Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


இதன்மூலம் கட்சியினிடத்திலும், படைகளினிடத்திலும் கோயா மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்தது. சங்கத்தைப் பற்றிய உணர்வு அவர்களிடம் வளர்ந்தது. தங்களுடைய அடிமைத்தளைகளை உடைத்தெறிய அவர்கள் உறுதிபூண்டனர். "முட்டா' பெரியவர்களிடமும் கூட ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டது. அவர்கள் எல்லாவகையான சுரண்டல்களையும் நிறுத்தினர். கோயா மக்களோடு சேர்ந்து கொண்டு அவர்கள் படைகளுக்கு உதவ முன்வந்தனர்.


இந்தப் புதிய உணர்வுடன் கோயா மக்கள் போராட்டத்தில் சேர்ந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தின் முன்னேற்றத்தினால் மக்களுடைய எதிரிகள் காட்டுப்பகுதியிலிருந்து ஓடிவிட்டனர். காட்டுப் பகுதிகளிலிருந்த எல்லாக் கிராமங்களிலும் கிராம ராஜ்யம் நிறுவப்பட்டது. நூற்றுக்கணக்கான கோயா மக்கள் கிராமப் படைகளிலும், கமிட்டிகளிலும் முறையான கொரில்லாப் படைகளிலும் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். கோயா பெண்களும் கூட இந்த இயக்கத்தில் முக்கிய இடம் பெற்றனர். கோயா ஆண்களும் பெண்களும் கட்சி அமைப்பாளர்களாகவும், படைத் தளபதிகளாகவும் உயர்த்தப்பட்டனர்.


இவ்வாறாக காட்டுப்பகுதி முழுவதிலும் இயக்கத்தில் ஒரு பேரெழுச்சி காணப்பட்டது. கிராமப் படேல்கள், பட்வாரிகள், ஊழல் நிறைந்த காட்டு அதிகாரிகள் ஆகிய எல்லோரும் காட்டுப் பகுதி கிராமங்களிலிருந்து ஓடிவிட்டனர். காட்டுக் குத்தகைக்காரர்களிடமிருந்தும் காட்டு அதிகாரிகளிடமிருந்தும் சரியான கூலியை மக்களால் பெற முடிந்தது. சில சமயங்களில் இந்தக் கோரிக்கைகளைப் பெற அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தினர். வியாபாரிகள் தங்கள் வணிகச் சரக்குகளை, கட்சியால் குறிக்கப்பட்ட விலைகளுக்கு விற்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர்.


காட்டுப்பகுதிகளில் தங்கியிருந்த நிலப்பிரபுக்களின் நிலங்களை கோயா மக்கள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர். அவர்களுடைய கால்நடைகளும், விவசாயக் கருவிகளும் கூட விநியோகிக்கப்பட்டன. காட்டு எல்லைப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த நிலப்பிரபுக்களின் நிலங்களும் கால்நடைகளும் கூட கோயா மக்களிடையே விநியோகிக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் தானியங்களில் வரம்புக்கு மேற்பட்டவை பெரிய அளவில் மக்களிடையே விநியோகிக்கப்பட்டது.

 

காட்டுப் பகுதிகளில் மக்கள் இயக்கம் பரவிக் கொண்டிருந்த நேரத்தில், யூனியன் பகுதியிலிருந்த ஆந்திர மக்கள் "எல்லா ஆந்திரர்களும் இணைந்து விசாலாந்திரத்தை (அகண்ட ஆந்திரத்தை) வெற்றி பெறச் செய்ய வேண்டும்'' என்ற முழக்கத்துடன் தெலுங்கானா இயக்கத்துக்கு உறுதுணையாக நின்றார்கள். காங்கிரசு அரசாங்கம் மிகவும் கொடிய அடக்குமுறைகளை ஆந்திர மக்களின் மீது திணித்து வந்தது. வீடுகளைக் கொள்ளையடிப்பது, சாதாரண மக்களைச் சித்திரவதைக்குள்ளாக்குவது, பெண்கள் மீது பாலியல் வன்முறையை ஏவுவது, ஆண்களையும் பெண்களையும் நிர்வாணமாக நடத்திச் செல்வது ஆகிய இந்தக் கொடுமையான அடக்கு முறைகள் யூனியன் பகுதியில் ஆந்திர மக்களின் இயக்கத்தை ஒடுக்குவதற்காகக் கையாளப்பட்டன.


மறுபுறத்தில், இரகசியமாகச் சமவெளிகளில் சிறுபடைகள் வேலை செய்து கொண்டிருந்தன. இந்த நேரத்தில் இராணுவம் முக்கியமாகச் சமவெளிகளிலேயே கவனம் செலுத்தி வந்தது. இயக்கத்தை அடக்குவதற்கு 5 அல்லது 6 சிறிய இராணுவப் பாசறைகளுக்குப் பாதுகாப்பாக ஒரு பெரிய இராணுவ முகாம் நிறுவப்பட்டது. இந்த அடக்குமுறைகளின் விளைவாக கிராமங்களில் மீண்டும் மக்களின் எதிரிகள் தலைதூக்கினர். இந்தச் சூழ்நிலைமைகளில் 3 அல்லது 4 உறுப்பினர்களைக் கொண்ட மக்கள் படையினர், வீடுகளிலோ அல்லது வயல்களிலோ பாதுகாப்பாக இருந்து கொண்டு மக்களிடையே வெகு இரகசியமாக வேலை செய்து வந்தனர்.


காங்கிரசு அரசாங்கத்தின் வர்க்கக் குணத்தை வெளிப்படுத்தியும் மக்களிடையில் இயக்கத்தின் வெற்றிகளைப் பாதுகாப்பதற்காக மக்களைப் போராடத் தூண்டியும் துண்டுப் பிரசுரங்களை அவர்கள் விநியோகித்தனர். மக்களிடையில் அரசியல் பிரச்சாரத்தை சிறு கூட்டங்களின்மூலமாக அவர்கள் நடத்தி வந்தனர். மக்களின் எதிரிகளுக்கு எதிரான செயல்களை அவர்கள் நடத்தி வந்தனர். இரவு நேரங்களில் இராணுவத்தின் மீது அவர்கள் திடீரென்று தாக்குதல் தொடுத்தனர். புதிய போர்த்தந்திரங்களின்மூலம் அவர்கள் கட்சிப் பாசறைகளைத் திரும்பவும் அமைத்தனர்.


இவ்வேலையின் முன்னேற்றத்தின் காரணமாக மக்களுடைய எதிரிகள் தங்களுடைய சொந்த கிராமங்களிலேயே திரும்பவும் தங்கியிருக்க முடியாது போயிற்று. அவர்கள் கட்டாயமாக இராணுவ முகாம்களில் தங்கும்படி நேர்ந்தது. அல்லது தங்களுடைய கிராமங்களில் தங்குவதற்கு மக்களுடன் சமாதானம் செய்து கொண்டு அவர்களுடைய அனுமதியைப் பெற வேண்டியிருந்தது. மக்களுடைய எதிரிகள் தங்களுடைய விவசாய வேலைகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு முடியவில்லை. சமவெளிகளில் இயக்கம் இன்னும் தணியவில்லை என்று காங்கிரசு அரசாங்கமே ஒத்துக் கொள்ள வேண்டி வந்தது.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது