Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 "மண்டல் கமிசன் அறிக்கையைக் குறை கூறி எழுதி பார்ப்பன சார்பு போக்கை'' எடுத்தோம், சங்கராச்சாரி நிலைப்பாட்டிற்கும், புதிய ஜனநாயகத்தின் நிலைப்பாட்டிற்கும் இடையே வேற்றுமையே கிடையாது. அடிப்படையில் ஒற்றுமைதான் இருக்கிறது என்று முதலில் திரித்துச் சொல்கிறது வீரமணி கும்பல். ஆனால் அடுத்த சில வரிகளிலேயே மண்டல் கமிசன் குறித்த தெளிவான நிலைப்பாடு எடுத்து "அறிவுபூர்வமாக'' செயல்படாது நடுநிலைமை வகித்தோம், இதனால் பார்ப்பனர்களிடம் சமரசமாக நடந்து கொண்டோம் என்று முன்னுக்குப் பின் முரணாகவும் மேலும் திரித்தும் எழுதுகிறது.


ஆனால் மண்டல் கமிசன் விவகாரத்தில் நமது நிலைப்பாடு நடுநிலையானது அல்ல. அடிப்படையில் சங்கராச்சாரிகளின் நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்டது என்று மீண்டும் மீண்டும் நாம் தெளிவுபடுத்தியிருக்கிறோம். அதற்கு, பெரியாரின் பரம்பரை உரிமை கொண்டாடும் வீரமணிகளோ, பஞ்சத்துக்கு உரிமை கொண்டாடும் நெடுமாறன், மணியரசன் போன்ற திடீர் தமிழினவாதிகளோ எவருமே இதுவரை பதில் கூறவே கிடையாது. மீண்டும் நமது நிலைபாட்டை இங்கே வெளியிடுகிறோம். அவர்கள் யாருக்காவது அரசியல் நேர்மை இருந்தால் பதில் கூறட்டும்.


"மண்டல் அறிக்கையைக் குறைகூறி எழுதி பார்ப்பனர் சார்பு போக்கை எடுத்தது'' என்பது பு.ஜ. மீது வீரமணி கும்பல் எழுதும் இன்னொரு குற்றச்சாட்டு. பார்ப்பன எதிர்ப்பைத் தூக்கிப் பிடித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவைப் பெற வேண்டிய புரட்சிகர இயக்கமாக நாம் நடக்கவில்லை என்கிறது அக்கும்பல். நமது அமைப்புக்கு எதிராக இப்படிப்பட்ட பலரõலும் அவதூறும் ஆத்திரமும் தூண்டிவிடப்பட்ட போதும் நாம் நமது நிலைப்பாட்டை பகிரங்கமாகவும், துணிவோடும் முன்வைத்தோம். ஏனென்றால், சந்தர்ப்பவாதமாகப் பேசி ஆதாயம் அடையும் நோக்கம் ஒருபோதும் நம்மிடம் கிடையாது. ஆனால், மண்டலை ஆதரித்து வீராவேசம் காட்டிய அத்தனை "புரட்சிகளும் முற்போக்குகளும்'' உண்மையில் அடிப்படையிலேயே அதன் பரிந்துரைக்கு எதிரான நிலைப்பாட்டையே வலியுறுத்தினார்கள். அதாவது, சாதியை அடிப்படையாக வைத்து கல்வி ரீதியிலும் சமூக ரீதியிலும் பின்தங்கியவர்களே, ஒடுக்கப்பட்டவர்களே பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதுதான் மண்டல் கமிசன் நிலைப்பாடு.


ஆனால் மேற்படி "புரட்சி'களும், முற்போக்குகளும் ஒருபுறம் மண்டலை வீராவேசமாக ஆதரித்துக் கொண்டே, மறுபுறம், "இடஒதுக்கீடு ஏற்பாட்டினால் உண்மையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் இதுவரை பலன் பெறவில்லை. பொருளாதார ரீதியில் முன்னேறிய வர்க்கங்களுக்கே பலன்கள் போய்ச் சேர்ந்தன. ஆகவே, பொருளாதார ரீதியில் வர்க்க ரீதியில் பார்த்து, உண்மையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன்கள் கிடைக்குமாறு செய்ய வேண்டும்'' என்று வாதாடினார்கள். இதன்மூலம் அடிப்படையில் மண்டல் கமிசன் பரிந்துரைகளை அவர்கள் நிராகரித்ததை வீரமணி போன்றவர்கள் கண்டு கொள்ளவில்லை. எப்படியோ அவர்கள் ஆதரவு கிட்டினால் போதும் என்று சந்தர்ப்பவாதமாக நடந்து கொண்டார்கள். அதேபோல மண்டலை அமலாக்கிய "சமூக நீதிக் காவலன்'' என்று வீரமணி கும்பலால் போற்றப்படும் வி.பி.சிங்கை "புல்தரையில் ஒளிந்து கொண்டிருக்கும் பாம்பு'' எனச் சொன்ன பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கன்ஷிராமின் நிலைப்பாடு என்ன? அவர் மண்டல் கமிசன் அறிக்கையை ஆதரிக்கவில்லை; இட ஒதுக்கீடு என்பதே ஒடுக்கப்படும் வெகுஜன சமூகத்தின் விடுதலைப் போராட்டத்தைத் திசை திருப்பி மழுங்கடிப்பதற்கான ஏற்பாடு என்று கூறி வருகிறார். இதை எல்லாம் எதிர்க்கத் துணியாத வீரமணி கும்பல் "புதிய ஜனநாயக''த்தின் மீது பாய்வதன் உள்நோக்கம் புரிந்து கொள்ளக் கூடியதே. அதன் துரோகத்தை நாம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவதுதான்!


(131 ஆகஸ்ட் 1994 இதழில் வெளியான "பெரியாரை வீரமணியிடமிருந்து
விடுதலை செய்வோம் வாரீர்!'' எனும் தொடர் கட்டுரையிலிருந்து)

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது