Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


வெளிநாடுகளுக்கு தொலைபேசி சேவை வழங்கி லாபமாக மட்டும் ஆண்டுக்கு 1,400 கோடி ரூபாய் ஈட்டி வந்த வி.எஸ்.என்.எல். நிறுவனத்தையே வெறும் 1440 கோடி ரூபாய்க்கு டாடாவிடம் தூக்கிக் கொடுத்தது பாரதிய ஜனதா அரசு. 5000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்புள்ள பாரத் அலுமினியம் கம்பெனி என்ற அரசுத்துறை நிறுவனம், வெறும் 552 கோடி ரூபாய்க்கு ஸ்டெர்லைட் முதலாளிக்கு விற்கப்பட்டது. ஏழைகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் மலிவு விலையில் தரமான ரொட்டியை வழங்கி வந்த 2100 கோடி ரூபாய் மதிப்புள்ள "மாடர்ன் புட்ஸ்' என்ற அரசுத்துறை நிறுவனம் வெறும் 104 கோடி ரூபாய்க்கு இந்துஸ்தான் லீவர் என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. அரசு வங்கிகள், இன்சூரன்சு, அனல்மின் நிலையங்கள் அனைத்தும் இப்படித்தான் அந்நிய நிறுவனங்களுக்குக் கூறு கட்டி விற்கப்படுகின்றன.


இரும்பு, நிலக்கரிச் சுரங்கங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மட்டுமல்ல, ஆறுகளையும் அணைக்கட்டுகளையும் கூட பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறது அரசு. நம்முடைய நாட்டின் தேவைக்கே வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெயை இறக்குமதி செய்யும்போது, வங்காள விரிகுடாவில் எண்ணெயும் எரிவாயுவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதை அரசுடைமை ஆக்காமல் அம்பானிக்கு உடைமை ஆக்குகிறது அரசு.


தனக்கு கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டித்தரும் அரசுத்துறை நிறுவனங்களையே அந்நியக் கம்பெனிகளுக்கு விற்கத் தயங்காத அரசு, கோயம்பேட்டு சந்தையை அம்பானிக்குக் காவு கொடுப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?


பள்ளிக்கூடம், கல்லூரிகளை அரசாங்கம் கட்டுவதில்லை. இருக்கின்ற பள்ளிகளையே பராமரிப்பதில்லை. போதுமான ஆசிரியர்களை நியமிப்பதில்லை. அரசுப் பள்ளியில் படித்தால் பிள்ளை உருப்படாது என்ற நிலைமையை அரசாங்கம் திட்டமிட்டே உருவாக்குகிறது. நர்சரிப் பள்ளிகள் முதல் பொறியியல் கல்லூரிகள் வரை அனைத்தும் தனியார் முதலாளிகளின் கொள்ளைக்குத் திறந்துவிடப்பட்டிருக்கின்றன. கந்துவட்டித் தொழிலைக் காட்டிலும் அதிக லாபம் தரக்கூடிய தொழிலாக இருப்பதால் எல்லாக் கட்சி அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் கல்வித் தொழில் நடத்தி கல்லா கட்டுகிறார்கள்.


அரசாங்கம் மருத்துவமனைகள் கட்டுவதில்லை. அரசு மருத்துவ மனையே சவக்கிடங்கு போலத்தான் பராமரிக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் மருந்து கிடையாது. இப்போது சென்னையில் சின்னம்மை பரவி வருகிறது. அரசு மருத்துவமனையில் அதற்கு தடுப்பூசி கிடையாது. தடுப்பூசியின் விலை 1300 ரூபாய். நாய்க்கடிக்கு மருந்து கிடையாது. அதை மருந்துக் கடையில் வாங்கினால் 1500 ரூபாய். இருக்கிற மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களும் கிடையாது. கல்வியைப் போலவே மருத்துவமும் முதலாளிகள் கொள்ளை லாபமடிப்பதற்கான தொழிலாக மாற்றப்பட்டு விட்டது.


அரசாங்கம் சாலை போடுவதில்லை. தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் பன்னாட்டு முதலாளிகளுக்கும் டாடா, அம்பானி போன்ற முதலாளிகளுக்கும் குத்தகைக்கு விடப்பட்டு விட்டன. அவர்கள் வழி நெடுக சுங்கச் சாவடி வைத்து எல்லா வாகனங்களுக்கும் வரி வசூல் செய்கிறார்கள்.


சாராயம் விற்கும் அரசாங்கத்தால் மக்களுக்கு சுத்தமான குடிநீர் தர முடியவில்லை. கோகோ கோலா, பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நம்முடைய ஆறுகள் ஏரிகளிலிருந்து தண்ணீரை உறிஞ்சி பாட்டிலில் அடைத்து அதை பாட்டில் 14 ரூபாய் என்று நமக்கே விற்பனை செய்கிறார்கள். நிலத்தடி நீர் என்னும் பொதுச்சொத்தை ஒரு பன்னாட்டு முதலாளியின் தனிச்சொத்தாக மாற்றிக் கொள்ளையடிக்க அனுமதி வழங்குகிறது அரசாங்கம்.


அரசாங்கத்தால் சென்னை நகரில் குப்பை வாரக்கூட முடியவில்லை. அதையும் "ஓனிக்ஸ்' என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட்டிருக்கிறது. அவன் வெள்ளைக்காரனை வைத்தா குப்பை வாருகிறான்? நம்முடைய இளைஞர்களை குறைந்த கூலிக்கு மாடுபோல வேலை வாங்கி கோடிக்கணக்கில் லாபத்தைக் கொண்டு போகிறான்.


"அரசாங்கம் மக்களுக்கு எந்தவிதமான சேவைகளையும் வழங்க வேண்டியதில்லை. கல்வியோ, மருத்துவமோ, தண்ணீரோ, கக்கூசோ எதுவாக இருந்தாலும் அவனவன் காசு கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். இவை எல்லாமே பன்னாட்டு முதலாளிகளும் இந்நாட்டு முதலாளிகளும் லாபம் பார்ப்பதற்கான தொழில்கள்'' என்று கூறும் தனியார்மயம் என்ற இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் மேற்சொன்ன எல்லா அயோக்கியத்தனங்களும் தேசத்துரோக நடவடிக்கைகளும் நியாயப்படுத்தப்படுகின்றன.


கல்வி, மருத்துவம், குடிநீர் அனைத்தையும் காசுக்கு விற்கும் கடைச்சரக்காக மாற்றி, இல்லாதவர்களும் ஏழை எளியவர்களும் பரிதவித்துச் சாவதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசாங்கம், அம்பானியின் காய்கறி வியாபாரத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை எளிய வியாபாரிகளையும், தொழிலாளிகளையும் பற்றியா கவலைப்படப் போகிறது?

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது