Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1999 மே தர்மபுரி வட்டாரக் கட்சிப் பிளீனத்தில் கணக்கிட்டபடி உழவர் அமைப்பு, பெண்கள் அமைப்பு, இளைஞர் அமைப்பு, மாணவர் அமைப்பு, பாலர் சங்கம் ஆகிய அனைத்து அமைப்புகளும் சேர்ந்து 100 கிளைகள் கட்டப்பட்டிருந்தன.'' "மிகக் குறுகிய காலத்தில் சுமார் 100 கிளைகள் கட்டப்பட்டன என்ற உண்மைதான் போலீசை அதிர்ச்சியடைய வைத்தன. அதைவிட மக்கள் கட்சித் தோழர்களுக்கு ஆதரவாக போராடுகிறார்கள் என்பது போலீசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.'' (2000ஆம் ஆண்டு ஜனபிப், போராளி, பக்: 1, 21, மற்றும் 32-33)


" ஒரு பக்கம் அரசின் அடக்குமுறையை சந்தித்துக் கொண்டே மறுபக்கம் மக்களின் போராட்டங்களும் ஆதரவும் பெருகி வருகிறது. இந்த நிகழ்ச்சிப் போக்கு தருமபுரியில் புரட்சிகர மக்கள் இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு அதாவது தமிழகத்தில் ஆயுதப் போரட்டத்தை உருவாக்குவதற்கான தொடக்கத்தைக் கொண்டுள்ளது. எதிரியும் தனது நடவடிக்கையின் மூலம் நமக்கு இதை உணர்த்தியுள்ளான். எனவே, தமிழகத்தில் புரட்சிகர மக்கள் இயக்கம் எத்தகைய அடக்குமுறையிலும் சரி, அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்பது உறுதியாகி விட்டது.'' (மேற்படி போராளி, பக். 38)


இவ்வாறு 2000ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மக்கள் யுத்தக் குழுவினர் எழுதினர். இப்போது கூட புதிய ஜனநாயகத்துக்கு எதிரான வெளியீடுகளில், "தர்மபுரி வடாற்காடு பகுதிகளில் நக்சல்பாரிகளுக்கு இருக்கும் செல்வாக்கு நாடறிந்த ஒன்று. எதிரிகளுக்குக் கூட இதை மறுக்கத் துணிவு கிடையாது.'' "இன்று தர்மபுரியே அறிவிக்கப்படாத கலவரப் பகுதியாகக் கருதப்பட்டு கிராமம் கிராமமாக மக்கள் வேட்டையாடப்படுகின்றனர். அச்சுறுத்தப்படுகின்றனர். அப்புபாலன் சிலை திறப்பு விழாவின்போது கூட 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் திரண்டு அதை ஒரு புரட்சித் திருவிழாவாக நடத்தியது தர்மரி மக்களிடையே நக்சல்பாரிகளுக்கு இருந்த செல்வாக்கிற்கான சாட்சியமாகும். '' (பெரிய குளத்தில் தெறித்த சிறுபொறி, பக்.14)


இவ்வாறான மதிப்பீடும், எதிர்பார்ப்பும் பற்றி "யதார்த்த நிலைமையை மிகை மதிப்பீடு செய்வதும், அமைப்பு, இயக்க வளர்ச்சியை ஊதிப் பெருக்கி உரிமை பாராட்டுவதும் ம.யு. குழுவினருக்கு வாடிக்கைதான் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் என்ன தேவை!'' (குறுக்கு வழி தேடி.... குழுசாகச வழிபாடு!' பு.ஜ. வெளியீடு, பக். 1718) என்று அப்போதே எழுதினோம்.


இப்படி எழுதியதற்காக பு.ஜ. மீது பாய்ந்து குதறியது ம.யு. குழு; இப்போதும் தர்மபுரியை மக்கள் செல்வாக்குப் பெருகியுள்ள பகுதியாக மதிப்பிடும் மாவோயிஸ்ட் கட்சி "ஆயுதப் போராட்ட அரசியலும் நடைமுறையும்'' என்ற போராளி வெளியீட்டில் பின்வருமாறு எழுதியுள்ளது. "1993க்குப் பிறகு புரட்சிகர மக்கள்திரள் அமைப்புகளின் செயல்பாடுகள் அறிவிக்கப்படாமலே தடை செய்யப்பட்டன. சட்டபூர்வ செயல்பாடுகளையே அனுமதிக்காத எதிரியின் இத்தகைய கொடூரமான அடக்குமுறைகளுக்குப் பின்னர், 1996-97 முதல் ஆயுதக் குழுக்கள் நிறுவப்பட்டு செயல்பட்டு வந்தன. 2002 நவம்பரில் ஊத்தங்கரை சம்பவத்திற்குப் பின்னர் கட்சிக்கு ஏற்பட்ட இழப்பினால், தர்மபுரியில் இயக்க வேலைகள் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. மீண்டும் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டு மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மூல உத்தி ரீதியான பகுதியில் இயக்க வேலைகள் தொடங்குவதற்கான செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில்தான் இச்சம்பவம் (பெரிய குளம் முருகமலைச் சம்பவம்) நடந்துள்ளது.'' (போராளி வெளியீடு, பக். 22).


மாவோயிஸ்ட் கட்சியினரே கொடுத்துள்ள இந்த விவரப்படி தர்மபுரியில் (1996-97இல்) ஆயுதக் குழுக்கள் நிறுவப்பட்ட ஏழாண்டுகளுக்குப் பிறகு — அதாவது 2003 ஊத்தங்கரை சம்பவத்திற்குப் பின்னர், கட்சிக்கு ஏற்பட்ட இழப்பினால் இயக்க வேலைகள் தொடர முடியாத நிலை ஏற்பட்டது என்று ஒப்புக் கொண்டுள்ளார்கள். இப்போதும் இதுதான் நிலைமை.


* "1996க்குப் பிறகு எதிரியின் அடக்குமுறைக்கு எதிராக புதிய செயலுத்தியாக இரகசிய மக்கள் திரள் அமைப்புகள், இரகசிய செயல்பாடுகள் மற்றும் சுய பாதுகாப்புக்காக ஆயுதமேந்திய குழுக்களுடன் இயக்கம் வளர்ச்சியடைந்து வந்தது.''
* மிகக் குறுகிய காலத்தில் போலீசே அதிர்ச்சியடையுமாறு சுமார் 100 கிளைகள் கட்டப்பட்டன. அதைவிட மக்கள், கட்சித் தோழர்களுக்கு ஆதரவாக போராடுகிறார்கள் என்பது போலீசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.


* இந்த நிகழ்ச்சிப் போக்கு தருமபுரியில் புரட்சிகர மக்கள் இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு, அதாவது தமிழகத்தில் ஆயுதப் போராட்டத்தை உருவாக்குவதற்கான தொடக்கத்தைக் கொண்டிருந்தது. எத்தகைய அடக்குமுறையிலும் சரி, அது அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்பது உறுதியாகி விட்டது என்று நம்பினார்கள்.


இப்படியெல்லாம் தருமபுரியில் தங்களுக்கு இருந்ததாகக் கூறிய அமைப்பு பலம், மக்கள் செல்வாக்கு இப்பொழுது என்ன ஆனது? பு.ஜ. அமைப்பினர்தான் முற்றிலும் வெளிப்படையான சட்டபூர்வ அமைப்பும் நடைமுறையும் கொண்டுள்ளார்கள்; ஒரு அடக்குமுறை வந்தாலும் தாங்க மாட்டார்கள்; தங்கள் தான் தலைமறைவு இயக்கத்தைக் கட்டியிருக்கிறோம். தாங்கள்தான் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவதற்குச் சரியான செயலுத்தியைக் கொண்டுள்ளோம் என்று பீற்றிக் கொள்கிறார்கள். 1996இல் இருந்து வகுத்துச் செயல்படுத்தியதாகக் கூறும் அப்படிப்பட்ட புதிய செயலுத்தியைக் கடந்த 10 ஆண்டுகளாக அமல்படுத்திய அனுபவம் என்ன? அரசியல் அமைப்பு மீளாய்வு எங்கே? இன்று தர்மபுரியில் உள்ள நிலைமைதான் என்ன?


இவற்றையெல்லாம் மக்களுக்கும் அணிகளுக்கும் நேர்மையாகவும் பொறுப்பாகவும் முன்வைப்பதற்குப் பதில், "2002 நவம்பரில் ஊத்தங்கரை சம்பவத்திற்குப் பின்னர் கட்சிக்கு ஏற்பட்ட இழப்பினால், தருமபுரியில் இயக்க வேலைகள் தொடர முடியாத நிலை ஏற்பட்டது'' என்று கொஞ்சமும் பொறுப்பும் நேர்மையும் இல்லாமல் இடத்தை மாற்றிக் கொண்டு விட்டார்கள்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது