Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


"புரட்சிகர யுத்தத்திற்கு மக்களை அணிதிரட்டுவது கம்யூனிசப் புரட்சியாளர்களின் முதன்மையான கடமையென்பதால், அவர்களுக்கு காடு, மலை, துப்பாக்கி பயிற்சி என்பதெல்லாம் மிகவும் முக்கியமான தேவைகளாகின்றன. ஆனால் இக்கடமையை வெறும் ஆயுதங்களைக் கொண்டு நிறைவேற்றிவிட முடியாது என்பதும், மக்களைப் பல்வேறு அரசியல், பொருளியல், சமூகக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களின் மூலமாகவும், அரசியல் ரீதியில் அணி திரட்டுவதன் மூலமாகவும் செய்ய வேண்டும் என்பதும் மாவோயிஸ்டுகளின் நிலைப்பாடாகும்.'' (போராளி வெளியீடு, பக்.31)


"மக்கள் ஆதரவு, அடித்தளம் மட்டுமல்லாமல், மக்களின் நேரடியான பங்கெடுப்பில்லாமல் ஒரு புரட்சி வெற்றி பெற முடியாது. அதனால்தான் புரட்சி என்பது மக்களின் திருவிழா என்று மாமேதை தோழர் லெனின் கூறினார். ஆகவே, புரட்சிக்கு மக்களை அணிதிரட்டுவது, அமைப்பாக்குவது மற்றும் அவர்களை நேரடியாகப் பங்கெடுக்கச் செய்வது புரட்சிக்கு தலைமை தாங்கும் கம்யூனிஸ்டு கட்சியினுடைய கடமை.'' (போராளி வெளியீடு, பக். 31).


"ஆயுதக் குழு கட்டி ஆயுதப் போராட்டம் நடத்துவதற்கு, மக்கள் அடித்தளம் ஆதரவு இருக்க வேண்டுமா என்றால் எவ்வித ஐயத்திற்கும் இடமின்றி இருக்க வேண்டும் என்பதுதான் மாவோயிஸ்டுகளின் நிலைப்பாடு. (போராளி வெளியீடு, பக். 32)


இவ்வாறு பொதுவில் புரட்சிக்கும், குறிப்பாக ஆயுதப் போராட்டத்திற்கும் மக்களை அணிதிரட்டுவதும், அமைப்பாக்குவதும், அவர்களை நேரடியாகப் புரட்சியில் பங்கெடுக்கச் செய்வதும் எவ்வித ஐயத்திற்கும் இடமின்றி இருக்க வேண்டும் என்பது மாவோயிஸ்டுகளின் நிலைப்பாடாகும் என்று கோட்பாட்டு ரீதியில் ஒப்புக் கொள்ளும் அவர்கள், அடுத்த வரியிலேயே இந்த நிலைப்பாட்டை நிராகரித்து விடுகிறார்கள்.


முதலில், புரட்சிக்கும், ஆயுதப் போராட்டத்திற்கும் மக்கள் ஆதரவு அடித்தளத்தைப் பெறுவதற்கான "புதிய ஜனநாயகம்' வகுத்துக் கொண்டுள்ள அரசியல் வழிமுறைகள் வலது சந்தர்ப்பவாதமென்று நிரூபிப்பதற்காக முயன்று, அவசியமான சரியான மார்க்சியலெனினியத் தலைமை முறை பற்றிய அனைத்துக் கோட்பாடுகளையும் நிராகரித்து விடுகிறார்கள். "அரசியல் போராட்டத்தின் உயர்ந்த வடிவம்தான் ஆயுதப் போராட்டம், அரசியல் போராட்ட அனுபவத்தினூடாக ஆயுதப் போராட்டத்தின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும்'' என்ற மார்க்சியலெனினியக் கோட்பாட்டைப் பின்வருமாறு கொச்சைப்படுத்தி நிராகரித்து விடுகிறõர்கள்.


"மொத்தத்தில், பு.ஜ. வகுத்துள்ள புதிய சூத்திரம் மாலெமாவை திரித்து புரட்டும் ஒரு சந்தர்ப்பவாத சூத்திரமே. இது அரசியல் போராட்டம் படிப்படியாக, ஆயுத போராட்டமாக மாறும் என்ற பரிணாமவாதக் கோட்பாட்டை முன்வைப்பதன் மூலம், பாய்ச்சல் மூலமான வளர்ச்சி என்ற மார்க்சிய கோட்பாட்டை மறுக்கிறது. மறுபுறம் மக்கள் ஆயுதப் போராட்டத்தை நடத்த அரசியல் போராட்ட அனுபவங்களை அடிப்படையாக்குவதன் மூலம், புறநிலையில் தோன்றக்கூடிய புரட்சிகர சூழலை பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்கும் மலட்டுக் கோட்பாடாக உள்ளது. அரசியல் போராட்டத்தை முதிர்ச்சியடைய செய்ய (எப்போது முதிர்ச்சியடையும்?) நிரந்தரமாக முயற்சித்துக் கொண்டிருப்பதும், மக்கள் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ள (இதை எப்படி முடிவு செய்வது?) அரசியல் போராட்ட அனுபவம் பெற வைக்க காலாகாலத்துக்கு முயன்று கொண்டிருப்பதுதான் இந்த சந்தர்ப்பவாதக் கோட்பாட்டின் விளைவாக இருக்க முடியும். '' (போராளி வெளியீடு, பக்.26)


மேலும் புதிய ஜனநாயகம் அமைப்பினர் முன் வைக்கும் போர்த்தந்திரம், செயல்தந்திரம் பற்றிய கோட்பாடுகளை வேண்டுமென்றே திட்டமிட்டு, மோசடியாகத் திரித்துப் புரட்டி, அவை முதலாளிய நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் நீண்டகாலத் தயாரிப்பைத் தொடர்ந்து நடத்தப்படும் நாடு தழுவிய பேரெழுச்சிப் பாதை என்றும் ஒரு பச்சைப் பொய்யை மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. இந்தப் பச்சைப் பொய்யை ஆதாரமாக வைத்து, நாடு தழுவிய அளவில் மக்கள் ஆதரவைத் திரட்டியபிறகுதான் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்க முடியும் என்று கோட்பாட்டை வகுத்துக் கொண்டு ஆயுதப் போராட்டத்தைக் கண்காணாத தூரத்துக்குத் தள்ளி வைத்து விட்டதாக வேறு அவதூறும் செய்கிறது.


இவ்வாறுதான் முன்னாள் மக்கள் யுத்தக் கட்சி மற்றும் இன்னாள் மாவோயிசக் கட்சித் தலைமை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பு.ஜ. அமைப்பின் கோட்பாடுகள் குறித்து திரித்துப் புரட்டியும், புளுகியும் அவதூறு செய்து வந்தது. ஆனால், அதே கோட்பாடுகளின் பகுதிகளைத் "திருட்டுத்தனமாக'' தனது ஐக்கியம் மற்றும் போராய ஆவணங்களில் புகுத்திக் கொண்டது. அது தெரியாமல் அக்கட்சியின் தமிழ் மாநிலக் குழு தொடர்ந்து, போர்த்தந்திரம், செயல்தந்திரம் பற்றிய பு.ஜ. அமைப்பின் நிலைப்பாடுகள், குறிப்பாக பிரதானத் தாக்குதல் திசைவழி, புரட்சி அலையேற்றம், அலையிறக்கம், பிரச்சாரம், கிளர்ச்சி, கட்டளை மற்றும் ஆணை ஆகிய கட்டங்களிலான இயக்க வளர்ச்சி போன்றவை முதலாளிய நாடுகளுக்கு மட்டுமே பொருந்தக் கூடியன; இந்தியா போன்ற நாடுகளுக்கு இவையெல்லாம் பொருந்தாதவை; அதைப் பற்றி எங்கேயும் மாவோ கூறவில்லை, மாறாக அந்தக் கொள்கை சீன நிலைமைகளுக்கு எப்படிப் பொருந்தாது என்றுதான் கூறியுள்ளார் என்றும் பச்சையாகப் புளுகினார். புரட்சிகர அலையேற்றம், அலையிறக்கம் என்பதெல்லாம் வார்த்தை ஜாலங்கள் என்றும், புரட்சிகர அலையேற்றத்திற்காக இலவுகாத்த கிளியாக ஆயுதப் போராட்டத்தை துவக்காமல் காத்திருக்கின்றனர் என்றும் கிண்டல் செய்தார்கள். (ஆதாரம்: "போகாத ஊருக்கு வழி சொல்லும் மா.அ.க.வின் அரசியல் பாதையும், இராணுவப் பாதையும்'', போராளி வெளியீடு, பக். 61, 64)


இதுபற்றி சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பே பு.ஜ. அமைப்பு கேட்டிருந்தது, "அரசியல் யுத்த தந்திரம், செயல்தந்திரங்கள் பற்றிய மா.அ.க.வின் நிலைப்பாடுகளைக் கொல்லைப்புற வாசல் வழியே (மாவோயிசக் கட்சி) சேர்த்துக் கொண்டிருக்கிறது. இப்போது ம.யு. தமிழ் மாநிலக் குழு தோழர்கள் மா.அ.க.வுக்கு எதிரான வெளியீட்டில் எழுதியுள்ள அவதூறுகளை நேர்மையாக ஒப்புக் கொள்வார்களா, அல்லது தலைமை கடைப்பிடித்த கபடத்தனத்தைப் பின்பற்றுவார்களா என்று தெரியவில்லை.'' ("சாகச வழிபாடு சந்தர்ப்பவாத வழிமுறை போவது எங்கே?'', பக். 107) என்று பு.ஜ. அமைப்பு கேட்டிருந்தது.


மாவோயிசக் கட்சியின் தமிழ் மாநிலக் குழு, தனது கட்சியின் இந்தக் கோட்பாட்டு மோசடி குறித்து நேர்மையாக நடந்து கொள்ளாததுடன் தலைமையின் அதே கபடத்தனத்தைப் பின்பற்றுவது இப்போது தெரிகிறது. அதாவது பு.ஜ. அமைப்பின் செயல்தந்திர நிலைப்பாடு, முதலாளிய நாடுகளுக்கு மட்டுமே பொருந்தக் கூடிய நாடு தழுவிய பேரெழுச்சிப் பாதையிலானதென்று தொடர்ந்து புளுகி வருகிறது.


நீண்டகாலத் தயாரிப்பைத் தொடர்ந்து நாடு தழுவிய ஆயுதந்தாங்கிய பேரெழுச்சி பாதை அதாவது நாடு தழுவிய அளவில் மக்கள் ஆதரவைத் திரட்டிய பிறகுதான் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவது என்பது பு.ஜ. அமைப்பின் நிலைப்பாடே கிடையாது. இதுதான் நமது நிலைப்பாடு என்பது மாவோயிஸ்டுகள் வேண்டுமென்றே திரித்து, இட்டுக் கட்டிச் சொல்வதாகும். ஏற்றதாழ்வான வளர்ச்சியுடைய நமது நாட்டில் மக்களைத் திரட்டுவதும் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குவதும் காலத்தாலும் இடத்தாலும் ஏற்றத்தாழ்வாகவே இருக்கும் என்பதுதான் நமது நிலைப்பாடாகும். நாட்டின் எங்கு வேண்டுமானாலும், எப்போதும் ஆயுதப் போராட்டம் தொடங்கலாம் என்ற மாவோயிஸ்டுகளின் நிலைப்பாடுதான் சமச்சீரான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கண்ணோட்டமாகும்.


ரசியாவிலும், சீனாவிலும் பின்பற்றப்பட்டதைப் போல ஒரு குறிப்பிட்ட போர்த்தந்திரத்தின் சில போராட்ட மற்றும் அமைப்பு வடிவங்கள் மற்றொரு போர்த்தந்திரத்தில் அவசியமானால் பயன்படுத்த முடியும், பயன்படுத்த வேண்டும்; இந்த முறையில் கொரில்லா மண்டலங்களையும், தளப்பிரதேசங்களையும் நிறுவுவதற்கான முதற்படியாக உள்ளூர் ஆயுதந்தாங்கிய பேரெழுச்சிகளை நடத்துவது முன்தேவையாக உள்ளன என்பதுதான் பு.ஜ. அமைப்பின் நிலைப்பாடே தவிர, நாடு தழுவிய பேரெழுச்சிக்குத் தயாரிப்பது என்பது பு.ஜ. நிலைப்பாடே கிடையாது. (ஆதாரம்: மேற்படி நூல், பக். 171). மாவோயிஸ்டுகள்தாம் நமது நிலைப்பாட்டைத் திரித்துச் சொல்லி அவதூறு செய்து வருகிறார்கள்.


அதேசமயம், ஆயுதக் குழு கட்டி, ஆயுதப் போராட்டம் நடத்துவதற்கு மக்கள் அடித்தளம், ஆதரவு இருக்க வேண்டும் என்று ஒப்புக் கொள்ளும் மாவோயிஸ்ட் கட்சி கூறும் வழிமுறையோ, வெளியில் ஒன்றும் இரகசியமாக எழுதி வைத்துக் கொண்டுள்ள கட்சி ஆவணத்தில் வேறொன்றாகவும் இருக்கின்றது. அந்த உண்மையை ஆதாரத்துடன் பார்ப்போம்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது