Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


பரம்பரை பரம்பரையாக ஒடுக்கப்பட்டு வந்த தெலுங்கானா பகுதி மக்கள் புதிய உணர்வு பெறத் தொடங்கினர். தங்களைத் தாங்களே திரட்டி, அமைப்பாகி மிராசுதாரர்களின் கொடுமைகளுக்கு எதிராகப் புரட்சி செய்யத் தொடங்கினர். ஒடுக்குமுறைக்கும் பலாத்காரத்திற்கும் பழக்கப்பட்டிருந்த மிராசுதாரர்களுக்கு மக்களிடையே பரவி வந்த புதிய உணர்வையும் மக்களியக்கம் வளர்ந்து வருவதையும் சிறிதும் பொறுக்க முடியவில்லை. அவர்கள் போலீசையும் குண்டர்களையும் கொண்டு மக்களைத் தாக்கத் தொடங்கினர். மிராசுதாரர்கள் பகிரங்கமாகத் தங்கள் துப்பாக்கிகளுடன் வெளிவந்து மக்களையும் அவர்களின் தலைவர்களையும் சுடத் தொடங்கினர்.


இச்சமயம் ஜனகோன் தாலுகாவில் தேஷ்முக்காக இருந்த விஷ்ணூ<ர் ராமச்சந்திர ரெட்டியை எதிர்த்த காடவெண்டி கிராம மக்களின் போராட்டம் ஒரு வரலாற்றுச் சிறப்புப் பெற்ற நிகழ்ச்சியாக அமைகிறது. தெலுங்கானாவில் மக்கள் இயக்கத்தின் முன்னேற்றத்திற்கு இது ஒரு மைல் கல்லாகத் திகழ்கிறது. இந்த தேஷ்முக், சங்கத்தின் தலைவர்களைக் கொல்லத் திட்டமிட்டான். இதற்குத் தனது குண்டர்களைத் தயார் செய்தான். போலீசின் உதவியையும் பெற்றான்.


ஜூலை 4, 1946 அன்று காடவெண்டி கிராமத்தில் மிராசுதாரர்களின் குண்டர்கள் நன்றாகக் குடித்துவிட்டு உள்ளூர் ஆந்திர மகாசபையின் தலைவர்கள் மற்றும் ஊழியர்களின் வீடுகளைத் தாக்கவும் அவர்களை வலுச் சண்டைக்கு இழுக்கவும் தொடங்கினர். மிராசுதாரர்களின் அயோக்கியத்தனமான திட்டத்தை மக்கள் உடனே உணர்ந்து கொண்டனர். ஆந்திர மகாசபையின் தொண்டர்கள் உடனே தடிகளாலும், இதர கிராமக் கருவிகளாலும் தங்களை ஆயுதபாணியாக்கிக் கொண்டு தங்கள் அலுவலகம் முன் கூடினர். செங்கொடிகளுடன் மிகப் பெரும் ஊர்வலமாகச் சென்றனர். "புரட்சி ஓங்குக'', "ஆந்திர மகாசபை வாழ்க'' என்னும் போராட்ட முழக்கங்கள் விண்ணதிரக் கிளம்பின. ஜமீன்தாரின் மாளிகையை ஊர்வலம் எட்டியபோது அங்கு மறைந்திருந்த குண்டர்கள் திடீரென்று ஊர்வலத்தைத் தாக்கத் தொடங்கினர். தொண்டர்களை நேரடியாகச் சுடத் தொடங்கினர். ஊர்வலத்தை நடத்திச் சென்ற தொட்டி மல்லய்யாவும் மங்க கொண்டய்யாவும் மிகவும் கடுமையாகக் காயமுற்றனர். அக்கிராமத்தின் மகாசபையின் தலைவராக விளங்கிய தொட்டி கொமரய்யாவின் வயிற்றில் துப்பாக்கிக் குண்டு ஒன்று பாய்ந்தது. உடன் அவர் உயிர் பிரிந்தது. இவ்வியக்கத்தில் முதல் உயிர்த் தியாகி அவர்தான்.


இயக்கத்தில் ஒரு மாபெரும் விவசாய வீரன் இறந்துவிட்டான். மக்களது கோபம் எல்லையற்றுப் பெருகியது. கிராமம் முழுவதும் திரண்டு, மிராசுதாரரின் குண்டர்கள் மறைந்திருந்த குடிசையைச் சூழ்ந்து கொண்டனர். "இரத்தத்திற்கு இரத்தம்'' என மக்கள் முழக்கமிட்டனர். இதனைக் கண்டு குண்டர்கள் பீதியுற்று, மிராசுதாரரின் மாளிகைக்குப் பாதுகாப்பிற்காக ஓட்டமெடுத்தனர். வெகுண்ட மக்கள் மிராசுதாரரின் மாளிகையையும் முற்றுகையிட்டனர். இச்செய்தி சுற்றுப்புறக் கிராமங்களுக்குப் பரவியவுடன் எல்லா கிராமங்களின் மக்களும் காடவெண்டி கிராம மக்களுக்காக ஓடி வந்தனர். அக்கிராமத்தில் சுமார் இரண்டாயிரம் மக்கள் அன்று கூடினர். மிராசுதாரரின் மாளிகையைத் தீக்கிரையாக்க தயார் செய்யத் தொடங்கினர்.


இச்செய்தி கேட்டு தேஷ்முக்கின் மகன் பாபுராவ், துப்பாக்கிகள், ஈட்டிகள் மற்றும் இதர பயங்கர ஆயுதங்களுடன் சுமார் 200 குண்டர்களை அழைத்துக் கொண்டு தனது மாளிகையைப் பாதுகாக்க ஓடி வந்தான். நூற்றுக்கணக்கான மக்கள் கிராமத்திற்கு வெளியே கவனம் வைத்துக் கொண்டிருந்தனர். இக்கூட்டத்தைக் கண்டவுடன் "ஆந்திர மகாசபைக்கு வெற்றி'' என்று இடியோசை கிளப்பிக் கொண்டு குண்டர்களைத் தாக்கத் தொடங்கினர். குண்டர்கள் மீது கல்மாரி பொழிந்தனர். 3 மைல்களுக்குக் குண்டர்களைத் துரத்தினர். கைக்கு கிடைத்தவர்களை இரக்கமின்றி அடித்தனர். மிராசுதாரரின் பெரிய மாந்தோப்பை அழித்தனர்.


இச்சண்டையில் குண்டர்களின் தலைவனை மக்கள் பிடித்து விட்டனர். அவன் காலிகளில் ஒருவன். தேஷ்முக்கின் பேர்போன அடியாள். அங்கே அப்போதே மக்கள் ஒரு நீதிமன்றத்தைத் தேர்ந்தெடுத்து அவனை விசாரணைக்கு உட்படுத்தினர். அவனது குற்றங்களுக்குப் பகிரங்கமாக மக்கள் சாட்சி சொல்ல முன்வந்தனர். அவனுக்கு மக்கள் நீதிமன்றம் உடனே மரண தண்டனை விதித்தது. தனது குற்றங்கள் எல்லாம் பகிரங்கப்பட்டபோது, இந்த ரௌடி தனது குற்றங்களுக்காக வருந்தி மக்களிடம் மன்னிப்பு கேட்டான். இது கண்டு மக்கள் நீதிமன்றம் அவனை மன்னித்து, அவனுக்கு விதித்த மரண தண்டனையை ரத்து செய்தது.


இதற்கிடையில் சுமார் 6 ரிசர்வ் போலீசார் அங்கு வந்தனர். குண்டர்களைத் தண்டிப்பதாக போலி வாக்குறுதிகள் தந்து அவர்கள் மக்களை நம்பச் செய்தனர். இதன்பின் தங்கள் வீடுகளுக்கு மக்கள் திரும்பினர். மக்கள் அவ்விடத்தைவிட்டு அகன்றவுடன் தங்கள் வாக்குறுதிகளை தூக்கியெறிந்துவிட்டு போலீசார், தேஷ்முக்கிடம் குண்டர்களை ஒப்படைத்தனர். இது மட்டுமின்றி, ஆந்திர மகாசபை ஊழியர்கள் மீது கலகம் விளைவித்ததாக ஆறு பொய் வழக்குகளை சோடித்து தாக்கல் செய்தனர்.


உயிர்த்தியாகி கொமரய்யாவின் உடலை கிராமத்திற்கு மக்கள் எடுத்து வந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு பெரும் ஊர்வலமாக வந்தனர். அவரது உடல், மக்கள் தலைவன் ஒருவனுக்கான பெரும் மதிப்புடன் தகனம் செய்யப்பட்டது. தேஷ்முக்குக்கு முன் காடவெண்டி மக்கள் பணியவில்லை. அக்கிராமத்தில் அவனது விவசாய வேலைகள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டன.


கொமரய்யா ஒரு மகத்தான உயிர்த்தியாகி. அவருடைய தியாகங்களால் தெலுங்கானா இயக்கம் ஒரு புதிய உயர்ந்த கட்டத்தை எட்டியது. புதிய மக்கள் கவிஞர்கள் மக்களிடையே பிறந்தனர். எங்கும் "அமரஜீவி கொமரய்யா.....'' என்று மக்கள் பாடத் தொடங்கினர். அது வெகுசீக்கிரம் பிரபலமான பாட்டாகியது.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது