Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


நாங்கள் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்று அழைக்கப்படும் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் அமைப்புகள். விவசாயம், சிறுதொழில்கள், சிறுவணிகம் முதலான எல்லாத் துறைகளையும் நாட்டின் இயற்கை வளங்களையும் பன்னாட்டு நிறுவனங்களின் கோரப்பிடிக்குள் சிக்கவைக்கும் வகையில் இன்று அரசு அமலாக்கிவரும் கொள்கைகள் வெறும் பொருளாதாரக் கொள்கைகள் அல்ல, அவை நாட்டையே அடிமைப்படுத்தும் மறுகாலனியாதிக்கக் கொள்கைகள் என்று நாங்கள் கூறுகிறோம்.


உலகவங்கி, உலக வர்த்தகக் கழகம் ஆகிய ஏகாதிபத்திய நிறுவனங்களின் உத்தரவுப்படி, பன்னாட்டு நிறுவனங்கள் நம்முடைய நாட்டை அடிமைப்படுத்துவதற்குத்தான் எல்லா ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளும் கைக்கூலி வேலை செய்கின்றன என்று குற்றம் சாட்டுகிறோம். இன்னொரு விடுதலைப் போராட்டத்துக்கு மக்கள் அணிதிரள வேண்டும் என்று அறைகூவுகிறோம்.


1994இல் நரசிம்மராவ் அரசு "காட் ஒப்பந்தம்' என்ற அடிமைச்சாசனத்தில் கையெழுத்திட்ட நாளிலிருந்து "நாடு மீண்டும் அடிமையாகிறது'' என்ற உண்மையை தமிழக மக்கள் மத்தியில் தொடர்ந்து எடுத்துச் சென்று அரசியல் விழிப்புணர்வூட்டியதும், இந்தக் கொள்கைக்கெதிரான போராட்டங்களுக்கு அணிதிரட்டியதும் நாங்கள் மட்டுமே என்பதைத் தயக்கமின்றிக் கூறுகிறோம்.


இந்த மறுகாலனியாதிக்கக் கொள்கைகளின் கீழ் தஞ்சை மாவட்டத்தின் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை வளைத்து பெரு முதலாளித்துவக் கம்பெனிகள் அவற்றில் இறால் பண்ணைகளைத் தொடங்கியபோது அதற்கெதிராக "இறால் பண்ணை அழிப்புப் போராட்டம்'' நடத்தினோம்.


கம்பம் பகுதியில் விவசாயிகளின் விளைநிலங்களை அனுபவ், ஸ்டெர்லிங் போன்ற நிறுவனங்கள் தேக்குப் பண்ணைகளாக மாற்றியபோது, விவசாயிகளைத் திரட்டி, அந்தத் தேக்குக் கன்றுகளை வெட்டியெறிந்தோம். மரபணு மாற்றம் செய்யப்பட்ட மான்சாண்டோ விதைகள் விவசாயத்தில் புகுத்தப்படுவதற்கு எதிரான போராட்டத்தை நடத்தினோம்.


நெய்வேலியில் "ஜீரோ யூனிட்' என்ற அனல்மின் நிலையத்தை அமெரிக்கப் பன்னாட்டுக் கம்பெனிக்குத் தாரை வார்க்க முயன்றபோது அதைத் தடுத்து நிறுத்தப் போராடினோம். நீலகிரி தேயிலை விவசாயமும் கைத்தறி, விசைத்தறி மற்றும் சிறுதொழில்களும் அழிக்கப்பட்ட போது விவசாயிகள் தொழில் முனைவோர் ஆகிய பல தரப்பினரையும் ஒன்று திரட்டி கோவையில் மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராக மாநாடு நடத்தினோம்.


தனியார்மயக் கொள்கையின் உச்சமாக தாமிரவருணி ஆற்றுநீரை அமெரிக்க கோகோ கோலா நிறுவனத்துக்கு ஜெயலலிதா அரசு வழங்கியதை எதிர்த்து நெல்லையில் மாபெரும் மறியல் போராட்டம் நடத்தினோம். தனியார்மய தாராளமயக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு, அதற்கெதிராகப் போராடிய விவசாயிகள், தொழிலாளர்கள், சாலைப் பணியாளர்கள், சிறுவணிகர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், வழக்குரைஞர்கள் போன்ற அனைத்துப் பிரிவினரது போராட்டங்களையும் ஆதரித்து இயக்கம் மேற்கொண்டிருக்கிறோம்.


மறுகாலனியாக்கத்தின் விளைவாக நாடும் மக்களும் எதிர்கொள்ளவிருக்கும் அபாயங்கள் குறித்து நாங்கள் என்னவெல்லாம் எச்சரிக்கை செய்தோமா அவையெல்லாம் ஒவ்வொன்றாக உண்மையாகி வருகின்றன. எனினும் பாதிக்கப்படும் மக்கள் தமக்கு பாதிப்பு ஏற்படும்போது மட்டும்தான் போராடுகிறார்கள். "மறுகாலனியாக்க எதிர்ப்பு' என்ற பொது முழக்கத்தின் கீழ் எல்லாப் பிரிவு மக்களும் ஒன்று திரள்வதில்லை.


கட்சி மாற்றிக் கட்சி வாக்களிப்பதன் மூலம் இந்தப் பாதிப்புகளிலிருந்து தற்காலிகமாக விடுபட்டுவிடலாம் என்று நம்புகிறார்கள். அல்லது ஒரு தொழில் அழிந்தால் வேறு தொழிலுக்கோ வேறு வேலைக்கோ மாறிக் கொள்ளலாம் என்று கருதுகிறார்கள். ஆனால் பின்வாங்குவதற்கோ ஒதுங்குவதற்கோ இனி இடமில்லை என்பதே உண்மை.


எல்லாத் தொழில்களும் ஒன்றன்பின் ஒன்றாக அழிக்கப்பட்டு வரும் சூழலில், எதிர்த்து நிற்பது ஒன்றுதான் வழி. தேர்தல் பாதையல்ல, புரட்சிப்பாதை ஒன்றுதான் தீர்வு. தனித்தனியாகப் போராடுவதல்ல, ஒரே அமைப்பாக இணைந்து போராடுவதுதான் வழி.


மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராக உறுதியாகப் போராடிவரும் எமது அமைப்புகளில் இணையுங்கள் என்று உங்களை அழைக்கிறோம். மறுகாலனியாக்கத்துக்கு எதிராகப் போராடும் எல்லாப் பிரிவு மக்களுக்கும் ஆதரவு கொடுக்க நாங்கள் களத்தில் முன்நிற்கிறோம்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது