Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


இந்தச் சரணடைதல் கொள்கையை கட்சி நிராகரித்து, போராட்டத்தைத் தொடர முடிவு செய்தது. இதனால் ரவி நாராயணரெட்டியும், அவரைப் பின்பற்றுபவர்களும் இயக்கத்திலிருந்து மெதுவாக விலக ஆரம்பித்தனர். அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர். தன்னுடைய சரணடைதல் கொள்கையை மறைப்பதற்காக ரவி நாராயண ரெட்டி "தெலுங்கானாவின் வெளிப்படையான உண்மைகள்'' என்ற புத்தகத்தை வெளியிட்டு, மக்களிடத்தில் வெட்கமில்லாமல் விநியோகம் செய்தார். தெலுங்கானா இயக்கம் முழுமையும் சூறையாடும் இயக்கமென்றும், மக்களுடைய பொருளைத் திருடும் இயக்கமென்றும் அந்தப் புத்தகம் கண்டனம் தெரிவித்தது. அவர் நம்பிக்கை துரோகம் செய்து தெலுங்கானா இயக்கத்தின் முதுகிலே குத்திவிட்டார். இவ்வாறாக மக்களின் கண் முன்னாலேயே மாபெரும் தெலுங்கானா இயக்கத்தைக் குலைக்க இத்துரோகிகள் அரசாங்கத்திற்கு நேரிடையாக உதவினர்.


சரியாக இந்தச் சமயத்தில், டாங்கே, அஜாய் குமார் கோஷ், காட்டே ஆகியோர் கட்சியை எதிர்த்துக் கலகம் செய்து மக்கள் யுத்த வழியை எதிர்ப்பதில் ரவி நாராயணரெட்டியுடன் சேர்ந்து கொண்டனர். தெலுங்கானா இயக்கத்திற்கு ஏற்பட்ட இந்தப் புதிய எதிர்ப்போடு, தெலுங்கானா இயக்கம் உட்பிரச்சினைகளைச் சந்தித்தது.


இவ்வளர்ச்சிகளின் காரணமாக, நேரு அரசாங்கத்தின் வர்க்கக் குணங்களைப் பற்றியும் இந்தியப் புரட்சிக் கட்டத்தைப் பற்றியும், போராட்டத்தின் வழியைப் பற்றியும் ஒரு பெரிய சித்தாந்தப் போராட்டம் கட்சி முழுவதிலும் வெடித்தது. இந்த சித்தாந்தப் போராட்டத்தின் விளைவாக 1951இல் கட்சித் திட்டம், நடைமுறைத் தந்திரம் ஆகியவை உருவாக்கப்பட்டன.


இந்த மாபெரும் சித்தாந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட தெலுங்கானா இயக்கத்தின் தீரர்கள், மத்திய அரசாங்கத்தின் இராணுவத் தாக்குதலை எதிர்த்துப் போராடி, இயக்கத்தை முன்னுக்கு கொண்டு சென்றனர். 1951ஆம் ஆண்டுத் திட்டம் அல்லது நடைமுறைத் தந்திரம் (இயக்கத்தின் நிலைமைகளைப் பரிசீலிப்பது) கூறுவதைப் போல, தெலுங்கானா இயக்கத்தை நிறுத்துவதற்கோ அல்லது புதிதாக நிறுவுவதற்கோ அவசியமே ஏற்படவில்லை.


அந்தச் சமயத்தில் எல்லா இடையூறுகளையும் கடந்து இயக்கம் புதிய பகுதிகளுக்கு பரவ ஆரம்பித்தது. சமவெளியில் இருந்த மக்கள் பல்வேறு வடிவங்களில் இயக்கத்திற்கு உதவி வந்தனர். மக்கள் எதிரிகள் தங்களுடைய கிராமங்களிலேயே தங்க முடியவில்லை. இராணுவ முகாம்களில் பாதுகாப்பை நாடினர். இராணுவத்தினராலும் கூட சுதந்திரமாக நடமாட முடியவில்லை. அவர்கள் பகலில் சுதந்திரமாகச் சுற்றினாலும் இரவில் தங்களுடைய முகாம்களிலேயே தங்க வேண்டி வந்தது.


இந்த நிலைமைகளில், தங்களுடைய சொந்த அனுபவங்களைக் கொண்டு படைகளின் உறுப்பினர்கள், இயக்கம் தொடர்ந்து நடக்க வேண்டுமென்று கோரினர். இந்தச் சமயத்தில் மத்திய கமிட்டியின் தலைவர்கள், புதிய திட்டத்தை சாக்காக வைத்துக் கொண்டு இயக்கத்தை நிறுத்த வேண்டுமென்று ஒருதலைச் சார்பாக முடிவு செய்தனர்; இயக்கத்தின் நிலைமைகளைப் பரிசீலனை செய்தும், படை உறுப்பினர்களின் கருத்தைக் கேட்ட பிறகும் இறுதியான முடிவை எடுப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் மத்தியக் கமிட்டித் தலைவர்கள், பிரதேசத் தலைவர்கள் ஆகியோர் இந்த முடிவையும் மீறி, ஆயுதங்களைத் தங்களுடைய பொறுப்பிலேயே கீழே வைக்கவேண்டுமென்று படை உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். இவ்வாறாக, இயக்கம் பின்வாங்கப்பட்டது. மத்திய கமிட்டித் தலைமையானது, ஆந்திரத் தலைவர்களைக் கலந்தாலோசிக்காமலேயே தெலுங்கானா இயக்கத்தைப் பகிரங்கமாகப் பின்வாங்கச் செய்தது.

 

இரத்தத்தின்மூலமும், தியாகங்களின்மூலமும் சுமார் 4000 மக்கள் வீரர்களின் உயிர்களைத் தியாகம் செய்ததன்மூலமும் வளர்ந்த தெலுங்கானா இயக்கம், கடுமையான போராட்டங்களினிடையில் பல வெற்றிகளை அடைந்தது. போராட்ட வெற்றிகளைப் பாதுகாக்க மத்திய கமிட்டி எந்தவித முயற்சியும் செய்யவில்லை. விநியோகிக்கப்பட்ட நிலங்கள் மக்களிடமே இருக்க வேண்டுமென்றும் கிராம ராஜ்ஜியம் அங்கீகரிக்கப்படவேண்டுமென்றும், கைது செய்யப்பட்டவர்கள் நிபந்தனையில்லாமல் விடுவிக்கப்படவேண்டுமென்றும் கட்சித் தலைமை மத்திய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினாலும், உறுதியாக அவற்றை வலியுறுத்தவில்லை. மத்திய அரசாங்கம் இந்த நிபந்தனைகளை நிராகரித்தது. கட்சித் தலைமையானது, இயக்கத்தை நிபந்தனையின்றி பின்வாங்க முயற்சிக்கிறது என்று மத்திய அரசாங்கத்திற்கு தெளிவாகத் தெரிந்தது. அதனால்தான் அது உறுதியாக நிராகரித்தது.


தேர்தல்களில் கலந்து கொள்வதற்குக் கட்சிக்கு அனுமதியளிப்பதாக மத்திய அரசாங்கம் உறுதி கூறியது. தேர்தல்களுக்குப் பின்னர், ஹைதராபாத் நிலச் சட்டத்தை மாற்றுவதற்கு உறுதியளித்தது. ஆயுதங்களைச் சரண்டையச் செய்தவர்களின் மீது வழக்குகள் போடமாட்டோமென்றும், முக்கியமான வழக்குகளில் சம்பந்தப்படாதவர்களை விடுவிப்போமென்றும் எல்லா கிராமங்களிலும் பஞ்சாயத்துகளை அமைக்கவும் உறுதி கூறியது.


மத்திய கமிட்டித் தலைமை இந்த ஏமாற்று உறுதிகளை ஏற்றுக் கொண்டது. தெலுங்கானா இயக்கத்தின் வெற்றிகளைப் பாதுகாக்க போராட வேண்டுமென்று அது நினைக்கவேயில்லை. தேர்தல்களில் கலந்து கொள்ள அனுமதி கிடைத்தால், அதுவே எல்லாவற்றையும் அடைந்துவிட்டதாகப் பொருள் என்று நினைத்தது. வரப்போகும் தேர்தல்களின் மீது கண் வைத்துக் கொண்டு இயக்கத்தை ஒருதலைச் சார்பாக நிறுத்தி, ஆயுதங்களைத் திருப்பிக் கொடுத்தது.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது