Language Selection

பு.மா.இ.மு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
உழைக்கும் மக்களின் விடுதலைக்கு பாதை
அமைத்த மாமேதை மார்க்ஸ் போராட்ட கவிதை
வாழ்நாள் முழுவதும் மார்க்ஸை துரத்திய
வறுமை துயரத்தின் கவிதை


மாமேதை மார்க்சின் ஏங்கெல்ஸ் நட்பின் கவிதை.
மார்க்ஸிய எதிரி புருனே பழமைவாதத்தின் கவிதை.
மனிதநேயத்தை உற்பத்தி செய்யும் மார்க்சியம் தத்துவ கவிதை
கொலை,கொள்ளை,கற்பழிப்பு, திருட்டுத்தனம்
விபச்சாரம், சுயநலன், மூடநம்பிக்கை என
மனித அவலங்களை உற்பத்தி செய்யும் முதலாளித்துவம்
அருவறுப்பின் கவிதை.

பெண்ணியத்திற்கே முன்னுதாரணம் தந்த
மார்க்ஸின் ஜென்னி பண்பின் கவிதை
கணவன் இருக்க மாற்றான் இராவணனுக்கு
மடிவிரித்த இராமனின் சீதை கழிச்சடையின் கவிதை.

உலகை குலுக்கிய ரஷ்ய சோசலிச புரட்சி
சரத்திரத்தின் கவிதை
அதை சீரழித்த குருஷேவ் கும்பலின் எதிர்ப்புரட்சி
வக்கிரமான முதலாளியத்தின் மீட்சி கவிதை

உலகின் முதல் சோசலிச புரட்சியின் நாயகன்
லெனின் நடைமுறை கவிதை
மூன்றாம் அகிலத்தின் மார்க்சிய துரோகி காவுட்ஸ்கி
பிற்ப்போக்கின் கவிதை



லெனினின் கனவை நனவாக்கிய, பாசிச ஹிட்லருக்கு
பாடை கட்டிய மாமேதை ஸ்டாலின்
பாட்டாளி வர்க்க சர்வாதிகார கவிதை
மார்க்சியன் என்று கூறிக்கொண்டே மார்க்சியத்தை
கற்பழிக்க முயன்ற துரோகி ட்ராட்ஸ்கி
ஓடுகாலி கவிதை

ஆசியாவின் நோயாளி சீனாவை செஞ்சீனாமாய்
மாற்றிகாட்டிய மாமேதை மாவோ
சீனவானின் சிவப்பு நட்சத்திரத்தின் கவிதை
சீனாவில் மாவோவின் கல்லறையிலேயே சோசலிசத்தை
குழித்தோண்டி புதைத்த துரோகி டெங் சியாவோ பிங்
சி.பி.எம்.மின் குருத்துவத்தின் கவிதை.

அமெரிக்க-பிரெஞ்ச்-ஜப்பானிய ஏகாதிபத்தியங்களுக்கு
மரண அடி கொடுத்து மீண்டு எழுந்த
ஹோசிமினின் வியட்நாம் பினிக்ஸ் கவிதை
வியட்நாமில் புரட்சியாளர்களை எதிர்க்க
துப்பில்லாமல் டயாக்சின் இராசாயன குண்டுகளால்
20 இலட்சம் வியட்நாமிய உழைக்கும்
மக்களை கொன்றுபோட்ட அமெரிக்கா
பயங்கரவாத்தின் கவிதை

அமெரிக்க ஏகாதிபத்தியங்களுக்கு சிம்மசொப்பணமாய்
திகழும் ·பிடல் காஸ்ட்ரோ துடிப்பின் கவிதை
50 ஆண்டுகால பொருளாதார தடைகளால் கியூபாவை
சீரழிக்கும் அமெரிக்க பயங்கரவாதம் வயிற்றெரிச்சலின் கவிதை

ஸ்டாலின் காலத்து கிழக்கி ஐரோப்பா
சோசலிசத்தின் கவிதை
அமெரிக்க கைப்பாவை மேற்கு ஐரோப்பா
ஆக்கிரமிப்பின் கவிதை

பெண்ணடிமைத்தனமும், சுரண்டலும் அற்ற
தாய்வழி சமுதாயம் தூய்மையின் கவிதை
மனித அவலங்களை ஈன்றெடுத்த தந்தை வழி
சமுதாயம் சுரண்டலின் கவிதை

கடவுள் மனிதனை படைத்தான் என்ற கருத்துக்கு சவக்குழி
தோண்டிய சார்லஸ் டார்வின் பரிணாமத்தின் கவிதை.
மனிததோற்றத்தை பொய்யாலும், புரட்டாலும் இழிவுபடுத்தும்
பைபிளின் ஆதியாகமம் மூடனின் கவிதை.

தேசிய இன விடுதலை போராட்டத்தை நடத்திகொண்டிருக்கும்
ஈழம், பாலஸ்தீனம், காஷ்மீர், அசாம் தொடர் கவிதைகள்
அத்தீம்பிழம்புகளை அணைக்க முயலும் இலங்கை,
இஸ்ரேல், இந்திய ஆளும்வர்க்கம் விட்டில் பூச்சிகளின் கவிதை

இடைகாலத்தில் பார்ப்பீனியத்துக்கு மரண அடி கொடுத்த
புத்தம் கொடுமைக்கு எதிரான கவிதை.
அதனை கொன்றுபோட்ட பார்ப்பன கூட்டம்
வஞ்சகத்தின் கவிதை


23 வயதில் தாய்மண்னின் விடுதலைக்காக தூக்குகயிறை
முத்தமிட்ட மாவீரன் பகத்சிங் தன்மானத்தின் கவிதை
வெள்ளை துறையிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து
விடுதலை போராட்டத்துக்கு துரோகமிழைத்த
பாரதி கோழைத்தனத்தின் கவிதை.

பார்ப்பனியத்தையும், அதன் மிதவாத வடிவமான
காந்தியிசத்தையும் இறுதிவரை எதிர்த்த
டாக்டர் அம்பேத்கார் சாதி ஒழிப்பின் கவிதை
துரோகத்தையே அரசியலாக்கி
துரோகத்தையே அஹிம்சையாக்கி, துரோகத்தையே விடுதலை
போராட்டமாக்கிய இந்திய உழைக்கும் மக்களுக்கு
துரோகமிழைத்த பொக்கைவாய் காந்தி துரோகத்தின் கவிதை.


தன்மானத்தை தமிழனுக்கு ஊட்டிய கலககார கிழவன்
பெரியார் சுயமரியாதையின் கவிதை.
பெரியார் கொள்கைக்கு துரோகமிழைத்த அண்ணாதுரை
பிழைப்புவாதத்தின் கவிதை.

உழைக்கும் மக்களின் விளையாட்டான கபடி
வீரத்தமிழின் கவிதை
பன்னாட்டு கம்பெனிகளுக்கு இந்தியாவை வேட்டை
காடாய் மாற்றும் ஏகாதிபத்திய கிரிக்கெட்
இளைஞர்களை சீரழிக்கும் போதை கவிதை.

இந்திய ஆளும்வர்க்கத்தை அதிரவைத்த தெலுங்கானா
போராட்டம் இந்தியாவின் சோசலிச தாகத்தின் கவிதை.
அதனை ஈவுயிரக்கமில்லாமல் ஒடுக்கிய பண்டித
நேரு பாசிசத்தின் கவிதை

உலகை அதிரவைத்த நக்சல்பாரி பேரெழுச்சி
வசந்தத்தின் இடிமுழக்க கவிதை.
அதனை இரத்தத்தால் முழ்கடித்த
இந்திய அதிகாரவக்கம்-சி.பி.எம்.மின் துரோகம்
கம்யூனிச துரோகிகளின் சங்கம கவிதை.

21 ம் நூற்றாண்டின் முதல் புரட்சியை பெற்றெடுத்த
எங்கள் நேபாளம் புரட்சிகர கவிதை
அதனை சீரழிக்க முயலும் இந்திய ஏகாதிபத்திய
துரோக அரசு போலி ஜனநாயகத்தின் கவிதை

இந்திய விடுதலைக்கு கட்டியம் கூறும்,
நக்சல்பாரிய புரட்சியாளர்கள்
இன்றைய நம்பிக்கை கவிதை
புரட்சி புரட்சி என்று
இந்திய உழைக்கும் மக்களை ஏமாற்றும் சிபிஐ-சிபிஎம்
ஒழிக்கபட வேண்டிய துரோக வரலாற்றின் கவிதை.
http://rsyf.blogspot.com/2009/02/1.html

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது