Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


ஆரம்பத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு படை நிறுவப்பட்டது. கிடைத்த ஆயுதங்கள் எல்லாம் இந்த மாவட்டப் படைக்குக் கொடுக்கப்பட்டன. ஆனால் மிகச் சீக்கிரத்திலேயே கீழணிகளிடம் ஆயுதங்கள் இல்லாமலிருப்பது தவறு என்று புரிந்து கொள்ளப்பட்டது. எனவே மாவட்டப் படை கலைக்கப்பட்டது. தாலுகா மட்டத்தில் படை அமைக்கப்பட்டு, அவர்களுடைய வேலைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. கிராம மட்டத்திலான படைகளும் நிறுவப்பட்டன. கிராமங்களைப் பாதுகாப்பதே அவர்களுடைய முக்கியமான வேலையாக இருந்தது. ஆயுதந்தரித்த ரஜாக்கர் குண்டர்கள், இராணுவம் ஆகியவை உபயோகித்து வந்த பாதைகளைக் கூட அவர்கள் அழிக்க வேண்டியிருந்தது. கிராமத்திலுள்ள எல்லா இளைஞர்களும் நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தபோதே இந்தக் கிராமப் படைகளிலும் பங்கெடுத்துக் கொண்டனர்.


படைகளில் முழுநேர ஊழியர்களாக வேலை செய்யச் சித்தமாயிருந்த இளைஞர்களால் முறையான கொரில்லாப் படைகள் நிறுவப்பட்டன. இதற்கான ஆர்வத்தையும் உறுதியையும் அவர்கள் பெற வேண்டியிருந்தது. இந்த முறையான படைகள் முக்கியமாக, ஆயுதந்தாங்கிய ரஜாக்கர் குண்டர்களையும் இராணுவத்தையும் எதிர்ப்பதாக இருந்தன. கிராமங்களைப் பாதுகாப்பது அவர்கள் வேலையாயிற்று. இந்தப் படைகள் தன்னகத்தே 10லிருந்து 25 பேர் வரை கொண்டிருந்தது. சில சமயங்களில் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு ஒரு குழு மற்றொரு குழுவுடன் சேர்ந்து குறிப்பிட்ட தாக்குதல்களை நடத்திற்று. பின்பு தத்தம் இடங்களுக்குச் சென்றது.


இதுவரை உழுவதை மட்டுமே அறிந்த சாதாரண விவசாயிகளின் புதல்வர்கள் எதிரிகளிடமிருந்து ஆயுதங்களைப் பிடுங்கினர். இவர்கள் சண்டைகளின்மூலமும், அனுபவங்கள்மூலமும் போர்த் தந்திரங்களைத் தெரிந்து கொண்டனர். சாதாரண கல்வி கூடப் பெறாத இவர்கள், முறையான கொரில்லாப் படைகளின் தலைவர்களாக உருவாயினர். சாதாரண மக்கள் மத்தியிலிருந்து சிறந்த தீரர்கள் உருவாயினர்.


கொரில்லா படைகள் அமைந்ததன் பயனாக, தெலுங்கானா இயக்கம் ஒரு புதிய, உயர்ந்த கட்டத்தை அடைந்தது. ரஜாக்கர் குண்டர்களின் தாக்குதல்களிலிருந்து கிராமங்களைப் பாதுகாப்பதுடன் மக்கள் திருப்தியடையவில்லை. விவசாய கொரில்லாப் படைகள் தாங்களாகவே ரஜாக்கர் குண்டர்கள் மற்றும் போலீசாரின் சிறிய முகாம்களைத் தாக்க ஆரம்பித்தன. விவசாயக் கொரில்லா படையினர் அவர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறித்துக் கொண்டனர். போலீசு அல்லது ரஜாக்கர்களின் வருகைக்காக மறைவாகக் காத்திருந்தனர். அவர்கள் மீது திடீர்த் தாக்குதல் தொடுத்தனர். இதன்மூலமாகப் பல வெற்றிகளை அடைந்தனர்.


படைகளுக்குப் பக்கபலமாக மக்கள் நின்றனர். போலீசார் மற்றும் ரஜாக்கர் குண்டர்களின் தாக்குதல்களை மக்களும் படைகளும் ஒன்று சேர்ந்து வீரத்தோடு எதிர்த்தனர். எதிரிகளுக்கு மக்கள் பலவழிகளில் தொல்லைகளைக் öகாடுத்தனர். இம்மாதிரியான தாக்குதல்கள் நூற்றுக்கணக்கான கிராமங்களில் நடந்த வண்ணமிருந்தன. ஒவ்வொரு கிராமமும் போர்க்களமாக மாறியது. அம்மெனபரொலு, பைரனிபள்ளி ஆகிய இடங்களில் நடத்தப்பெற்ற எதிர்த் தாக்குதலானது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை, தெலுங்கானா மக்கள் எல்லோரையும் ஊக்குவித்தன. இந்தச் சமயத்தில் கடைசிச் சொட்டு இரத்தம் இருக்கும்வரை வீரத்துடன் போராடிய வீரப்புதல்வர்கள் பலரைக் கட்சி இழந்தது. அவர்கள் தங்கள் கைகளில் செங்கொடியை ஏந்தியும் "கம்யூனிஸ்ட் கட்சி ஓங்குக!'' என்று முழங்கியும் கம்யூனிஸ்டுகளாகப் போராடினர்.


இந்த வீரமான மக்களில், தோழர் யாதகிரி என்பவரும் ஒருவர். இவர் சூரியபேட்டா தாலுகாவிலுள்ள சிலுவஜந்தா கிராமத்தில் விவசாயத் தொழிலாளியாக இருந்தார். ஜன்னாரெட்டி பிரதாபரெட்டி என்ற கொடுமை வாய்ந்த நிலப்பிரபுக்களிடம் பண்ணைக் கூலியாக இருந்தார். அவர் ஒரு போலீசு லாரியைப் பிடிக்க ஓடினார். போலீசு சுடப்போவதையும் அவர் பொருட்படுத்தவில்லை. இறுதியில் அவர் காலில் குண்டடிபட்டது. மேற்கொண்டு ஓட முடியவில்லை. அருகிலிருந்த அடர்ந்த மரங்களுக்கிடையில் ஒளிந்து கொண்டார். போலீசு உடனே அவரைத் தேட ஆரம்பித்தது; பின்பு அவரைப் பிடித்து மான்ட்ராய் போலீசு பாசறைக்குக் கொண்டு சென்றனர்.


படைகளின் இரகசியம் அறிவதற்காக நாள் கணக்காக அவர் சித்திரவதை செய்யப்பட்டார். இந்தச் சித்திரவதை ஒருநாள் இரண்டு நாள் மட்டுமல்லாது தொடர்ந்து 10 நாட்களுக்கு நடந்தது. அவருடைய விரல்களுக்குள் ஊசி குத்தப்பட்டது. அவருடைய உடம்பு முழுவதும் பிளேடுகளால் கிழிக்கப்பட்டது; சிகரெட் நுனிகளால் சுடப்பட்டது. அவர், தலைகீழாகத் தொங்கவிடப்பட்டார். தடிகளாலும், துப்பாக்கியின் பின்பகுதிகளாலும் அடித்தும், போலீசு பூட்ஸ் கால்களால் உதைத்தும் அவருடைய ஒவ்வொரு எலும்பும் நொறுக்கப்பட்டது.


இவ்வளவு சித்திரவதைபடுத்தப்பட்ட போதும், நமது வீரர் யாதகிரி சிறிதும் வளைந்து கொடுக்கவில்லை. படைகளைப் பற்றிய இரகசியங்கள் ஒன்றைக் கூட அவர் சொல்ல மறுத்துவிட்டார். அவர் உறுதியாகச் சொன்னார்: "உங்களுக்கு முன் நான் பணியப் போவதில்லை. நான் இறந்தாலும் கூட எங்களுடைய சங்கம் உயிருடன் இருக்கும். அது உங்கள் எல்லோரையும் அழித்து விடும்.'' இதுவே அவர் கடைசி வரைக்கும் சொன்ன வீரமிக்க வார்த்தைகள்.


இறுதியில் இராணுவ அதிகாரி அவரை ஒரு நாற்காலியில் அமரச் செய்து இரகசியங்களைச் சொல்லிவிடுமாறு கெஞ்சினான். ஆனால் யாதகிரி உறுதியான, முடிவான பதிலையே திரும்பச் சொன்னார். இதனால் கோபமடைந்த இராணுவ அதிகாரிகள் அவரைக் கொல்வதற்கு உடனே உத்தரவுகள் பிறப்பித்தனர்.


யாதகிரியினுடைய கால்களும் கைகளும் கட்டப்பட்டன. இராணுவத்தினர் அவருடைய உடம்பின் பகுதிகளை ஒவ்வொன்றாகச் சுட ஆரம்பித்தனர். இடையிடையே அவரை இரகசியங்களைச் சொல்லிவிடுமாறு கேட்டனர். ஆனால் யாதகிரி மறுத்துவிட்டு "சங்கம் வாழ்க! கம்யூனிஸ்ட் கட்சி ஓங்குக!'' என்ற வார்த்தைகளையே திரும்பத் திரும்பச் சொன்னார். இறுதியில் அவருடைய இதயத்தில் சுடப்பட்டு உயர்ந்த தியாகியானார். அவர் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் ஆனார். கம்யூனிச சித்தாந்தத்திற்குச் சிறந்த மதிப்பைப் பெற்றுக் கொடுத்தார்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது