Language Selection

கலையரசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜனநாயக விரோத சதிப்புரட்சி மூலம், பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி அரசாங்கங்களை கவிழ்க்கும் முயற்சிகளை அமெரிக்கா இன்னும் கைவிடவில்லை போல் தெரிகின்றது. 11 செப்டம்பர் 1973 சிலியில் அய்யெண்டேயின் ஜனநாயக அரசாங்கத்தை, இராணுவ சதிப்புரட்சி மூலம் தூக்கி எறிந்தது. இன்று சரியாக35 வருடங்களுக்கு பின்னர், சதிப்புரட்சிக்கு திட்டமிட்டதாக குற்றம் சாட்டி,

பொலிவியா அமெரிக்க தூதுவரை வெளியேற்றியுள்ளது. அந்த தூதுவர் பொலிவியாவில் சில மாகாணங்களில் அரசாங்கத்திற்கெதிராக வெடித்துள்ள கலவரங்களை தூண்டி விட்டார், கிளர்ச்சியாளருக்கு உதவி செய்தார் என்று குற்றம் சாட்டப்படுகின்றது. ஆனால் அதற்குமப்பால் அட்சி கவிழ்ப்பு சதி பற்றிய அச்சம் காரணமாகவும் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.


பொலிவியாவின் வரலாற்றில் முதன்முறையாக பெரும்பான்மை பூர்வகுடிகளான செவ்விந்திய இனத்தை சேர்ந்த ஏவோ மொராலெஸ் ஜனாதிபதியாக தெரிவான பின்னர், அவர் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால் "சாந்த குரூஸ்". அது கிழக்கு பொலிவியாவின் செல்வச்செழிப்பு மிக்க மாநிலமொன்றின் பெயர். மேற்கு பொலிவியாவில் பெரும்பான்மை செவ்விந்தியர்கள் நித்திய வறுமைக்குள் வாழ்கையில், சிறுபான்மை ஸ்பானிய வம்சாவளி மக்கள் மட்டுமே செல்வந்தர்களாகவும், அதேநேரம் தேசிய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாகவும் இதுவரை இருந்து வந்துள்ளனர். குறிப்பாக தொழில்துறை வளர்ச்சியடைந்த, எரிவாயு போன்ற இயற்கை வளங்களை கொண்ட சாந்த குரூஸ் மாநிலத்தில் அவர்கள் செறிவாக வாழ்கின்றனர்.

 

பொலிவியாவின் 55 வீதமானவர்கள் கெசுவா அல்லது அய்மரா என்ற செவ்விந்திய பூர்வகுடிகள். 30 % ஐரோப்பிய கலப்பினத்தவர்கள். 15 % தூய வெள்ளையர்கள்.

முதன்முறையாக ஒரு பொலிவியா ஜனாதிபதி, தனது நாட்டில் வீரச்சாவை தழுவிக்கொண்ட ஆர்ஜன்தீன புரட்சிவாதி சே குவேரவிற்கு நினைவு சின்னம் எழுப்பியதுடன் நில்லாது, அவரின் அடிச்சுவட்டை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் பெருமைக்குரிய ஏவோ மொராலெஸ், முதலாளித்துவ சக்திகளை உடனடியாக பகைத்து கொள்ளாமல், சோஷலிச பொருளாதார மாற்றங்களை, மிக மெதுவாக கொண்டு வர விரும்பினார். நாட்டின் முதன்மையான ஏற்றுமதி பொருளான எரிவாயு வளங்களை நாட்டுடமையாக்கியது கூட தாமதமாகத்தான். மொராலெஸ் ஒரு சோஷலிச-ஜனநாயகவாதி என்று குறிப்பிடுவதே பொருத்தம். அவரது அரசியல் வெனிசுவேலாவின் சாவேஸ் அளவிற்கு கூட தீவிரமானவை அல்ல. இருப்பினும் குறைந்தளவு மாற்றங்களைக் கூட முதலாளிகளும், வசதிபடைத்த மத்திய தர வர்க்கமும், ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதே அங்கே நடக்கும் குழப்பங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

 

கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்து, வறிய செவ்விந்தியர்களும் பிரயோசனப்படும் வகையில் செல்வத்தை பிரித்துக் கொடுக்கும் ஏவோ மொரலேசின் முயற்சி, தற்போது பணக்காரர்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது. முதலில் அவர்களை பிரிதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் எதிர்த்து வந்தது. பிரச்சினையின் உச்சகட்டமாக செல்வந்த "சாந்த குரூஸ் மாநிலம்" பிரிவினை கோரியது. மாநில கவர்னரும், பெரும் தொழில் அதிபர் ஒருவரும் கிளர்ச்சியை வழிநடத்தினர்.

 

இனவாதமும், பணவாதமும் கலந்த பாசிச அரசியல் சக்திகளின் அவதாரமான "சாந்த குரூஸ் இளைஞர் ஒன்றியம்" என்ற வலதுசாரி தீவிரவாதக்குழு வன்முறைகளில் இறங்கியது. அதன் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டக்காரர் என்ற பெயரில் அரச அலுவலகங்களை சூறையாடினர். அதோடு வெறியடங்காமல் மொராலெஸ் ஆதரவு ஊர்வலத்தில் பங்குபற்ற சென்ற செவ்விந்திய பொதுமக்கள் சிலரை படுகொலை செய்தனர். இந்த வன்முறைக்கும்பல் அண்டை நாடுகளான அர்ஜன்தீனாவுக்கும், பிரேசிலுக்கும் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் குழாய் ஒன்றை குண்டுவைத்து தகர்த்தது. இதனால் 8 மில்லியன் ஏற்றுமதி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. பிரேசில் இதனை "பயங்கரவாத செயல்" என்று கண்டித்துள்ளது.

 

 

பொலிவியா வன்முறைகளை ஆர்ஜன்தீனாவும், பிரேசிலும் கண்டித்துள்ளன. அதேநேரம் அமெரிக்காவோ ஜனநாயகத்திற்கு தானே முதல் எதிரி என்று நிரூபித்து வருகின்றது. சாவேஸ் எச்சரித்துள்ளது போல, ஏவோ மொரலேசின் ஆட்சி கவிழ்க்கப்பட்டால் அது ஆயுதமேந்திய போராட்டத்திற்கு வழிதிறந்துவிட்டது போலாகும்.

 

மேற்குறிப்பிட்ட செய்திகள் மேற்கத்திய ஊடகங்களில் வடிகட்டப்பட்டே வெளியிடப்பட்டன. சாந்த குரூஸ் பிரிவினை கோரிக்கை, அம்மாநில மக்களின் நியாயமான ஜனநாயக கோரிக்கை போன்று காட்டப்பட்டது. அமெரிக்க அரசின் நிலைப்படும் அதுதானே. ஆகையினால் பொலிவியாவின் அமெரிக்க தூதுவர் உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிடுகிறார் என்ற சந்தேகம் வலுத்தது. பெரும்பாலும் நிலைமை மோசமடைவதை தடுக்கும் பொருட்டு தூதுவர் வெளியேற்றப்பட்டிருக்கலாம். இதற்கிடையே வெனிசுவேலாவில் ஜனாதிபதி சாவேசை கொலை செய்து விட்டு சதிப்புரட்சி நடத்த சில இராணுவ ஜெனரல்களுடன் திட்டமிட்டதாக கூறியே அந்நாட்டு தூதுவரும் வெளியேற்றப்பட்டுள்ளார். அதற்கு ஆதாரமாக, ஒட்டுகேட்கப்பட்ட தொலைபேசி உரையாடல் ஒன்று வெனிசுவேலா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதேநேரம் சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கர்கள் பங்கு பற்றிய சதி திட்டம் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக பராகுவை அறிவித்துள்ளது.

 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது