Language Selection

கலையரசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த பத்தாண்டுகளாக ஐரோப்பிய நாடுகளின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. ஆனால் அவர்களது தாயக பூமியில் மக்கள் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கையில், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஐரோப்பிய படைகள் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் குண்டு வீசிக் கொண்டிருக்கின்றனர். ஐரோப்பாவில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் இராணுவ முகாம்கள், தம் நாட்டு சிப்பாய்களை யுத்தகளத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறன. ஆம், ஐரோப்பா போரில் ஈடுபட்டிருக்கிறது. ஆனால் சாதாரண ஐரோப்பிய பிரசைக்கு இது குறித்து எதுவும் தெரியாது. தமது வீட்டிற்கருகில் குண்டு விழாத வரை, அவர்களுக்கு அக்கறையும் இல்லை.


ஒரு காலத்தில் ஐரோப்பிய நாடுகளைப் போல பரம்பரை பகைமை கொண்ட எதிரிகளை உலகில் வேறெங்கும் பார்க்க முடியாது. இந்திய-பாகிஸ்தான் சச்சரவெல்லாம், ஐரோப்பிய குரோதங்களுக்கு முன்னால் ஒன்றுமேயில்லை. இங்கிலாந்தும் பிரான்சும் தொடர்ந்து நூறு ஆண்டுகள் போரில் ஈடுபட்டிருந்தன. நெதர்லாந்து என்பது ஆண்டுகள் யுத்தம் செய்து தான், ஸ்பெயினிடமிருந்து விடுதலை பெற்றது. ஜெர்மனியும், பிரான்சும் இரண்டாம் உலகப் போரின் முடிவு வரை, ஒருவர் மற்றவரை கண்டால் கொன்று தின்னுமளவு வன்மம் கொண்டிருந்தனர்.

இரண்டாம் உலகப்போர் (முதலாம் உலகப்போரை போலவே அதுவும் ஐரோப்பிய நாடுகளின் போர் தான்) முடிவுற்றதும், பழைய ஐரோப்பா மறைந்து, புதிய ஐரோப்பா உதயமாகியது. தமது பகைமையை, வன்மத்தை, பழிவாங்கும் உணர்வை, எல்லாவற்றையும் மறந்து விட்டு, இணைபிரியாத் தோழர்களாக தழுவிக்கொண்டனர். தமக்குள் இனிமேல் சண்டையிடுவதில்லை, என்று முடிவெடுத்துக் கொண்டனர். அன்று ஏற்பட்ட வரலாறு காணாத நட்பு, இன்று ஐரோப்பிய யூனியன் வரை வளர்ந்துள்ளது என்பதை நம்புவது கஷ்டம் தான். ஆனால் பகைவர்கள் நண்பர்களான அதிசயம் சாத்தியமாகியுள்ளது

ஐரோப்பியர்கள் தமக்குள் சண்டையிடுவதில்லை, ஒருவரை ஒருவர் கொல்வதில்லை என்று "நாகரீகத்தின் உச்சத்தை" தொட்டாலும், அவர்கள் காந்தியின் புதல்வர்களாக மாறிவிடவில்லை. தமது யுத்தங்களை, காலனிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்ற, மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். பிரான்ஸ் இப்போதும் முன்னாள் காலனி நாடுகளில் இராணுவ முகாம்களை பராமரிக்கின்றது. அதெல்லாம் தனது நலன்களுக்காகத் தான், என்று பிரான்ஸ் ஒத்துக் கொள்கின்றது. நாசிச கடந்த காலம் காரணமாக சொந்தமாக இராணுவம் வைத்திருக்க அனுமதி மறுக்கப்பட்ட ஜெர்மனி, இன்று தனக்கென்று நவீன இராணுவத்தை கொண்டிருப்பது மட்டுமல்ல, "ஐரோப்பிய ஒன்றிய கூட்டாளி" பிரான்சுடன் சேர்ந்து, வெளிநாடுகளுக்கும் படைகளை அனுப்பியது.

இரண்டாம் உலகப்போர் முடிந்த கையோடு, பெர்லின் வரை வந்த சோவியத் செம்படைகள், ஐரோப்பா முழுவதும் ஆக்கிரமிக்கப் போகின்றன, என்ற வதந்தியை கிளப்பி விட்ட அமெரிக்கா, சமயோசிதமாக "வட அட்லாண்டிக் ஒப்பந்த கூட்டமைப்பு"(NATO) என்ற இராணுவ கூட்டமைப்பை உருவாக்கியது. ஐரோப்பியர்களும், கடல்கடந்து வந்த அமெரிக்கா மைத்துனர்களுடன் சேர்ந்து கொண்டு, இராணுவ சாகசங்களை தொடர கிடைத்த சந்தர்ப்பத்தை, மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டனர். இந்த வரலாற்றை புரிந்து கொண்டோருக்கு, தற்போது ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் ஐரோப்பிய படைகள் நிலை கொண்டுள்ள யதார்த்தம் வியப்பளிக்காது.


ஐரோப்பிய ஒத்துழைப்பு மட்டும் இல்லாவிட்டால், அமெரிக்கா ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் படை நகர்வுகளை மேற்கொள்ள சிரமப்பட்டிருக்கும். ஜேர்மனி, ஹைடெல்பேர்க்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்கா இராணுவ முகாம் தான், மத்திய கிழக்கிற்கான விநியோகத்தை கவனிக்கின்றது. தனது இராணுவ விமானப் போக்குவரத்தை காரணமாக காட்டி, அருகில் இருக்கும் பிராங்க்பெர்ட் சர்வதேச விமானநிலையத்தில் வந்திறங்கும் விமானங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துகின்றது. கடல்வழிப் போக்குவரத்திற்கு பெல்ஜியத்தின் அன்த்வேர்ப் துறைமுகம் பயன்படுத்தப் படுகின்றது.

நேட்டோ பதாகையின் கீழ், அமெரிக்க படைகளுடன் கூட்டுசேர்ந்து செயல்படும் ஜெர்மன் படைகளை (பெர்லின் அருகில்) பொட்ஸ்டமில் உள்ள கொமாண்டோ தலைமையகம்(Einsatzführungskommando) நெறிப்படுத்துகின்றது. இதைவிட ஐரோப்பிய பாராளுமன்றம் அமைந்துள்ள ஸ்ட்ராஸ்பூகில் (பிரான்ஸ்) வருங்கால ஐரோப்பிய இராணுவ தலைமையகம் (Eurocorp) உள்ளது. அனேகமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் படைகளை இனிமேல் இது நிர்வகிக்கும்.

சர்வதேச போர்களில் ஐரோப்பாவின் பங்களிப்பை அம்பலப்படுத்தும் நோக்கில், சில சமாதான ஆர்வலர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பெல்ஜியத்தில் கடந்த 14 நவம்பர் சர்வதேச போர் எதிர்ப்பு தினமாக அறிவித்து விட்டு, சில ஆர்வலர்கள் பாதுகாப்பு அமைச்சின் முன்னால் தமது எதிர்ப்பை காட்டினர். நுழைவாயில் முன்பு "போர் அமைச்சு" என்ற அட்டையை மாட்டினர். சுவரில் இரத்தத்தை உவமைப்படுத்த சிவப்பு சாயம் பூசினர். "போர் இங்கே தொடங்குகிறது, இங்கேயே முடியட்டும்" என்ற சுலோகம் பொறித்த பதாகையை கட்டினர். சிறிது நேரத்தில் போலிஸ் வந்து ஆர்வலர்களை கைது செய்து கொண்டு சென்றாலும், அவர்களது போராட்டம் வீதியால் சென்ற பலரது கவனத்தை ஈர்த்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்தப் பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.
http://kalaiy.blogspot.com/2008/11/blog-post_15.html


ஐரோப்பிய ஒத்துழைப்பு மட்டும் இல்லாவிட்டால், அமெரிக்கா ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் படை நகர்வுகளை மேற்கொள்ள சிரமப்பட்டிருக்கும். ஜேர்மனி, ஹைடெல்பேர்க்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்கா இராணுவ முகாம் தான், மத்திய கிழக்கிற்கான விநியோகத்தை கவனிக்கின்றது. தனது இராணுவ விமானப் போக்குவரத்தை காரணமாக காட்டி, அருகில் இருக்கும் பிராங்க்பெர்ட் சர்வதேச விமானநிலையத்தில் வந்திறங்கும் விமானங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துகின்றது. கடல்வழிப் போக்குவரத்திற்கு பெல்ஜியத்தின் அன்த்வேர்ப் துறைமுகம் பயன்படுத்தப் படுகின்றது.

நேட்டோ பதாகையின் கீழ், அமெரிக்க படைகளுடன் கூட்டுசேர்ந்து செயல்படும் ஜெர்மன் படைகளை (பெர்லின் அருகில்) பொட்ஸ்டமில் உள்ள கொமாண்டோ தலைமையகம்(Einsatzführungskommando) நெறிப்படுத்துகின்றது. இதைவிட ஐரோப்பிய பாராளுமன்றம் அமைந்துள்ள ஸ்ட்ராஸ்பூகில் (பிரான்ஸ்) வருங்கால ஐரோப்பிய இராணுவ தலைமையகம் (Eurocorp) உள்ளது. அனேகமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் படைகளை இனிமேல் இது நிர்வகிக்கும்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது