்தில், "தீவிரவாதக் குட்டிகளின் கிளப்" ஒன்று இயங்கி வருவதாக, பொலிசும், ஊடகங்களும் மயிர்க்கூச்செறியும் பரபரப்புக் கதைகளை கூறி வந்தார்கள். ஒரு மிருகத்தை கண்டுபிடித்தால், அதற்கொரு பெயரிடு என்றொரு பழமொழி இருப்பது போல, அந்த கிளப்பிற்கு "Hofstad groep" என பெயரிட்டார்கள். ஒரு இணையத்தளத்தில் புனைபெயரில் வந்து தீவிர அரசியல் கருத்துகளை கூறிய இளைஞன் ஒருவன் IP முகவரி மூலம் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டான். அந்த இணையத்தில் தன்னோடு விவாதம் செய்தது பொலிஸ் கையாள் என்ற விடயம், சிறை சென்ற பின்னர் தான் அந்த இளைஞனுக்கு தெரிய வந்தது. அதே போல கிரேனேட் வைத்திருந்த குற்றத்திற்காக இன்னொரு இளைஞன் கைது செய்யப்பட்டான். அவனது கைகளுக்கு அந்த கிரேனேட் எப்படி வந்தது? தீவிரவாதி போல நடித்த இன்னொரு பொலிஸ் உளவாளி ஒருவரிடம் இருந்து கிடைத்தது. நான் இங்கே குறிப்பிடும் விபரங்கள் எல்லாம், கைது செய்யப்பட்டவர்களுக்காக வாதாடிய வக்கீல்கள் துருவிய போது வெளி வந்த உண்மைகள். சில ஊடகங்களும் இதே சந்தேகங்களை கிளப்பி இருந்தன.

மேற்குறிப்பிட்ட ஊடுருவல்கள், மேற்குலக வழிகாட்டுதலுடன் பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடும் மூன்றாம் உலக நாடுகளில் இன்னும் தீவிரமாக நடக்கும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் அல்ஜீரியா. அங்கே 1991 ல் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட இஸ்லாமியவாதக் கட்சியை, ஆயுதமேந்தும் நிலைக்கு தள்ளியது அல்ஜீரிய அரசு. தேர்தல் முடிவுகள் இரத்து செய்யப்பட்டு, இராணுவ சர்வாதிகாரம் நிலைநாட்டப்பட்டது. இஸ்லாமியக்கட்சி உறுப்பினர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டனர். அதே நேரம் கிராமங்களில் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதான சம்பவங்கள் அதிகரித்தன. அரசு இதெல்லாம் இஸ்லாமிய தீவிரவாதிகளின் கைங்கரியம் என்று இலகுவாக உலகை நம்ப வைத்தது.

அல்ஜீரிய அரசிற்கு, அதன் மாஜி காலனியாதிக்க நாடான பிரான்ஸ் ஆதரவு வழங்கியது இரகசியமல்ல. எனினும் பாரிஸ் நகரில் சுரங்கரயில்வண்டியில் இடம்பெற்ற சில குண்டுவெடிப்புகள், பிரான்சை நேரடியாக அல்ஜீரிய உள்நாட்டுப்போரில் ஈடுபட வைத்தது. பயங்கரவாதத்தை ஒழிக்க பிரான்ஸ் வழங்கிய பூரண ஆதரவை தனக்கு சாதகமாக பயன்படுத்திய அல்ஜீரிய அரசு, இஸ்லாமிய எதிர்ப்பியக்கத்தை ஈவிரக்கமின்றி ஒடுக்கி வெற்றிவாகை சூடியது. இதில் கவனிக்க வேண்டிய அம்சம், அல்ஜீரிய அரசு எவ்வாறு சர்வதேசத்தை தனது பக்கம் திருப்பியது என்பதே. சர்வதேச சமூகத்தை பொறுத்த வரை, அல்ஜீரியாவில் "உள்நாட்டு அல்கைதா" தலையெடுக்கப் பார்க்கிறது. மனிதகுலத்திற்கு விரோதமான பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டும். அவ்வளவு தான்.

2004 ம் ஆண்டு, அல்ஜீரிய அரச புலனாய்வுத்துறையின் பழைய பணியாளர்கள் சிலர், தமது மனச்சாட்சிக்கு பயந்து, அரசின் பொய்முகமூடியை கிழிக்க முன்வந்தனர். போர்க்காலத்தில் நடந்த உண்மைகளைப் பற்றி வாக்குமூலம் அளித்தனர். நாம் நினைப்பதற்கு மாறாகவே உண்மை இருப்பது உலக யதார்த்தம். உள்நாட்டுப்போரில் பிரான்சை ஈடுபடவைக்கும் சதித்திட்டம் புலனாய்வுப்பிரிவும், பிரெஞ்சு அரசும் சேர்ந்தே தீட்டின. தலைநகர் அல்ஜியர்சில், பிரெஞ்சு தூதுவராலய ஊழியர்கள் கடத்தப்பட்ட சம்பத்தை குறிப்பிடலாம். அவர்களை கடத்தியது புலனாய்வுப்பிரிவு ஆட்கள் என்பது மட்டுமல்ல, இந்த நடவடிக்கை முன்கூட்டியே பிரெஞ்சு உள்துறை அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. (சில நேரம் அவரும் சேர்ந்தே திட்டமிட்டிருக்கலாம்). இது மட்டுமல்ல, இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்தியதாக நம்பப்பட்ட பல தாக்குதல் சம்பவங்களை, அந்த இயக்கத்தினுள் ஊடுருவி இருந்த புலனாய்வுத்துறையை சேர்ந்தவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்த சதிக்கு சிகரம் வைத்தாற்போல் பாரிஸ் குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. குண்டுவெடிப்பை திட்டமிட்ட ஒரு இராணுவ புலனாய்வுத்துறை ஜெனரல் உட்பட மற்றும் பலர் இனம் காணப்பட்டனர். அது மட்டுமல்ல, பிரெஞ்சு அரசாங்கம் இதுவரை எதற்காக குண்டுவெடிப்பு பற்றி பூரண விசாரணை செய்யவில்லை? என்பதும் சந்தேகத்திற்குரியது.

இந்த உண்மைகளும் பிரான்ஸில் ஏற்கனவே வெளிவந்து, ஊடகங்களின் கவனத்தை பெற்றவை தான். அந்த நேரம் பிரான்சிலேயே தங்கியிருந்த, பாரிஸ் குண்டுவெடிப்பு சூத்திரதாரிகளை அடையாளம் காட்ட, முன்னாள் புலனாய்வுப்பிரிவு ஊழியர்கள் முன்வந்தனர். இருப்பினும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல், பத்திரமாக அல்ஜீரியா திரும்புவதற்கு பிரெஞ்சு அரசாங்கம் அனுமதி அளித்தது. இந்தப் புதிருக்கு ஒரேயொரு விடை தான் இருக்க முடியும். அல்ஜீரிய அரசு பிரான்சின் நண்பன். இஸ்லாமிய தீவிரவாதிகள் இருவருக்குமே எதிரிகள். "நீதி, நியாயம்" என்பனவெல்லாம் அப்பாவி மக்களை ஏமாற்றுவதற்கு உருவாக்கப்பட்ட அலங்காரச் சொற்கள். நிஜ உலகில் எமது நலன்களுடன் யார் ஒத்துப் போகின்றனர், என்பதே கணிக்கப்படுகின்றது. அளவில் அதிகமாக எண்ணை, எரிவாயு சேமிப்புகளை கொண்ட அல்ஜீரியா என்ற கற்பக விருட்சம் பிரான்சிற்கு தேவைப்படும் வரையில், அந்த அரசிற்கான ஆதரவும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

-- முற்றும்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது