Language Selection

கலையரசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நிலக்கண்ணி வெடிகள், யுத்த தளபாடங்கள், ஆகிய அழிவு சாதனங்களின் உற்பத்தியில் வங்கிகள் முக்கிய பங்காற்றுகின்றன. குழந்தை தொழிலாளரை சுரண்டுதல், சுற்றுச் சூழல் மாசடைதல் போன்ற சமூக விரோத செயல்கள் தொடர்வதற்கும் வங்கிகளின் லாபவெறி ஒரு காரணம்.

 நெதர்லாந்து தொலைக்காட்சி ஊடகவியலாளர் குழு ஒன்று, தமது நாட்டின் பெரிய வங்கிகளின் முதலீடுகளைப் பற்றி ஆராய்ந்ததில் மேற்குறிப்பிட்ட திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. இந்த ஆவணப்படம் நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு மக்கள் மத்தியில் வங்கிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. நெதர்லாந்தில் தலைமையகத்தை கொண்ட, உலகின் மிகப்பெரிய தேசங்கடந்த வங்கி நிறுவனங்களான ABN Amro, ING, Raboபோன்றன, பொது மக்களின் சேமிப்பு பணத்தை எடுத்து, மனித அழிவு வியாபாரத்தில் முதலீடு செய்கின்றன.

ஒவ்வொருநாளும்சராசரி 48 பேர் உலகின் எங்காவது ஒரு இடத்தில் நிலக்கண்ணி வெடிக்கு பலியாகினறனர். Alliant Techsystems, General Dynamics, Textron போன்ற நிலக்கண்ணிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில், வங்கிகள் முதலீடு செய்கின்றன, அல்லது கடன் வழங்குகின்றன. உலகில் மிக மோசமான அழிவு சாதனமாக கருதப்படும், "Cluster Bomb" உற்பத்தி செய்யும் Alliant, L3 Communications, Lockheed Martin, Northrop Grumman, Raytheon ஆகிய நிறுவனங்களிலும் இந்த வங்கிகள் முதலீடு செய்து, மனித அழிவில் பணம் சம்பாதிக்கின்றன. இது குறித்து வங்கிகள் தகவல் தர மறுக்கின்றன. தாம் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிப்பதில்லை என்று நழுவுகின்றனர். அதேநேரம் இந்த அழிவு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அமெரிக்காவில் இருப்பதால், முதலீட்டாளரின் விபரங்களை வெளியிட வேண்டும் என்ற சட்டம் இருப்பதால், இந்த வங்கிகளின் முதலீடுகள் குறித்த விபரங்கள் தெளிவாக காணக்கிடைக்கின்றன.

மக்கள் வங்கியில் வைப்பிலிடும் சேமிப்பு பணத்தை, அல்லது பங்கு முதலீட்டை எடுத்து இந்த வங்கிகள் அதிக லாபம் தரும் நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன, அல்லது கடன் கொடுக்கின்றன. அந்த நிறுவனம் ஈட்டும் லாபத்தின் ஒரு பகுதி, அல்லது கடனுக்கான வட்டிகளை சம்பாதிக்கும் வங்கிகள் அவற்றில் ஒரு சிறுபகுதியை, சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் மக்களுக்கு கொடுக்கின்றன. இதனால் அதிக பயனடைவது வங்கிகள் தான். இவ்வாறு வங்கிகளுக்கு கிடைக்கும் மொத்த வருடாந்த லாபம் 3 டிரில்லியன் யூரோக்கள்! (3.000.000.000.000) இவ்வளவு பெரிய தொகையை மூலதனமாக கொண்டிருக்கும் வங்கிகள் உலகிலேயே சக்திவாய்ந்த நிறுவனங்களாக திகழ்கின்றன.

சர்வதேச சட்டங்களையும் வங்கிகள் மதிப்பதில்லை. சீனாவுக்கு ஆயுத ஏற்றுமதி சம்பந்தமான தடை இருந்த காலத்தில் அந்நாட்டிற்கு யுத்த ஹெலிகாப்டர் விற்பனை செய்யப்பட்டது. சீனா அந்த ஹெலிகாப்டர்களை பின்னர் சர்வதேச தடை இருக்கும் இன்னொரு நாடான சூடானுக்கு விற்றது. சூடான் இராணுவம், டார்பூர் பிராந்தியத்தில் நடக்கும்போரில் மக்களை படுகொலை செய்வது தொடர்பாக சர்வதேச கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. இந்த ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்யும் EAD என்ற ஐரோப்பிய நிறுவனம், அதிலே முதலீடு செய்யும் ABN Amro வங்கி, என்பன சர்வதேச சட்டங்களை தெரிந்து கொண்டே மீறும் குற்றத்தை புரிந்துள்ளன. இதிலே வேடிக்கை என்னவென்றால், நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர் ABN Amro வங்கியின் ஆணையராக பதவி வகுப்பது தான். இது குறித்து ஆய்வு செய்து உண்மைகளை (Novib என்ற NGO)பகிரங்கப்படுத்திய போது, எந்த வங்கியும் அந்த குற்றச்சாட்டை மறுக்கவில்லை.

உலகை அழிவுக்கு இட்டுச் செல்லும் சுற்றுச் சூலை மாசு படுத்தும் சுரங்க கம்பெனிகளிலும் வங்கிகள் முதலீடு செய்கின்றன. இந்தோனேசியாவில் பொஸ்பேட் கணிமவளத்தை அகழும் Freeport McMoran என்ற நிறுவனத்தில் ABN Amro முதலீடு செய்திருந்ததை ஒரு சூழல் பாதுகாப்பு அமைப்பு அம்பலப்படுத்திய பின்னர், வங்கி அந்த ப்ரொஜெக்டில் இருந்து விலகுவதாக தெரிவித்தது. ஆனால் தற்போதும் சர்ச்சைக்குரிய Freeport McMoran நிறுவனத்தில் கணிசமான பங்குகளை ABN Amro வைத்திருக்கின்றது. பொஸ்பேட் அகழ்வு வேலைகளால் இந்தோனேசியாவில் நீர், நிலம் மாசடைந்ததுடன், சுற்றாடலில் வாழும் மக்களும் நோயாளிகளாகியுள்ளனர். இந்தியாவிலும் (ஒரிசாவில்) இது போன்ற சர்ச்சைக்குரிய சுரங்க நிறுவன அகழ்வு திட்டங்களுக்கு நெதர்லாந்து வங்கிகள் பணம் கொடுக்கின்றன. இது போன்ற சூழலை மாசுபடுத்தும் திட்டங்களுக்கு, வங்கிகள் முதலீடு செய்யாமல், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இயங்க முடியாது.

அமெரிக்காவின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடி "Wall-Mart" நிறுவனத்திற்கு சொந்தமான, பங்களாதேஷில் உள்ள ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிலகங்களில், குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தினசரி 17 மணிநேரம் கட்டாயவேலை வாங்கப்படுகின்றது. குழந்தைகளின் உற்பத்தித்திறன் குறையும் போது, அடித்து துன்புறுத்தப்படுகின்றனர். Wall-Mart மனித உரிமை மீறல்களை புரிவதாக அமெரிக்காவின் Human Rights Watch கூட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நெதர்லாந்தின் பெரிய வங்கிகள் யாவும், குழந்தை தொழிலாளரை சுரண்டும் Wall-Mart ல் முதலீடு செய்து வருகின்றன.

<எந்த வித பொறுப்புணர்வும் இல்லாமல் பொது மக்களின் பணத்தை எடுத்து, தீய காரியங்களில் முதலீடு செய்யும் வங்கிகள், இது குறித்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தெரிவிப்பதில்லை. மனித அழிவுக்கும், மனித உரிமை மீறலுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நேரடி காரணமாக இருந்தாலும், இவற்றில் முதலிடும் வங்கிகளுக்கும், தெரிந்து கொண்டே பணம் வைப்பிலிடும் மக்களுக்கும் மறைமுகமான பொறுப்பு இருக்கின்றன என்பதை மறுக்கமுடியாது.

நெதர்லாந்து தொலைக்காட்சி ஒளிபரப்பிய "Bank Secrets" (மூல மொழி:நெதர்லாந்து, ஆங்கில தலைப்புகளுடன்)வீடியோவை பின்வரும் தொடுப்பின் மூலம் பார்வையிடலாம்.

ACE Bank Movie

The documentary tells about ACE Bank, educational project and set-up game by Netwerk Vlaanderen. This unethical bank goes for the highest returns and invests in such unethical activities as weapon systems, companies involved in child labor and human rights violations, heavy environment pollution etc. Curious how the passers-by and the clients reacted? Watch the film and find out!

 

 Part 1

Part 2

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது