Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 எனவே புரட்சிகர அரசியலின் அடிப்படையில் ஆயுதப் போராட்டத்திற்காக அணிதிரட்டுவது உடனடியாக செய்யப்பட வேண்டிய கடமையாகும். இதற்கு ஆயுதப் போராட்டம் நடத்துவதற்கு சாதகமான காடுகளிலும், மலைகளிலும் மக்கள் வாழக்கூடிய மூலஉத்தி ரீதியான பகுதிகளை தேர்வு செய்து அங்குள்ள வர்க்க முரண்பாடுகளின் குறிப்பான வடிவங்களை ஆய்வு செய்வதும், மக்களிடையே தொடர்புகளை ஏற்படுத்தி புரட்சிகர அரசியலின் அடிப்படையில் அவர்களை அமைப்பாக்குவதும், நிலப்பரப்பை ஆய்வு செய்வதும் அவசியம். இதனை வெளிப்படையான புரட்சிகர மக்கள் திரள் அமைப்புகளின் மூலம் செய்வதா அல்லது எதிரிக்கு அம்பலமாகாத வகையில் இரகசியமாக செய்வதா என்பது அந்த குறிப்பான பகுதியில் / மாநிலத்தில் புரட்சிகர அமைப்பின் மீது அரசு எத்தகைய அணுகுமுறையை மேற்கொள்கிறது என்பதைப் பொருத்தும் ஒட்டு மொத்தமாக நாட்டில் நிலவும் புரட்சிகர சூழலின் தீவிரத்தன்மையை பொருத்தும் உள்ளது.'' "புரட்சிகர மக்கள் திரள் அமைப்புகளும், கட்சியும் தடை செய்யப்பட்டு, வெளிப்படையாக செயல்பட முடியாத சூழலில் ஆயுதப் போராட்டத்திற்கு தேவையான மக்கள் அடித்தளம், மற்றும் இதர தயாரிப்புகள் இரகசியமாக செய்யப்பட வேண்டும்.'' (போராளி வெளியீடு, பக். 32,33 மற்றும் 34).


இவையெல்லாம் புரட்சிகர அணிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் மாவோயிஸ்டு கட்சி தான் வகுத்துக் கொண்டிருக்கும் கோட்பாடும், நடைமுறையும் ஏதோ செம்மையானது, சீரானது, அறிவியல் பூர்வமானது, மாவோவின் மக்கள் யுத்தப் பாதை அடிப்படையிலானது என்று தோன்றுவதற்காக தனது வெளியீட்டில் சொல்லப்பட்டிருப்பன.


ஆனால், அதன் உட்கட்சி ஆவணமோ, மக்களைத் திரட்டுவதற்கும், ஆயுதப் போராட்டத்தை தொடங்குவதற்கும் "தலையால் நடக்கும்'' பின்வரும் கோட்பாட்டையும் வழிமுறையையும் முன் வைக்கிறது:


"சீனத்தைப் போல நமது நாட்டில் யுத்தம் முதன்மை போராட்ட வடிவமாகவும் இராணுவம் முதன்மை அமைப்பு வடிவமாகவும் உள்ளது. ஆகவே இங்கும் தொடக்கத்திலிருந்தே ஆயுதப் போராட்டத்தின் மூலம் மக்களை அணிதிரட்டி, புரட்சிகர யுத்தத்தை வளர்த்தெடுத்து, பகுதியளவில் அதிகாரத்தைக் கைப்பற்றி அதனை பரந்த பகுதிகளுக்கு விரிவுபடுத்தி, நகரங்களை சுற்றி வளைத்து நாடளவில் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். இங்கு ஆயுதப் போராட்டத்திற்கு மக்கள் திரள் போராட்டங்களையும், மக்கள் படை கட்டுவதற்கு மக்கள் திரள் அமைப்புகளையும் முன் நிபந்தனையாக்குவது கூடாது; பகுதியளவில் எழுச்சிக்கான தயாரிப்புகளை செய்து கொரில்லாப் போரின் மூலம் அதிகாரத்தை வென்றெடுத்து பின்னர் அதைப் போலவே பிற பகுதிகளுக்கு விரிவடைய செய்வதும் தவறானது.


"உள்ளூர் எதிரிகளின் தாக்குதல்கள் மற்றும் அரசின் ஒடுக்குமுறை இயக்கத்திற்கு எதிராக எதிர்ப்பை கொடுக்க, சிவப்பு எதிர்ப்பு போராட்டக் காலத்திலேயே நாம் பகுதி கொரில்லா ஆயுதக் குழுக்களையும், சிறப்பு கொரில்லா குழுக்களையும் மக்கள் குடிபடையையும் அமைப்பதோடு மட்டுமல்ல, கிராம மக்களையும் சாத்தியமான அளவுக்கு ஆயுதபாணியாக்குவதுடன் அவர்களுக்கு பயிற்சி தரவேண்டும்.


"நக்சல்பாரி பேரெழுச்சிக்குப் பின்னர் ஆளும் வர்க்கங்களின் அடித்தளத்தை தகர்த்தெறிவதை நோக்கமாக கொண்டு நடத்தப்பட்டுள்ள மக்கள் திரள் இயக்கங்களின் அனுபவம் என்ன? போராட்டம் துவக்கப்பட்டவுடன் அல்லது ஒரு சில மாதங்களுக்குள் அரசின் கொடூரமான அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகின்றது. நக்சல்பாரி முதற்கொண்டு இதுவரையில் இந்தியாவின் எந்த மாநிலத்திலும், எந்த மூலையில் நடத்தப்பட்ட போராட்டமாக இருப்பினும் அதன் அனுபவம் இதையே நிரூபிக்கின்றது.


"ஆகவே, ஆயுதப் போராட்டம் முதன்மை வடிவமாகவும் கொள்வதுதான் சரியானது. அம்மாதிரியான சீனா, வியத்நாம், பிலிப்பைன்ஸ், பெரு, நேபாளம் போன்ற நாடுகளின் அனுபவங்களில் இருந்து பார்க்கும்போது சிறிய அலகுகளில் முதலில் ஆயுதக் குழுக்களைக் கட்டி முன்னேறுவதுதான் சரியானதென்று காட்டுகின்றன.


"தொடக்கத்திலிருந்தே ஆயுதக் குழுக்களைக் கட்டி நடத்தப்படும் ஆயுதப் போராட்டத்தின் ஊடாகத்தான் மக்களை ஆயுதப் போராட்ட அரசியலுக்கு அணிதிரட்ட முடியும். மக்கள் யுத்தத்தை நடத்துவதற்கான மக்கள் படையை கட்ட முடியும். கிராமப்புறங்களில் வர்க்கப் போராட்டத்தை துவங்கும்போதே பிற்போக்கு ஆளும் வர்க்கங்கள் மற்றும் அரசின் அடக்குமுறைக்கு எதிராக எதிர்த்தாக்குதல் நடத்துவதற்கு ஆயுதக் குழுக்களை கட்டுவது மிகவும் அவசியமாக உள்ளது.


"இந்தியாவில் நமது கட்சியின் அனுபவத்தை பார்த்தோமேயானால் நாம் ஏற்கெனவே கூறிய ஜகித்யால் போராட்டத்தை ஒடுக்குவதற்கு அரசுப் படைகள் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டதை எதிர்த்து 1979இல் நான்கு ஆயுதக் குழுக்கள் கட்டப்பட்டன. இது வளர்ச்சியடைந்து தண்டகாரண்யாவிற்கும் பின்னர் நாட்டின் பல பாகங்களுக்கும் விரிவடைந்தது. கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஆயுதப் போராட்டத்தை உறுதியுடன் முன்னெடுத்து வருவதன் மூலம் பல்லாயிரக்கணக்கான கொரில்லா வீரர்களையும் பல்லாயிரக்கணக்கான மக்கள் குடிப்படையினரை கொண்ட மக்கள் கொரில்லா விடுதலைப் படையாக வளர்ச்சியடைந்துள்ளது.


"இவையனைத்தும் நமக்கு தெளிவுபடுத்தும் விசயம் என்னவெனில் மக்கள் இராணுவம் கட்டப்படும்பொழுது எத்தனை வீரர்களை கொண்டு கட்டப்பட்டாலும், எத்தனை துப்பாக்கிகளைக் கொண்டிருந்தாலும், நீண்டகால மக்கள் யுத்தப் பாதையில் உறுதியாக நின்று, ஆயுதப் போராட்டத்தை உறுதியாக நடத்திக் கொண்டு எத்தனை இழப்புகளும், கொடும் அடக்குமுறைகளும் வந்தாலும் மக்களை அணிதிரட்டி புரட்சிகர இயக்கத்தை முன்நடத்தி வந்தால் அது வளர்ச்சிடையவது நிச்சயம். அந்தந்த நாட்டின் குறிப்பான நிலைகளுக்கேற்றவாறு, ஏற்ற இறக்கங்களை கண்டு இன்று வளர்ச்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டு வருகின்றது.' (ஆதாரம்: "வலது சந்தர்ப்பவாத கருத்துக்களை முறியடிப்போம்! நீண்டகால மக்கள்யுத்தப் பாதையை உயர்த்திப் பிடிப்போம்!'' இ.க.க.(மாவோயிஸ்ட்) தமிழ் மாநிலக் குழு வெளியீடு, பக். 3639, சுருக்கப்பட்டது).


கிராமப்புறங்களில் கூலிஏழை விவசாயிகளின் கொரில்லாக் குழுக்களைக் கட்டி வர்க்க எதிரிகளை அழித்தொழிப்பதன் மூலம் கொரில்லாப் போரையும் மக்கள் யுத்தத்தையும் தொடங்கி முன்னேற முடியும் என்ற லின்பியாவோ சாருமஜூம்தாரின் கண்டுபிடிப்பின் பரிணாம வளர்ச்சிதான் இந்த இ.க.க.(மாவோயிஸ்ட்) கட்சியின் வழிமுறை. உண்மையில் சேகுவேரா, ரெஜிஸ்தேப்ரே, கார்லோஸ் மாரிகெல்லா போன்ற குட்டி முதலாளிகளின் இந்த கொரில்லாப் போர்முறையை மாவோயிசம் என்ற பெயரில் இவர்கள் முன்மொழிகிறார்கள்.


குட்டி முதலாளித்துவ இராணுவவாதத்தை நடைமுறைப்படுத்திக்கொண்டு தாங்கள் மாவோவின் மக்கள் யுத்தப் பாதையில் முன்னேறுவதாகவும் தங்களை மாவோயிஸ்ட் கட்சி என்று கூறிக்கொள்வதும்தான் வேடிக்கை, வினோதமாகும்!


மூன்றாண்டுகளுக்கு முன்பே இ.க.க.(மாவோயிஸ்ட்) தமிழ் மாநிலக் குழுவிடம் பின்வருமாறு நாம் கோரியிருந்தோம். "ம.யு. தமிழ்மாநிலக் குழு தமிழகத்தில் தானே செயல்படுகிறது! அது எதற்கெடுத்தாலும் ஆந்திராவைச் சான்று காட்டுவதை தவிர்த்து, தான் போதிக்கும் வழிமுறைகளை, தமிழ்நாட்டில் அமல்படுத்திய அனுபவத்தைச் சொல்லியிருந்தால், மா.அ.க.வுக்கும் புரட்சிக்கும் பயன்படக்கூடியதாக இருந்திருக்கும்.''


மீண்டும் இதையே கோருகிறோம். 1995-96 முதல் இரவீந்திரன், பிறகு சிவா, தற்போது மகாலிங்கம் தலைமையில் ஆயுதக் குழுக்களைக் கட்டி ஆயுதப் போராட்ட அரசியலுக்கு மக்களை அணிதிரட்டவும் ஆயுதப் போராட்டத்தைத் துவங்கவும் மக்கள் யுத்தத்தை விரிவுபடுத்தவும் முயன்று வருகிறார்கள். பழைய வரலாறு ஒருபுறம் இருக்கட்டும், இந்த பத்தாண்டுகளாக நடக்கும் ஆயுதப் போராட்டத் தயாரிப்பு நடவடிக்கைகள் கருச்சிதைவாகவே முடிகின்றனவே, அந்த அனுபவத்தைத் தொகுத்துத் தருவீர்களானால் மிகவும் பயனுடையதாக இருக்கும்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது