Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


இன்று நம் அண்டை மாநிலமான கேரளத்தில் பிளாச்சிமடா என்ற கிராமத்தின் நிலத்தடி நீரை உறிஞ்சி சுடுகாடாக்கி, கழிவு நீரை வெளியேற்றி விளைநிலங்களையும் அழித்த கோக், பெப்சி நிறுவனங்களுக்கு எதிராக அங்கு மக்கள் நடத்திய போராட்டம் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாறி, இன்று கேரள மக்கள் யாருமே கோக் பெப்சியை விரலால் கூடத் தீண்டுவதில்லை என்ற நிலை அங்கே உருவாகியிருக்கிறது.


அத்தகையதொரு நிலையை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நாம் இங்கே உருவாக்கினால்தான் நாளை வால்மார்ட்டும் டாடாவும் பிர்லாவும் தமிழகத்தில் நுழைவதற்கே தயங்கிப் பின்வாங்குவார்கள். இந்த ரிலையன்ஸ் எதிர்ப்பு இயக்கம் நாடு முழுவதும் ஒரு பேரியக்கமாகப் பற்றிப் படரும்.


"விலை மலிவு, தரம் அதிகம் என்பதெல்லாம் உண்மையாகவே இருந்தாலும், எங்கள் நாட்டு வியாபாரிகளிடம்தான் பொருளை வாங்குவேனே தவிர எங்கள் நாட்டைக் கொள்ளையடிக்கும் ஒரு பன்னாட்டு முதலாளியிடம் வாங்க மாட்டேன்'' என்று மக்களைச் சொல்ல வைக்க வேண்டும். "சிறு வியாபாரிகள், விவ சாயிகளின் இரத்தம் குடிக்கும் ரிலையன்ஸ், டாடா போன்ற கோடீசுவரத் தரகு முதலாளிகள் கொள்ளை இலாபம் அடிப்பதற்குத் துணை போகமாட்டேன்'' என்று மக்களைப் பேச வைக்க வேண்டும். அத்தகைய நாட்டுப்பற்றும் சுரண்டலுக்கு எதிரான கோபமும் எங்கும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கினால், பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டை அடமானம் வைக்கும் இந்த தேசத்துரோக அரசையும் தூக்கி எறிய மக்கள் தயாராகி விடுவார்கள்.


இவையெல்லாம் சாதிக்க முடியாத சாகசங்கள் அல்ல. ரிலையன்ஸ் நிறுவனம் வளர்ந்து கொழுப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பதில் எந்தப் பயனுமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரம் படுத்து 1000, 500, 200 என்று குறைந்து, மூன்று வேளை சோறு இரண்டு வேளையாகி, பிறகு அது ஒரு வேளையாகக் குறைந்து, கடனாளியாகி மனம் நொந்து சாவதை விட, அவனா நாமா என்று பார்த்து விடுவதுதான் தீர்வு.


மகாராட்டிர மாநிலத்தில் தினந்தோறும் 10, 15 விவசாயிகள் கடன் தொல்லை தாளாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலை தொடர்கிறதே தவிர அவர்களுக்கு எந்த விடிவும் பிறக்கவில்லை. ஆனால் மேற்கு வங்கத்தின் நந்திகிராம் மக்களோ, தங்கள் விளைநிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்குத் தாரை வார்ப்பதற்கு எதிராகப் போராடினார்கள். 14 பேரை மார்க்சிஸ்டு அரசு சுட்டுக் கொன்ற பின்னரும் மக்கள் போராட்டம் அடங்கவில்லை. நந்திகிராமில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் முடிவையே கைவிடுவதாகக் கூறி மேற்கு வங்க அரசு பின்வாங்கியது.


"தங்களுடைய நிலத்தை டாடாவுக்குக் கொடுக்க முடியாது'' என்று போராடிய ஒரிசா மாநிலம் கலிங்கநகரைச் சேர்ந்த பழங்குடி மக்கள் சென்ற ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இருந்தாலும் இன்று வரை டாடா நிறுவனம் அங்கே கால் வைக்க முடியவில்லை.


தம்முடைய மண்ணையும் வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தீவிரமாகப் போராடியதால் நந்திகிராம் மக்களைப் பயங்கரவாதிகள் என்கிறது அரசு. 80,000 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கும் உலகின் 18வது பெரிய பணக்காரனான முகேஷ் அம்பானி, ஒரு தள்ளுவண்டி வியாபாரியையும் மளிகைக் கடைக்காரரையும் மோதி அழித்தால் அதனை வியாபாரம் என்றா சொல்ல முடியும்? இதுதான் உண்மையான பயங்கரவாதம்.


இந்த எதிரிகள் சாதாரணமானவர்கள் அல்ல. அரசாங்கமும் போலீசும் கோர்ட்டும் இவர்களுடைய பங்களாவில் வேலை செய்யும் தோட்டக்காரனுக்கும் வாட்ச்மேனுக்கும் சமமானவர்கள். ரிலையன்ஸை ஒழிக்கச் சொல்லி இவர்களிடம் முறையிடுவது வீண். நாய்தான் வாலை ஆட்ட முடியும். வால் நாயை ஆட்ட முடியுமா? அப்படி முடியும் என்று நம்பிக் கெட்டவர்கள் பலபேர். தொலைபேசித்துறை, வங்கி, இன்சூரன்சு, துறைமுக, விமானநிலைய ஊழியர்கள் ஓட்டுக் கட்சிகளை நம்பினார்கள். தங்கள் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டார்கள். இந்தத் துறைகள் எல்லாம் தனியார்மயமாவதை அவர்களால் தடுக்க முடியவில்லை.


உண்ணாவிரதம், தர்ணா, கடையடைப்பு போன்ற "அறவழி'ப் போராட்டங்களுக்கு அம்பானியும் அசையமாட்டான். இந்த அரசும் அசையப் போவதில்லை. நர்மதை அணைக்கட்டுத் திட்டத்துக்கு எதிராகக் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மேதா பட்கர் நடத்தாத அறவழிப் போராட்டமா? அணைக்கட்டின் முன் சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம், உச்சநீதி மன்றத்தில் வழக்கு... இத்தனைக்குப் பிறகும், அந்த அணைக்கட்டுக்காக வெளியேற்றப்பட்ட பழங்குடி மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.


அம்பானியையும், வால்மார்ட்டையும் விரட்ட வேண்டுமானால் அதனைத் தம் கொள்கையாகக் கொண்டுள்ள இயக்கம்தான் அதைச் செய்ய முடியும்.

 

"தனியார்மய தாராளமயக் கொள்கைகளையும் மறுகாலனியாக்கத்தையும் முறியடிக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களை விரட்டிவிட்டு உள்நாட்டுத் தொழில்களையும் விவசாயத்தையும் ஊக்குவித்து வளர்க்க வேண்டும்'' என்ற கொள்கையுடைய ஒரே இயக்கம் நக்சல்பாரி இயக்கம்தான். இது மிகையல்ல, உண்மை. நக்சல்பாரி இயக்கத்தின் கீழ் அணிதிரண்டால் அம்பானியை நாள் குறித்து வெளியேற்ற நம்மால் முடியும். நந்திகிராம் மக்களைப் போலப் போராடினால் எப்பேர்ப்பட்ட எதிரியையும் மண்டியிடச் செய்ய முடியும்.


கரையான் புற்றெடுக்க கருநாகம் நுழைந்தது போல நுழைந்திருக்கிறான் அம்பானி. இந்தப் பாம்புக்குப் பால் வார்க்கிறது அரசு. பாம்பைப் பார்த்து நடுங்கி அன்றாடம் செத்துப் பிழைப்பதை விட ஒரே போடாய்ப் போட்டு விடுவதுதான் அறிவுக்கு உகந்த செயல். மானமுள்ள வழியும் அதுதான்!

 

சிறு வணிகர்கள், தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளை ஆதரிப்போம்!
ரிலையன்ஸ், டாடா, பிர்லா தரகு முதலாளிகள்
மற்றும் வால்மார்ட் போன்ற பன்னாட்டு முதலாளிகளைப் புறக்கணிப்போம்!
அந்நிய அடிமை மோகம் உதறி எறிவோம்!
உள்நாட்டுப் பொருட்களை வாங்குவோம்!
தேசிய, சிறு தொழில்களை ஊக்குவிப்போம்!
விவசாயிகள், சிறுதொழில் முனைவோரை வாழவைப்போம்!
நம் மண் மீதும் உழைக்கும் மக்கள் மீதும் பற்று கொள்வோம்!
நாட்டுப் பற்றுணர்வை நாடி நரம்புகளில் முறுக்கேற்றுவோம்!
தனியார்மயம், தாராளமயம், உலகமயம்
மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது